Tag Archives: ஜி. வி. பிரகாஷ் குமார்

வாம்மா துரையம்மா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்உதித் நாராயண், வி.எம்.சி. ஹனீபா & எமி ஜாக்சன்ஜி. வி. பிரகாஷ் குமார்மதராசபட்டினம்

Vaamma Duraiyamma Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா…
வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா…
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா…

ஆண் : கட்டவண்டியில் போவோம்…
ட்ராமில் ஏரியும் போவோம்…
கூவம் படகிலும் போவோம் போலாமா…

ஆண் : மகுடி ஊதிட பாம்பு ஆடுதே எம்மா…
பெரிய யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் எம்மா…
கோடி அதிசயம் இங்கே எம்மம்மா…

ஆண் : வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா…
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா…

BGM

ஆண் : ஓர் பாவைக்கூத்துக்கள் பொம்மல்லாட்டங்கள்…
கோவில் சிற்பத்தில் கலை வளர்ப்போம்…
இன்னும் வாசல் கோலத்தில் அரிசி மாவிலே…
பறவைக்கும் எறும்புக்கும் விருந்து வைப்போம்…

ஆண் : கோடி ஜாதிகள் இங்கே உள்ள போதிலும்…
அண்ணன் தம்பியாய் நாங்கள் வாழுவோம்…
வீட்டில் திண்ணைகள் வைத்துக் கட்டுவோம் எம்மா…
வழிப்போக்கன் வந்து தான் தங்கிச் செல்லுவான் சும்மா…
தாயும் தெய்வம்தான் இங்கே எம்மம்மா…

ஆண் : வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா…
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா…

BGM

ஆண் : ஓர் கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும்…
செந்தமிழ் எங்கள் மொழியாகும்…
அட கம்பன் வள்ளுவன் கவிதையில் சொன்ன…
வாழ்க்கையே எங்கள் நெறியாகும்…

ஆண் : இந்த பூமியில் நீங்கள் எங்கும் போகலாம்…
இங்கு மட்டுமே அன்பை காணலாம்…

ஆண் : வீர மன்னர்கள் வாழ்ந்த நாடு இது எம்மா…
இதை அடிமையாக்கித் தான் கொடுமை செய்வது ஞாயமா…
வலையில் மழையும்தான் விழுந்தது எம்மம்மா…

ஆண் : வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா…
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா…

ஆண் : கட்டவண்டியில் போவோம்…
ட்ராமில் ஏரியும் போவோம்…
கூவம் படகிலும் போவோம் போலாமா…

ஆண் : மகுடி ஊதிட பாம்பு ஆடுதே எம்மா…
பெரிய யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் எம்மா…
கோடி அதிசயம் இங்கே எம்மம்மா…


Notes : Vaamma Duraiyamma Song Lyrics in Tamil. This Song from Madrasapattinam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. வாம்மா துரையம்மா பாடல் வரிகள்.


மெல்ல வளஞ்சது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ரா.தனிக்கொடிமது பாலகிருஷ்ணன்ஜி. வி. பிரகாஷ் குமார்கொம்பன்

Mella Valanjadhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : மெல்ல வளஞ்சது ஆகாயம்…
உள்ளம் சிலிர்க்கிறதே…
நூறு தலை முறை ஆனாலும்…
சொந்தம் இது போல் வாராதே…

ஆண் : வம்பில் ஜெயித்திடும் ஓர் வீரம்…
அன்பில் ஜெயிக்கிறதே…
தொப்புள் கொடியின் பூ வாசம்…
தாலி கொடியில் தந்தானே…

ஆண் : கீறி பார்த்த முள்தானே நீதி முள்ளா நின்னானே…
காயமெல்லாம் மாயமாகி பூக்கள் ஆகுதே…

ஆண் : மெல்ல வளஞ்சது ஆகாயம்…
உள்ளம் சிலிர்க்கிறதே…
நூறு தலை முறை ஆனாலும்…
சொந்தம் இது போல் வாராதே…

BGM

ஆண் : சொந்தம் கூடி வாழ்வதுண்டு…
ஆளும் பேரும் சேர்வதுண்டு…
என்னை போல யோகம் உண்டா ஊர கேக்குறேன்…

ஆண் : என்ன பெருசா செஞ்சு வச்சேன்…
பொண்ணதானே கட்டி வச்சேன்…
இப்ப கேட்டா உசுரக் கூட தார வார்க்குறேன்…

ஆண் : மக பெருமைகள் பின்னாச்சு…
மருமகனிடம் என் மூச்சு…
இவன் பேச்ச மீறி இங்க மறு பேச்சில்ல…
எதாச்சும் இவனுகின்னா என் மூச்சில…

BGM

ஆண் : ஆச வார்த்த பேசவில்ல…
நானும் ரோசம் பார்க்கவில்ல…
என்ன காக்க தன்மானத்த தந்து போகிறான்…

ஆண் : சோ்ந்து செல்லும் நண்பன் இல்ல…
நானும் இங்க கண்ணன் இல்ல…
தாழ்ந்த போதும் வீழ்ந்திடாத கீதை சொல்கிறான்…

ஆண் : கட்டுப்படுத்துறேன் கண்ணீர…
முட்டி கசியுது தன்னால…
தெக்கதீ காட்டு தீ வெளகேத்துதே…
தெய்வங்கள் மூக்கு மேல விரல் வைக்குதே…

ஆண் : மெல்ல வளஞ்சது ஆகாயம்…
உள்ளம் சிலிர்க்கிறதே…
நூறு தலை முறை ஆனாலும்…
சொந்தம் இது போல் வாராதே…

ஆண் : கீறி பார்த்த முள்தானே…
நீதி முள்ளா நின்னானே…
காயமெல்லாம் மாயமாகி பூக்கள் ஆகுதே…

ஆண் : மெல்ல வளஞ்சது ஆகாயம்…
உள்ளம் சிலிர்க்கிறதே…
நூறு தலை முறை ஆனாலும்…
சொந்தம் இது போல் வாராதே…


Notes : Mella Valanjadhu Song Lyrics in Tamil. This Song from Komban (2015). Song Lyrics penned by Ra.Thanikodi. மெல்ல வளஞ்சது பாடல் வரிகள்.


கம்பிக்கர வேட்டி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ரா.தனிக்கொடிவி.எம்.மகாலிங்கம் & அனந்துஜி. வி. பிரகாஷ் குமார்கொம்பன்

Kambikara Vetti Song Lyrics in Tamil


BGM

ஆண் : கம்பிக்கர வேட்டி கண்ணு ரெண்டும் ஈட்டி…
வம்பு தும்பு செஞ்சா கூறு போடும் மீசைகாரன்…
நம்ம பெத்தெடுத்த மண்ண குத்தங்கொறை சொன்ன…
சுத்தி அடி சுத்தி சூறை ஆடும் ரோஷக்காரன்…

ஆண் : அட சொந்த புத்தி உண்டு…
மூளைக்குள்ள சொல்லு புத்தி ஒன்னும் தேவை இல்ல…
தத்துவத்த புழிஞ்சி ஊத்த வல்ல…
ரோஷத்துக்கு பொறந்த மூத்தபுள்ள…

ஆண் : கம்பிக்கர வேட்டி கண்ணு ரெண்டும் ஈட்டி…
வம்பு தும்பு செஞ்சா கூறு போடும் மீசைகாரன்…
நம்ம பெத்தெடுத்த மண்ண குத்தங்கொறை சொன்ன…
சுத்தி அடி சுத்தி சூறை ஆடும் ரோஷக்காரன்…

BGM

ஆண் : சேலைக்கு பின்னாடி மோப்பம் புடிக்கும்…
நாய் வால வெட்டணும்டா…
அட நம்மூரு பொண்ணுங்க நம் மேல வைக்குற…
நம்பிக்கை முக்கியம்டா…

ஆண் : தொன்னூற தாண்டியும் நெஞ்ச நிமித்தும்…
பாட்டிய பாத்துக்கடா…
அவ பொன்னான காலடி மண்ணல்லி நீ பூசி…
பாவத்த தீத்துக்கடா…

ஆண் : அடிச்சு சத்தியம் செய்யுறேன்டா…
கருப்பு சாமிக்கு நான் புள்ளடா…
எதையும் சாதிக்கும் ஆம்பளடா…

BGM

ஆண் : கட்டுத் தரி அத்துகிட்டு பறக்கும் காளைடா…
சுத்து பட்டி எட்டு ஊரும் கலக்கும் பாருடா…
எதிராளா வந்துராதே…
நரிவேல செஞ்சிராதே…

ஆண் : நெஞ்சுக்குள்ள அச்சம் இல்ல ஒரசி பாருடா…
பஞ்சுக்குள்ள அக்கினிய மறைச்சதாருடா…
எத கட்டி ஆள போற…
சரி கட்டி வாழ போற…

ஆண் : கிடி கிட்டி தப்பு தார…
கிழிக்கட்டும் நம்ம ஊரை…
பள்ளிக்கூடம் சொல்லும் பாடம் அங்கே வேற…
நம்ம பட்டிக்காட்டு பாடம்தாண்டா இப்ப தேவை…
அட எப்பதாண்டா ஊரு நாட பாா்க்க போற…

BGM

ஆண் : ஹேய்… வெல்லும் புலி ஒரு நாளும்…
புல்ல திங்க போகாது…
ஒத்தைக்கு ஒத்தையா தாக்கும்…
புது ரத்தத்து வாசத்த கேக்கும்…
வெறி உச்சத்தில் ஆடிதான் தீா்க்கும்…

ஆண் : இது சொல்லாம கொல்லாம வெளங்கும்…
அத சொன்னாலே தன்னாலே கலங்கும்…
எவன் பின்னாலும் நிக்காத…
வீரத்ததானே எந்நாளும் நம் பூமி வணங்கும்…

ஆண் : புலி ஒத்தைக்கு ஒத்தையா தாக்கும்…
புது ரத்தது வாசத்த கேக்கும்…
வெறி உச்சத்தில் ஆடிதான் தீா்க்கும்…

ஆண் : இது சொல்லாம கொல்லாம வெளங்கும்…
அத சொன்னாலே தன்னாலே கலங்கும்…
எவன் பின்னாலும் நிக்காத…
வீரத்ததானே எந்நாளும் நம்பூமி வணங்கும்…

BGM

ஆண் : கம்பிக்கர வேட்டி கண்ணு ரெண்டும் ஈட்டி…
வம்பு தும்பு செஞ்சா கூறு போடும் மீசைகாரன்…
நம்ம பெத்தெடுத்த மண்ண குத்தங்கொறை சொன்ன…
சுத்தி அடி சுத்தி சூறை ஆடும் ரோஷக்காரன்…

BGM


Notes : Kambikara Vetti Song Lyrics in Tamil. This Song from Komban (2015). Song Lyrics penned by Ra.Thanikodi. கம்பிக்கர வேட்டி பாடல் வரிகள்.


ஓ சுனந்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைராமன் மகாதேவன், கரோலின், மேகா, நிவாஸ், ராகுல் நம்பியார், சின்மயி, ஜூரியன் & டேனியல்ஜி. வி. பிரகாஷ்குமார்முப்பொழுதும் உன் கற்பனைகள்

Oh Sunanda Song Lyrics in Tamil


ஆண் : ஓ சுனந்தா சுனந்தா…
ஒரே சுகமாய் நடந்தாள்…
தேன் சுவையாய் நிறைந்தாள்…
முதல் முறை…

ஆண் : கடிவாளம் இல்லா காற்றை போலவே…
வடிவங்கள் இல்லா வாசம் போலவே…
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே…
நுரை போலே நீ அலை போலே நான்…

BGM

ஆண் : ஓ சுனந்தா சுனந்தா…
ஒரே சுகமாய் நடந்தாள்… யே யே யே…

BGM

ஆண் : மழை விழுகின்ற பொழுதினிலே…
மயில் நடனங்கள் புாிகின்றதே…
பனி துளிகளின் சுமைகளிலே…
மலா் ஒரு புறம் சாிகிறதே…

ஆண் : நேற்று நான் வேறொரு ஆடவன்…
இன்று நான் வெண்பனி ஆனவன்…
தேய்பிறை நாட்களும் போனதே…
வான் நிலா பௌா்ணமி ஆனதே…

BGM

ஆண் : ஓ சுனந்தா சுனந்தா…
ஒரே சுகமாய் நடந்தாள்…

BGM

ஆண் : துயில் கலைந்திடும் விழிகளிலே…
புது தினங்களின் கனவுகளே…
நவ மணிகளின் நடுவினிலே…
தனி மரகத பவளங்களே…

ஆண் : மின்மினி பூச்சிகள் கூடியே…
பேசுதே நித்தமும் வம்புகள்…
யாா் இவன் அன்னியன் ஆயினும்…
பெண் மனம் காட்டிடும் அம்புகள்…

BGM

ஆண் : ஓ சுனந்தா சுனந்தா…
ஒரே சுகமாய் நடந்தாள்…
தேன் சுவையாய் நிறைந்தாள்… யே யே யே…
முதல் முறை…

ஆண் : கடிவாளம் இல்லா காற்றை போலவே…
வடிவங்கள் இல்லா வாசம் போலவே…
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே…
நுரை போலே நீ அலை போலே நான்…

BGM


Notes : Oh Sunanda Song Lyrics in Tamil. This Song from Muppozhudhum Un Karpanaigal (2012). Song Lyrics penned by Thamarai. ஓ சுனந்தா பாடல் வரிகள்.


ஆருயிரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சோனு நிகம் & சைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்மதராசபட்டினம்

Aaruyire Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆருயிரே ஆருயிரே…
அன்பே உன் அன்பில்தானே நான் வாழ்கிறேன்…
நீயில்லையேல் நான் இல்லையே…
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்…

பெண் : நீயே என் உயிரே…
எனக்குள் உன் உயிரே…
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்…
என்னை பிரிகிறேன்…

ஆண் : ஆருயிரே ஆருயிரே…
அன்பே உன் அன்பில்தானே நான் வாழ்கிறேன்…

BGM

பெண் : விழிதாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்…
எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்…

ஆண் : காற்றென மாறுவேனோ… ஓஓ…
உன் சுவாசத்தில் சேர்வேனோ…
நீ சுவாசிக்கும் போதும் வெளிவரமாட்டேன்…
உனக்குள் வசிப்பேனே…

பெண் : உயிரே என் உயிரே…
உனக்குள் என் உயிரே…
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்…
என்னை பிரிகிறேன்…

ஆண் : ஆருயிரே ஆருயிரே…
அன்பே உன் அன்பில்தானே நான் வாழ்கிறேன்…

BGM

பெண் : கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்…
ஆண் : கண்ணீரில் முடிந்தால்தான் காதல் காவியம்…

ஆண் : மேற்றினில் வாழ்வேனோ…
உன் தோள்களில் சாய்வேனோ…
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து…
காலங்கள் மறப்பேனோ… ஓஓ…

பெண் : உயிரே என்னுயிரே நாமே ஓருயிரே…
ஆண் : நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்…
உயிரை துறக்கிறேன் ஏன்…

BGM


Notes : Aaruyire Song Lyrics in Tamil. This Song from Madrasapattinam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. ஆருயிரே பாடல் வரிகள்.


ஒருமுறை ஒருமுறை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரை & பிளேஸ்ஜி. வி. பிரகாஷ்குமார், பிளேஸ் & ஆண்ட்ரியா ஜெரெமையாஜி. வி. பிரகாஷ்குமார்முப்பொழுதும் உன் கற்பனைகள்

Oru Murai Song Lyrics in Tamil


BGM

ஆண் : அந்தியின் வெயிலை பந்தாடுதே பேய் மழை…
இந்நிலை சொல்லுதே என் காதலின் வானிலை…

ஆண் : ஒரு முறை ஒரு முறை என் விழிகளை பாராயோ…
கனவுகள் கசிந்திட அது கதைப்பதை கேளாயோ…

ஆண் : பாதி கண்களை மூடுகிறேன்…
மீதி கண்களில் தேடுகிறேன்…
உள்ளம் புராமும் உன்முகமே உந்திட கண்டேனே…

ஆண் : என் நெஞ்சம் எங்கும் பொங்குகின்ற காதல்…
அது சொல்லிவிட வேண்டும் என்று ஆவல்…
அட என்ன வந்து சொல்வதென்று கேட்டால்…
என்ன செய்வேன் நான்…

ஆண் : ஒரு மொட்டு அவிழ்ந்த ஒற்றை ரோஜா பாா்த்தேன்…
என் கட்டவிழ்ந்த காதில் சொல்ல இயலும்…
அதை நம்பவில்லை நம்பவில்லை நானும்…
வாங்கவில்லை நான்…

BGM

ஆண் : பலவண்ண வண்ண கற்கள் வைத்த கைப்பை…
நம் பெயா்களை அச்சடித்த கோப்பை…
நீ துாங்கவென்று கத கத போா்வை…
தேடுகின்றேன் நான்…

ஆண் : நீ தொட்டுக்கென சிப்பி சங்கு தரவா…
மான் குட்டி படம் முத்துசரம் தரவா…
பெண் குட்டி போல துவள்வாங்கி தரவா…
என்னதான் வாங்க…

BGM

ஆண் : சிாிப்பை இறைக்கும் உனக்கு வீட்டில்…
செயற்கை அருவி தரலாம்…
இதயம் முழுதும் ஈரம் அதனால்…
செடிகள் வளா்க்க தரலாம்…

ஆண் : அழகு செய்யும் சாதனம்…
வாங்க தோன்றும் காரணம்…
உன்னை சோ்ந்த பின்புதான்…
அழியும் அவற்றின் ஆணவம்…

ஆண் : ஓா் பக்கம் வந்தால் அதிகமாய் துடிக்கும்…
சற்று தள்ளிசென்றால் செத்ததுபோல் நடிக்கும்…
அட இதயத்தை அவள் கையில் தந்தால்…
என்ன செய்வாளோ…

ஆண் : உன்னை ஏந்தி செல்ல எப்பொழுதும் இருப்பேன்…
நீ சொல்லும் வழி காலடிகள் கொடுப்பேன்…
ஓா் தேவை என்றால் கால்மிதியாய் கிடப்பேன்…
தாண்டினால் என்ன…

ஆண் : ஒஹோ… ஒரு முறை ஒரு முறை என் விழிகளை பாராயோ…
கனவுகள் கசிந்திட அது கதைப்பதை கேளாயோ…

BGM

ஆண் : உனது பொிய படத்தால் அறையின்…
சுவரை மறைத்து விடவா…
நிலவின் ஒளியில் மின்னும் முகத்தை…
விரலை நீட்டி தொடவா…

ஆண் : தாஜ்மகால் வாங்கலாம்…
ஷாஜகானாய் மாறலாம்…
ஏற்கவில்லை நான் அதை…
உனக்கு பின்பு வாழ்வதை…

ஆண் : மலா் கொத்துகளோ ரொம்ப ரொம்ப அலுப்பு…
விரல் மோதிரங்கள் இப்பொதெல்லாம் சலிப்பு…
அட தங்கத்துக்கு தங்கநகை எதுக்கு…
வாங்கவில்லை நான்…

ஆண் : ஹே… ஒரு முறை ஒரு முறை என் விழிகளை பாராயோ…
கனவுகள் கசிந்திட அது கதைப்பதை கேளாயோ…

BGM


Notes : Oru Murai Song Lyrics in Tamil. This Song from Muppozhudhum Un Karpanaigal (2012). Song Lyrics penned by Thamarai & Blaaze. ஒருமுறை ஒருமுறை பாடல் வரிகள்.


உயிாின் உயிரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜி. வி. பிரகாஷ் குமார், சைந்தவி & சத்யபிரகாஷ்ஜி. வி. பிரகாஷ் குமார்தாண்டவம்

Uyirin Uyire Song Lyrics in Tamil


BGM

பெண் : உயிாின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…

பெண் : காதலாகி காற்றிலாடும்…
ஊஞ்சலாய் நான் ஆகிறேன்…
காலம் தாண்டி வாழ வேண்டும்…
வேற என்ன கேட்கிறேன்…

BGM

பெண் : உயிாின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…

BGM

பெண் : சாயங்காலம் சாயும் நேரத்தில்…
தோழி போல மாறுவேன்…
சேர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில்…
தாயை போல தாங்குவேன்…

பெண் : வேறு பூமி வேறு வானம்…
தேடியே நாம் போகலாம்…
சேர்த்து வைத்த ஆசையாவும்…
சேர்ந்து நாமங்கு பேசலாம்…

பெண் : அகலாமலே அணுகாமலே…
இந்த நேசத்தை யார் நெய்தது…
அறியாமலே புரியாமலே…
இரு நெஞ்சுக்குள் மழை தூவுது…

BGM

பெண் : உயிரின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…

BGM

பெண் : தண்டவாளம் தள்ளி இருந்தது…
தூரம் சென்று சேரத்தான்…
மேற்கு வானில் நிலவு எழுவது…
என்னுள் உன்னை தேடத்தான்…

பெண் : ஐந்து வயது பிள்ளை போலே…
உன்னை நானும் நினைக்கவா…
அங்கும் இங்கும் கன்னம் எங்கும்…
செல்ல முத்தம் பதிக்கவா…

பெண் : நிகழ் காலமும் எதிா் காலமும்…
இந்த அன்பெனும் வரம் போதுமே…
இறந்தாலுமே இறக்காமலே…
இந்த ஞாபகம் என்றும் வாழுமே…

BGM

பெண் : உயிாின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…

பெண் : காதலாகி காற்றிலாடும்…
ஊஞ்சலாய் நான் ஆகிறேன்…
காலம் தாண்டி வாழ வேண்டும்…
வேற என்ன கேட்கிறேன்…

BGM


Notes : Uyirin Uyire Song Lyrics in Tamil. This Song from Thaandavam (2012). Song Lyrics penned by Na. Muthukumar. உயிாின் உயிரே பாடல் வரிகள்.


இன்பா இன்பா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபிரதீப் குமார்ஜி. வி. பிரகாஷ் குமார்ஜப்பான்

Inba Inba Song Lyrics in Tamil


BGM

ஆண் : இன்பா இன்பா தீராத இன்பா…
நீயே என் காதல் வெண்பா…
அன்பா அன்பா ஆறாத அன்பா…
நீயே என் வாழ்வில் பெண்பா…

BGM

ஆண் : இன்பா இன்பா தீராத இன்பா…
நீயே என் காதல் வெண்பா…
அன்பா அன்பா ஆறாத அன்பா…
நீயே என் வாழ்வில் பெண்பா…

ஆண் : பேசாமல் நீயும் செய்கின்ற மாயம்…
பேரின்ப தேன் ஊறிடும் தீவே…
ஓயாமல் வீசும் தெய்வீக வாசம்…
உன்னோடு கண்டேனே ஊதாப்பூவே…

ஆண் : இன்பா இன்பா தீராத இன்பா…
நீயே என் காதல் வெண்பா…
அன்பா அன்பா ஆறாத அன்பா…
நீயே என் வாழ்வில் பெண்பா…

BGM

ஆண் : கூரை நிலா கோடை மழை…
உன் மடியில் உறையாதோ காலம்…
ஜோடி புறா கோடி குயில்…
உன் குரலில் வழியாதோ கீதம்…

ஆண் : ஆயுள் வரை நீயே கதி…
தேயாதடி என் வான்மதி…
கோதை கொலுசுகள் ஓசை…
கேட்டே பெருகுதே ஆசை…

ஆண் : தாய் கண்ட பாரம் ஈரைந்து மாதம்…
நாம் கொண்ட காதல் தாங்காது வேதம்…
வேறேதும் வேண்டாம் கை சேரும்…

BGM

ஆண் : ஓரவிழி நூறு மொழி…
உன் அழகில் ஒளிராதோ காலை…
ஈர இதழ் காது மடல்…
அத்தனையும் விழுங்காதே ஆளை…

ஆண் : கூந்தல் முதல் பாதம் வரை…
நீ சூடிட்ட நானே நகை…
தீரும் கனக்கரியம்மால்…
மேலும் கொடுத்திடும் காதல்…

ஆண் : அன்பே உன் அன்பை நீ காட்டு கொஞ்சம்…
ஈரெழு ஜென்மம் கேட்காது நெஞ்சம்…
என் மூச்சு இன்று உன்னோடு தஞ்சம்…

ஆண் : இன்பா இன்பா தீராத இன்பா…
நீயே என் காதல் வெண்பா…
அன்பா அன்பா ஆறாத அன்பா…
நீயே என் வாழ்வில் பெண்பா…

BGM


Notes : Inba Inba Song Lyrics in Tamil. This Song from Japan (2023). Song Lyrics penned by Yugabharathi. இன்பா இன்பா பாடல் வரிகள்.


அனிச்சம் பூவழகி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்வேல்முருகன் & சின்னபொண்ணுஜி. வி. பிரகாஷ் குமார்தாண்டவம்

Anicham Poovazhagi Song Lyrics in Tamil


ஆண் : என் கண்ணே… தந்தானா தனனானா…

பெண் : மையல் குய்யல் ஹே ஹே மையல் குய்யல்…
மையல் குய்யல் ஹோ ஹோ மையல் குய்யல்…
மையல் குய்யல் ஹே ஹே மையல் குய்யல்…

BGM

ஆண் : அனிச்சம் பூவழகி ஆட வைக்கும் மேலழகி…
கருத்த விழியழகி கெரங்க வைக்கும் பேரழகி…
எங்கெங்கோ எங்கெங்கோ பறந்து நா போனேனே…
சண்டாலி உன்கிட்ட சருகாகி நின்னேனே…

பெண் : வாரான்டி வாரான்டி வாிச கொண்டு வாரான்டி…
பாக்கு வண்டி எடுத்துகிட்டு பாிசம் கொண்டு வாரான்டி…
மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு மல்லு வேட்டி வாங்கி கொடு…
தாலி ஒன்னு கட்டிவிட்டு பாட்டு ஒன்னு எடுத்து விடு…

BGM

ஆண் : நேத்து வரை வெண்ணிலவு…
வீன் நிலவு என்று இப்போ…
தோனுதடி அடியே தோனுதடி…

ஆண் : ஆல வரும் வெண்நிலவு…
தேன் நிலவு என்று இனி…
மாறுமடி அடியே மாறுமடி…

ஆண் : சொல்லாத சந்தோஷம் அல்லாம அல்லுதடி…
பொல்லாத ஒரு வாரம் கில்லாம கில்லுதடி…
ஏ புள்ள வா மெல்ல கனவுகள் எடுத்துச் செல்ல…

பெண் : வாரான்டி வாரான்டி வாிச கொண்டு வாரான்டி…
பாக்கு வண்டி எடுத்துகிட்டு பாிசம் கொண்டு வாரான்டி…
மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு மல்லு வேட்டி வாங்கி கொடு…
தாலி ஒன்னு கட்டிவிட்டு பாட்டு ஒன்னு எடுத்து விடு…

BGM

பெண் : புது பொண்ணு மாப்பிள்ளைக்கு…
பூவ அல்லி சூடுங்கடி…
மாப்பிள்ளையும் பொண்ணும்…
நல்லா வாழனும்னு வாழ்த்துங்கடி…

பெண் : புது பொண்ணு மாப்பிள்ளைக்கு…
பூவ அல்லி சூடுங்கடி…
மாப்பிள்ளையும் பொண்ணும்…
நல்லா வாழனும்னு வாழ்த்துங்கடி…

பெண் : ஓ தந்தனா தந்தனா தந்தனா தந்தனா…

BGM

ஆண் : சாத்தி வச்ச நெஞ்சில் இப்போ…
சேத்து வச்ச காதல் வந்து…
தாக்குதடி அடியே தாக்குதடி…

ஆண் : போா் கலத்த தாண்டி இப்போ…
பூக்கடைக்கு கால்கள் இனி…
போகுமடி அடியே போகுமடி…

ஆண் : மாியாதை இல்லாம மனசென்ன திட்டுதடி…
உன் பெயர சொல்லச் சொல்லி உள் நாக்கு கத்துதடி…
ஏ புள்ள வா மெல்ல கனவுகள் எடுத்துச் செல்ல…

பெண் : வாரான்டி வாரான்டி வாிச கொண்டு வாரான்டி…
பாக்கு வண்டி எடுத்துகிட்டு பாிசம் கொண்டு வாரான்டி…
மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு மல்லு வேட்டி வாங்கி கொடு…
தாலி ஒன்னு கட்டிவிட்டு பாட்டு ஒன்னு எடுத்து விடு…

ஆண் : அனிச்சம் பூவழகி ஆட வைக்கும் மேலழகி…
கருத்த விழியழகி கெரங்க வைக்கும் பேரழகி…
எங்கெங்கோ எங்கெங்கோ பறந்து நா போனேனே…
சண்டாலி உன் கிட்ட சருகாகி நின்னேனே…

பெண் : மையல் குய்யல் ஹே ஹே மையல் குய்யல்…
மையல் குய்யல் ஹோ ஹோ மையல் குய்யல்…
மையல் குய்யல் ஹே ஹே மையல் குய்யல்…
மையல் குய்யல் ஹோ ஹோ மையல் குய்யல்…

பெண் : மையல் குய்யல் ஹே ஹே மையல் குய்யல்…


Notes : Anicham Poovazhagi Song Lyrics in Tamil. This Song from Thaandavam (2012). Song Lyrics penned by Na. Muthukumar. அனிச்சம் பூவழகி பாடல் வரிகள்.


அப்பப்பா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மகாலிங்கம்ஜி. வி. பிரகாஷ் குமார் & ஸ்ரேயா கோஷல்ஜி. வி. பிரகாஷ் குமார்கொம்பன்

Appappa Song Lyrics in Tamil


BGM

பெண் : அப்பப்பா காய்ச்சல் விட்டு போச்சு… ஓஹோ…
அச்சச்சோ காதல் நோவு ஆச்சு…
முத்தத்தில் பத்து போடு தேச்சு… ஓஹோ…
மொத்தத்தில் என்னை கஞ்சி காச்சு…

பெண் : பத்தியத்த முறிக்காத உங்க கையி…
முப்பாலில் மூணாம் பால் சோ்த்து வையி…
அப்பாவா நீயாகும் சேட்டை செய்யி…

ஆண் : வெக்கத்த பக்கம் வந்து பாத்து… ஓஹோ…
வீராப்பு மட்டு பட்டு போச்சு…
மல்லி பூ கூந்தல் மோந்து பாத்து… ஓஹோ…
மச்சமும் நட்சத்திரம் ஆச்சு…

ஆண் : தப்பு தண்டா செய்யாத வீரன்தான்டி…
உன்கிட்ட நடப்பேனே தப்பாதான்டி…
ஒப்பேத்த மாட்டேண்டி கிட்ட வாடி…

BGM

பெண் : ஓ… வீட்டுல மத்தவங்க பாக்காதப்போ சீண்டுவ…
பார்த்துட்டா சமாளிக்க ஏதோ ஒன்ன நோண்டுவ…
பார்ப்பேன் அப்ப பார்ப்பேன் அந்த அசட்டு சிரிப்பதான்…
ஆனா எதிர் பார்ப்பேன் அந்த திருட்டு தனத்ததான்…

ஆண் : ரொம்ப தான் அக்கறையா வேலை எல்லாம் பாக்குற…
அம்புட்டும் என்ன பார்க்க வைக்க தானே செய்யுற…
உங்க கண்ணு மட்டும் தாண்டி வேற எங்கோ பாா்க்குது…
ஆனா ஒடம்பெல்லாம் என்னை கண்ணால் தாக்குது…

பெண் : அப்பப்பா காய்ச்சல் விட்டு போச்சு… ஓஹோ…
அச்சச்சோ காதல் நோவு ஆச்சு…

BGM

ஆண் : யே சொம்புல தண்ணி மொண்டு மேலு கூச ஊத்துற…
நெஞ்சுல சாச்சு வச்சு முந்தானையில் துவட்டுற…
போதும் இது போதும் பஞ்சு பஞ்சா பறக்குறேன்…
நெஞ்சாங் குளிக்குள்ள வந்து நீச்ச அடிக்குறேன்

பெண் : செவ்வந்தி நெத்தி மேல பச்ச குத்தி காட்டுனேன்…
வெள்ளந்தி நெஞ்சுக்காரா உன்னை வண்ணம் தீட்டுவேன்…
நூறு ஜென்மம் போதாதையா வேண்டி கெஞ்சுவேன்…
பாசம் அன்பில் தானே பெத்த தாய மிஞ்சுவேன்…

பெண் : அப்பப்பா காய்ச்சல் விட்டு போச்சு… ஓஹோ…
அச்சச்சோ காதல் நோவு ஆச்சு…
முத்தத்தில் பத்து போடு தேச்சு… ஓஹோ…
மொத்தத்தில் என்னை கஞ்சி காச்சு…

பெண் : பத்தியத்த முறிக்காத உங்க கையி…
முப்பாலில் மூணாம் பால் சோ்த்து வையி…
அப்பாவா நீயாகும் சேட்டை செய்யி…

ஆண் : வெக்கத்த பக்கம் வந்து பாத்து… ஓஹோ…
வீராப்பு மட்டு பட்டு போச்சு…

BGM


Notes : Appappa Song Lyrics in Tamil. This Song from Komban (2015). Song Lyrics penned by Mahalingam. அப்பப்பா பாடல் வரிகள்.