பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | அருண்மொழி & எஸ். ஜானகி | இளையராஜா | ராஜாவின் பார்வையிலே |
Ival Yaro Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
என்னப் பேரோ…
வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ…
பெண் : நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல…
என்றென்றும் வாழும் காதல்…
நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல…
நெஞ்சுக்குள் ஊறும் பாடல்…
ஆண் : அடடா அதில் நான் மறந்தேன் என்னை…
இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
இவள் யாரோ…
—BGM—
ஆண் : காதல் வாழ்வு கானல் என்று நேற்றுப் பேசினேன்…
காதலே தெய்வீகம் என்று இன்று போற்றினேன்…
பெண் : காலை மாலை உன்னை எண்ணி உள்ளம் வாடினேன்…
ஆசைகள் கை கூடும் இந்த நாளை வாழ்த்தினேன்…
ஆண் : கண்ணே பசும் பொன்னே…
வந்தேன் உந்தன் பின்னே…
பெண் : கண்ணா மணிவண்ணா…
உன் பேர் தினம் சொன்னேன்…
உனைக் கண்டேன் கனிந்தேன்…
ஆண் : இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
என்னப் பேரோ…
வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ…
பெண் : நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல…
என்றென்றும் வாழும் காதல்…
ஆண் : அடடா அதில் நான் மறந்தேன் என்னை…
ஆண் : இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
—BGM—
பெண் : தேவன் உந்தன் தேரும் எந்தன் வாசல் வந்ததே…
தேவியை கையோடு அள்ளி சொந்தம் கொண்டதே…
ஆண் : நேரம் காலம் கூடும் போது நேசம் வென்றதே…
நாயகி உன் தோற்றம் இந்த நெஞ்சில் நின்றதே…
பெண் : இன்பம் இந்த இன்பம் இன்னும் பல ஜென்மம்…
ஆண் : பொங்கும் இனி பொங்கும் செந்தேன் இதழ் எங்கும்…
அதில் என்னை இழந்தேன்…
ஆண் : இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
என்னப் பேரோ…
வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ…
பெண் : நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல…
என்றென்றும் வாழும் காதல்…
நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல…
நெஞ்சுக்குள் ஊறும் பாடல்…
ஆண் : அடடா அதில் நான் மறந்தேன் என்னை…
ஆண் : இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
இவள் யாரோ…
Notes : Ival Yaro Song Lyrics in Tamil. This Song from Rajavin Parvaiyile (1995). Song Lyrics penned by Vaali. இவள் யாரோ பாடல் வரிகள்.