Tag Archives: அருண்மொழி

நான் என்பது நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்அருண்மொழி & கே.எஸ். சித்ராஇளையராஜாசூரசம்ஹாரம்

Naan Enbathu Nee Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி…
இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி…
தேவலோகம் வேறு ஏது…
தேவி இங்கு உள்ள போது வேதம் ஓது…

பெண் : நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா…
இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா…

BGM

ஆண் : பாவை உந்தன் கூந்தல் இன்று…
போதை வந்து ஏற்றும் போது…
பார்த்து பார்த்து ஏங்கும் நெஞ்சில்…
வந்திடாத மாற்றம் ஏது…

பெண் : பார்வை செய்த சோதனை…
நாளும் இன்ப வேதனை…

ஆண் : காதல் கொண்ட காமனை…
கண்டு கொண்டு நீ அணை…

பெண் : கூடினேன் பண்பாடினேன்…
என் கோலம் வேறு ஆனேன்…
தாவினேன் தள்ளாடினேன்…
உன் தாகம் தீர்க்கலானேன்…

ஆண் : பாலும் தெளிதேனும்…
பறிமாற நேரம் வந்ததே…

பெண் : நான் என்பது நீ அல்லவோ தேவா தேவா…
இனி நான் என்பது நீ அல்லவோ தேவா தேவா…
தேவலோகம் வேறு ஏது…
தேவன் இங்கு உள்ள போது வேதம் ஓது…

ஆண் : நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி…

BGM

பெண் : ஆசை கொண்ட காதல் பாட வந்த பாடல் என்ன…
ஆடுகின்ற போது நெஞ்சில் கூடுகின்ற கூடல் என்ன…

ஆண் : நானும் உந்தன் தோளிலே வாழுகின்ற நாளிது…
பெண் : தோளில் இந்த நாளிலே ஆடுகின்ற பூவிது…

ஆண் : அன்னமே என் ஆசையோ…
உன் ஆதி அந்தம் காண…
கண்ணிலே உண்டானதே என் காதல் தேவி நாண…

பெண் : போதும் இது போதும்…
இளம் பூவை மேனி தாங்குமா…

ஆண் : நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி…
பெண் : இனி நான் என்பது நீ அல்லவோ தேவா தேவா…

ஆண் : தேவலோகம் வேறு ஏது…
பெண் : தேவன் இங்கு உள்ள போது…
ஆண் : வேதம் ஓது…

பெண் : நான் என்பது நீ அல்லவோ தேவா தேவா… ஆஆ…
ஆண் : இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி…


Notes : Naan Enbathu Nee Song Lyrics in Tamil. This Song from Soora Samhaaram (1988). Song Lyrics penned by Gangai Amaran. நான் என்பது நீ பாடல் வரிகள்.


நீல குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்அருண்மொழி & கே.எஸ். சித்ராஇளையராஜாசூரசம்ஹாரம்

Neela Kuyile Solai Kuyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…
நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…

பெண் : பாடி பார்க்கலாம் புது தேவாரம்…
பாடும் பாட்டிலே நீ ஆதாரம்…

ஆண் : நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…

BGM

பெண் : பாடும் சங்கீதம் கண்ணே உன் மொழி…
பாடாது போனால் வாழாது ஜீவன்…
பாசம் அன்போடு கண்டேன் உன் விழி…
பாராது போனால் தாளாது நெஞ்சம்…

பெண் : தாய் போல நானும் தாலாட்டு பாட…
தாளாமல் நீயும் கண் மூட…

ஆண் : தாராததெல்லாம் தந்தாக வேண்டும்…
என் அன்னை இப்போது நீதானம்மா…

பெண் : நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…

ஆண் : நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…

BGM

ஆண் : பூபாளம் பாடும் என் பூந்தென்றலே…
இள நெஞ்சை தூண்டும் இசை பாட வேண்டும்…

பெண் : தேடாமல் தேடும் பொன் மீன் கண்களே…
திரை போட்டதின்று திசை பார்த்து நின்று…

ஆண் : பொன் அள்ளி தூவும் பொன் மாலை நேரம்…
கண்ணே நம் காதல் கல்யாணமே…

பெண் : மாலை வந்தாலே மார் மீதில் ஆடும்…
மாறாது ஆறாது நம் காதல் தேரோட்டம்…

ஆண் : நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…

பெண் : நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…

ஆண் : பாடி பார்க்கலாம் புது தேவாரம்…
பாடும் பாட்டிலே நீ ஆதாரம்…

பெண் : நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…


Notes : Neela Kuyile Solai Kuyile Song Lyrics in Tamil. This Song from Soora Samhaaram (1988). Song Lyrics penned by Gangai Amaran. நீல குயிலே பாடல் வரிகள்.


அம்மன் கோயில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழிஇளையராஜாராஜாவின் பார்வையிலே

Amman Koyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…
உன் அன்புக்கெல்லை சொன்னாலே…
அது எல்லை இல்லா வானம் அம்மா…

ஆண் : நின்றாலும் எங்கு சென்றாலும்…
எப்போதும் எது செய்தாலும்…
எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்…

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…

BGM

ஆண் : பாடங்கள் படித்தால் பாடத்தில் கவனம்…
பாடிடும் வேளையில் பாடலில் கவனம்…
பாவையைக் கண்டால் பருவத்தில் கவனம்…
பார்க்கின்ற வேலையில் மகன் மனம் சிதறும்…

ஆண் : அவன் மனமோ அது எங்கே சென்றாலும்…
இவள் மனமோ அவன் பின்னாலே போகும்…
என்றென்றும் அவள் எண்ணங்கள்…
நலமாக நாம் வாழ நல்வாழ்த்துக் கூறும்…

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…
உன் அன்புக்கெல்லை சொன்னாலே…
அது எல்லை இல்லா வானம் அம்மா…

ஆண் : நின்றாலும் எங்கு சென்றாலும்…
எப்போதும் எது செய்தாலும்…
எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்…

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…

BGM

ஆண் : காமுகன் ஆனாலும் கல் நெஞ்சன் ஆனாலும்…
கயவன் என்றே அவன் பெயர் எடுத்தாலும்…
பொய் சொல்லிப் பிழைக்கும் பிள்ளை என்றாலும்…
பூமியில் ஆயிரம் தவறு செய்தாலும்…

ஆண் : தன் மகனோ அவன் யாரான போதும்…
அவன் நலமே இந்தத் தாய் உள்ளம் தேடும்…
என்றென்றும் அவள் எண்ணங்கள்…
நலமாக நாம் வாழ நல்வாழ்த்துக் கூறும்…

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…
உன் அன்புக்கெல்லை சொன்னாலே…
அது எல்லை இல்லா வானம் அம்மா…

ஆண் : நின்றாலும் எங்கு சென்றாலும்…
எப்போதும் எது செய்தாலும்…
எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்…

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…
உன் அன்புக்கெல்லை சொன்னாலே…
அது எல்லை இல்லா வானம் அம்மா…


Notes : Amman Koyil Song Lyrics in Tamil. This Song from Rajavin Parvaiyile (1995). Song Lyrics penned by Vaali. அம்மன் கோயில் பாடல் வரிகள்.


என் வீட்டு ஜன்னல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழி & பவதாரிணிஇளையராஜாராமன் அப்துல்லா

En Veettu Jannal Song Lyrics in Tamil


BGM

பெண் : என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற…
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற…
கண்ணாலே பேசாதே கல்யாணம் பேசு…
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு…

பெண் : மருதாணி அரைச்சு வச்சேன்…
மஞ்ச தண்ணி கரைச்சு வச்சேன் ராசா ராசா…
உருகாம உருகி நின்னேன்…
உன் அழகை பருகி நின்னேன் லேசா லேசா…

ஆண் : என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற…
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற…
கண்ணாலே பேசாதே கையாலே பேசு…
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு…

ஆண் : மருதாணி அரைச்சு வச்ச…
மஞ்ச தண்ணி கரைச்சு வச்ச ராணி ராணி…
உருகாம உருகி நின்னேன்…
உன் அழகை பருக வந்தேன் வா நீ வா நீ…

BGM

ஆண் : பாட்டு ஒரு பாட்டு புது பாட்டு இசை போட்டு…
முந்தானை தந்தானம் பாட…

பெண் : கேட்டு அதை கேட்டு கிரங்காமல் சுருதி மீட்டு…
நெஞ்சோரம் சிங்காரம் தேட…

ஆண் : வயலோரம் வரப்போரம் தினம் காத்திருந்து வாட…
பெண் : இரு தோளில் ஒரு மாலை இது ராத்திரியில் சூட…

ஆண் : நான் உறவாய் வரவா வரவா…

பெண் : என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற…
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற…

ஆண் : கண்ணாலே பேசாதே கையாலே பேசு…
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு…

பெண் : மருதாணி அரைச்சு வச்சேன்…
மஞ்ச தண்ணி கரைச்சு வச்சேன் ராசா ராசா…

ஆண் : உருகாம உருகி நின்னேன்…
உன் அழகை பருக வந்தேன் வா நீ வா நீ…

பெண் : என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற…
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற…

BGM

பெண் : பாடு நடை போடு அழகோடு உறவாடு…
ஆகாயம் கிட்டே வராது…

ஆண் : மூடு திரை போடு முத்தாடி விளையாடு…
மூச்சோடும் என்னை விடாது…

பெண் : மறவேனே வருவேனே சிறு பூ பறித்திடதானே…
ஆண் : வரம் நானே பெறுவேனே நீ மன்மத மலை தேனே…

பெண் : நான் உறவாய் வரவா வரவா…

ஆண் : என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற…
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற…

பெண் : கண்ணாலே பேசாதே கல்யாணம் பேசு…
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு…

ஆண் : மருதாணி அரைச்சு வச்ச…
மஞ்ச தண்ணி கரைச்சு வச்ச ராணி ராணி

பெண் : உருகாம உருகி நின்னேன்…
உன் அழகை பருகி நின்னேன் ராசா ராசா…

ஆண் : என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற…
பெண் : இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற…


Notes : En Veettu Jannal Song Lyrics in Tamil. This Song from Raman Abdullah (1997). Song Lyrics penned by Vaali. என் வீட்டு ஜன்னல் பாடல் வரிகள்.


வெள்ளி கொலுசு மணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்அருண்மொழி & கே.எஸ். சித்ராஇளையராஜாபொங்கி வரும் காவேரி

Velli Golusu Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…
வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…

ஆண் : சொல்லி இழுத்ததென்ன…
தூங்காம செஞ்சதென்ன…
சொல்லி இழுத்ததென்ன…
தூங்காம செஞ்சதென்ன…

ஆண் : பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன…
கூடாம கூட வச்சு சேத்ததென்ன…

பெண் : வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…
சொல்லி இழுத்ததென்ன…
தூங்காம செஞ்சதென்ன…

BGM

பெண் : துள்ளி குதிக்கும் பொன்னி நதிதான்…
மெல்ல மெல்ல வந்து அணைக்கும்…
மஞ்ச குளிக்கும் வஞ்சி மனச…
கொஞ்சி கொஞ்சி அரவணைக்கும்…

ஆண் : பொன்னி நதிப்போல நானும் உன்ன…
பொத்தி பொத்தி எடுக்கட்டுமா…
கண்ணுவழி பேசும் சின்னப்பொண்ண…
கட்டிக் கட்டிக் கொடுக்கட்டுமா…

பெண் : காத்து காத்து நானும்…
பூத்துப் பூத்துப் போனேன்…
சோ்ந்து பாடும்போது தேரில் ஏறலானேன்…

ஆண் : உன் பேரச்சொல்லி பாடி வச்ச…
ஊறுதம்மா தேனே…

பெண் : வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…

ஆண் : சொல்லி இழுத்ததென்ன…
தூங்காம செஞ்சதென்ன…

பெண் : பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன…
ஆண் : கூடாம கூட வச்சு சேத்ததென்ன…

BGM

ஆண் : கண்ணத்தொறந்தேன் நெஞ்சில் விழுந்த…
உள்ளுக்குள்ள இன்ப சொகந்தான்…
எண்ணம் முழுதும் பொங்கி வழியும்…
வாங்கினது நல்ல வரம்தான்…

பெண் : கண்ணத்தொறக்காம மூடிகிட்டேன்…
நெஞ்சில் வச்சு அடச்சுபுட்டேன்…
பூட்டு ஒண்ணப் போட்டு பூட்டிபுட்டேன்…
சாவியத்தான் தொலச்சுபுட்டேன்

ஆண் : உள்ள போயி நீதான் பாடுகின்ற பாட்டு…
மெழுகப்போல நானும் உருகிப்போனேன் கேட்டு…

பெண் : காலமெல்லாம் கேட்டிடத்தான்…
காத்திருக்கேன் பாத்து…

ஆண் : வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…
வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…

பெண் : சொல்லி இழுத்ததென்ன…
தூங்காம செஞ்சதென்ன…

பெண் : பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன…
கூடாம கூட வச்சு சேத்ததென்ன…

ஆண் : வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணு மணி…
சொல்லி இழுத்ததென்ன…
தூங்காம செஞ்சதென்ன…


Notes : Velli Golusu Song Lyrics in Tamil. This Song from Pongi Varum Kaveri (1989). Song Lyrics penned by Gangai Amaran. வெள்ளி கொலுசு மணி பாடல் வரிகள்.


இவள் யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழி & எஸ். ஜானகிஇளையராஜாராஜாவின் பார்வையிலே

Ival Yaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
என்னப் பேரோ…
வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ…

பெண் : நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல…
என்றென்றும் வாழும் காதல்…
நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல…
நெஞ்சுக்குள் ஊறும் பாடல்…

ஆண் : அடடா அதில் நான் மறந்தேன் என்னை…
இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
இவள் யாரோ…

BGM

ஆண் : காதல் வாழ்வு கானல் என்று நேற்றுப் பேசினேன்…
காதலே தெய்வீகம் என்று இன்று போற்றினேன்…

பெண் : காலை மாலை உன்னை எண்ணி உள்ளம் வாடினேன்…
ஆசைகள் கை கூடும் இந்த நாளை வாழ்த்தினேன்…

ஆண் : கண்ணே பசும் பொன்னே…
வந்தேன் உந்தன் பின்னே…

பெண் : கண்ணா மணிவண்ணா…
உன் பேர் தினம் சொன்னேன்…
உனைக் கண்டேன் கனிந்தேன்…

ஆண் : இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
என்னப் பேரோ…
வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ…

பெண் : நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல…
என்றென்றும் வாழும் காதல்…

ஆண் : அடடா அதில் நான் மறந்தேன் என்னை…
ஆண் : இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…

BGM

பெண் : தேவன் உந்தன் தேரும் எந்தன் வாசல் வந்ததே…
தேவியை கையோடு அள்ளி சொந்தம் கொண்டதே…

ஆண் : நேரம் காலம் கூடும் போது நேசம் வென்றதே…
நாயகி உன் தோற்றம் இந்த நெஞ்சில் நின்றதே…

பெண் : இன்பம் இந்த இன்பம் இன்னும் பல ஜென்மம்…

ஆண் : பொங்கும் இனி பொங்கும் செந்தேன் இதழ் எங்கும்…
அதில் என்னை இழந்தேன்…

ஆண் : இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
என்னப் பேரோ…
வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ…

பெண் : நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல…
என்றென்றும் வாழும் காதல்…
நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல…
நெஞ்சுக்குள் ஊறும் பாடல்…

ஆண் : அடடா அதில் நான் மறந்தேன் என்னை…

ஆண் : இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
இவள் யாரோ…


Notes : Ival Yaro Song Lyrics in Tamil. This Song from Rajavin Parvaiyile (1995). Song Lyrics penned by Vaali. இவள் யாரோ பாடல் வரிகள்.


தினமும் சிரிச்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்அருண்மொழி & கே.எஸ். சித்ராஇளையராஜாபொங்கி வரும் காவேரி

Dhinamum Sirichi Song Lyrics in Tamil


BGM

ஆண் : தினமும் சிரிச்சி மயக்கி…
என் மனச கெடுத்த சிறுக்கி…
கனவ தடுத்தி நிறுத்தி…
அவ கனிஞ்சி வெடிச்ச பருத்தி…

ஆண் : ஏறெடுத்து பார்த்தா பார்வை வலை போட்டா…
மாட்டிகிட்டேன் நானும்…
அழகு பருவ சிலை கணக்கு புரியவில்லை…

ஆண் : தினமும் சிரிச்சி மயக்கி…
என் மனச கெடுத்த சிறுக்கி…
கனவ தடுத்தி நிறுத்தி…
அவ கனிஞ்சி வெடிச்ச பருத்தி…

BGM

ஆண் : மெத்தையில ஒத்துழைக்க அத்தை மக இல்லையே…
சொத்து சுகம் ஏதும் தேவை இல்லையே…
கற்பனையில் வாழ்ந்து வந்தேன் காய்ச்சல் தீர வில்லையே…
கண்டுகிட்டா தீரும் காதல் தொல்லையே…

ஆண் : ஸ்… குளிரும் ஏ.சி ரூமு…
அது எனக்கு கொதிக்கல் ஆச்சு…
நல்ல இடத்த நீயும் காட்டு…
இப்போ போதை ஏறி போச்சு…

ஆண் : நல்ல கொடி முல்லையே…
நாளும் உந்தன் தொல்லையே…
சொல்லி தீர வில்லையே…
அதுக்கு இடம் இருக்கு…
இதுக்கு தடை எதுக்கு…

ஆண் : தினமும் சிரிச்சி மயக்கி…
என் மனச கெடுத்த சிறுக்கி…
கனவ தடுத்தி நிறுத்தி…
அவ கனிஞ்சி வெடிச்ச பருத்தி…

ஆண் : வெள்ளி கொலுசு மணி…
வேலான கண்ணுமணி…

BGM

பெண் : ஏறெடுத்து பார்த்ததில்ல வேற ஒரு ஆளதான்…
ஆசைபட்டேன் உங்க கூட வாழதான்…
காத்திருந்து பாத்திருந்தேன் நீங்க வரும் நாளைதான்…
எப்ப வரும் கூர பட்டு சேலைதான்…

பெண் : மனச கெடுத்த ராசா…
நான் உனக்கு பூத்த ரோசா…
தவறு நடந்து போச்சு…
இப்போ தடையும் விலகி போச்சு…

பெண் : உங்க கிட்ட சேரதான் என் உயிரு உள்ளது…
காலம் இனி நல்லது…
மாலை போட ஒரு நாள பார்த்து சொல்லு…

ஆண் : தினமும் சிரிச்சி மயக்கி…
என் மனச கெடுத்த சிறுக்கி…
கனவ தடுத்தி நிறுத்தி…
அவ கனிஞ்சி வெடிச்ச பருத்தி…

பெண் : ஏறெடுத்து பார்த்தா பார்வை வலை போட்ட…
மாட்டிகிட்டேன் நானும்…

ஆண் : ஹேய்… அழகு பருவ சிலை கணக்கு புரிஞ்சதடி…

பெண் : தினமும் சிரிச்சி மயக்கி…
உன் மனச கெடுத்த சிறுக்கி…

ஆண் : கனவ தடுத்தி நிறுத்தி…
நீ கனிஞ்சி வெடிச்ச பருத்தி…


Notes : Dhinamum Sirichi Song Lyrics in Tamil. This Song from Pongi Varum Kaveri (1989). Song Lyrics penned by Gangai Amaran. தினமும் சிரிச்சி பாடல் வரிகள்.


வராது வந்த நாயகன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழி & எஸ். ஜானகிஇளையராஜாதாலாட்டு பாடவா

Varaathu Vantha Song Lyrics in Tamil


ஆண் : முதாக ராத்த மோதகம்…
சதா விமுக்தி சாதகம்…
கலா தறாவ தம் சகம்…
விலாசி லோக ரக்ஷகம்…
அனாயகைக நாயகம்…
வினாசி தேப்ர தைத்யகம்…

பெண் : நதாசு பாசு நாஷ்யகம்…
நமாமி தம் விநாயகம்…
முதாக ராத்த மோதகம்…
சதா விமுக்தி சாதகம்…

பெண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…

BGM

பெண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…
தராதரம் புரிந்தவன்…
நிரந்தரம் நிறைந்தவன்…

பெண் : வரம் தரும் உயர்ந்தவன்…
கரம் கரம் இணைந்தவன்…
இவன் தலைவி நாயகன்…

பெண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…
தராதரம் புரிந்தவன்…
நிரந்தரம் நிறைந்தவன்…

BGM

ஆண் : தொடாமலும் படாமலும் உலாவும் காதல் வாகனம்…
வராமலும் தராமலும் விடாது இந்த வாலிபம்…

பெண் : உன்னோடுதான் பின்னோடுதான் வந்தாடும் இந்த மோகனம்…
கையோடுதான் மெய்யோடுதான் கொஞ்சாமல் என்ன தாமதம்…

ஆண் : உன் பார்வை யாவும் நூதனம்…
பெண்பாவை நீயும் சீதனம்…

பெண் : உன் வார்த்தை அன்பின் சாசனம்…
பெண் உள்ளம் உந்தன் ஆசனம்…

ஆண் : அள்ளாமலும் கிள்ளாமலும் தள்ளாடும் இந்த பூவனம்…

பெண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…
தராதரம் புரிந்தவன்…
நிரந்தரம் நிறைந்தவன்…

ஆண் : வரம் தரும் உயர்ந்தவன்…
கரம் கரம் இணைந்தவன்…
இவன் தலைவி நாயகன்…

பெண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…

ஆண் : தராதரம் புரிந்தவன்…
நிரந்தரம் நிறைந்தவன்…

BGM

பெண் : கல்யாணமும் வைபோகமும்…
கொண்டாடும் நல்ல நாள் வரும்…
அந்நாளிலே பொன்னாளிலே…
என் மாலை உந்தன் தோள் வரும்…

ஆண் : சல்லாபமும் உல்லாசமும்…
கண் காணும் நேரம் ஷோபனம்…
சொல்லாமலும் கொள்ளாமலும்…
திண்டாடும் பாவம் பெண்மனம்…

பெண் : இந்நேரம் அந்த ஞாபகம்…
உண்டாக நீயும் காரணம்…

ஆண் : கண்ணார நாமும் காணலாம்…
செவ்வாழை பந்தல் தோரணம்…

பெண் : என் ஆசையும் உன் ஆசையும்…
அந்நாளில்தானே பூரணம்…

ஆண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…
தராதரம் புரிந்தவன்…
நிரந்தரம் நிறைந்தவன்…

பெண் : வரம் தரும் உயர்ந்தவன்…
கரம் கரம் இணைந்தவன்…
இவன் தலைவி நாயகன்…

ஆண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…

பெண் : தராதரம் புரிந்தவன்…
நிரந்தரம் நிறைந்தவன்…


Notes : Varaathu Vantha Song Lyrics in Tamil. This Song from Thalattu Padava (1990). Song Lyrics penned by Vaali. வராது வந்த நாயகன் பாடல் வரிகள்.


வெண்ணிலவுக்கு வானத்தை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்அருண்மொழி & எஸ். ஜானகிஇளையராஜாதாலாட்டு பாடவா

Vennilavukku Vaanatha Song Lyrics in Tamil


ஆண் : வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா…
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா…

BGM

ஆண் : வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா…
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா…
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா…
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா…

ஆண் : தென்றலே கொஞ்சம் நீ கேளு…
இந்த சேதிய அங்கு நீ கூறு…
ஏ… தென்றலே கொஞ்சம் நீ கேளு…
இந்த சேதிய அங்கு நீ கூறு…
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது…

ஆண் : வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா…
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா…

BGM

பெண் : உன்னை விட சொந்தம் எது…
அன்பை விட சொர்க்கம் எது…
உன்னைவிட்டு நெஞ்சம் இது…
எங்கே வாழப் போகின்றது…

ஆண் : கண்ணைத் தொட்டு வாழும் இமை…
என்றும் தனியாகாதம்மா…
உன்னையன்றி என் ஜீவன்தான்…
இங்கே இனி வாழாதம்மா…

பெண் : உன்னோடு இல்லாத என் வாழ்வு…
எப்போதும் ஏது ஏது…
ஆண் : ஒன்றான பின்னாலும் கண்மூட…
நேரங்கள் ஏது ஏது…
பெண் : இது வானம் என வாழும் இனி மாறாது…

ஆண் : வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா…
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா…
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா…
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா…

BGM

ஆண் : சிந்தும் மழைச் சாரல் விழ…
அங்கம் அதில் மோகம் எழ…
சொந்தம் ஒரு போர்வை தர…
சொர்க்கம் அது நேரில் வர…

பெண் : கன்னம் மது தேனைத் தர…
கண்ணன் அதை நேரில் பெற…
கன்னிக் குயில் தோளில் வர…
இன்பம் சுகம் இங்கே வர…

ஆண் : எந்நாளும் இல்லாத எண்ணங்கள்…
முன்னோட ஏக்கம் கூட…
பெண் : என்னுள்ளம் காணாத வண்ணங்கள்…
வந்தாட தூக்கம் ஓட…
ஆண் : அலை போல மனம் ஓட புதுப் பண் பாட…

பெண் : வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா…
இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா…
வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா…
இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா…

பெண் : தென்றலே கொஞ்சம் நீ கேளு…
இந்த சேதிய அங்கு நீ கூறு…
ஏ… தென்றலே கொஞ்சம் நீ கேளு…
இந்த சேதிய அங்கு நீ கூறு…
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது…

பெண் : வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா…
இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா…


Notes : Vennilavukku Vaanatha Song Lyrics in Tamil. This Song from Thalattu Padava (1990). Song Lyrics penned by Gangai Amaran. வெண்ணிலவுக்கு வானத்தை பாடல் வரிகள்.


உன்னைக் காணாமல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்அருண்மொழி & கே.எஸ். சித்ராஇளையராஜாகவிதை பாடும் அலைகள்

Unnai Kaanamal Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னைக் காணாமல் நான் ஏது…
உன்னை எண்ணாத நாள் ஏது…

ஆண் : உன்னைக் காணாமல் நான் ஏது…
உன்னை எண்ணாத நாள் ஏது…
பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீதான்…

பெண் : உன்னைக் காணாமல் நான் ஏது…
உன்னை எண்ணாத நாள் ஏது…

BGM

ஆண் : கம்பனின் பிள்ளை நான்…
காவியம் பாட வந்தேன்…
காவிரிக் கரையெல்லாம் காலடி தேடி நின்றேன்…

பெண் : கவிஞனைத் தேடி கவிதை கேட்க வந்தேன்…
ஆண் : வானமும் பூமி எங்கும் பாடிடும் பாடல் கேட்கும்…

பெண் : ஜீவனில் ஜீவன் சேரும் ஆயிரம் ஆண்டு காலம்…
ஆண் : இனி எந்நாளும் பிரிவேது அன்பே… ஏஏஏ…

பெண் : உன்னைக் காணாமல் நான் ஏது…
உன்னை எண்ணாத நாள் ஏது…
பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீதான்…

ஆண் : உன்னைக் காணாமல் நான் ஏது…
உன்னை எண்ணாத நாள் ஏது…

BGM

பெண் : ஆயிரம் காலம்தான் வாழ்வது காதல் கீதம்…
கண்ணனின் பாடலில் கேட்பது காதல் வேதம்…

ஆண் : பிரிவினை ஏது இணைந்து பாடும் போது…
பெண் : காவியம் போன்ற காதல் பூமியை வென்று ஆளூம்…

ஆண் : காலங்கள் போனபோதும் வானத்தைப்போல வாழும்…
பெண் : இது மாறாது மறையாது அன்பே… ஏஏஏ…

ஆண் : உன்னைக் காணாமல் நான் ஏது…
உன்னை எண்ணாத நாள் ஏது…
பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீதான்…

பெண் : உன்னைக் காணாமல் நான் ஏது…
உன்னை எண்ணாத நாள் ஏது…

ஆண் : உன்னைக் காணாமல் நான் ஏது…
உன்னை எண்ணாத நாள் ஏது…


Notes : Unnai Kaanamal Song Lyrics in Tamil. This Song from Kavidhai Paadum Alaigal (1990). Song Lyrics penned by Gangai Amaren. உன்னைக் காணாமல் பாடல் வரிகள்.