Tag Archives: L. R. ஈஸ்வரி

Krishna Devotional Song Lyrics in Tamil

கோபியரே கோபியரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
கண்ணதாசன்L.R. ஈஸ்வரிஎம்.எஸ்.விஸ்வநாதன்கிருஷ்ணன் பாடல்கள்

Gopiyare Gopiyare Song Lyrics in Tamil


BGM

பெண் : கோபியரே கோபியரே…
கொஞ்சும் இளம் வஞ்சியரே…
கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

குழு : கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

BGM

பெண் : கோபியரே கோபியரே…
கொஞ்சும் இளம் வஞ்சியரே…
கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

குழு : கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

பெண் : வேங்கடத்து மலைதனிலே வெண்முகிலாய் மாறுங்களே…
ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே…

குழு : ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே…

பெண் : வேங்கடத்து மலைதனிலே வெண்முகிலாய் மாறுங்களே…
ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே…

பெண் : கோபியரே கோபியரே…
கொஞ்சும் இளம் வஞ்சியரே…
கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

குழு : கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

BGM

பெண் : நந்தகுமார் மெல்லிசையில் நடனமிடும் தோகைகளே…
பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே…

குழு : பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே…

பெண் : நந்தகுமார் மெல்லிசையில் நடனமிடும் தோகைகளே…
பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே…
சிந்துமணி வைரநகை ஸ்ரீராமன் பிம்பம் அவன்…
மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்…

குழு : மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்…

பெண் : சிந்துமணி வைரநகை ஸ்ரீராமன் பிம்பம் அவன்…
மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்…

பெண் : கோபியரே கோபியரே…
கொஞ்சும் இளம் வஞ்சியரே…
கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

குழு : கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

BGM

பெண் : ஆழிமழைக் கண்ணன் அவன்…
அழகுநகை மன்னன் அவன்…
தாழை இலை பயிரினைப் போல்…
தானுறையும் வண்ணன் அவன்…

குழு : தாழை இலை பயிரினைப் போல்…
தானுறையும் வண்ணன் அவன்…

பெண் : ஆழிமழைக் கண்ணன் அவன்…
அழகுநகை மன்னன் அவன்…
தாழை இலை பயிரினைப் போல்…
தானுறையும் வண்ணன் அவன்…

பெண் : நாடிவரும் அன்னையர்க்கு…
நவநீத கிருஷ்ணன் அவன்…
நந்தகுல யாதவர்க்கு…
ராகவ பாலன் அவன்…

குழு : நந்தகுல யாதவர்க்கு…
ராகவ பாலன் அவன்…

பெண் : நாடிவரும் அன்னையர்க்கு…
நவநீத கிருஷ்ணன் அவன்…
நந்தகுல யாதவர்க்கு…
ராகவ பாலன் அவன்…

பெண் : கோபியரே கோபியரே…
கொஞ்சும் இளம் வஞ்சியரே…
கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

குழு : கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

BGM


Notes : Gopiyare Gopiyare Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Kannadasan. கோபியரே கோபியரே பாடல் வரிகள்.


காதோடுதான் நான் பாடுவேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிL.R. ஈஸ்வரிவி. குமார்வெள்ளி விழா

Kaathoduthaan Naan Song Lyrics in Tamil


BGM

பெண் : காதோடுதான் நான் பாடுவேன்…
மனதோடுதான் நான் பேசுவேன்…
விழியோடுதான் விளையாடுவேன்…
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்…

பெண் : காதோடுதான் நான் பாடுவேன்…
மனதோடுதான் நான் பேசுவேன்…
விழியோடுதான் விளையாடுவேன்…
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்…

பெண் : காதோடுதான் நான் பாடுவேன்…

BGM

பெண் : வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்…
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்…

பெண் : உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா…
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா…
குல விளக்காக நான் வாழ வழி காட்டவா…

பெண் : காதோடுதான் நான் பாடுவேன்…
மனதோடு தான் நான் பேசுவேன்…
விழியோடு தான் விளையாடுவேன்…
உன் மடி மீது தான் கண் மூடுவேன்…

பெண் : காதோடுதான் நான் பாடுவேன்…

BGM

பெண் : பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது…
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது…
பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது…
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது…

பெண் : எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது…
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது…
இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது…

பெண் : காதோடுதான் நான் பாடுவேன்…
மனதோடுதான் நான் பேசுவேன்…
விழியோடுதான் விளையாடுவேன்…
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்…


Notes : Kaathoduthaan Naan Song Lyrics in Tamil. This Song from Velli Vizha (1972). Song Lyrics penned by Vaali. காதோடுதான் நான் பாடுவேன் பாடல் வரிகள்.


அவளுக்கென்ன அழகிய முகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
வாலிL.R. ஈஸ்வரி & டி.எம். சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திசர்வர் சுந்தரம்

Avalukkenna Song Lyrics in Tamil


BGM

ஆண் : அவளுக்கென்ன அழகிய முகம்…
அவளுக்கென்ன அழகிய முகம்…
அவனுக்கென்ன இளகிய மனம்…
நிலவுக்கென்ன…
இரவினில் வரும் இரவுக்கென்ன…
உறவுகள் தரும் உறவுக்கென்ன…
உயிருள்ள வரை தொடர்ந்து வரும்…

BGM

ஆண் : ஹோ… அழகு ஒரு மேஜிக் டச்…
ஹோ… ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்…
ஒ…ஓஒ… ஹோ… அழகு ஒரு மேஜிக் டச்…
ஹோ… ஓஒ… ஹோ… ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்…

BGM

ஆண் : ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு…
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை…
ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு…
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை…
வா வா என்பதை விழியில் சொன்னாள்…
மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்…

ஆண் : அவளுக்கென்ன அழகிய முகம்…
அவனுக்கென்ன இளகிய மனம்…
நிலவுக்கென்ன…
இரவினில் வரும் இரவுக்கென்ன…
உறவுகள் தரும் உறவுக்கென்ன…
உயிருள்ள வரை தொடர்ந்து வரும்…

BGM

பெண் : அன்பு காதலன் வந்தான் காற்றோடு…
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு…

பெண் : அன்பு காதலன் வந்தான் காற்றோடு…
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு…
அவன் அள்ளி எடுத்தான் கையோடு…
அவள் துள்ளி விழுந்தாள் கனிவோடு… கனிவோடு…

பெண் : அவனுக்கென்ன இளகிய மனம்…
அவளுக்கென்ன அழகிய முகம்…
நிலவுக்கென்ன…
இரவினில் வரும் இரவுக்கென்ன…
உறவுகள் தரும் உறவுக்கென்ன…
உயிருள்ள வரை தொடர்ந்து வரும்…

BGM

ஆண் : சிற்றிடை என்பது…
பெண் : முன்னழகு…
ஆண் : சிறு நடை என்பது…
பெண் : பின்னழகு…

ஆண் : சிற்றிடை என்பது…
பெண் : முன்னழகு…
ஆண் : சிறு நடை என்பது…
பெண் : பின்னழகு…

ஆண் : பூவில் பிறந்தது…
பெண் : கண்ணழகு…
ஆண் : பொன்னில் விளைந்தது…
பெண் : பெண்ணழகு…

ஆண் : பூவில் பிறந்தது…
பெண் : கண்ணழகு…
ஆண் : பொன்னில் விளைந்தது…
பெண் : பெண்ணழகு…

ஆண் & பெண் : ல ல ல… லலலல லல்ல லா… லல்லலலலல்லா…
லலலல லல்ல லா… லல்லலலலல்லா…
லலலல லல்ல லா… லல்லலலலல்லா…
லலலல லல்ல லா… லல்லலலலல்லா…

BGM


Notes : Avalukkenna Song Lyrics in Tamil. This Song from Server Sundaram (1964). Song Lyrics penned by Vaali. அவளுக்கென்ன அழகிய முகம் பாடல் வரிகள்.


ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன், L. R. ஈஸ்வரி & பி.வசந்தாகே.வி.மகாதேவன்வசந்த மாளிகை

Oru Kinnathai Song Lyrics in Tamil


ஆண் : ஏன்… ஏன்… ஏன்…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
ஏன் ஏன் ஏன்…
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்… ஏன்…

ஆண் : ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
ஏன் ஏன் ஏன்…
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்… ஏன்…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
ஏன் ஏன் ஏன்…

BGM

பெண் : தக்க தக்க திமி தாளம் ஜதியோடு…
கயல் நடமாட…
அவள் மையல் உறவாட…

ஆண் : தக்க தக்க திமி தாளம் ஜதியோடு…
கயல் நடமாட…
அவள் மையல் உறவாட…

ஆண் : இரு பக்கத்திலே சிலர்…
பட்டு முகத்தினர்…
தொட்டு விளையாட…
கை கட்டு வளையாட… ஹா ஹா…

ஆண் : ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்… ஏன்…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
ஏன் ஏன் ஏன்…

BGM

பெண் : சொர்கம் இருப்பது உண்மை என்றால்…
அது பக்கத்தில் நிர்க்கட்டுமே…
வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே…

ஆண் : சொர்கம் இருப்பது உண்மை என்றால்…
அது பக்கத்தில் நிர்க்கட்டுமே…
வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே…

ஆண் : இந்த கொக்குக்கு தேவை கூரிய மூக்கினுள்…
சிக்கிடும் மீன்மட்டுமே…
இதன் தேவைகள் வாழட்டுமே… ஹே ஹே…

ஆண் : ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்… ஏன்…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
ஏன் ஏன் ஏன்…

BGM

பெண் : ஆஆஆ… கட்டழகானதோர் கற்பனை ராஜ்யம்…
கட்டி முடிந்ததடா…
அதில் கட்டில் அமைந்ததடா…

ஆண் : கட்டழகானதோர் கற்பனை ராஜ்யம்…
கட்டி முடிந்ததடா…
அதில் கட்டில் அமைந்ததடா…

ஆண் : கொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதும் இல்லை…
இன்ப சக்கரம் சுத்துதடா… ஹா ஹா ஹா…
அதில் நான் சக்ரவத்தியடா… ஹே ஹே…

ஆண் : ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்… ஏன்…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
ஏன் ஏன் ஏன்…

ஆண் : டா டா டா… லா லா லா…
ஆ ஆ ஆ… லா லா லா…
டா டா டா… லா லா லா…
ஆ ஆ ஆ… ஓ ஓ ஓ…
ஆ ஆ ஆ… ம் ம் ம்…
ஆ ஆ ஆ… ஓ ஹோ…


Notes : Oru Kinnathai Song Lyrics in Tamil. This Song from Vasantha Maligai (1972). Song Lyrics penned by Kannadasan. ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் பாடல் வரிகள்.


செவப்பு சேலை கட்டிக்கிட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சோமுL.R. ஈஸ்வரிவீரமணி & சோமுஅம்மன் பாடல்கள்

Sevappu Selai Song Lyrics in Tamil


BGM

பெண் : செவப்பு சேலை கட்டிக்கிட்டு…
வேப்பிலையும் எடுத்துக்கிட்டு…
வேற்காட்டு கருமாரி ஆடி வந்தாளாம்…

பெண் : செவப்பு சேலை கட்டிக்கிட்டு…
வேப்பிலையும் எடுத்துக்கிட்டு…
வேற்காட்டு கருமாரி ஆடி வந்தாளாம்…

பெண் : அவள் விருப்புடனே தொழுபவரின்…
வினைகளையே ஓட வைத்து…
பொறுப்புடனே நம்மை காக்க ஆடி வந்தாளாம்…

பெண் : மாரியம்மா கருமாரியம்மா…
மாரியம்மா கருமாரியம்மா…

BGM

பெண் : சிறப்புடனே பவனி வந்து…
சிந்தையிலே குடி புகுந்து…
சிறப்புடனே பவனி வந்து…
சிந்தையிலே குடி புகுந்து…
கருணை மனம் கொண்டு…
நம்மை காக்க வந்தாளாம்…

பெண் : அவ மரகதத்தில் திலகமிட்டு…
மரிக்கொழுந்து மலரெடுத்து…
மரகதத்தில் திலகமிட்டு…
மரிக்கொழுந்து மலரெடுத்து…
சிரத்தினிலே சூடிக்கொண்டு பவனி வந்தாளாம்…

பெண் : மாரியம்மா கருமாரியம்மா…
மாரியம்மா கருமாரியம்மா…

BGM

பெண் : உன் வேப்பிலையும் திருநீரும்…
வேண்டியதை தந்திடுமே அம்மா…
காப்பது உன் திரிசூலம்…
கவலை யாவும் தீரும் அம்மா…

பெண் : மாபெரும் பக்தர்கள் கூட்டம்…
உன் சன்னதியில் அம்மா…
ஆபத்தில் உதவிட உன் ஆயிரம்…
கைகள் அணைத்திடுமே அம்மா…

பெண் : தொட்டியங்குளந்தன்னில் வாழும் எங்க மகமாயி…
மட்டில்லாத பாசம் கொண்ட எங்க மகமாயி…

பெண் : சக்தியிலே நெருப்பெடுத்து சதிராடும் மாரி…
சக்தியிலே நெருப்பெடுத்து சதிராடும் மாரி…
கட்டி காக்கும் அன்னை போல காத்திடுவாள் மாரி…
கட்டி காக்கும் அன்னை போல காத்திடுவாள் மாரி…

பெண் : செவப்பு சேலை கட்டிக்கிட்டு…
வேப்பிலையும் எடுத்துக்கிட்டு…
வேற்காட்டு கருமாரி ஆடி வந்தாளாம்…

பெண் : அவள் விருப்புடனே தொழுபவரின்…
வினைகளையே ஓட வைத்து…
பொறுப்புடனே நம்மை காக்க ஆடி வந்தாளாம்…

பெண் : மாரியம்மா கருமாரியம்மா…
மாரியம்மா கருமாரியம்மா…
கருமாரியம்மா…


Notes : Sevappu Selai Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Somu. செவப்பு சேலை கட்டிக்கிட்டு பாடல் வரிகள்.


பூவாடை கட்டிக்கிட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
UnknownL.R. ஈஸ்வரிUnknownஅம்மன் பாடல்கள்

Poovadai Kattikittu Song Lyrics in Tamil


BGM

பெண் : பூவாடை கட்டிக்கிட்டு…
தாழம்பூ சூட்டிக்கிட்டு…
பூவாடை கட்டிக்கிட்டு…
தாழம்பூ சூட்டிக் கிட்டு…
பொன்னாத்தா சுகுமாரி ஆடியிலே ஆடி வந்தா…

BGM

பெண் : பூப்போல சிரிச்சிக்கிட்டு…
தீச்சட்டி எடுத்துக்கிட்டு…
பூப்போல சிரிச்சிக்கிட்டு…
தீச்சட்டி எடுத்துக்கிட்டு…

பெண் : ஆசைப்பட்டு கேக்குறதெல்லாம்…
கொடுக்க வந்தா மாரியாத்தா…
ஆசைப்பட்டு கேக்குறதெல்லாம்…
கொடுக்க வந்தா மாரியாத்தா…

பெண் : கண்ணாத்தா சின்னாத்தா நாகாத்தா…
செல்லாத்தா ஏழாத்தா என்னாத்தா…
கண்ணாத்தா சின்னாத்தா நாகாத்தா…
செல்லாத்தா ஏழாத்தா என்னாத்தா…

BGM

பெண் : பாம்பு படை சூழ்ந்திடவே…
வேம்புத்தேரில் ஏறும் ஆத்தா…
பம்பை மேளம் முழங்கிடவே…
பவனி வரும் முப்பாத்தா…

BGM

பெண் : பாம்பு படை சூழ்ந்திடவே…
வேம்புத்தேரில் ஏறும் ஆத்தா…
பம்பை மேளம் முழங்கிடவே…
பவனி வரும் முப்பாத்தா…

பெண் : நோன்பு கொண்டு தொழுபவரின்…
நோய் தீர்க்கும் மாரியாத்தா…
நோன்பு கொண்டு தொழுபவரின்…
நோய் தீர்க்கும் மாரியாத்தா…

பெண் : வேண்டும் வரம் தந்து நம்மை…
எப்போதும் காத்திடும் ஆத்தா…
வேண்டும் வரம் தந்து நம்மை…
எப்போதும் காத்திடும் ஆத்தா…

பெண் : சேமாத்தா பூவாத்தா நல்லாத்தா…
சூராத்தா கருத்தாத்தா என்னாத்தா…
சேமாத்தா பூவாத்தா நல்லாத்தா…
சூராத்தா கருத்தாத்தா என்னாத்தா…

BGM

பெண் : பட்டு சேலை பளபளக்க…
குங்குமப்பொட்டு சொலிசொலிக்க…
வெட்டருவாளுடன் மாகாளி…
வினைகளை விரட்டிட ஓடி வந்தா…

BGM

பெண் : பட்டு சேலை பளபளக்க…
குங்குமப்பொட்டு சொலிசொலிக்க…
வெட்டருவாளுடன் மாகாளி…
வினைகளை விரட்டிட ஓடி வந்தா…

பெண் : எட்டுதிக்குகள் புகழ் மணக்க…
கொட்டு வாத்தியம் இசையொலிக்க…
எட்டுதிக்குகள் புகழ் மணக்க…
கொட்டு வாத்தியம் இசையொலிக்க…

பெண் : பொட்டழகி பூமாயி…
பூவும் பொட்டும் தந்து நிற்பா…
பொட்டழகி பூமாயி…
பூவும் பொட்டும் தந்து நிற்பா…

பெண் : எல்லாத்தா முப்பாத்தா மணியாத்தா…
வீராத்தா மேகாத்தா காளியாத்தா…
எல்லாத்தா முப்பாத்தா மணியாத்தா…
வீராத்தா மேகாத்தா காளியாத்தா…

பெண் : பூவாடை கட்டிக்கிட்டு…
தாழம்பூ சூட்டிக்கிட்டு…
பூவாடை கட்டிக்கிட்டு…
தாழம்பூ சூட்டிக்கிட்டு…
பொன்னாத்தா சுகுமாரி ஆடியிலே ஆடி வந்தா…

பெண் : பூப்போல சிரிச்சிக்கிட்டு…
தீச்சட்டி எடுத்துக்கிட்டு…
பூப்போல சிரிச்சிக்கிட்டு…
தீச்சட்டி எடுத்துக்கிட்டு…

பெண் : ஆசைப்பட்டு கேக்குறதெல்லாம்…
கொடுக்க வந்தா மாரியாத்தா…
ஆசைப்பட்டு கேக்குறதெல்லாம்…
கொடுக்க வந்தா மாரியாத்தா…

பெண் : கண்ணாத்தா சின்னாத்தா நாகாத்தா…
செல்லாத்தா ஏழாத்தா என்னாத்தா…
கண்ணாத்தா சின்னாத்தா நாகாத்தா…
செல்லாத்தா ஏழாத்தா என்னாத்தா…


Notes : Poovadai Kattikittu Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Unknown. பூவாடை கட்டிக்கிட்டு பாடல் வரிகள்.


மகமாயி சமயபுரத்தாயே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தமிழ் நம்பிL.R. ஈஸ்வரிதேவாஅம்மன் பாடல்கள்

Magamaayi Samayapura Song Lyrics in Tamil


BGM

பெண் : மகமாயி சமயபுரத்தாயே…
உன் மகளெனக்கு எல்லாமும் நியே…
மகமாயி சமயபுரத்தாயே…
உன் மகளெனக்கு எல்லாமும் நியே…

பெண் : கொள்ளிடத்தின் கரைமேலே உன் கோவில்…
தரும் குங்குமம்தான் மங்கையர்க்கு காவல்…
தரும் குங்குமம்தான் மங்கையர்க்கு காவல்…

பெண் : மகமாயி சமயபுரத்தாயே…
உன் மகளெனக்கு எல்லாமும் நியே…

BGM

பெண் : கண்கொடுக்கும் கண்ணபுர தேவி…
அருள் தருவாள் இமயமலைச் செல்வி…
கண்கொடுக்கும் கண்ணபுர தேவி…
அருள் தருவாள் இமயமலைச் செல்வி…

பெண் : மூவிலை வேல் கைகொண்ட காளி…
பகை முடிக்க வந்த எங்கள் முத்துமாரி…
மகமாயி சமயபுரத்தாயே…
உன் மகளெனக்கு எல்லாமும் நியே…

BGM

பெண் : வேப்பமரம் நிழல் கொடுக்கும் வீடு…
அது வினைதீர்க்க நீ அமைத்த கூடு…
வேப்பமரம் நிழல் கொடுக்கும் வீடு…
அது வினைதீர்க்க நீ அமைத்த கூடு…

பெண் : திருநீறே அம்மா உன் மருந்து…
அதை அணிந்தாலே நோய் ஓடும் பறந்து…

BGM

பெண் : பெற்றவளே நீ அறிவாய் என்னை…
உன் பேரருளால் வளர்ந்த இந்தப் பெண்ணை…
பெற்றவளே நீ அறிவாய் என்னை…
உன் பேரருளால் வளர்ந்த இந்தப் பெண்ணை…

பெண் : கற்றகலை சிறு துளியே எனக்கு…
அதை கடலாக்கி வைத்த புகழ் உனக்கு…

பெண் : மகமாயி சமயபுரத்தாயே…
உன் மகளெனக்கு எல்லாமும் நியே…
கொள்ளிடத்தின் கரைமேலே உன் கோவில்…
தரும் குங்குமம்தான் மங்கையர்க்கு காவல்…
தரும் குங்குமம்தான் மங்கையர்க்கு காவல்…

பெண் : மகமாயி சமயபுரத்தாயே…
உன் மகளெனக்கு எல்லாமும் நியே…


Notes : Magamaayi Samayapura Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Tamil Nambi. மகமாயி சமயபுரத்தாயே பாடல் வரிகள்.


கண்ணபுர நாயகியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
UnknownL.R. ஈஸ்வரிUnknownஅம்மன் பாடல்கள்

Kannapura Nayagiye Song Lyrics in Tamil


பெண் : கண்ணபுர நாயகியே மாரியம்மா…
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா…

பெண் : கண்ணபுர நாயகியே மாரியம்மா…
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா… அம்மா…
கண்ணபுர நாயகியே மாரியம்மா…
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா…

பெண் : கண் திறந்து பார்த்தாலே பொதுமம்மா…
எங்க கவலை எல்லாம்…
மனச விட்டு நீங்குமம்மா… அம்மா…

பெண் : கண்ணபுர நாயகியே மாரியம்மா…
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா…

BGM

பெண் : உத்தமியே உன் அருளை நாடி வந்தோம்…
பம்பை உடுக்கையோடு…
உன் மகிமை பாடி வந்தோம்…

பெண் : பச்சிலையில் தேர் எடுத்து வர வேண்டும்… அம்மா…
பச்சிலையில் தேர் எடுத்து வர வேண்டும்…
உன் பக்தருக்கு வேண்டும் வரம் தர வேண்டும்…

பெண் : கண்ணபுர நாயகியே மாரியம்மா…
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா…

BGM

பெண் : வேப்பிலையில் நோய் எல்லாம் தீர்த்திடுவாய்…
மன வேதனையை திருநீறில் மாற்றிடுவாய்…
காப்பாற்ற சூலமதை ஏந்திடுவாய்…
தினம் கற்பூர ஜோதியிலே வாழ்ந்திடுவாய்…

பெண் : கண்ணபுர நாயகியே மாரியம்மா…
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா…

BGM

பெண் : மலை ஏறும் தாய் உனக்கு கும்பமிட்டோம்…
அரிசி மாவிளக்கை ஏத்தி வச்சி பொங்கலிட்டோம்…
மலை ஏறும் தாய் உனக்கு கும்பமிட்டோம்…
அரிசி மாவிளக்கை ஏத்தி வச்சி பொங்கலிட்டோம்…

பெண் : உலகால பொறந்தவளே அருள் தருவாய்…
உலகால பொறந்தவளே அருள் தருவாய்…
எங்க வீடெல்லாம் பால் போங்க வரம் தருவாய்…

பெண் : கண்ணபுர நாயகியே மாரியம்மா…
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா…

பெண் : கண் திறந்து பார்த்தாலே பொதுமம்மா…
எங்க கவலை எல்லாம்…
மனச விட்டு நீங்குமம்மா… அம்மா…

பெண் : கண்ணபுர நாயகியே மாரியம்மா…
நாங்க காரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா…


Notes : Kannapura Nayagiye Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Unknown. கண்ணபுர நாயகியே பாடல் வரிகள்.


தெய்வத்தின் தெய்வம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
எஸ். மூக்கையாL.R. ஈஸ்வரிவீரமணி & சோமுஅம்மன் பாடல்கள்

Deivathin Deivam Song Lyrics in Tamil


BGM

பெண் : தெய்வத்தின் தெய்வம் எங்கள் வேற்காட்டு மாரி…
தெவிட்டாத தீந்தமிழில் பாடிடுவோம் மாரி…
தெய்வத்தின் தெய்வம் எங்கள் வேற்காட்டு மாரி…
தெவிட்டாத தீந்தமிழில் பாடிடுவோம் மாரி…

பெண் : வேண்டியதை கொடுத்திடுவாய் வேதவல்லி மாரி…
கோமதியே சங்கரியே குணவதியே மகமாயி…

பெண் : தெய்வத்தின் தெய்வம் எங்கள் வேற்காட்டு மாரி…
வேற்காட்டு மாரி…
வேற்காட்டு மாரியம்மா…

BGM

பெண் : கருமை நிறம் கொண்டவளே…
காத்தாயி கருமாரி…
கண்ணாயிரம் கொண்டவளே…
கண்கண்ட கருமாரி…

பெண் : கருமை நிறம் கொண்டவளே…
காத்தாயி கருமாரி…
கண்ணாயிரம் கொண்டவளே…
கண்கண்ட கருமாரி…

பெண் : ஓயாமல் நின் நாமம்…
உரைக்கின்ற உன் மக்கள்…
ஓயாமல் நின் நாமம்…
உரைக்கின்ற உன் மக்கள்…
மாறாத நின் புகழை…
பாடிடுவேன் அருள் மாரி…

பெண் : தெய்வத்தின் தெய்வம் எங்கள் வேற்காட்டு மாரி…
வேற்காட்டு மாரியம்மா…
வேற்காட்டு மாரி…

BGM

பெண் : கல்லாக இருந்தாலும்…
கருணை உள்ளம் கொண்டவள் நீ…
காணவரும் பக்தருக்கு…
காட்சி தரும் தேவி நீ…

பெண் : கல்லாக இருந்தாலும்…
கருணை உள்ளம் கொண்டவள் நீ…
காணவரும் பக்தருக்கு…
காட்சி தரும் தேவி நீ…

பெண் : காலன் கூட உன்னைக்கண்டு…
காதவழி சென்றிடுவான்…
காலன் கூட உன்னைக்கண்டு…
காதவழி சென்றிடுவான்…
காத்தாயி கருமாரி…
மகமாயி மாகாளி…

பெண் : தெய்வத்தின் தெய்வம் எங்கள் வேற்காட்டு மாரி…
தெவிட்டாத தீந்தமிழில் பாடிடுவோம் மாரி…
தெய்வத்தின் தெய்வம் எங்கள் வேற்காட்டு மாரி…
தெவிட்டாத தீந்தமிழில் பாடிடுவோம் மாரி…


Notes : Deivathin Deivam Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by S. Mookiah. தெய்வத்தின் தெய்வம் பாடல் வரிகள்.


கற்பூர நாயகியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அவிநாசிமணிL.R. ஈஸ்வரிகண்மணிராஜாஅம்மன் பாடல்கள்

Karpoora Nayagiye Song Lyrics in Tamil


பெண் : லிங்கேஸ்வர பூஜித்த வாகினி…
சுசீந்திர சர்வ மதான்கினி…
கலபகஸ்தூரி சுகந்த சுந்தரி…
சர்வஜன சங்கரி சர்வேஸ்வரி…
சர்வஜன சங்கரி சர்வேஸ்வரி…

பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…

BGM

பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா…
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா…
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா… ஆ…

பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…

—BGM—

பெண் : விற்கால வேதவள்ளி விசாலாட்சி…
விழிக்கோல மாமதுரை மீனாட்சி…
சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே…
சுடராக வாழ்விப்பாய் எம்மை நீயே…

பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…

BGM

பெண் : புவன முழுதாளுகின்ற புவனேஸ்வரி…
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி…
நவநவமாய் வடிவாகும் மகேஸ்வரி…
நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி…

பெண் : கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி…
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி…
உவமான பரம்பொருளே ஜகதீஸ்வரி…
உன்னடிமைச் சிறியவளை நீ ஆதரி…

BGM

பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…

பெண் : நெற்றியினுள் குங்குமமே நிறைய வேண்டும்…
நெஞ்சினுலும் உன் திருநாமம் வழிய வேண்டும்…
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்…
கவிதையிலே உன் நாமம் உருக வேண்டும்…

BGM

பெண் : சுற்றமெல்லாம் நீடுழி வாழ வேண்டும்…
ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்…
மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லலாமா…
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா…
உன் மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா…

பெண் : அம்மா கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…

BGM

பெண் : காற்றாகி கனவாகிக் கடலாகினாய்…
கயிறாகி உயிராகி உடலாகினாய்…
காற்றாகி கனவாகிக் கடலாகினாய்…
கயிறாகி உயிராகி உடலாகினாய்…

பெண் : நேற்றாகி இன்றாகி நாளாகினாய்…
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்…
நிலமாகி பயிராகி உணவாகினாய்…
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்…
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்…

பெண் : தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்…
போற்றாத நாளில்லை தாயே உன்னை…
போற்றாத நாளில்லை தாயே உன்னை…
பொருளோடும் புகழோடும் வைப்பாய் என்னை…

BGM

பெண் : கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை…
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை…
நம்பிடவோ மெய்தன்னில் சக்தியில்லை…
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை…

பெண் : செம்பவள வாயழகி உன்னெழிலோ…
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை…
அம்பளவு விழியாலே உன்னை என்றும்…
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை…

BGM

பெண் : அன்புக்கே நானடிமையாக வேண்டும்…
அறிவுக்கே என் காது கேட்க வேண்டும்…
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்…
வஞ்சத்தை என் நெஞ்சம் அறுக்க வேண்டும்…

பெண் : பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்…
பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்…
என்பக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும்…
என்னோடு நீ என்றும் வாழ வேண்டும்…
என்னோடு நீ என்றும் வாழ வேண்டும்…

BGM

பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…
கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…
பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா…
பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா…
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா… ஆ…

பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…
காளி மகமாயி கருமாரி அம்மா…
காளி மகமாயி கருமாரி அம்மா…


Notes : Karpoora Nayagiye Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Avinasimani. கற்பூர நாயகியே பாடல் வரிகள்.