பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | ஜி.வி. பிரகாஷ் குமார், பவதாரிணி & யாழினி | ஜி.வி. பிரகாஷ் குமார் | இரும்பு குதிரை |
Penne Penne Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பெண்ணே பெண்ணே அலைகிறேன்…
அன்றில் ஆகி அழுகிறேன்…
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே…
என்றே தேடி திகைக்கிறேன்…
ஆண் : நீ சொல்லாததால் மொழி இல்லை…
நீ செல்லாததால் வழி இல்லை…
நீ பாராததால் ஒளி இல்லை…
நீ தாராததால் நிழல் இல்லை…
ஆண் : உயிர் போனாலும் போகட்டும் இப்போதே…
பார்த்தாக வேண்டும் நான் உன்னை உன்னை…
—BGM—
ஆண் : ஓ பெண்ணே பெண்ணே அலைகிறேன்…
அன்றில் ஆகி அழுகிறேன்…
—BGM—
பெண் : நானும் உன்னை காணும் வரை…
என் வாழ்வில் ஏதோ குறை…
உன்னை கண்ட அந்நாள் முதல்…
அன்றாடம் மூன்றாம் பிறை…
பெண் : கைகள் சேர்க்க கண்கள் கோர்க்க…
நான் கேட்டேனே அன்பின் சிறை…
பார்க்கும்போதே பாவை சிலை…
காணாமல் போன கதை…
ஆண் & பெண் : என்னை வா என்றாய் நீ…
எட்டி ஓடோடி பக்கத்தில் வந்தேன்…
கண்கள் பொய் சொன்னதால்…
கானல் நீரைதான் நான் பார்த்து நின்றேன்…
ஆண் : சாலை ஓரத்தில் பூத்தென்றல் ரூபத்தில்…
நீ வந்தாய் நான்தானே புல்லாங்குழல்…
—BGM—
ஆண் : ஓ பெண்ணே பெண்ணே அலைகிறேன்…
அன்றில் ஆகி அழுகிறேன்…
—BGM—
ஆண் : காற்றை தூதாக நான் விட…
கண்ணே உன் கூந்தல் கோதி பாராதோ…
உன் கண்ணின் மை பூசி நீவிட…
காற்றும் பெண்ணாகி இங்கு வாராதோ…
ஆண் & பெண் : முன்னும் முன்னூறு ஆண்டுகள்…
ஒன்றாய் நாம் வாழ்ந்த ஞாபகம்…
ஏங்கி நான் பெற்ற என் வரம்…
ஹையோ இப்போது யாரிடம்…
ஆண் & பெண் : உன்னை பாராது முத்தம் தாராது…
இனி தூங்காது என் கண்களே…
ஆண் : பெண்ணே பெண்ணே அலைகிறேன்…
அன்றில் ஆகி அழுகிறேன்…
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே…
என்றே தேடி திகைக்கிறேன்…
ஆண் : நீ சொல்லாததால் மொழி இல்லை…
நீ செல்லாததால் வழி இல்லை…
நீ பாராததால் ஒளி இல்லை…
நீ தாராததால் நிழல் இல்லை…
ஆண் : உயிர் போனாலும் போகட்டும் இப்போதே…
பார்த்தாக வேண்டும் நான் உன்னை உன்னை…
—BGM—
Notes : Penne Penne Song Lyrics in Tamil. This Song from Irumbu Kuthirai (2014). Song Lyrics penned by Thamarai. பெண்ணே பெண்ணே பாடல் வரிகள்.