செவப்பு சேலை கட்டிக்கிட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சோமுL.R. ஈஸ்வரிவீரமணி & சோமுஅம்மன் பாடல்கள்

Sevappu Selai Song Lyrics in Tamil


BGM

பெண் : செவப்பு சேலை கட்டிக்கிட்டு…
வேப்பிலையும் எடுத்துக்கிட்டு…
வேற்காட்டு கருமாரி ஆடி வந்தாளாம்…

பெண் : செவப்பு சேலை கட்டிக்கிட்டு…
வேப்பிலையும் எடுத்துக்கிட்டு…
வேற்காட்டு கருமாரி ஆடி வந்தாளாம்…

பெண் : அவள் விருப்புடனே தொழுபவரின்…
வினைகளையே ஓட வைத்து…
பொறுப்புடனே நம்மை காக்க ஆடி வந்தாளாம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மாரியம்மா கருமாரியம்மா…
மாரியம்மா கருமாரியம்மா…

BGM

பெண் : சிறப்புடனே பவனி வந்து…
சிந்தையிலே குடி புகுந்து…
சிறப்புடனே பவனி வந்து…
சிந்தையிலே குடி புகுந்து…
கருணை மனம் கொண்டு…
நம்மை காக்க வந்தாளாம்…

பெண் : அவ மரகதத்தில் திலகமிட்டு…
மரிக்கொழுந்து மலரெடுத்து…
மரகதத்தில் திலகமிட்டு…
மரிக்கொழுந்து மலரெடுத்து…
சிரத்தினிலே சூடிக்கொண்டு பவனி வந்தாளாம்…

பெண் : மாரியம்மா கருமாரியம்மா…
மாரியம்மா கருமாரியம்மா…

BGM

பெண் : உன் வேப்பிலையும் திருநீரும்…
வேண்டியதை தந்திடுமே அம்மா…
காப்பது உன் திரிசூலம்…
கவலை யாவும் தீரும் அம்மா…

பெண் : மாபெரும் பக்தர்கள் கூட்டம்…
உன் சன்னதியில் அம்மா…
ஆபத்தில் உதவிட உன் ஆயிரம்…
கைகள் அணைத்திடுமே அம்மா…

பெண் : தொட்டியங்குளந்தன்னில் வாழும் எங்க மகமாயி…
மட்டில்லாத பாசம் கொண்ட எங்க மகமாயி…

பெண் : சக்தியிலே நெருப்பெடுத்து சதிராடும் மாரி…
சக்தியிலே நெருப்பெடுத்து சதிராடும் மாரி…
கட்டி காக்கும் அன்னை போல காத்திடுவாள் மாரி…
கட்டி காக்கும் அன்னை போல காத்திடுவாள் மாரி…

பெண் : செவப்பு சேலை கட்டிக்கிட்டு…
வேப்பிலையும் எடுத்துக்கிட்டு…
வேற்காட்டு கருமாரி ஆடி வந்தாளாம்…

பெண் : அவள் விருப்புடனே தொழுபவரின்…
வினைகளையே ஓட வைத்து…
பொறுப்புடனே நம்மை காக்க ஆடி வந்தாளாம்…

பெண் : மாரியம்மா கருமாரியம்மா…
மாரியம்மா கருமாரியம்மா…
கருமாரியம்மா…


Notes : Sevappu Selai Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Somu. செவப்பு சேலை கட்டிக்கிட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading