பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | அருண்மொழி & எஸ். ஜானகி | இளையராஜா | தாலாட்டு பாடவா |
Vennilavukku Vaanatha Song Lyrics in Tamil
ஆண் : வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா…
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா…
—BGM—
ஆண் : வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா…
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா…
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா…
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா…
ஆண் : தென்றலே கொஞ்சம் நீ கேளு…
இந்த சேதிய அங்கு நீ கூறு…
ஏ… தென்றலே கொஞ்சம் நீ கேளு…
இந்த சேதிய அங்கு நீ கூறு…
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது…
ஆண் : வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா…
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா…
—BGM—
பெண் : உன்னை விட சொந்தம் எது…
அன்பை விட சொர்க்கம் எது…
உன்னைவிட்டு நெஞ்சம் இது…
எங்கே வாழப் போகின்றது…
ஆண் : கண்ணைத் தொட்டு வாழும் இமை…
என்றும் தனியாகாதம்மா…
உன்னையன்றி என் ஜீவன்தான்…
இங்கே இனி வாழாதம்மா…
பெண் : உன்னோடு இல்லாத என் வாழ்வு…
எப்போதும் ஏது ஏது…
ஆண் : ஒன்றான பின்னாலும் கண்மூட…
நேரங்கள் ஏது ஏது…
பெண் : இது வானம் என வாழும் இனி மாறாது…
ஆண் : வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா…
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா…
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா…
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா…
—BGM—
ஆண் : சிந்தும் மழைச் சாரல் விழ…
அங்கம் அதில் மோகம் எழ…
சொந்தம் ஒரு போர்வை தர…
சொர்க்கம் அது நேரில் வர…
பெண் : கன்னம் மது தேனைத் தர…
கண்ணன் அதை நேரில் பெற…
கன்னிக் குயில் தோளில் வர…
இன்பம் சுகம் இங்கே வர…
ஆண் : எந்நாளும் இல்லாத எண்ணங்கள்…
முன்னோட ஏக்கம் கூட…
பெண் : என்னுள்ளம் காணாத வண்ணங்கள்…
வந்தாட தூக்கம் ஓட…
ஆண் : அலை போல மனம் ஓட புதுப் பண் பாட…
பெண் : வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா…
இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா…
வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா…
இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா…
பெண் : தென்றலே கொஞ்சம் நீ கேளு…
இந்த சேதிய அங்கு நீ கூறு…
ஏ… தென்றலே கொஞ்சம் நீ கேளு…
இந்த சேதிய அங்கு நீ கூறு…
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது…
பெண் : வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா…
இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா…
Notes : Vennilavukku Vaanatha Song Lyrics in Tamil. This Song from Thalattu Padava (1990). Song Lyrics penned by Gangai Amaran. வெண்ணிலவுக்கு வானத்தை பாடல் வரிகள்.