பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | சாதனா சர்கம் & சங்கர் மகாதேவன் | யுவன் சங்கர் ராஜா | கண்ட நாள் முதல் |
Merke Merke Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : லைலை லைலை லைலைலே…
லாஹி லாஹி லாஹிலே…
மேற்கே மேற்கே மேற்கேதான்…
சூரியன்கள் உதித்திடுமே…
பெண் : சுடும் வெயில் கோடைக்காலம்…
கடும் பனி வாடைக்காலம்…
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா…
பெண் : இலையுதிர் காலம் தீர்ந்து…
எழுந்திடும் மண்ணின் வாசம்…
முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே…
ஆண் : ஓ… மின்னலும் மின்னலும்…
நேற்று வரை பிரிந்தது ஏனோ…
பின்னலாய் பின்னலாய்…
இன்றுடன் பிணைந்திடத்தானோ…
ஆண் : லைலை லைலை லைலைலே…
லாஹி லாஹி லைலைலே…
மேற்கே மேற்கே மேற்கேதான்…
சூரியன்கள் உதித்திடுமே…
—BGM—
ஆண் : கோபம் கொள்ளும் நேரம்…
வானம் எல்லாம் மேகம்…
காணாமலே போகும் ஒரே நிலா… ஓ…
கோபம் தீரும் நேரம்…
மேகம் இல்லா வானம்
பெளர்ணமியாய் தோன்றும் அதே நிலா…
பெண் : இனி எதிரிகள் என்றே எவருமில்லை…
பூக்களை விரும்பா வேர்களில்லை…
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே…
இது நீரின் தோளில் கைபோடும்…
ஒரு சின்னத் தீயின் கதையாகும்…
திரைகள் இனிமேல் தேவையில்லையே…
ஆண் : மேற்கே மேற்கே மேற்கேதான்…
சூரியன்கள் உதித்திடுமே…
லைலை லைலை லைலைலே…
லாஹி லாஹி லைலைலே…
—BGM—
ஆண் : வாசல் கதவை யாரோ…
தட்டும் ஓசை கேட்டால்…
நீதான் என்று பார்த்தேன் அடி சகி…
பெண்கள் கூட்டம் வந்தால்…
எங்கே நீயும் என்றே…
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி…
பெண் : இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ…
காற்றே சிறகாய் விரிந்திடுமோ…
நிலவின் முதுகைத் தீண்டும் வேகமோ…
அட தேவைகள் இல்லை என்றாலும்…
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்…
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ…
ஆண் : மேற்கே மேற்கே மேற்கேதான்…
சூரியன்கள் உதித்திடுமே…
லைலை லைலை லைலைலே…
சூரியன்கள் உதித்திடுமே…
மின்னலும் மின்னலும்…
நேற்று வரை பிரிந்தது ஏனோ…
பின்னலாய் பின்னலாய்…
இன்றுடன் பிணைந்திடத் தானோ…
—BGM—
Notes : Merke Merke Song Lyrics in Tamil. This Song from Kanda Naal Mudhal (2005). Song Lyrics penned by Thamarai. மேற்கே மேற்கே பாடல் வரிகள்.