ஆண் : வெண்ணிலவே தரையில் உதித்தாய்… ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்… வெண்ணிலவே தரையில் உதித்தாய்… ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்…
ஆண் : நீ எனது கனவில் வரவே… எழாமல் இருக்கிறேன்… உன் சுவாசம் உயிரை தொடவே… விடாமல் பிடிக்கிறேன்…
பெண் : வெண்ணிலவை விழியில் பிடித்தாய்… ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்… நீ எனது கனவில் வரவே… எழாமல் இருக்கிறேன்… உன் சுவாசம் உயிரை தொடவே… விடமால் பிடிக்கிறேன்…
—BGM—
ஆண் : அழகே நீ ஓர் பூகம்பம் தானா… அருகே வந்தால் பூ கம்பம் தானா… அழகே நீ ஓர் பூகம்பம் தானா… அருகே வந்தால் பூ கம்பம் தானா…
பெண் : வெண்ணிலவை விழியில் பிடித்தாய்… ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்… நீ எனது கனவில் வரவே… எழாமல் இருக்கிறேன்… உன் சுவாசம் உயிரை தொடவே… விடமால் பிடிக்கிறேன்…
—BGM—
Notes : Vennilave Song Lyrics in Tamil. This Song from Thuppakki (2012). Song Lyrics penned by Na. Muthu Kumar. வெண்ணிலவேபாடல் வரிகள்.
ஆண் : ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்… அம்மாவ வாங்க முடியுமா… நீயும் அம்மாவ வாங்க முடியுமா…
குழு (பெண்கள்) : ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்… அம்மாவ வாங்க முடியுமா… நீயும் அம்மாவ வாங்க முடியுமா…
ஆண் : ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும்… தாய் போலே தாங்க முடியுமா…
குழு (பெண்கள்) : ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும்… தாய் போலே தாங்க முடியுமா…
ஆண் : உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா… தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா…
குழு (பெண்கள்) : உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா… தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா…
ஆண் : ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்… அம்மாவ வாங்க முடியுமா நீயும்…
—BGM—
ஆண் : பட்டினியா கெடந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா… பால் குடிக்கும் பிள்ளை முகம் பாா்த்தே பசி மறப்பா… இளவட்டம் ஆன பின்னும் எண்ணெய் தேச்சு குளிக்க வைப்பா… உச்சி முதல் பாதம் வர உச்சி கொட்டி மகிழ்ந்திடுவா…
ஆண் : நெஞ்சிலே நடக்க வைப்பா… நிலாவ பிடிக்க வைப்பா… பிஞ்சு விரல் நகம் கடிப்பா… பிள்ளை எச்சு சோறு தின்பா…
ஆண் : பல்லு முளைக்க நெல்லு முனையால்… மெல்ல மெல்லதான் கீரி விடுவா… உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா
பெண் : ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்… அம்மாவ வாங்க முடியுமா… நீயும் அம்மாவ வாங்க முடியுமா…
—BGM—
ஆண் : மண்ணில் ஒரு செடி மொளைச்சா… மண்ணுக்கு அது பிரசவம்தான்… உன்னை பெற துடி துடிச்சா… அன்னைக்கு அது பூகம்பம்தான்…
ஆண் : சூரியன சுத்திகிட்டு தன்னை சுத்தும் பூமி அம்மா… பெத்தெடுத்த பிள்ளைய சுத்தி பித்து கொள்ளும் தாய்மை அம்மா… கர்ப்பத்தில் நெளிந்த உன்னை நுட்பமாய் தொட்டு ரசிப்பா… பேதை போல் அவள் இருப்பாள் மேதையாய் உனை வளர்ப்பா…
ஆண் : என்ன வேண்டும் இனி உனக்கு… அன்னை மடியில் சொர்கம் இருக்கு… என்ன வேண்டும் இனி உனக்கு… அன்னை மடியில் சொர்கம் இருக்கு…
Notes : Aasa Patta Ellathayum Song Lyrics in Tamil. This Song from Viyabari (2007). Song Lyrics penned by Parinaman. ஆசபட்ட எல்லாத்தையும்பாடல் வரிகள்.
ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை… நீருக்குள் மூழ்கிடும் தாமரை… சட்டென்று மாறுது வானிலை… பெண்ணே உன் மேல் பிழை…
ஆண் : நில்லாமல் வீசிடும் பேரலை… நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை… பொன்வண்ணம் சூடிய காரிகை… பெண்ணே நீ காஞ்சனை…
ஆண் : ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி… என் உயிரை உயிரை நீ ஏந்தி… ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி… இனி நீதான் எந்தன் அந்தாதி…
ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை… நீருக்குள் மூழ்கிடும் தாமரை… சட்டென்று மாறுது வானிலை… பெண்ணே உன் மேல் பிழை…
—BGM—
ஆண் : ஏதோ ஒன்று என்னை ஈா்க்க… மூக்கின் நுனி மா்மம் சோ்க்க… கள்ளத்தனம் ஏதும் இல்லா… புன்னகையோ போகன்வில்லா…
ஆண் : நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ… நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ…
ஆண் : என்னோடு வா வீடு வரைக்கும்… என் வீட்டை பார் என்னை பிடிக்கும்… இவள் யாரோ யாரோ தெரியாதே… இவள் பின்னால் நெஞ்சே போகாதே…
ஆண் : இது பொய்யோ மெய்யோ தெரியாதே… இவள் பின்னால் நெஞ்சே போகாதே
குழு (ஆண்கள்) : போகாதே…
ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை… நீருக்குள் மூழ்கிடும் தாமரை… சட்டென்று மாறுது வானிலை… பெண்ணே உன் மேல் பிழை… ஹோ…
ஆண் : நில்லாமல் வீசிடும் பேரலை… நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை… பொன்வண்ணம் சூடிய காரிகை… பெண்ணே நீ காஞ்சனை…
—BGM—
ஆண் : தூக்கங்களை தூக்கிச் சென்றாய்…
குழு (பெண்கள்) : தூக்கிச் சென்றாய்…
ஆண் : ஏக்கங்களை தூவிச் சென்றாய்… உன்னை தாண்டி போகும் போது…
குழு (பெண்கள்) : போகும் போது…
ஆண் : வீசும் காற்றின் வீச்சு வேறு…
ஆண் : நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே… நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே… காதல் எனை கேட்கவில்லை… கேட்காதது காதல் இல்லை…
ஆண் : என் ஜீவன் ஜீவன் நீதானே… என தோன்றும் நேரம் இதுதானே… நீ இல்லை இல்லை என்றாலே… என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே…
குழு (பெண்கள்) : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை… நீருக்குள் மூழ்கிடும் தாமரை… சட்டென்று மாறுது வானிலை… பெண்ணே உன் மேல் பிழை…
ஆண் & குழு (பெண்கள்) : நில்லாமல் வீசிடும் பேரலை… நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை… பொன்வண்ணம் சூடிய காரிகை… பெண்ணே நீ காஞ்சனை…
ஆண் : ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி… என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஆண் : ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி… இனி நீதான் எந்தன் அந்தாதி…
—BGM—
Notes : Nenjukkul Peidhidum Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. நெஞ்சுக்குள் பெய்திடும்பாடல் வரிகள்.
ஆண் : குறுக்கு சிறுத்தவளே… என்னை குங்குமத்தில் கரைச்சவளே… நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்… என்னக் கொஞ்சம் பூசு தாயே… உன் கொலுசுக்குள் மணியாக… என்னக் கொஞ்சம் மாத்து தாயே…
ஆண் : குறுக்கு சிறுத்தவளே… என்னை குங்குமத்தில் கரைச்சவளே… நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்… என்னக் கொஞ்சம் பூசு தாயே… உன் கொலுசுக்குள் மணியாக… என்னக் கொஞ்சம் மாத்து தாயே…
பெண் : ஒரு கண்ணில் நீா் கசிய… உதட்டு வழி உசிர் கசிய… உன்னாலே சில முறை இறக்கவும்… சில முறை பிறக்கவும் ஆனதே…
பெண் : அட ஆத்தோட விழுந்த இலை… அந்த ஆத்தோட போவது போல்… நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே… அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே…
ஆண் : குறுக்கு சிறுத்தவளே… என்னை குங்குமத்தில் கரைச்சவளே… நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்… என்னக் கொஞ்சம் பூசு தாயே… உன் கொலுசுக்குள் மணியாக… என்னக் கொஞ்சம் மாத்து தாயே…
—BGM—
குழு (பெண்கள்) : ஹே ஹே ஹே ஹே ஹே… ஹே ஹே ஹே ஹே ஹே…
—BGM—
குழு (பெண்கள்) : ஹே ஹே ஹே ஹே ஹே… ஹே ஹே ஹே ஹே ஹே…
பெண் : கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே… கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே…
ஆண் : கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே… ஒரு மொழியில் சிரிச்சு பேசறியே…
பெண் : வாயி மேல வாய வச்சு… வார்த்தைகளை உறிஞ்சிபுட்ட… விரல வச்சு அழுத்திய கழுத்துல… கொளுத்திய வெப்பம் இன்னும் போகல…
ஆண் : அடி ஒம்போல செவப்பு இல்ல… கணுக்கால் கூட கருப்பு இல்ல… நீ தீண்டும் இடம் தித்திக்குமே… இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே…
ஆண் : குறுக்கு சிறுத்தவளே… என்னை குங்குமத்தில் கரைச்சவளே… நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்… என்னக் கொஞ்சம் பூசு தாயே… உன் கொலுசுக்குள் மணியாக… என்னக் கொஞ்சம் மாத்து தாயே…
—BGM—
ஆண் : ஒரு தடவ இழுத்து அணைச்சபடி… உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே…
பெண் : ஒம்முதுக தொலைச்சி வெளியேற… இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே…
ஆண் : மழையடிக்கும் சிறு பேச்சு… வெயிலடிக்கும் ஒரு பார்வை… ஒடம்பு மண்ணில் புதையிற வரையில்… உடன் வரக் கூடுமோ…
பெண் : உசிர் என்னோட இருக்கயில… நீ மண்ணோட போவதெங்கே… அட உன் ஜீவனில் நானில்லையா… கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமைய்யா…
ஆண் : குறுக்கு சிறுத்தவளே… என்னை குங்குமத்தில் கரைச்சவளே… நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்… என்னக் கொஞ்சம் பூசு தாயே… உன் கொலுசுக்குள் மணியாக… என்னக் கொஞ்சம் மாத்து தாயே…
பெண் : ஒரு கண்ணில் நீா் கசிய… உதட்டு வழி உசிர் கசிய… உன்னாலே சில முறை இறக்கவும்… சில முறை பிறக்கவும் ஆனதே…
பெண் : அட ஆத்தோட விழுந்த இலை… அந்த ஆத்தோட போவது போல்… நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே… அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே…
ஆண் : குறுக்கு சிறுத்தவளே… என்னை குங்குமத்தில் கரைச்சவளே… நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
பெண் : உன்ன கொஞ்சம் பூசுவேன்யா…
ஆண் : உன் கொலுசுக்குள் மணியாக… என்னக் கொஞ்சம்…
பெண் : மாத்துவேன்யா…
ஆண் : ஒஹோ… ஓஓஓ… ஒஹோ… ஓஓஓ…
பெண் : ஆஆ… ஆஆஆ… ஆஆ… ஆஆஆ…
Notes : Kurukku Chiruththavale Song Lyrics in Tamil. This Song from Mudhalvan (1999). Song Lyrics penned by Vairamuthu. குறுக்கு சிறுத்தவளேபாடல் வரிகள்.
ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே… விண்ணை தாண்டி வருவாயா… விளையாட ஜோடி தேவை… ஹேய்… வெண்ணிலவே வெண்ணிலவே… விண்ணை தாண்டி வருவாயா… விளையாட ஜோடி தேவை… ஹேய்…
—BGM—
ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே… விண்ணை தாண்டி வருவாயா… விளையாட ஜோடி தேவை… இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே… உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…
ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே… விண்ணை தாண்டி வருவாயா… விளையாட ஜோடி தேவை… இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே… உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…
—BGM—
ஆண் : இது இருளல்ல அது ஒளியல்ல… இது இரண்டோடும் சேராத பொன் நேரம்… இது இருளல்ல அது ஒளியல்ல… இது இரண்டோடும் சேராத பொன் நேரம்…
ஆண் : தலை சாயாதே விழி மூடாதே… சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்… பெண்ணே… பெண்ணே… பூலோகம் எல்லாமே தூங்கிபோன பின்னே… புல்லோடு பூவிழும் ஓசை கேட்கும் பெண்ணே… நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம்… பாலுாட்ட நிலவுண்டு…
—BGM—
பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே… விண்ணை தாண்டி வருவாயா… விளையாட ஜோடி தேவை… இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே… உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…
—BGM—
பெண் : எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு… கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு…
ஆண் : இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்… எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு…
ஆண் : அட உலகை ரசிக்க வேண்டும் நான்… உன் போன்ற பெண்ணோடு…
—BGM—
ஆண் & பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே… விண்ணை தாண்டி வருவாயா… விளையாட ஜோடி தேவை… இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே… உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…
—BGM—
Notes : Vennilavae Vennilavae Song Lyrics in Tamil. This Song from Minsara Kanavu (1997). Song Lyrics penned by Vairamuthu. வெண்ணிலவே வெண்ணிலவேபாடல் வரிகள்.
பெண் : உன்னாலே… எந்நாளும்… என் ஜீவன் வாழுதே… சொல்லாமல்… உன் சுவாசம்… என் மூச்சில் சேருதே… உன் கைகள் கோர்க்கும்… ஓா் நொடி… என் கண்கள் ஓரம்… நீா்த்துளி… உன் மார்பில் சாய்ந்து… சாகத்தோணுதே… ஓ… ஓ… ஓ… ஓ…
ஆண் : உன்னாலே… எந்நாளும்… என் ஜீவன் வாழுதே… சொல்லாமல்… உன் சுவாசம்… என் மூச்சில் சேருதே…