பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
அவிநாசிமணி | L.R. ஈஸ்வரி | கண்மணிராஜா | அம்மன் பாடல்கள் |
Karpoora Nayagiye Song Lyrics in Tamil
பெண் : லிங்கேஸ்வர பூஜித்த வாகினி…
சுசீந்திர சர்வ மதான்கினி…
கலபகஸ்தூரி சுகந்த சுந்தரி…
சர்வஜன சங்கரி சர்வேஸ்வரி…
சர்வஜன சங்கரி சர்வேஸ்வரி…
பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…
—BGM—
பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா…
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா…
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா… ஆ…
பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…
—BGM—
பெண் : விற்கால வேதவள்ளி விசாலாட்சி…
விழிக்கோல மாமதுரை மீனாட்சி…
சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே…
சுடராக வாழ்விப்பாய் எம்மை நீயே…
பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…
—BGM—
பெண் : புவன முழுதாளுகின்ற புவனேஸ்வரி…
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி…
நவநவமாய் வடிவாகும் மகேஸ்வரி…
நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி…
பெண் : கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி…
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி…
உவமான பரம்பொருளே ஜகதீஸ்வரி…
உன்னடிமைச் சிறியவளை நீ ஆதரி…
—BGM—
பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…
பெண் : நெற்றியினுள் குங்குமமே நிறைய வேண்டும்…
நெஞ்சினுலும் உன் திருநாமம் வழிய வேண்டும்…
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்…
கவிதையிலே உன் நாமம் உருக வேண்டும்…
—BGM—
பெண் : சுற்றமெல்லாம் நீடுழி வாழ வேண்டும்…
ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்…
மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லலாமா…
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா…
உன் மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா…
பெண் : அம்மா கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…
—BGM—
பெண் : காற்றாகி கனவாகிக் கடலாகினாய்…
கயிறாகி உயிராகி உடலாகினாய்…
காற்றாகி கனவாகிக் கடலாகினாய்…
கயிறாகி உயிராகி உடலாகினாய்…
பெண் : நேற்றாகி இன்றாகி நாளாகினாய்…
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்…
நிலமாகி பயிராகி உணவாகினாய்…
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்…
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்…
பெண் : தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்…
போற்றாத நாளில்லை தாயே உன்னை…
போற்றாத நாளில்லை தாயே உன்னை…
பொருளோடும் புகழோடும் வைப்பாய் என்னை…
—BGM—
பெண் : கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை…
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை…
நம்பிடவோ மெய்தன்னில் சக்தியில்லை…
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை…
பெண் : செம்பவள வாயழகி உன்னெழிலோ…
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை…
அம்பளவு விழியாலே உன்னை என்றும்…
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை…
—BGM—
பெண் : அன்புக்கே நானடிமையாக வேண்டும்…
அறிவுக்கே என் காது கேட்க வேண்டும்…
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்…
வஞ்சத்தை என் நெஞ்சம் அறுக்க வேண்டும்…
பெண் : பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்…
பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்…
என்பக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும்…
என்னோடு நீ என்றும் வாழ வேண்டும்…
என்னோடு நீ என்றும் வாழ வேண்டும்…
—BGM—
பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…
கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…
பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா…
பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா…
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா… ஆ…
பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…
காளி மகமாயி கருமாரி அம்மா…
காளி மகமாயி கருமாரி அம்மா…
Notes : Karpoora Nayagiye Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Avinasimani. கற்பூர நாயகியே பாடல் வரிகள்.