பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலா | எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்தி | ஆண்டவன் கட்டளை |
Amaithiyana Nathiyinile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்…
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்…
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்…
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்…
ஆண் : காற்றினிலும் மழையினிலும்…
கலங்க வைக்கும் இடியினிலும்…
காற்றினிலும் மழையினிலும்…
கலங்க வைக்கும் இடியினிலும்…
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்…
ஹோய்… ஹோய்…
ஆண் : அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்…
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்…
—BGM—
ஆண் : தென்னம் இளங்கீற்றினிலே…
தென்னம் இளங்கீற்றினிலே…
தாலாட்டும் தென்றல் அது…
தென்னம் இளங்கீற்றினிலே…
தாலாட்டும் தென்றல் அது…
ஆண் : தென்னைதனைச் சாய்த்துவிடும்…
புயலாக வரும்பொழுது…
தென்னைதனைச் சாய்த்துவிடும்…
புயலாக வரும்பொழுது…
ஆண் : அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்…
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்…
—BGM—
ஆண் : ஆற்றங்கரை மேட்டினிலே…
ஆடி நிற்கும் நாணலது…
ஆற்றங்கரை மேட்டினிலே…
ஆடி நிற்கும் நாணலது…
ஆண் : காற்றடித்தால் சாய்வதில்லை…
கனிந்த மனம் வீழ்வதில்லை…
காற்றடித்தால் சாய்வதில்லை…
கனிந்த மனம் வீழ்வதில்லை…
ஆண் : அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்…
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்…
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்…
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்…
—BGM—
பெண் : நாணலிலே காலெடுத்து…
நடந்து வந்த பெண்மை இது…
நாணலிலே காலெடுத்து…
நடந்து வந்த பெண்மை இது…
பெண் : நாணம் என்னும் தென்றலிலே…
தொட்டில் கட்டும் மென்மை இது…
நாணம் என்னும் தென்றலிலே…
தொட்டில் கட்டும் மென்மை இது…
பெண் : அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்…
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்…
—BGM—
பெண் : அந்தியில் மயங்கி விழும்…
காலையில் தெளிந்துவிடும்…
அந்தியில் மயங்கி விழும்…
காலையில் தெளிந்துவிடும்…
பெண் : அன்பு மொழி கேட்டுவிட்டால்…
துன்ப நிலை மாறிவிடும்…
அன்பு மொழி கேட்டுவிட்டால்…
துன்ப நிலை மாறிவிடும்…
ஆண் & பெண் : அமைதியான நதியினிலே ஓடும்…
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்…
ஆண் & பெண் : காற்றினிலும் மழையினிலும்…
கலங்க வைக்கும் இடியினிலும்…
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்…
ஹோய்… ஹோய்…
ஆண் & பெண் : அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்…
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்…
Notes : Amaithiyana Nathiyinile Song Lyrics in Tamil. This Song from Aandavan Kattalai (1964). Song Lyrics penned by Kannadasan. அமைதியான நதியினிலே ஓடும் பாடல் வரிகள்.