பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | சாதனா சர்கம் & மது பாலகிருஷ்ணன் | கார்த்திக் ராஜா | மனதோடு மழைக்காலம் |
Aayiram Vanavil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…
—BGM—
ஆண் : ஓஓ… ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…
ஆண் : இது வரை யாரும் எழுதா கவிதை…
மனதில் தோன்றிடுதே…
புன்னகை எல்லாம் சமுத்திரமாக…
பொங்கி வழிகிறதே…
ஆண் : இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…
இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…
ஆண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…
ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…
—BGM—
பெண் : ஓஹோ… மலையில் பிறக்கும் அருவிகள் எல்லாம்…
கடலில் கலக்கிறது…
—BGM—
ஆண் : மலையில் பிறக்கும் அருவிகள் எல்லாம்…
கடலில் கலக்கிறது…
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த…
இதயங்கள் இணைகிறது…
பெண் : கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தால்…
இங்கே வாழ விரும்பிடுவான்…
ஆண் : சேர்ந்து சிரித்து சேர்ந்து அழுது…
மீண்டும் பிரிய தயங்கிடுவான்…
பெண் : நதியில் விழுந்த நிலவின் பிம்பம்…
நனைவது கிடையாது…
ஆண் : அழகிய உறவுகள் அருகில் இருந்தால்…
சோகம் நமக்கேது…
பெண் : இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…
ஆண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…
ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…
—BGM—
பெண் : நேற்று உருண்டு நாளை ஆகும்…
காலம் நிற்காது…
—BGM—
ஆண் : ஓஹோ… நேற்று உருண்டு நாளை ஆகும்…
காலம் நிற்காது…
மாற்றம் கோடி வந்தால் கூட…
மனங்கள் மாறாது…
பெண் : கல்லும் மண்ணும் வீடா இல்லை…
அன்பில் செய்தது வீடாகும்…
ஆண் : கூட்டு புழுவுக்கு கூட்டால்தானே…
வண்ணம் நூறு உண்டாகும்…
பெண் : வேடந்தாங்கல் பறவையை போல…
ஒன்றாய் பறக்கிறது…
ஆண் : காற்றில் கிளைகள் தவழ்ந்தால் கூட…
வேரை மதிக்கிறது…
ஆண் : இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…
இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…
பெண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…
—BGM—
ஆண் : ஓ… ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…
பெண் : இது வரை யாரும் எழுதா கவிதை…
மனதில் தோன்றிடுதே…
புன்னகை எல்லாம் சமுத்திரமாக…
பொங்கி வழிகிறதே…
ஆண் : இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…
இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…
பெண் & ஆண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…
ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…
Notes : Aayiram Vanavil Song Lyrics in Tamil. This Song from Manathodu Mazhaikalam (2006). Song Lyrics penned by Na. Muthukumar. ஆயிரம் வானவில் பாடல் வரிகள்.