பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பா. விஜய் | மது பாலகிருஷ்ணன் & ஸ்ரீவர்த்தினி | யுவன் ஷங்கர் ராஜா | போஸ் |
Vaitha Kann Song Lyrics in Tamil
—BGM—
குழு : வைத்த கண் வைத்தது தானோடி…
அப்படியே நிற்கின்றாய்…
தைத்த முள் தைத்தது தானோடி…
சொக்கியே போகின்றாய்…
குழு : அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க…
அவசரம் நீயும் பூப்பூக்க…
யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே…
குழு : வைத்த கண் வைத்தது தானோடி…
அப்படியே நிற்கின்றாய்…
தைத்த முள் தைத்தது தானோடி…
சொக்கியே போகின்றாய்…
குழு : அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க…
அவசரம் நீயும் பூப்பூக்க…
யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே…
—BGM—
பெண் : ஹா… யாரோ எந்தன் மனசின் நடுவிலே…
ரோஜா தோட்டம் வைத்தது…
உற்று பார்த்தேன் அந்த பகுதியில்…
உந்தன் கால் தடம்…
ஆண் : ஆஆ… யாரோ எந்தன் உயிரின் அறையிலே…
கவிதை புத்தகம் படித்தது…
தேடி பார்த்தேன் அந்த இடத்திலே…
உந்தன் வாசனை…
பெண் : உன் பேரழகு கொஞ்சம்…
உன் பேச்சழகு கொஞ்சம்…
என் பருவத்துக்குள் வந்து…
எனை பஸ்பம் செய்யுதடா…
ஆண் : உன் கண்ணழகு கொஞ்சம்…
உன் முன்னழகு கொஞ்சம்…
என் இரவுக்குள்ளே வந்து…
துளியாய் இறங்கி கடலாக மாறியதே…
பெண் : தந்திரா கண்களில் என்னென்ன…
தந்திரம் செய்தாயோ…
சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள்…
பத்திரம் ஆனாயோ…
—BGM—
பெண் : இந்த சிரிப்பு இந்த சிரிப்புதான்…
என்னை கொள்ளை கொண்டது…
இந்த கண்கள் இந்த கண்கள்தான்…
கலகம் செய்தது…
ஆண் : இந்த சிணுங்கள் இந்த சிணுங்கள்தான்…
எந்தன் அணுவில் நுழைந்தது…
இந்த செழுமை இந்த செழுமைதான்…
வயசை ஏத்துது…
பெண் : நீ முத்தம் மொத்தம் வைத்தே…
என் கண்ணம் பள்ளம் ஆச்சு…
உன் அத்துமீறல் பார்த்து…
என் பெண்மை திண்மை ஆச்சு…
ஆண் : நீ என்னை தீண்டி தீண்டி…
என் சுவாச பையில் ஏனோ…
ஒரு வெப்ப பந்து நின்று…
மெதுவாய் மெதுவாய் சூடாக சுழலுதடி…
பெண் : தந்திரா கண்களில் என்னென்ன…
தந்திரம் செய்தாயோ…
சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள்…
பத்திரம் ஆனாயோ…
பெண் : ஆ… வெண்ணிலா வேர்க்குது பாரம்மா…
வேர் வரை பூக்குது ஏனம்மா…
குழு : சிப்பியில் சமுத்திரம் சிக்கியது என்னம்மா…
குழு : வைத்த கண் வைத்தது தானோடி…
அப்படியே நிற்கின்றாய்…
தைத்த முள் தைத்தது தானோடி…
சொக்கியே போகின்றாய்…
குழு : அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க…
அவசரம் நீயும் பூப்பூக்க…
யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே…
—BGM—
Notes : Vaitha Kann Song Lyrics in Tamil. This Song from Bose (2004). Song Lyrics penned by Pa. Vijay. வைத்த கண் பாடல் வரிகள்.