ஈஸ்வரியே மகமாயி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
UnknownL. R. ஈஸ்வரிUnknownஅம்மன் பாடல்கள்

Eswariye mahamayi Song Lyrics in Tamil


பெண் : ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா…
நாங்க எண்ணி வந்த வரம் கொடுக்க…
வாரும் அம்மா…

பெண் : ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா…
நாங்க எண்ணி வந்த வரம் கொடுக்க…
வாரும் அம்மா…

பெண் : ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா…
இங்கு உன்னை அன்றி…
வேறு கதி ஏதம்மா…

பெண் : ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா…
நாங்க எண்ணி வந்த வரம் கொடுக்க…
வாரும் அம்மா…

BGM

பெண் : சமயபுரம் சன்னதியின் வாசலிலே…
லோக சங்கரியே உருகி நின்றோம் பூஜையிலே…

பெண் : கருணை உள்ள தெய்வமாக நீ இருப்பாய்…
கருணை உள்ள தெய்வமாக நீ இருப்பாய்…
நாங்க கொண்டாட வந்ததற்கும்…
பலன் கொடுப்பாய்…

பெண் : ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா…
நாங்க எண்ணி வந்த வரம் கொடுக்க…
வாரும் அம்மா…

BGM

பெண் : வேண்டுவோர்க்கு வாழ்வெல்லாம்…
நலம் தருவாய்…
சிங்க வாகனத்தில் சக்தியாக…
வலம் வருவாய்…

பெண் : ஊர் வாழ மழையாக வடிவெடுப்பாய்…
ஊர் வாழ மழையாக வடிவெடுப்பாய்…
இந்த உலகத்துக்கே உன் அருளால்…
குடை பிடிப்பாய்…

பெண் : ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா…
நாங்க எண்ணி வந்த வரம் கொடுக்க…
வாரும் அம்மா…

BGM

பெண் : படவேட்டு எல்லையிலே…
குடி இருப்பாய்…
நல்ல பத்தினிகள் மஞ்சளுக்கு…
துணை இருப்பாய்…

பெண் : படவேட்டு எல்லையிலே…
குடி இருப்பாய்…
நல்ல பத்தினிகள் மஞ்சளுக்கு…
துணை இருப்பாய்…

பெண் : மங்களங்கள் பெருக வேணும் சக்தியிலே…
மங்களங்கள் பெருக வேணும் சக்தியிலே…
அதை குங்கமமாய் தரவேணும் நெத்தியிலே…

பெண் : ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா…
நாங்க எண்ணி வந்த வரம் கொடுக்க…
வாரும் அம்மா…

பெண் : ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா…
இங்கு உன்னை அன்றி வேறு கதி ஏதம்மா…

பெண் : ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா…
நாங்க எண்ணி வந்த வரம் கொடுக்க…
வாரும் அம்மா…


Notes : Eswariye mahamayi Song Lyrics in Tamil. This Song from Devotional songs (2006). Song Lyrics penned by Unknown. ஈஸ்வரியே மகமாயி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top