Tag Archives: தாமரை

கண்களே கமலாலயம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபி. உன்னிகிருஷ்ணன் & மிருணாளினிதேவன் ஏகாம்பரம்பலே பாண்டியா (2010)

Kangaley Kamalayam Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்களே கமலாலயம்…
கனவுகள் இங்கே அலைபோல் வரும்…

ஆண் : கண்களே கமலாலயம்…
கனவுகள் இங்கே அலைபோல் வரும்…

பெண் : அலைகளிலே நான் மிதந்தேன்…
அணு அணுவாய் எனை இழந்தேன்…

ஆண் : இழந்த காலம் என்னை துரத்த…
இனிய காலம் என்னை அணைக்க…
என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்…
மயங்கிடும் கண்களே கமலாலயம்…

BGM

ஆண் : கனவுகள் கண்டு நான் எழுந்தேன்…
இருக்கருவிழி தீண்டி நான் விழுந்தேன்…
சொல்ல நினைத்தேன் வேண்டாம் என்று…
சொல்லி முடித்தேன் ஆமாம் என்று…
இரவு முடிந்தும் போக மறுக்கும் இனிய நிலவே…

பெண் : நிலவுகள் துரத்த நான் நடந்தேன்…
உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன்…
உன்னை அன்றி யாரை நினைப்பேன்…
உருகும் உயிரை எங்கு புதைப்பேன்…
காலை வந்தும் கலைய மறுக்கும் இனிய கனவே…

ஆண் : கனவுகள் இங்கே அலைப்போல் வரும்…
கண்களே கமலாலயம்…

பெண் : கண்களே கமலாலயம்…
கனவுகள் இங்கே அலைப்போல் வரும்…

BGM

ஆண் : இது நடந்திடுமா…
கரை கடந்திடுமா…
இது அலை அல்லவா…
கடல் இழந்திடுமா…

பெண் : இழுக்கட்டுமே கடல் இழுக்கட்டுமே…
நனைக்கட்டுமே உடல் நனைக்கட்டுமே…

ஆண் : நனைந்த பின்பு மயங்கும் மயங்கும்…
கண்களே கமலாலயம்…

பெண் : கண்களே கமலாலயம்…
கனவுகள் இங்கே அலைப்போல் வரும்…

ஆண் : ஹேய்… கண்களே கமலாலயம்…
கனவுகள் இங்கே அலைப்போல் வரும்…

பெண் : அலைகளிலே நான் மிதந்தேன்…
அணு அணுவாய் எனை இழந்தேன்…

ஆண் : இழந்த காலம் என்னை துரத்த…
இனிய காலம் என்னை அணைக்க…
என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்…
மயங்கிடும் கண்களே கமலாலயம்…


Notes : Kangaley Kamalayam Song Lyrics in Tamil. This Song from Bale Pandiya (2010). Song Lyrics penned by Thamarai. கண்களே கமலாலயம் பாடல் வரிகள்.


ஒரு அழகான

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசூர்யா, சவிதா ரெட்டி, கங்கா சித்தராசு & மாதங்கியுவன் ஷங்கர் ராஜாபேரழகன்

Oru Azhagana Song Lyrics in Tamil


ஆண் : ஒரு அழகான பொண்ணிருந்தா…
அதைவிட ஒரு அழகான பையன் இருந்தான்…
அவங்க ஒரு நாள் சந்திச்சாங்க…
பெண் : என்னது…

ஆண் : அவளுக்கு தமிழே வரலடி…
பெண் : போடா…
ஆண் : ஏ ஓகே ஓகே…
அவனுக்கு அவள புடுச்சது…
ஆனா சொல்லல ஏன்னு தெரியல…
பெண் : என்ன…
ஆண் : ஒண்ணுல்ல…
பெண் : சொல்லு…

ஆண் : அந்த பொண்ணு பேசுவா பேசுவா…
பேசிக்ககிட்டே இருப்பா…
ஆனா அதுதான் அவனுக்கு பிடிச்ச ராகம்…
அவளுக்கு தூரத்துல இருந்தாலும் தெரியாது…
பரவா இல்ல…

ஆண் : தன்னோட உலகத்தையே…
அவளோட பெரிய பெரிய கண்ணுல பார்த்தான்…
அவ கையெழுத்து கிறுக்கல்…
ஆனா அந்த எழுத்துக்கள் மேல பைத்தியமா இருந்தான்…

ஆண் : அவள் நடந்தா கொஞ்சம் கசமுசானு இருக்கும்…
ஆனா அவ முடி அசையிறத பார்த்தா…
அந்த காத்துக்கே பொறாமை வரும்…

பெண் : ஏய் நிறுத்து…
ஆண் : யூ நோ ப்ரியா…
ஹி ஜஸ்ட் லவ்டு எவரிதிங்

ஆண் : அபௌட் ஹெர் அவ முடி அவ நெத்தி…
அவ கண்ணு அவ மூக்கு அவ கன்னம்…
அவ உதடு அவ கழுத்து அவ…

பெண் : நனனா நானா நானா னா…
நானா னா நானா நானா னா…
நனனா நானா நானா னா…
நானா னா நானா நானா னா…

BGM

ஆண் : அவனைப் பத்தின நெறைய விஷயங்கள்…
அவளுக்கு பிடிக்கல…
அவன் பேசுற விதம்…
சுமோக்கிங் தி வே ஹி பிகேவ்ஸ்…
இப்படி நெறையா…
கிண்டல் பண்ணியிருக்கான்…
அழ வச்சிருக்கான்…
அவன யாருக்கும் பிடிக்கல…

ஆண் : ஹி வாஸ் ரியலி பேட் ப்ரியா…
ஆனா தனியா எப்பவும் தனியா இருந்தான்…

ஆண் : அவளுக்கு அவன புடிச்சது ப்ரியா…
ஐ டோன்ட் நோ ஒய்…
ப்ரியா ஏன் ப்ரியா நீ ஏன் என்ன…
என்ன கல்யாணம் பண்ணிக்கோ…
எப்பவும் உன் கூடவே இருக்கணும்…

ஆண் : ஒன்ன காதலிக்கனும்…
ஒன்ன தொல்ல பண்ணனும்…
உனக்காக வீட்டுக்கு வரனும்…
ஒன் மடியில தூங்கனும்…

ஆண் : இதே மாதிரி எனக்கு ரெண்டு…
குட்டி ப்ரியா வேணும்…
ஏய் உன்ன பார்த்துக்கிட்டே…
எனக்கு வயசாயிரனும்…

ஆண் : நான் உன்னோடதான் சாகனும்…
அப்படி இல்லையினா சாகனும்…
இங்க இப்போ…

{ பெண் : நனனா நானா நானா னா…
நானா னா நானா நானா னா…
நனனா நானா நானா னா…
நானா னா நானா நானா னா… } * (2)

BGM


Notes : Oru Azhagana Song Lyrics in Tamil. This Song from Perazhagan (2004). Song Lyrics penned by . ஒரு அழகான பாடல் வரிகள்.


தென்றல் எந்தன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅனுராதா ஸ்ரீராம்தேவாஇனியவளே

Thendral Song Lyrics in Tamil


BGM

பெண் : தென்றல் எந்தன் நடையை கேட்டது…
தத்தோம் தகதோம்…
தாழம்பூவின் வாசம் கேட்டேன்…
தித்தோம் திகிதோம்…

பெண் : மூன்றாம் பிறை என் நகங்கள் கேட்டது…
தத்தோம் தகதோம்…
முகிலில் ஆட ஊஞ்சல் கேட்டேன்…
தித்தோம் திகிதோம்…

பெண் : இரவுகள் என்னிடம் கண்மை கேட்டன…
தத்தோம் தகதோம்…
ரசிக்கும்படி ஒரு ரகசியம் கேட்டேன்…
தித்தோம் திகிதோம்…

பெண் : அழைக்காத போதும் நிலவு வந்தது…
தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்…

BGM

குழு : தத்தோம் தகதோம் தத்தோம்…
தை தித்தோம் திகிதோம் தித்தோம்…
தத்தோம் தகதோம் தத்தோம்…
தை தித்தோம் திகிதோம் தித்தோம்…

பெண் : பகலில் வராத பால் நிலவே…
ஏன் என்னைத்தேடி வந்தாய்…
எதையோ கேட்க ஏங்கி நின்றாய்…
குழு : தத்தோம் தகதோம்…

பெண் : இரவில் வராத சூரியனே…
ஏன் என்னைத்தேடி வந்தாய்…
எதை இரவல் வாங்க நின்றாய்…
குழு : தித்தோம் திகிதோம்…

BGM

பெண் : ஆஆ… சாரல் மழை பூவாகி…
சந்தமுடன் தானாடும்…
தங்க நிற நூலாகி தாவணியை தான் சேரும்…
வா வா இன்றுதான் ஒரு மாலை நேரம் வாய்ப்பிருக்கு…
குழு : மப கமகச…

பெண் : வாசல் கோலம் வண்ணம் கேட்டது…
தத்தோம் தகதோம்…
குழு : தத்தோம் தகதோம்…

பெண் : காற்றில் கலையாதிருக்க சொன்னேன்…
தித்தோம் திகிதோம்…
குழு : தித்தோம் திகிதோம்…

BGM

குழு : தத்தோம் தகதோம் தத்தோம்…

BGM

பெண் : மண்ணைத் தொடாத மழைத்துளியே…
நான் உன்னை ஏந்தி நின்றேன்…
முத்து மாலையாக்கிக் கொண்டேன்…
குழு : தத்தோம் தகதோம்…

பெண் : வண்ணம் கெடாத மேகங்களே…
ஏன் வானில் காய வேண்டும்…
எந்தன் சேலை ஆக வேண்டும்…
குழு : தித்தோம் திகிதோம்…

BGM

பெண் : ஆஆ… துள்ளி வரும் ஆற்றோடு…
தோணிகளில் நான் ஆட…
தள்ளிவிடும் காற்றோடு தோப்புகளில் நான் ஓட…
ஆஹா… அன்புதான் நம் பாதை எங்கும் பூத்திருக்கு…
குழு : மப கமகச…

பெண் : குயில்கள் எந்தன் தமிழை கேட்டன…
தத்தோம் தகதோம்…
உலகம் கேட்க கூவச்சொன்னேன்…
தித்தோம் திகிதோம்…

பெண் : மயில்கள் எந்தன் சாயல் கேட்டன…
தத்தோம் தகதோம்…
குழு : தத்தோம் தகதோம்…

பெண் : மழையில் விரிக்க தோகை கேட்டேன்…
தித்தோம் திகிதோம்…
குழு : தித்தோம் திகிதோம்…

பெண் : மாலை நேரம் மெல்ல மாறிப்போனது…
தத்தோம் தகதோம்…
மயக்க போர்வையில் சாய்ந்து கொண்டது…
தித்தோம் திகிதோம்…

பெண் : துணையாக தூங்க இரவும் வந்தது…
தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்…

BGM


Notes : Thendral Song Lyrics in Tamil. This Song from Iniyavale (1998). Song Lyrics penned by Thamarai. தென்றல் எந்தன் பாடல் வரிகள்.


இப்போ என்ன செய்கிறாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைவிஜய் பிரகாஷ், முகதா ஹசப்னிஸ் & எம்.எம். மானசிஜி.வி. பிரகாஷ் குமார்இரும்பு குதிரை

Ippo Enna Seigiraai Song Lyrics in Tamil


பெண் : ஹே அங்க என்ன பண்ற…
நான் தூங்க போறேன்…
நீ இன்னும் தூங்கலையா…

BGM

பெண் : அங்கே இப்போ என்ன செய்கிறாய்…
ஆடை மாற்றி தூங்க செல்கிறாய்…
என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன்… ஓ…

பெண் : என்னவும் பேசலாம்…
என்றே ஓர் எண்ணம் தோன்றுதே…
உன் மனம் என்னவோ…
துழாவி பார்க்க தோன்றுதே…

BGM

பெண் : அங்கே இப்போ என்ன செய்கிறாய்…
ஆடை மாற்றி தூங்க செல்கிறாய்…
என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன்… ஓ…

BGM

பெண் : விரல் நுனி அனுப்பிடும் விசாரணை சுகமே…
ஆண் : பதில் ஒளி வரும் வரை படும் வலி சுகமே…

பெண் : ஓய்வில்லையே விரல்களுக்கு…
நோகின்றதே நகம் இடுக்கு…

ஆண் : ஆனாலும் ஏன் சுகம் இருக்கு…
நெஞ்சே சொல்…

BGM

ஆண் : நிறம் எது மணம் எது பிடிக்குது உனக்கு…
பெண் : கரும் நிறம் கடல் மணம் பிடிக்குமே எனக்கு…

ஆண் : நான் காலையில் எழுந்ததுமே…
தானாகவே தலை திரும்பும்…
உன் செய்தியை மனம் விரும்பும் ஏனோ ஏன்…

BGM

பெண் : அங்கே இப்போ என்ன செய்கிறாய்…
ஆடை மாற்றி தூங்க செல்கிறாய்…
என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன்… ஓ…

ஆண் : என்னவும் பேசலாம்…
என்றே ஓர் எண்ணம் தோன்றுதே…
உன் மனம் என்னவோ…
துழாவி பார்க்க தோன்றுதே…

BGM


Notes : Ippo Enna Seigiraai Song Lyrics in Tamil. This Song from Irumbu Kuthirai (2014). Song Lyrics penned by Thamarai. இப்போ என்ன செய்கிறாய் பாடல் வரிகள்.


அலைபாயும் பார்வை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைவிஜய் பிரகாஷ் & ஆண்ட்ரியா ஜெரெமையாஜி.வி. பிரகாஷ் குமார்இரும்பு குதிரை

Alaipaayum Song Lyrics in Tamil


BGM

ஆண் : அலைபாயும் பார்வை ஒன்று…
கொலுசில்லா கால்கள் ரெண்டு…
உராசாத தோல்கள் கொண்டு…
என்னை கொல்லுதே…

ஆண் : முதல்நாளில் ஏதோ ஏதோ…
பேச பேச தோன்றும்…
முடியாமல் திக்கி திக்கி…
வார்த்தை போய் வரும்…

ஆண் : முகமெல்லாம் வேர்வை மொட்டு…
எட்டி எட்டி பார்க்கும்…
முதல் காதல் என்றால் இதுதான் நேரும்…

BGM

ஆண் : முன்பின்னல் உன்போல் ஒரு…
பெண்ணோடு ஒன்றாகவே…
எங்கேயும் சென்றேனிலை அறிவாய்…

ஆண் : கண் பார்த்து நான் பேசனும்…
கை கோர்த்து உலவனும்…
என் தோளில் நீ சாயனும் அழகே…

ஆண் : அணியும் உடையில் தடவும் வாசம்…
என்மேல் படும் தூரம்தான் என்று…
உனக்கும் மனதில் சலனம் வருதா…
வரனும் எனில் நானும் என்ன செய்யனும்…

BGM

ஆண் : கண் மேலே கலாபமோ…
என் மேலே உலாவுமோ…
ஏன் இந்த பெண் மோகமோ எனக்கு…

ஆண் : நீ நிற்கும் தராசிலே…
நான் வைத்தேன் நிலாவினை…
நீ கீழே நிலா அது மேலே…

ஆண் : சிரிக்கும் அழகில் சிதறும் இதயம்…
கனகாம்பரமாக காற்றில் ஆடும் கை…
புருவம் இரண்டும் வளையும் இடத்தில்…
புதையல் இருந்தாலும் பொய் இல்லை…

BGM

ஆண் : அலைபாயும் பார்வை ஒன்று…
கொலுசில்லா கால்கள் ரெண்டு…
உராசாத தோல்கள் கொண்டு…
என்னை கொல்லுதே…

ஆண் : முதல்நாளில் ஏதோ ஏதோ…
பேச பேச தோன்றும்…
முடியாமல் திக்கி திக்கி…
வார்த்தை போய் வரும்…

ஆண் : முகமெல்லாம் வேர்வை மொட்டு…
எட்டி எட்டி பார்க்கும்…
முதல் காதல் என்றால் இதுதான் நேரும்…

BGM


Notes : Alaipaayum Song Lyrics in Tamil. This Song from Irumbu Kuthirai (2014). Song Lyrics penned by Thamarai. அலைபாயும் பார்வை பாடல் வரிகள்.


யாா் அவள் யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைமுகமது இர்பான் அலிஜி. வி. பிரகாஷ்குமார்முப்பொழுதும் உன் கற்பனைகள்

Yaar Aval Yaaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாா் அவள் யாரோ அவள் யாரோ…
கனா தானோ…
யாரோ நிலா தானோ விடையில்லா…
வினா தானோ…

ஆண் : வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும்…
மழை தானோ…
நாளும் அவள் இல்லை எனில்…
இங்கே பிழைதானோ

ஆண் : உன் மாா் மீதும் தோள் மீதும்…
நான் தூங்கினேன்…
உயிா் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்…
கரைகளே இல்லா நதி ஒரே ஒரு நதி…

BGM

ஆண் : ஓா் ஆகாய தூரம் நான் போகின்ற போதும்…
என் பக்கத்தில் நிற்பாள் அவள்…

ஆண் : நான் வீழ்கின்ற நேரம் பொன் கை ரெண்டும் நீளும்…
தன் கக்கத்தில் வைப்பாள் அவள்…

ஆண் : நான் காலைப் பனி நீ புல்லின் நுனி…
நான் வீழாமல் நீ தாங்கினாய்…
நான் கேளா ஒலி நீதானே மொழி…
என் ஓசைக்கு பொருளாகிறாய்… ஓஹோ ஹோ…

ஆண் : யாா் அவள் யாரோ அவள் யாரோ…
கனா தானோ…
யாரோ நிலா தானோ விடையில்லா…
வினா தானோ…

BGM

ஆண் : நான் தூங்காத போதும் என் துன்பத்தின் போதும்…
என் அன்னை போல் காத்தாய் எனை…

ஆண் : பொன் வான் எங்கும் நீயே விண்மீன் ஆகின்றாயே…
நான் அண்ணாந்து பாா்ப்பேன் உனை…

ஆண் : நான் கேட்கும் வரம் என் வாழ்நாள் தவம்…
உன் அன்பன்றி வேறேதடி…
ஓ பாரா முகம் நீ காட்டும் கணம்…
நான் கூறாமல் சாவேனடி… ஓஹோஹோ…

BGM

ஆண் : யாா் அவள் யாரோ அவள் யாரோ…
கனா தானோ…
யாரோ நிலா தானோ விடையில்லா…
வினா தானோ…

ஆண் : வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும்…
மழை தானோ…
நாளும் அவள் இல்லை எனில்…
இங்கே பிழைதானோ…

ஆண் : உன் மாா் மீதும் தோள் மீதும்…
நான் தூங்கினேன்…
உயிா் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்…
கரைகளே இல்லா நதி ஒரே ஒரு நதி…

BGM


Notes : Yaar Aval Yaaro Song Lyrics in Tamil. This Song from Muppozhudhum Un Karpanaigal (2012). Song Lyrics penned by Thamarai. யாா் அவள் யாரோ பாடல் வரிகள்.


முதல் முதலாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஹரன் & சாதனா சர்கம்தேவாஎங்கள் அண்ணா

Mudhan Mudhalaga Song Lyrics in Tamil


குழு : சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…
சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…

BGM

ஆண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில் என்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…

ஆண் : மௌனங்களால் என்னை நீ தாக்கினாய்…
மோஹங்களால் என்னை கைதாக்கினாய்…
இது நியாயம்தானா சொல்லு கண்ணே…

பெண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில்லென்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…

BGM

ஆண் : மார்கழியின் ராத்திரியில் மனசுக்குள் மல்லிகைப்பூ…
மூடி வைத்த உதடுகளில் முத்தங்களின் முணுமுணுப்பு…

பெண் : தூக்கத்தை தூக்கத்தை தூக்கிலே போடணும்…
கனவிலும் வந்து நீ இம்சைகள் செய்கிறாய்…

ஆண் : உன் ஜன்னல்களை மூடாதே…
என் தென்றலுக்கு வேர்க்கிறதே…

பெண் : என் கைப்பிடிக்க வருவாயா…
கை ரேகை என்னை கேட்கிறதே…

ஆண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில் என்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…

BGM

குழு : சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…
சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…

பெண் : தோற்கவில்லை தோகை மயில்…
இத்தனை நாள் ஏங்கியதே…
மேகத்திடம் அடம் பிடித்து…
மழைத் துளி வாங்கியதே…

ஆண் : ஏக்கங்கள் தீர்ந்ததா என்னுயிர்க்காதலி…
உன்னிடம் சாய்ந்ததே இந்த என் ஆறடி…

பெண் : உன் சட்டைக்குள்ளே இடம் தேடி…
என் மூச்சுக் காற்று அலைகிறதே…

ஆண் : உன் சேலை வாசம் வந்த பின்னே…
என் காலைகளும் விடிகிறதே…

பெண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில்லென்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…

பெண் : மௌனங்களால் என்னை நீ தாக்கினாய்…
மோஹங்களால் என்னை கைதாக்கினாய்…
இது நியாயம்தானா சொல்லு கண்ணே…

பெண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில்லென்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…


Notes : Mudhan Mudhalaga Song Lyrics in Tamil. This Song from Engal Anna (2004). Song Lyrics penned by Thamarai. முதல் முதலாக பாடல் வரிகள்.


பாண்டிச்சேரி வழியில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஏ.ஆர். ரெய்ஹானா & பிரியா ஹேமேஷ்ஜி.வி. பிரகாஷ் குமார்இரும்பு குதிரை

Pondicherry Vazhiyela Song Lyrics in Tamil


பெண் : கடமழியேல் லேக்கரியுமாய்…
கிறங்கி கிறங்கி வந்தவள…
ஒருங்கி மினுங்கி சினுங்கி மயங்கி…
நட நடன்னல் நெஞ்சுனுள்ள…
ஜனக்கு ஜனக்கு சிங்காரியே…
அதுரம் மதுரம் நுகரும் தருணம்…

BGM

பெண் : பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல…
சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல…

BGM

பெண் : முத்தமிட்டு முடியல மோகநாங்கி மடியில…
கண்ண மூடி சாஞ்சதால இன்னும் விடியல…

பெண் : ராத்திரி நேரமோ ரகளையாகி போகுது…
வேர்த்திடும் வெண்ணிலா வானில் ஊறுது…
மூச்சுல வெப்பமோ முட்டுகட்டி போடுது…
மெத்த மட்டும் என்ன தேடுது…

பெண் : பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல…
சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல…

BGM

பெண் : முந்தானையில் முத்தமிட்ட பத்திரமா…
அத முடிஞ்சு வச்சேனே…

BGM

பெண் : கன்னத்துல கன்னம் வச்ச கண்ணாடியில்…
அத நோட்டம் விட்டேனே…

பெண் : மழையோ இடியோ விழுந்தா தித்திக்குமே…
இதயம் துடிக்க எங்கே போனாயோ…

பெண் : புதையல் திருடும் புலிய தேட விட்டு…
தேட விட்டு கட்டிக்கொள்வேனே…

BGM

பெண் : பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல…
சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல…

BGM

பெண் : தூத்துக்குடி துவாக்குடி மிராசுதர்…
நீ போடா முன்னால…

BGM

பெண் : கத்திரிப்பூ சேலை கட்டி கச்சிதமா…
நான் வந்தேன் பின்னால…

பெண் : எனக்கும் உனக்கும் பல நாள் பந்தம் உண்டு…
பழக்கம் புழக்கம் விட்டு போகாதே…

பெண் : உனக்கும் பிடிக்கும் என்ன நீ தூக்கி போனா…
தூக்கி போனா தேகம் தாங்காதே…

BGM


Notes : Pondicherry Vazhiyela Song Lyrics in Tamil. This Song from Irumbu Kuthirai (2014). Song Lyrics penned by Thamarai. பாண்டிச்சேரி வழியில பாடல் வரிகள்.


காதல் காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக்ஆர்.பி. பட்நாயக்ஜெயம்

Kaadhal Kaadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் காதல் காதல்…
காதல் காதல் இனித்திடும் நரகமா…
காதல் காதல் வலித்திடும் சொர்க்கமா…

ஆண் : கண்களில் பொங்கும் நீரில்…
காட்சியும் மறைந்து போகும்…
காதலின் மடியில்தானே…
இறுதியாய் இதயம் தூங்கும்…

ஆண் : பூவை காட்டி முள்ளை விற்றாய் காதலே…
தெய்வம் கருணை கொண்டால் வெல்லும் காதலே…

BGM

ஆண் : காதல் காதல் காதல்…
காதல் காதல் இனித்திடும் நரகமா…
காதல் காதல் வலித்திடும் சொர்க்கமா…

BGM

ஆண் : ஓடும் மேகங்கள் ஓய்வு கொள்ளலாம்…
மழையாய் பொழிந்தே தன் பாரம் தீர்க்கலாம்…

ஆண் : அழுதால் கூட தீரா சுமையே…
காதல் தீயில் கருகும் இமையே…

ஆண் : காதல் காதல் காதல்…
காதல் காதல் இனித்திடும் நரகமா…
காதல் காதல் வலித்திடும் சொர்க்கமா…

ஆண் : கண்களில் பொங்கும் நீரில்…
காட்சியும் மறைந்து போகும்…
காதலின் மடியில்தானே…
இறுதியாய் இதயம் தூங்கும்…

ஆண் : பூவை காட்டி முள்ளை விற்றாய் காதலே…
தெய்வம் கருணை கொண்டால் வெல்லும் காதலே…

BGM

ஆண் : கண்கள் விளையாடி காதல் வந்தது…
இதயம் களவாட துணிவு தந்தது…

ஆண் : இதயம் தந்து இதயம் வாங்கும்…
காதல் என்றும் வெல்லும் வெல்லுமே…


Notes : Kaadhal Kaadhal Song Lyrics in Tamil. This Song from Jayam (2002). Song Lyrics penned by Thamarai. காதல் காதல் பாடல் வரிகள்.


பெண்ணே பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஜி.வி. பிரகாஷ் குமார், பவதாரிணி & யாழினிஜி.வி. பிரகாஷ் குமார்இரும்பு குதிரை

Penne Penne Song Lyrics in Tamil


BGM

ஆண் : பெண்ணே பெண்ணே அலைகிறேன்…
அன்றில் ஆகி அழுகிறேன்…
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே…
என்றே தேடி திகைக்கிறேன்…

ஆண் : நீ சொல்லாததால் மொழி இல்லை…
நீ செல்லாததால் வழி இல்லை…
நீ பாராததால் ஒளி இல்லை…
நீ தாராததால் நிழல் இல்லை…

ஆண் : உயிர் போனாலும் போகட்டும் இப்போதே…
பார்த்தாக வேண்டும் நான் உன்னை உன்னை…

BGM

ஆண் : ஓ பெண்ணே பெண்ணே அலைகிறேன்…
அன்றில் ஆகி அழுகிறேன்…

BGM

பெண் : நானும் உன்னை காணும் வரை…
என் வாழ்வில் ஏதோ குறை…
உன்னை கண்ட அந்நாள் முதல்…
அன்றாடம் மூன்றாம் பிறை…

பெண் : கைகள் சேர்க்க கண்கள் கோர்க்க…
நான் கேட்டேனே அன்பின் சிறை…
பார்க்கும்போதே பாவை சிலை…
காணாமல் போன கதை…

ஆண் & பெண் : என்னை வா என்றாய் நீ…
எட்டி ஓடோடி பக்கத்தில் வந்தேன்…
கண்கள் பொய் சொன்னதால்…
கானல் நீரைதான் நான் பார்த்து நின்றேன்…

ஆண் : சாலை ஓரத்தில் பூத்தென்றல் ரூபத்தில்…
நீ வந்தாய் நான்தானே புல்லாங்குழல்…

BGM

ஆண் : ஓ பெண்ணே பெண்ணே அலைகிறேன்…
அன்றில் ஆகி அழுகிறேன்…

BGM

ஆண் : காற்றை தூதாக நான் விட…
கண்ணே உன் கூந்தல் கோதி பாராதோ…
உன் கண்ணின் மை பூசி நீவிட…
காற்றும் பெண்ணாகி இங்கு வாராதோ…

ஆண் & பெண் : முன்னும் முன்னூறு ஆண்டுகள்…
ஒன்றாய் நாம் வாழ்ந்த ஞாபகம்…
ஏங்கி நான் பெற்ற என் வரம்…
ஹையோ இப்போது யாரிடம்…

ஆண் & பெண் : உன்னை பாராது முத்தம் தாராது…
இனி தூங்காது என் கண்களே…

ஆண் : பெண்ணே பெண்ணே அலைகிறேன்…
அன்றில் ஆகி அழுகிறேன்…
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே…
என்றே தேடி திகைக்கிறேன்…

ஆண் : நீ சொல்லாததால் மொழி இல்லை…
நீ செல்லாததால் வழி இல்லை…
நீ பாராததால் ஒளி இல்லை…
நீ தாராததால் நிழல் இல்லை…

ஆண் : உயிர் போனாலும் போகட்டும் இப்போதே…
பார்த்தாக வேண்டும் நான் உன்னை உன்னை…

BGM


Notes : Penne Penne Song Lyrics in Tamil. This Song from Irumbu Kuthirai (2014). Song Lyrics penned by Thamarai. பெண்ணே பெண்ணே பாடல் வரிகள்.