பெண் : புதிய உலகை புதிய உலகை… தேடி போகிறேன் என்னை விடு… விழியின் துளியில் நினைவை கரைத்து… ஓடி போகிறேன் என்னை விடு…
பெண் : பிரிவில் தொடங்கி பூத்ததை… பிரிவில் முடிந்து போகிறேன்… மீண்டும் நான் மீள போகிறேன்… தூரமாய் வாழ போகிறேன்…
பெண் : புதிய உலகை புதிய உலகை… தேடி போகிறேன் என்னை விடு… விழியின் துளியில் நினைவை கரைத்து… ஓடி போகிறேன் என்னை விடு…
—BGM—
பெண் : மார்பில் கீறினாய்… ரணங்களை வரங்களாக்கினாய்… தோளில் ஏறினாய்… எனை இன்னும் உயரமாக்கினாய்…
பெண் : உன் விழி போல மண்ணில் எங்கும்… அழகு இல்லை என்றேன்… உன் விழி இங்கு கண்ணீர் சிந்த… விலகி எங்கே சென்றேன்… மேலே நின்று உன்னை நாளும்… காணும் ஆசையில்…
பெண் : புதிய உலகை புதிய உலகை… தேடி போகிறேன் என்னை விடு…
—BGM—
பெண் : யாரும் தீண்டிடா இடங்களில் மனதை தீண்டினாய்… யாரும் பார்த்திடா சிரிப்பை என் இதழில் தீட்டினாய்…
பெண் : உன் மனம் போல விண்ணில் எங்கும்… அமைதி இல்லை என்றேன்… உன் மனம் இன்று வேண்டாம் என்றே… பறந்து எங்கே சென்றேன்… வேறோர் வானம் வேறோர் வாழ்க்கை… என்னை ஏற்குமா…
பெண் : புதிய உலகை புதிய உலகை… தேடி போகிறேன் என்னை விடு…
பெண் : பிரிவில் தொடங்கி பூத்ததை… பிரிவில் முடிந்து போகிறேன்… மீண்டும் நான் மீள போகிறேன்… தூரமாய் வாழ போகிறேன்…
பெண் : புதிய உலகை புதிய உலகை… தேடி போகிறேன் என்னை விடு…
Notes : Puthiya Ulagai Song Lyrics in Tamil. This Song from Yennamo Yedho (2014). Song Lyrics penned by Madhan Karky. புதிய உலகைபாடல் வரிகள்.
பெண் : மண்ணிலே ஈரமுண்டு… முள்காட்டில் பூவும் உண்டு… நம்பினால் நாளை உண்டு… கை தாங்க ஜீவன் உண்டு…
பெண் : எங்கே போனாலும் பொன்வானம் கண்ணோடு… எல்லை இங்கில்லை வா காலம் நம்மோடு…
பெண் : மண்ணிலே ஈரமுண்டு… முள்காட்டில் பூவும் உண்டு…
—BGM—
பெண் : உள்ளுறுதி காண்பதுதான் பூமியிலே உன் உயரம்… எண்ணம் செயல் ஆகிவிட்டால் எல்லாமே தேடி வரும்… உண்மை வழி நீ நடந்தே போவது தான் வாழ்வின் அறம்… அன்பின் கொடி ஏற்றி வைக்க துணை சேரும் கோடி தரம்…
பெண் : தேடல் இல்லாத உயிர் உண்டோ சொல்லம்மா… எல்லாம் உன்னுள்ளே அதை தேடு கண்ணம்மா…
—BGM—
பெண் : மண்ணிலே ஈரமுண்டு… முள்காட்டில் பூவும் உண்டு… நம்பினால் நாளை உண்டு… கை தாங்க ஜீவன் உண்டு…
பெண் : எங்கே போனாலும் பொன்வானம் கண்ணோடு… எல்லை இங்கில்லை வா காலம் நம்மோடு…
பெண் : மண்ணிலே ஈரம் உண்டு… முள்காட்டில் பூவும் உண்டு… நம்பினால் நாளை உண்டு… கை தாங்க ஜீவன் உண்டு…
Notes : Manniley Eeramundu Song Lyrics in Tamil. This Song from Jai Bhim (2021). Song Lyrics penned by Yugabharathi. மண்ணிலே ஈரமுண்டுபாடல் வரிகள்.
பெண் : நான் ஆரவல்லி சூரவல்லி… ஆட வந்த சாதிமல்லி… குழு : தந்தானானே தானா னானே தானானே…
பெண் : நான் வாசமல்லி பூசமல்லி… வாடிடாத செண்டுமல்லி… குழு : தந்தானானே தானா னானே தானானே…
Notes : Aaravalli Sooravalli Song Lyrics in Tamil. This Song from Velainu Vandhutta Vellaikaaran (2016). Song Lyrics penned by Yugabharathi. ஆரவல்லி சூரவல்லிபாடல் வரிகள்.
பெண் : நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி… உங்கள் சோகம் களைக்கும் களைக்கும் மந்திரி… நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி… உங்கள் சோகம் களைக்கும் களைக்கும் மந்திரி…
பெண் : இராந்தல் மின்னலிலே ஜொலிப்பேனே… சோம்பல் இல்லாமலே கலிப்பேனே… தீண்டும் இன்பம் மீண்டும் மீண்டும்… தூண்டும் நெஞ்சில் தோன்றும் தோன்றும் தோன்றும்… ஆ…
பெண் : நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி… உங்கள் சோகம் களைக்கும் களைக்கும் மந்திரி… நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி… உங்கள் சோகம் களைக்கும் களைக்கும் மந்திரி…
—BGM—
Notes : Soppanasundari Song Lyrics in Tamil. This Song from Veera Sivaji (2016). Song Lyrics penned by Arunraja Kamaraj. சொப்பன சுந்தரிபாடல் வரிகள்.
பெண் : காக்கா முட்டை காக்கா முட்டை… காக்கா முட்டை காக்கா முட்டை…
பெண் : காக்கா முட்டை கண்ணாலதான் கபடி ஆடுவேன்… கன்னி காலம் நேரம் பார்த்திடாம மகுடி ஊதுவேன்… வேட்டி கட்டும் உங்களுக்கு கிறுக்கு ஏத்துவேன்… ஒன்னு வேண்டும் வர மேனியால சரக்க ஊத்துவேன்…
பெண் : இருப்பவங்க ஜாக்கெட்டுல பணத்த குத்துங்க… ஏதும் இல்லாதவங்க போகும் வர கைய தட்டுங்க… ரசிப்பவங்க சொக்கி நில்லுங்க… என்ன ரகசியமா முத்து பண்ணுங்க…
பெண் : காக்கா முட்டை காக்கா முட்டை… காக்கா முட்டை காக்கா முட்டை…
—BGM—
பெண் : தில்லு இருந்தா என்ன தின்ன வரலாம்… தேவை இருந்தா என்ன திரும்ப திரும்ப நெருங்கலாம்… காசு இருந்தா என்ன வாங்கி விடலாம்… காதல் இருந்தா என்ன கடைசி வர தொடரலாம்…
பெண் : தயங்கி நிக்குற ஆளு நோயில் படுக்குறான்… கலவி கொள்ளுற ஆளு வாழ்வ ஜெயிக்குறான்… எதுவும் இங்கே குத்தம் இல்லேங்க… அள்ளி அனைக்கலேன்னா ரத்தம் சுண்டுங்க…
பெண் : காக்கா முட்டை காக்கா முட்டை… காக்கா முட்டை காக்கா முட்டை…
குழு : கட்டிக்க தெரியாம… ஓட்டிக்க முடியாம… கிட்டத்தில் அடி நீயும் வராதே வீணே…
—BGM—
குழு : கட்டிக்க துணியாம… எட்டத்தில் இருந்தே நீ… பத்திக்க நெனச்சாலே ஆகாதுதானே…
—BGM—
குழு : ஆசை கொல்லுற நெஞ்ச நீ விட்டுவிடாத… அங்கேயும் இங்கேயும் சுத்த விடாத… கண்டத எப்பவும் வெட்டி விடாத… வந்திடு என்னிடம் வெட்கபடாத…
—BGM—
பெண் : பாசம் சில நாள்… கொண்ட நேசம் சில நாள்… ஆசை சில நாள்… இந்த அறிய உடலை அறிய வா…
பெண் : நீயும் சில நாள்… இங்கே நானும் சில நாள்… யாரும் சில நாள்… என்ற நிலையில் சரசம் புரிய வா…
பெண் : குடும்பம் விளங்க ஏத்து… குத்து விளக்கதான்… புரிஞ்சி கொள்ளணும் நானும்… சின்ன சிலுக்குதான்…
பெண் : இருக்கும் மட்டும் என்ன ஓட்டுங்க… இன்னும் இறுக்கி கொள்ள கப்பங்கட்டுங்க…
குழு : காக்கா முட்டை காக்கா முட்டை… காக்கா முட்டை காக்கா முட்டை…
பெண் : காக்கா முட்டை கண்ணாலதான் கபடி ஆடுவேன் கன்னி காலம் நேரம் பார்த்திடாம மகுடி ஊதுவேன்… வேட்டி கட்டும் உங்களுக்கு கிறுக்கு ஏத்துவேன்… ஒன்னு வேண்டும் வர மேனியால சரக்க ஊத்துவேன்…
குழு : இருப்பவங்க ஜாக்கெட்டுல பணத்த குத்துங்க… ஏதும் இல்லாதவங்க போகும் வர கைய தட்டுங்க…
பெண் : ரசிப்பவங்க சொக்கி நில்லுங்க… என்ன ரகசியமா முத்து பண்ணுங்க… காக்கா…
Notes : Kaakkaa Muttai Song Lyrics in Tamil. This Song from Vellakkara Durai (2014). Song Lyrics penned by Yugabharathi. காக்கா முட்டை பாடல் வரிகள்.
குழு : பிறவி என்ற தூண்டில் முள்ளில்… வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு… தானே வந்து சிக்கி கொண்டு… சில ஆசைகள் சேகரித்தோம்…
குழு : மரணம் என்ற வானம் ஒன்றில்… சிறகை சூடி ஏறும் முன்னே… கடைசி ஆசை ஒன்றை மட்டும்… நிறைவேற்றிட ஏங்குகிறோம்…
—BGM—
பெண் : யார் விழியில் யார் வரைந்த கனவோ… பாதியிலே கலைந்தால் தொடராதோ… ஆள் மனதில் யார் விதைத்த நினைவோ… காலமதை சிதைத்தும் மறக்காதோ…
குழு : பிறவி என்ற தூண்டில் முள்ளில்… வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு… தானே வந்து சிக்கி கொண்டு… சில ஆசைகள் சேகரித்தோம்…
குழு : மரணம் என்ற வானம் ஒன்றில்… சிறகை சூடி ஏறும் முன்னே… கடைசி ஆசை ஒன்றை மட்டும்… நிறைவேற்றிட ஏங்குகிறோம்…
—BGM—
பெண் : ஆஹான்… வீழும் முன் அந்த கண்ணீர் துளி… கரையும் அந்த மாயம் என்ன… இதழைச் சேரும் முன்னே… காயம் ஆறும் இந்த புன்னகைகள்…
பெண் : உரைக்கும் முன்னே காதல் ஒன்று… மரித்துப் போன சோகம் என்ன… பதிக்கும் முன்னே உதிர்ந்து போன முத்தம் ஏராளம்…
—BGM—
குழு : பிறவி என்ற தூண்டில் முள்ளில்… வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு… தானே வந்து சிக்கி கொண்டு… சில ஆசைகள் சேகரித்தோம்…
குழு : மரணம் என்ற வானம் ஒன்றில்… சிறகை சூடி ஏறும் முன்னே… கடைசி ஆசை ஒன்றை மட்டும்… நிறைவேற்றிட ஏங்குகிறோம்…
குழு : பிறவி என்ற தூண்டில் முள்ளில்… வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு… தானே வந்து சிக்கி கொண்டு… சில ஆசைகள் சேகரித்தோம்…
குழு : மரணம் என்ற வானம் ஒன்றில்… சிறகை சூடி ஏறும் முன்னே… கடைசி ஆசை ஒன்றை மட்டும்… நிறைவேற்றிட ஏங்குகிறோம்…
Notes : Piravi Song Lyrics in Tamil. This Song from Masss (Massu Engira Masilamani) (2015). Song Lyrics penned by Madhan Karky. பிறவி என்ற தூண்டில்பாடல் வரிகள்.
பெண் : அப்பன் புள்ள உரவ சொல்ல… வார்தைகளே இல்ல… ஆகாயத்த போல அது… ரொம்ப சின்னதில்ல…
பெண் : அப்பன் புள்ள உரவ சொல்ல… வார்தைகளே இல்ல… ஆகாயத்த போல அது… ரொம்ப சின்னதில்ல…
பெண் : அப்பனே புள்ளையா… புள்ளையே அப்பனா… மாறியே வாழுற… வாழ்க்க அழகுதான்…
பெண் : வெள்ளந்தி பாசத்துக்கு… விலையே இல்லதான்…
பெண் : ஏலே ஏலே ஏலே… ஏழ எல்லாம் ஏழ இல்லடா…
—BGM—
பெண் : எங்க ஜனங்களோட மனசு எல்லாம்… ரொம்ப வெள்ளடா…
பெண் : அப்பன் புள்ள உரவ சொல்ல… வார்தைகளே இல்ல… ஆகாயத்த போல அது… ரொம்ப சின்னதில்ல…
—BGM—
பெண் : அப்பனோட மனசுக்குள்ள… கருவறைதான் இருக்கு… மகனோட கனவுகள… அடை காக்கத்தான்…
பெண் : அப்பங்கூட இருக்கையில… ஆண்டவன்தான் எதுக்கு… மகனோட உலகமிங்கே… அப்பன் மட்டுந்தான்…
பெண் : இருக்கும் இடமே சொர்கமென… நினைக்கும் மனசே போதுமடா… தலைக்கு மேலே மகன் பறக்க… பறக்கும் குதிரை கிடைக்குமடா… பெண் : ஏலே ஏலே ஏலே… ஏழ எல்லாம் ஏழ இல்லடா…
—BGM—
பெண் : நாங்க காணுகிற கனவு எல்லாம்… நியாயம் தானாடா…
—BGM—
பெண் : ஆண் தாயாய் வாழ்கிற… அப்பனோட மனசு… ஆயிரம் தாய்மைக்கிங்கே… நிகர்தானாடா…
பெண் : ஆகாயம் ஒசருமுன்னு… யார் சொன்னதிங்கே… அன்பு கொண்ட இந்த உறவு… அத மிஞ்சுண்டா…
பெண் : பொன்னும் பொருளும் தேவை இல்லை… அழுக்கில்லை புன்னகை பொதுமுள்ள்… ஒத்திகை இல்லா வாழ்கையில… உறவும் பாசமும் வாழ்வில்ல… பெண் : ஏலே ஏலே ஏலே… ஏழ எல்லாம் ஏழ இல்லடா…
—BGM—
பெண் : எங்க அன்புக்கிங்க கடவுள் கூட… ஈடு இல்லடா…
—BGM—
பெண் : அப்பன் புள்ள உரவ சொல்ல… வார்தைகளே இல்ல… ஆகாயத்த போல அது… ரொம்ப சின்னதில்ல…
பெண் : அப்பனே புள்ளையா… புள்ளையே அப்பனா… மாறியே வாழுற… வாழ்க்க அழகுதான்…
பெண் : வெள்ளந்தி பாசத்துக்கு… விலையே இல்லதான்…
பெண் : ஏலே ஏலே ஏலே… ஏழ எல்லாம் ஏழ இல்லடா…
—BGM—
பெண் : எங்க ஜனங்களோட மனசு எல்லாம்… ரொம்ப வெள்ளடா…
—BGM—
Notes : Yele Yele Song Lyrics in Tamil. This Song from Vimanam (2023). Song Lyrics penned by Snehan. ஏலே ஏலே பாடல் வரிகள்.
பெண் : தரணி ஆளவே… செங்காட்டில் பிறந்த ராசனே… பறவையாகவே… தங்காம பறந்த நேசனே…
பெண் : ஊர சேர கேட்டாயே… ஒன்னு கூடியாச்சே… கண்ண கெட்டிபோட்டாலும்… ஊரே கண்ணீர் ஆச்சே…
பெண் : எங்க போன எங்க போன ராசா… நெஞ்சு பாரம் தாங்கலியே… சிங்கம் போல வந்த மகாராசா… சொல்லி விட்டு போகலியே…
—BGM—
பெண் : எதிரிக்கும் தீம நீ நினக்கலியே… மறுத்தவன் கூட உன்ன வெறுக்கலியே… எங்களுக்காக ஓடி வந்து… ஊர காத்த சாமியே…
பெண் : உன் நிழலும் கூட… பாசமான ஆளு என்று தேடுமே… ஊருக்காக வாழ்ந்த வீரனே… ஓ… தேரில் ஏறி தூரம் போவதேன்… ஓ… ஓஹஹோ…
பெண் : எங்க போன எங்க போன ராசா… நெஞ்சு பாரம் தாங்கலியே… எங்க போன எங்க போன ராசா… சொல்லி விட்டு போகலியே…
பெண் : உயரப் போகவே தந்தாயே… சிறகு ஆயிரம்… மறையப் போகுதே உன்னோட… சிரிக்கும் பூ முகம்…
பெண் : இந்த நாளு மாறாதோ… மீண்டும் வந்து சேர… பொய்யா மாறிப் போகாதோ… மீண்டும் எழுந்து வாயேன்…
பெண் : எங்க போன எங்க போன ராசா…
—BGM—
பெண் : சிங்கம் போல வந்த மகாராசா…
—BGM—
Notes : Yenga Pona Raasa Song Lyrics in Tamil. This Song from Kazhuvethi Moorkkan (2023). Song Lyrics penned by SY Gowthama Raj. எங்க போன ராசா பாடல் வரிகள்.