Tag Archives: மது பாலகிருஷ்ணன்

பிச்சை பாத்திரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாமது பாலகிருஷ்ணன்இளையராஜாநான் கடவுள்

Pitchai Paathiram Song Lyrics in Tamil


BGM

ஆண் : பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே…
நான் ஒரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே…

{ ஆண் : பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு…
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்…
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே… } * (2)

BGM

ஆண் : அம்மையும் அப்பனும் தந்ததா…
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா…

BGM

ஆண் : அம்மையும் அப்பனும் தந்ததா…
இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா…

ஆண் : இம்மையை நான் அறியாததா…
இம்மையை நான் அறியாததா…
சிறு பொம்மையின் நிலையினில்…
உண்மையை உணர்ந்திட…

ஆண் : பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே…
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே…

BGM

ஆண் : அத்தனை செல்வமும் உன் இடத்தில்…
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்…

BGM

ஆண் : அத்தனை செல்வமும் உன் இடத்தில்…
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்…
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்…
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்…

ஆண் : ஒரு முறையா இரு முறையா…
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்…
புது வினையா பழ வினையா…
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்…

ஆண் : பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற…
வாழ்கையும் துரத்துதே…
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம்…
இன்று பிதற்றுதே…

ஆண் : அருள் விழியால் நோக்குவாய்…
மலர் பத்தால் தாங்குவாய்…
உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற…

ஆண் : பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே…

ஆண் : பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு…
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்…
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே…


Notes : Pitchai Paathiram Song Lyrics in Tamil. This Song from Naan Kadavul (2009). Song Lyrics penned by Ilaiyaraaja. பிச்சை பாத்திரம் பாடல் வரிகள்.


வைத்த கண்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்மது பாலகிருஷ்ணன் & ஸ்ரீவர்த்தினியுவன் ஷங்கர் ராஜாபோஸ்

Vaitha Kann Song Lyrics in Tamil


BGM

குழு : வைத்த கண் வைத்தது தானோடி…
அப்படியே நிற்கின்றாய்…
தைத்த முள் தைத்தது தானோடி…
சொக்கியே போகின்றாய்…

குழு : அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க…
அவசரம் நீயும் பூப்பூக்க…
யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே…

குழு : வைத்த கண் வைத்தது தானோடி…
அப்படியே நிற்கின்றாய்…
தைத்த முள் தைத்தது தானோடி…
சொக்கியே போகின்றாய்…

குழு : அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க…
அவசரம் நீயும் பூப்பூக்க…
யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே…

BGM

பெண் : ஹா… யாரோ எந்தன் மனசின் நடுவிலே…
ரோஜா தோட்டம் வைத்தது…
உற்று பார்த்தேன் அந்த பகுதியில்…
உந்தன் கால் தடம்…

ஆண் : ஆஆ… யாரோ எந்தன் உயிரின் அறையிலே…
கவிதை புத்தகம் படித்தது…
தேடி பார்த்தேன் அந்த இடத்திலே…
உந்தன் வாசனை…

பெண் : உன் பேரழகு கொஞ்சம்…
உன் பேச்சழகு கொஞ்சம்…
என் பருவத்துக்குள் வந்து…
எனை பஸ்பம் செய்யுதடா…

ஆண் : உன் கண்ணழகு கொஞ்சம்…
உன் முன்னழகு கொஞ்சம்…
என் இரவுக்குள்ளே வந்து…
துளியாய் இறங்கி கடலாக மாறியதே…

பெண் : தந்திரா கண்களில் என்னென்ன…
தந்திரம் செய்தாயோ…
சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள்…
பத்திரம் ஆனாயோ…

BGM

பெண் : இந்த சிரிப்பு இந்த சிரிப்புதான்…
என்னை கொள்ளை கொண்டது…
இந்த கண்கள் இந்த கண்கள்தான்…
கலகம் செய்தது…

ஆண் : இந்த சிணுங்கள் இந்த சிணுங்கள்தான்…
எந்தன் அணுவில் நுழைந்தது…
இந்த செழுமை இந்த செழுமைதான்…
வயசை ஏத்துது…

பெண் : நீ முத்தம் மொத்தம் வைத்தே…
என் கண்ணம் பள்ளம் ஆச்சு…
உன் அத்துமீறல் பார்த்து…
என் பெண்மை திண்மை ஆச்சு…

ஆண் : நீ என்னை தீண்டி தீண்டி…
என் சுவாச பையில் ஏனோ…
ஒரு வெப்ப பந்து நின்று…
மெதுவாய் மெதுவாய் சூடாக சுழலுதடி…

பெண் : தந்திரா கண்களில் என்னென்ன…
தந்திரம் செய்தாயோ…
சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள்…
பத்திரம் ஆனாயோ…

பெண் : ஆ… வெண்ணிலா வேர்க்குது பாரம்மா…
வேர் வரை பூக்குது ஏனம்மா…

குழு : சிப்பியில் சமுத்திரம் சிக்கியது என்னம்மா…

குழு : வைத்த கண் வைத்தது தானோடி…
அப்படியே நிற்கின்றாய்…
தைத்த முள் தைத்தது தானோடி…
சொக்கியே போகின்றாய்…

குழு : அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க…
அவசரம் நீயும் பூப்பூக்க…
யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே…

BGM


Notes : Vaitha Kann Song Lyrics in Tamil. This Song from Bose (2004). Song Lyrics penned by Pa. Vijay. வைத்த கண் பாடல் வரிகள்.


ஆயிரம் வானவில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாதனா சர்கம் & மது பாலகிருஷ்ணன்கார்த்திக் ராஜாமனதோடு மழைக்காலம்

Aayiram Vanavil Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…

BGM

ஆண் : ஓஓ… ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…

ஆண் : இது வரை யாரும் எழுதா கவிதை…
மனதில் தோன்றிடுதே…
புன்னகை எல்லாம் சமுத்திரமாக…
பொங்கி வழிகிறதே…

ஆண் : இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…
இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…

ஆண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…
ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…

BGM

பெண் : ஓஹோ… மலையில் பிறக்கும் அருவிகள் எல்லாம்…
கடலில் கலக்கிறது…

BGM

ஆண் : மலையில் பிறக்கும் அருவிகள் எல்லாம்…
கடலில் கலக்கிறது…
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த…
இதயங்கள் இணைகிறது…

பெண் : கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தால்…
இங்கே வாழ விரும்பிடுவான்…

ஆண் : சேர்ந்து சிரித்து சேர்ந்து அழுது…
மீண்டும் பிரிய தயங்கிடுவான்…

பெண் : நதியில் விழுந்த நிலவின் பிம்பம்…
நனைவது கிடையாது…

ஆண் : அழகிய உறவுகள் அருகில் இருந்தால்…
சோகம் நமக்கேது…

பெண் : இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…

ஆண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…
ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…

BGM

பெண் : நேற்று உருண்டு நாளை ஆகும்…
காலம் நிற்காது…

BGM

ஆண் : ஓஹோ… நேற்று உருண்டு நாளை ஆகும்…
காலம் நிற்காது…
மாற்றம் கோடி வந்தால் கூட…
மனங்கள் மாறாது…

பெண் : கல்லும் மண்ணும் வீடா இல்லை…
அன்பில் செய்தது வீடாகும்…

ஆண் : கூட்டு புழுவுக்கு கூட்டால்தானே…
வண்ணம் நூறு உண்டாகும்…

பெண் : வேடந்தாங்கல் பறவையை போல…
ஒன்றாய் பறக்கிறது…

ஆண் : காற்றில் கிளைகள் தவழ்ந்தால் கூட…
வேரை மதிக்கிறது…

ஆண் : இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…
இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…

பெண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…

BGM

ஆண் : ஓ… ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…

பெண் : இது வரை யாரும் எழுதா கவிதை…
மனதில் தோன்றிடுதே…
புன்னகை எல்லாம் சமுத்திரமாக…
பொங்கி வழிகிறதே…

ஆண் : இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…
இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…

பெண் & ஆண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…
ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…


Notes : Aayiram Vanavil Song Lyrics in Tamil. This Song from Manathodu Mazhaikalam (2006). Song Lyrics penned by Na. Muthukumar. ஆயிரம் வானவில் பாடல் வரிகள்.


அற்றைத் திங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிமது பாலகிருஷ்ணன் & சுஜாதா மோகன்வித்யாசாகர்சிவப்பதிகாரம்

Atrai Thingal Song Lyrics in Tamil


BGM

பெண் : அற்றைத் திங்கள் வானிடம்…
ஆண் : அல்லிச் செண்டோ நீரிடம்…
பெண் : சுற்றும் தென்றல் பூவிடம்…
ஆண் : சொக்கும் ராகம் யாழிடம்…
பெண் : காணுகின்ற காதல் என்னிடம்…
ஆண் : நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்…

ஆண் : அற்றைத் திங்கள் வானிடம்…
பெண் : அல்லிச் செண்டோ நீரிடம்…
ஆண் : சுற்றும் தென்றல் பூவிடம்…
பெண் : சொக்கும் ராகம் யாழிடம்…
ஆண் : காணுகின்ற காதல் என்னிடம்…
பெண் : நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்…

BGM

பெண் : அடிதொட முடிதொட ஆசை பெருகிட…
நேரும் பலவித பரிபாஷை…

ஆண் : பொடிபட பொடிபட நாணம் பொடிபட…
கேட்கும் மனதினில் உயிரோசை…

பெண் : முடிதொட முகந்தொட மோகம் முழுகிட…
வேர்க்கும் முதுகினில் இதிகாசம்…

ஆண் : உருகிடஉருகிட ஏக்கம் உருகிட…
கூடும் அனலிது குளிர்வீசும்…

பெண் : குலுங்கினேன் உடல் கூசிட…
கிறங்கினேன் விரல் நீந்திட…

ஆண் : மயங்கினேன் சுகம் சேர்ந்திட…
தளும்பினேன் எனை நீ தொட…
பாய்ந்திட ஆய்ந்திட…

பெண் : காணுகின்ற காதல் என்னிடம்…
ஆண் : நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்…

ஆண் : அற்றைத் திங்கள் வானிடம்…
பெண் : அல்லிச் செண்டோ நீரிடம்…
ஆண் : சுற்றும் தென்றல் பூவிடம்…
பெண் : சொக்கும் ராகம் யாழிடம்…

BGM

ஆண் : உடலெது உடையெது தேடும் நிலையிது…
காதல் கடனிது அடையாது…

பெண் : இரவெது பகலெது தேடும் சுகமிது…
சாகும் வரையிலும் முடியாது…

ஆண் : கனவெது நினைவெது கேட்கும் பொழுதிது…
காமப் பசி இது அடங்காது…

பெண் : வலமெது இடமெது வாட்டும் கதையிது…
தீண்டும் வரையிலும் விளங்காது…

ஆண் : நடுங்கலாம் குளிர்வாடையில்…
அடங்கலாம் ஒரு ஆடையில்…

பெண் : தயங்கலாம் இடைவேளையில்…
உறங்கலாம் அதிகாலையில்…
கூடலில் ஊடலில்…

ஆண் : காணுகின்ற காதல் என்னிடம்…
பெண் : நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்…


Notes : Atrai Thingal Song Lyrics in Tamil. This Song from Sivappathigaram (2006). Song Lyrics penned by Yugabharathi. அற்றைத் திங்கள் பாடல் வரிகள்.


தெய்வம் இல்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிமது பாலகிருஷ்ணன்யுவன் ஷங்கர் ராஜாநான் மகான் அல்ல

Dheivam Illai Song Lyrics in Tamil


ஆண் : தெய்வம் இல்லை எனும்போது…
கோவில் எதற்கு…
இல்லை நீயும் எனும்போது…
வாழ்வே எதற்கு…

ஆண் : இதுவரையில் எதைக் கேட்டாலும்…
தருவாயே மனம் கோணாமல்…
துயரம் நான் இதை கேட்காமல்…
கொடுத்தாயே எதற்காக…

ஆண் : தெய்வம் இல்லை எனும்போது…
கோவில் எதற்கு…
இல்லை நீயும் எனும்போது…
வாழ்வே எதற்கு…

BGM

ஆண் : ஒரு நாள் எனைப் பிரிந்தாலும்…
வாடிய முகமே உனை இனி எங்கு பார்ப்பது… ஒ…
எனதாசைகள் நிறைவேற ஏங்கிய…
மனமே உன்னை எதை தந்து மீட்பது…

ஆண் : அழுதிடக் கூடாதென்று அறிவுரை கூறுவாய்…
அழுகையை நீயே தந்து போனாயே…
உறங்கிட நேரம் இன்றி உழைத்திடும் கண்களே…
நிரந்தர தூக்கம் என்ன ஆழ்ந்தாயே…

ஆண் : தெய்வம் இல்லை எனும்போது…
கோவில் எதற்கு…

BGM

ஆண் : உயிர் வாழ்வதே எனக்காக என்று நீ…
தினம் பேசுவாய் அது என்ன ஆனது… ஒ…
தலை மேல் சுமை இருந்தாலும் புன்னகை…
தருமே இதழ் அது எங்கு போனது…

ஆண் : நடந்திட பாதம் தந்து வழிகளை காட்டினாய்…
நடுவினில் முந்தி சென்றால் என் செய்வேன்…
எது எது இல்லை என்று எனக்கென வாங்குவாய்…
இறுதியில் நீயே இல்லை என் சொல்வேன்…

ஆண் : தெய்வம் இல்லை எனும்போது…
கோவில் எதற்கு…
இல்லை நீயும் எனும் போது…
வாழ்வே எதற்கு…


Notes : Dheivam Illai Song Lyrics in Tamil. This Song from Naan Mahaan Alla (2010). Song Lyrics penned by Yugabharathi. தெய்வம் இல்லை பாடல் வரிகள்.


இப்பவே இப்பவே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாமது பாலகிருஷ்ணன் & ஹரிணிவித்யாசாகர்ராமன் தேடிய சீதை

Ippavae Ippavae Song Lyrics in Tamil


BGM

ஆண் : இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே…
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே…

ஆண் : கண்ணை மூடி உன்னைக் கண்ட அப்பவே அப்பவே…
கைவளையல் ஓசை கேட்டால் அப்பவே அப்பவே…
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே…
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே…

பெண் : இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே…
ஆண் : இப்பவே இப்பவே பேசணும் இப்பவே…

BGM

ஆண் : வெள்ளச் சேதம் வந்தால் கூட தப்பிக் கொள்ளலாம்…
உள்ளச்சேதம் வந்து விட்டால் என்ன செய்வது…

பெண் : முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால் ரத்தம் மட்டும் தான்…
உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன் நித்தம் யுத்தம் தான்…

ஆண் : சொல்லித் தீரா இன்பம் கண்டு…
எந்தன் நெஞ்சு கூத்தாட‌…

பெண் : மின்னல் கண்ட தாழை போல…
உன்னால் நானும் பூத்தாட‌…

ஆண் : உன்னைக் கண்டேன் என்னைக் காணோம்…
என்னைக் காண உன்னை நானும்…

பெண் : இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே…
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே…

BGM

ஆண் : எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்ல திருப்பம்…
இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே செல்ல விருப்பம்…

பெண் : நெஞ்சவயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன்…
நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்…

ஆண் : உன்னைக் காண நானும் வந்தால்…
சாலை எல்லாம் பூஞ்சோலை…

பெண் : உன்னை நீங்கி போகும் நேரம்…
சோலை கூட தார்ப்பாலை…

ஆண் : மண்ணுக்குள்ளே வேரைப் போலே…
நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்…

பெண் : இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே…
ஆண் : இப்பவே இப்பவே பேசணும் இப்பவே…

BGM

பெண் : கண்ணுக்குள்ள உன்னைக் கண்ட அப்பவே அப்பவே…
ஆண் : கைவளையல் ஓசை கேட்டால் அப்பவே அப்பவே…

பெண் : ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே…
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே…


Notes : Ippavae Ippavae Song Lyrics in Tamil. This Song from Raman Thediya Seethai (2008). Song Lyrics penned by Viveka. இப்பவே இப்பவே பாடல் வரிகள்.


மெல்ல வளஞ்சது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ரா.தனிக்கொடிமது பாலகிருஷ்ணன்ஜி. வி. பிரகாஷ் குமார்கொம்பன்

Mella Valanjadhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : மெல்ல வளஞ்சது ஆகாயம்…
உள்ளம் சிலிர்க்கிறதே…
நூறு தலை முறை ஆனாலும்…
சொந்தம் இது போல் வாராதே…

ஆண் : வம்பில் ஜெயித்திடும் ஓர் வீரம்…
அன்பில் ஜெயிக்கிறதே…
தொப்புள் கொடியின் பூ வாசம்…
தாலி கொடியில் தந்தானே…

ஆண் : கீறி பார்த்த முள்தானே நீதி முள்ளா நின்னானே…
காயமெல்லாம் மாயமாகி பூக்கள் ஆகுதே…

ஆண் : மெல்ல வளஞ்சது ஆகாயம்…
உள்ளம் சிலிர்க்கிறதே…
நூறு தலை முறை ஆனாலும்…
சொந்தம் இது போல் வாராதே…

BGM

ஆண் : சொந்தம் கூடி வாழ்வதுண்டு…
ஆளும் பேரும் சேர்வதுண்டு…
என்னை போல யோகம் உண்டா ஊர கேக்குறேன்…

ஆண் : என்ன பெருசா செஞ்சு வச்சேன்…
பொண்ணதானே கட்டி வச்சேன்…
இப்ப கேட்டா உசுரக் கூட தார வார்க்குறேன்…

ஆண் : மக பெருமைகள் பின்னாச்சு…
மருமகனிடம் என் மூச்சு…
இவன் பேச்ச மீறி இங்க மறு பேச்சில்ல…
எதாச்சும் இவனுகின்னா என் மூச்சில…

BGM

ஆண் : ஆச வார்த்த பேசவில்ல…
நானும் ரோசம் பார்க்கவில்ல…
என்ன காக்க தன்மானத்த தந்து போகிறான்…

ஆண் : சோ்ந்து செல்லும் நண்பன் இல்ல…
நானும் இங்க கண்ணன் இல்ல…
தாழ்ந்த போதும் வீழ்ந்திடாத கீதை சொல்கிறான்…

ஆண் : கட்டுப்படுத்துறேன் கண்ணீர…
முட்டி கசியுது தன்னால…
தெக்கதீ காட்டு தீ வெளகேத்துதே…
தெய்வங்கள் மூக்கு மேல விரல் வைக்குதே…

ஆண் : மெல்ல வளஞ்சது ஆகாயம்…
உள்ளம் சிலிர்க்கிறதே…
நூறு தலை முறை ஆனாலும்…
சொந்தம் இது போல் வாராதே…

ஆண் : கீறி பார்த்த முள்தானே…
நீதி முள்ளா நின்னானே…
காயமெல்லாம் மாயமாகி பூக்கள் ஆகுதே…

ஆண் : மெல்ல வளஞ்சது ஆகாயம்…
உள்ளம் சிலிர்க்கிறதே…
நூறு தலை முறை ஆனாலும்…
சொந்தம் இது போல் வாராதே…


Notes : Mella Valanjadhu Song Lyrics in Tamil. This Song from Komban (2015). Song Lyrics penned by Ra.Thanikodi. மெல்ல வளஞ்சது பாடல் வரிகள்.


ஒரு கிளி காதலில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிமது பாலகிருஷ்ணன் & சுஜாதா மோகன்வித்யாசாகர்பரமசிவன்

Oru Kili Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு கிளி காதலில்…
ஒரு கிளி ஆசையில்…
சேரும் நேரம் இது…
மெய் காதல் தீராதது…

பெண் : ஒரு கிளி காதலில்…
ஒரு கிளி ஆசையில்…
சேரும் நேரம் இது…
மெய் காதல் தீராதது…

BGM

பெண் : யார் மீது ஆசை கூடி போக…
தேகம் இளைத்தாயோ…

ஆண் : நான் காதலோடு தோழனான…
சேதி அறிவாயோ…

BGM

பெண் : யார் மீது ஆசை கூடி போக…
தேகம் இளைத்தாயோ…

ஆண் : நான் காதலோடு தோழனான…
சேதி அறிவாயோ…

பெண் : குறையுது குறையுது இடைவெளி குறையுது…
நிறையுது நிறையுது சுகம்…

ஆண் : இணையுது இணையுது இரு உடல் இணையுது…
கவிதைகள் எழுதுது நகம்…

பெண் : நீ விடும் மூச்சிலே காதலின் கூச்சலே…

ஆண் : ஒரு கிளி…
பெண் : ம்ம்ம்…
ஆண் : காதலில்…
பெண் : ம்ம்ம்…

ஆண் : ஒரு கிளி…
பெண் : ம்ம்ம்…
ஆண் : ஆசையில்…
பெண் : ம்ம்ம்…

பெண் : சேரும் நேரம் இது…
ஆண் : மெய் காதல் தீராதது…

BGM

ஆண் : உன் சேலை கூறும் காதல் பாடம்…
நான் பயில வேண்டும்…

பெண் : என் ஆயுள் ரேகை நீயும் ஆகி…
கூட வர வேண்டும்…

BGM

ஆண் : உன் சேலை கூறும் காதல் பாடம்…
நான் பயில வேண்டும்…

பெண் : என் ஆயுள் ரேகை நீயும் ஆகி…
கூட வர வேண்டும்…

ஆண் : கொடியது கொடியது தனிமைகள் கொடியது…
இனியது இனியது துணை…

பெண் : மிரளுது மிரளுது அழகுகள் மிரளுது…
இமைகளில் முடிந்திடு என்னை…

ஆண் : தாவணி வீதியில் காமனின் வேதியல்…

பெண் : ஒரு கிளி…
ஆண் : ம்ம்ம்…
பெண் : காதலில்…
ஆண் : ம்ம்ம்…

பெண் : ஒரு கிளி…
ஆண் : ம்ம்ம்…
பெண் : ஆசையில்…
ஆண் : ம்ம்ம்…

பெண் : சேரும் நேரம் இது…
மெய் காதல் தீராதது…

ஆண் : சேரும் நேரம் இது…
மெய் காதல் தீராதது…


Notes : Oru Kili Song Lyrics in Tamil. This Song from Paramasivan (2006). Song Lyrics penned by Yugabharathi. ஒரு கிளி காதலில் பாடல் வரிகள்.


Moongil Vittu Song Lyrics in Tamil

மூங்கில் விட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமது பாலகிருஷ்ணன்வித்யாசாகர்அபியும் நானும்

Moongil Vittu Song Lyrics in Tamil


BGM

ஆண் : மூங்கில் விட்டு சென்ற பின்னே…
அந்த பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன…
பெற்ற மகள் பிரிகின்றாள்…
அந்தப் பெண்ணோடு தந்தைக்குள்ள உரிமை என்ன…

ஆண் : காற்றைப் போல் வெயில் ஒன்று…
கடந்து போன பின்…
கை காட்டி மரம் கொள்ளும் தனிமை என்ன…

ஆண் : மாயம் போல் கலைகின்ற மனித வாழ்க்கையில்…
சொந்தங்கள் சொல்லிச்செல்லும் சேதி என்ன…

ஆண் : பாசத்தின் ஊடாக ஞானம் கொள்ள…
படைத்தவன் புரிகின்ற சூழ்ச்சி என்ன…


Notes : Moongil Vittu Song Lyrics in Tamil. This Song from Abhiyum Naanum (2008). Song Lyrics penned by Vairamuthu. மூங்கில் விட்டு பாடல் வரிகள்.


வா வா என் தேவதையே 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமது பாலகிருஷ்ணன்வித்யாசாகர்அபியும் நானும்

Vaa Vaa En Devadhai Song Lyrics in Tamil


BGM

ஆண் : வா வா என் தேவதையே…
பொன் வாய் பேசும் தாரகையே…
பொய் வாழ்வின் பூரணமே…
பெண் பூவே வா…

ஆண் : வா வா என் தேவதையே…
பொன் வாய் பேசும் தாரகையே…
பொய் வாழ்வின் பூரணமே…
பெண் பூவே வா…

ஆண் : வான் மிதக்கும் கண்களுக்கு…
மயில் இறகால் மையிடவா…
மார்புதைக்கும் கால்களுக்கு…
மணி கொலுசு நான் இடவா…

ஆண் : வா வா என் தேவதையே…
பொன் வாய் பேசும் தாரகையே…
பொய் வாழ்வின் பூரணமே…
பெண் பூவே வா…

BGM

ஆண் : செல்வ மகள் அழுகை போல்…
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை…
பொன் மகளின் புன்னகைப்போல்…
யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை…

ஆண் : என் பிள்ளை எட்டு வைத்த நடையை போல…
எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை…
முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு…
முந்நூறு மொழிகளில் வார்த்தை இல்லை…

ஆண் : தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா…
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…

ஆண் : வா வா என் தேவதையே…
பொன் வாய் பேசும் தாரகையே…
பொய் வாழ்வின் பூரணமே…
பெண் பூவே வா…

BGM

ஆண் : பிள்ளை நிலா பள்ளி செல்ல…
அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்…
தெய்வ மகள் தூங்கயிலே…
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்…

ஆண் : சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது…
என்னை பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்…
மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது…
இவள் மீசை இல்லாத மகன் என்று சொன்னேன்…

ஆண் : பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே…
ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்துக் கொண்டேன்…

ஆண் : வா வா என் தேவதையே…
பொன் வாய் பேசும் தாரகையே…
பொய் வாழ்வின் பூரணமே…
பெண் பூவே வா…

ஆண் : வா வா என் தேவதையே…
பொன் வாய் பேசும் தாரகையே…
பொய் வாழ்வின் பூரணமே…
பெண் பூவே வா…

ஆண் : வான் மிதக்கும் கண்களுக்கு…
மயில் இறகால் மையிடவா…
மார்புதைக்கும் கால்களுக்கு…
மணி கொலுசு நான் இடவா…


Notes : Vaa Vaa En Devadhai Song Lyrics in Tamil. This Song from Abhiyum Naanum (2008). Song Lyrics penned by Vairamuthu. வா வா என் தேவதையே பாடல் வரிகள்.