Category Archives: 2010 Movies

2010 Movies

iragai-poley-song-lyrics

இறகை போலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதியுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாநான் மகான் அல்ல

Iragai Poley Song Lyrics in Tamil


BGM

ஆண் : இறகை போலே அலைகிறேனே…
உந்தன் பேச்சை கேட்கையிலே…
குழந்தை போலே தவழ்கிறேனே…
உந்தன் பார்வை தீண்டயிலே…

ஆண் : தொலையாமல் தொலைந்தேனே…
உன் கைகள் என்னை தொட்டதும்…
கரையாமல் கரைந்தேனே…
உன் மூச்சு காற்று பட்டதும்…

ஆண் : அநியாய காதல் வந்ததே…
அடங்காத ஆசை தந்ததே…
எனக்குள்ளே ஏதோ…
மின்னல் போலே தொட்டு சென்றதே…

ஆண் : கண்ணோரம் காதல் வந்தால்…
கண்ணீரும் தித்திப்பாகும்…
வேறுஒன்றும் தேவையில்லை…
நீ மட்டும் போதும் போதும்…

ஆண் : என்னோடு நீயும் வந்தால்…
எல்லாமே கையில் சேரும்…
வேறுஒன்றும் தேவையில்லை…
நீ மட்டும் போதும் போதும்… ஓ… ஓ… ஓ…

BGM

ஆண் : கூட வந்து நீ நிற்பதும்…
கூடுவிட்டு நான் செல்வதும்…
தொடருதே தொடருதே நாடகம்…

ஆண் : பாதி மட்டுமே சொல்வதும்…
மீதி நெஞ்சிலே என்பதும்…
புரியுதே புரியுதே காரணம்…

ஆண் : நேரங்கள் தீருதே…
வேகங்கள் கூடுதே…
பூவே உன் கண்ணுக்குள்ளே…
பூமி பந்து சுத்துதே…

ஆண் : கண்ணோரம் காதல் வந்தால்…
கண்ணீரும் தித்திப்பாகும்…
வேறுஒன்றும் தேவையில்லை…
நீ மட்டும் போதும் போதும்…

ஆண் : என்னோடு நீயும் வந்தால்…
எல்லாமே கையில் சேரும்…
வேறுஒன்றும் தேவையில்லை…
நீ மட்டும் போதும் போதும்… ஓ… ஓ… ஓ…

BGM

ஆண் : ஹே… என்னானதோ ஏதானதோ…
இல்லாமல் போச்சே தூக்கமும்…
கண்ணே உன்னை காணாமல்…
நான் இல்லை… ஓஓஓ…

ஆண் : என்மீதிலே உன் வாசனை…
எப்போதும் வீச பார்கிறேன்…
அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை… ஓஓஓ…

ஆண் : நீ என்னை காண்பதே…
வானவில் போன்றதே…
துாரத்தில் உன்னை கண்டால்…
தூறல் நெஞ்சில் சிந்துதே… ஓ… ஓ… ஓ…

BGM

ஆண் : கண்ணோரம் காதல் வந்தால்…
கண்ணீரும் தித்திப்பாகும்…
வேறுஒன்றும் தேவையில்லை…
நீ மட்டும் போதும் போதும்…

ஆண் : என்னோடு நீயும் வந்தால்…
எல்லாமே கையில் சேரும்…
வேறுஒன்றும் தேவையில்லை…
நீ மட்டும் போதும் போதும்… ஓ… ஓ… ஓ…

BGM


Notes : Iragai Poley Song Lyrics in Tamil. This Song from Naan Mahaan Alla (2010). Song Lyrics penned by Yugabharathi. இறகை போலே பாடல் வரிகள்.


என் நெஞ்சில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாதனா சர்கம்யுவன் ஷங்கர் ராஜாபாணா காத்தாடி

En Nenjil Song Lyrics in Tamil


BGM

பெண் : என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…
என் கண்ணில் ஒரு தீ வந்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…

பெண் : என்ன அது இமைகள் கேட்டது…
என்ன அது இதயம் கேட்டது…
காதல் என உயிரும் சொன்னதன்பே…
காதல் என உயிரும் சொன்னதன்பே…

பெண் : என் பெயரில் ஒரு போ் சோ்ந்தது…
அந்த போ் என்னவென கேட்டேன்…
என் தீவில் ஒரு கால் வந்தது…
அந்த ஆள் எங்கு என கேட்டேன்…

பெண் : கண்டுபிடி உள்ளம் சொன்னது…
உன்னிடத்தில் உருகி நின்றது…
காதல் இது உயிரும் சொன்னதன்பே…
காதல் இது உயிரும் சொன்னதன்பே…

BGM

பெண் : சில நேரத்தில் நம் பார்வைகள்…
தவறாகவே எடை போடுமே…
மழை நேரத்தில் விழி ஓரத்தில்…
இருளாகவே ஒளி தோன்றுமே…

பெண் : இதயம் எடை போடவே…
இதயம் தடையாய் இல்லை…
புரிந்ததும் வருந்தினேன் உன்னிடம்…
என்னை நீ மாற்றினாய்…
எங்கும் நிறம் பூட்டினாய்…
என் மனம் இல்லையே என்னிடம்…

பெண் : என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…
என் கண்ணில் ஒரு தீ வந்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…

BGM

பெண் : உன்னை பார்த்ததும் அந்நாளிலே…
காதல் நெஞ்சில் வரவே இல்லை…
எதிர்காற்றிலே குடை போலவே…
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை…

பெண் : இரவில் உறக்கம் இல்லை…
பகலில் வெளிச்சம் இல்லை…
காதலில் கரைவதும் ஒரு சுகம்…
எதற்கு பார்த்தேன் என்று இன்று புரிந்தேனடா…
என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்…

பெண் : என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…
என் கண்ணில் ஒரு தீ வந்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…

பெண் : என்ன அது இமைகள் கேட்டது…
என்ன அது இதயம் கேட்டது…
காதல் என உயிரும் சொன்னதன்பே…
காதல் என உயிரும் சொன்னதன்பே…

BGM

பெண் : காதல் இது உயிரும் சொன்னதன்பே…
காதல் இது உயிரும் சொன்னதன்பே…


Notes : En Nenjil Song Lyrics in Tamil. This Song from Baana Kaathadi (2010). Song Lyrics penned by Na. Muthukumar. என் நெஞ்சில் பாடல் வரிகள்.


துளி துளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண் & தன்வியுவன் ஷங்கர் ராஜாபையா

Thuli Thuli Song Lyrics in Tamil


BGM

ஆண் : துளி துளி துளி மழையாய் வந்தாளே… ஏ… ஏ…
சுட சுட சுட மறைந்தே போனாளே… ஏ… ஏ…
பார்த்தால் பார்க்க தோன்றும்…
பேரை கேட்க தோன்றும்…
பூப்போல் சிரிக்கும்போது…
காற்றாய் பறந்திட தோன்றும்…

ஆண் : செல் செல் அவளிடம் செல்…
என்றே கால்கள் சொல்லுதடா…
சொல் சொல் அவளிடம் சொல்…
என்றே நெஞ்சம் கொல்லுதடா…
அழகாய் மனதை பறித்துவிட்டாளே…

ஆண் : துளி துளி துளி மழையாய் வந்தாளே… ஏ… ஏ…
சுட சுட சுட மறைந்தே போனாளே… ஏ… ஏ…

BGM

ஆண் : தேவதை அவள் ஒரு தேவதை…
அழகிய பூ முகம் காணவே ஆயுள்தான் போதுமோ…
காற்றிலே அவளது வாசனை…
அவளிடம் யோசனை கேட்டுதான்…
பூக்களும் பூக்குமோ…

ஆண் : நெற்றி மேலே ஒற்றை முடி ஆடும்போது…
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்…
பார்வை ஆளை தூக்கும்…

ஆண் : கன்னம் பார்த்தால்…
முத்தங்களால் தீண்ட தோன்றும்…
பாதம் ரெண்டு பார்க்கும் போது…
கொலுசாய் மாற தோன்றும்…
அழகாய் மனதை பறித்துவிட்டாளே…

ஆண் : செல் செல் அவளிடம் செல்…
என்றே கால்கள் சொல்லுதடா…
சொல் சொல் அவளிடம் சொல்…
என்றே நெஞ்சம் கொல்லுதடா…

BGM

ஆண் : சாலையில் அழகிய மாலையில்…
அவளுடன் போகவே ஏங்குவேன்…
தோள்களில் சாயுவேன்…
பூமியில் விழுகிற வேளையில்…
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன்…
நெஞ்சிலே தாங்குவேன்

ஆண் : காணும்போதே கண்ணால் என்னை கட்டி போட்டாள்…
காயம் இன்றி வெட்டி போட்டாள்…
உயிரை ஏதோ செய்தாள்…

ஆண் : மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்…
அங்கே வந்து ஒட்டுக்கேட்டாள்…
கனவில் கூச்சல் போட்டாள்…
அழகாய் மனதை பறித்துவிட்டாளே…

ஆண் : செல் செல் அவளிடம் செல்…
என்றே கால்கள் சொல்லுதடா…
சொல் சொல் அவளிடம் சொல்…
என்றே நெஞ்சம் கொல்லுதடா…

BGM

ஆண் : துளி துளி துளி மழையாய் வந்தாளே… ஏ… ஏ…
சுட சுட சுட மறைந்தே போனாளே… ஏ… ஏ…
துளி துளி துளி மழையாய் வந்தாளே… ஏ… ஏ…
சுட சுட சுட மறைந்தே போனாளே… ஏ… ஏ…


Notes : Thuli Thuli Song Lyrics in Tamil. This Song from Paiya (2010). Song Lyrics penned by Na. Muthukumar. துளி துளி பாடல் வரிகள்.


நான் போகிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகே.எஸ். சித்ரா & எஸ். பி. பாலசுப்ரமணியம்ஜேம்ஸ் வசந்தன்நாணயம்

Naan Pogiren Song Lyrics in Tamil


BGM

பெண் : நான் போகிறேன் மேலே மேலே…
பூலோகமே காலின் கீழே…
விண்மீன்களின் கூட்டம் என் மேலே…
பூவாலியின் நீரைப்போலே…
நீ சிந்தினாய் எந்தன் மேலே…
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே…

பெண் : தடுமாறிப்போனேன் அன்றே…
உன்னைப்பார்த்த நேரம்…
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன்…
நெஞ்சின் ஓரம்…
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே…
உள்ளம் கேள்விக்கேட்கும்…
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்…

பெண் : நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…

ஆண் : நான் போகிறேன் மேலே மேலே…
பூலோகமே காலின் கீழே…
விண்மீன்களின் கூட்டம் என் மேலே…
பூவாலியின் நீரைப்போலே…
நீ சிந்தினாய் எந்தன் மேலே…
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே…

ஆண் : தடுமாறிப்போனேன் அன்றே…
உன்னைப்பார்த்த நேரம்…
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன்…
நெஞ்சின் ஓரம்…
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே…
உள்ளம் கேள்விக்கேட்கும்…
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்…

ஆண் : நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…

BGM

பெண் : கண்ணாடி முன்னே நின்றே…
தனியாக நான் பேச…
யாரேனும் ஜன்னல் தாண்டி பார்த்தால் ஐயோ…
உள் பக்கம் தாழ்ப்பாள் போட்டும்…
அறையினுள் நீ வந்தாய்…
கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை அய்யோ…

ஆண் : என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்…
பூ மாலை செய்தேன் வாடுதே…
என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ…
வாராதோ அந்நாளும் இன்றே… ஹா…

பெண் : நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…

ஆண் : ஹோ… ம்ம்… நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…

BGM

ஆண் : என் தூக்கம் வேண்டும் என்றாய்…
தரமாட்டேன் என்றேனே…
கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய்…
வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே…
மெளனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்…

பெண் : அன்றாடம் போகும் பாதையாவும்…
இன்று மாற்றங்கள்…
காணாமல் போனேன் பாதியில்…
நீ வந்து என்னை மீட்டுச்செல்வாய்…
என்று இங்கேயே…
கால்நோக கால்நோக நின்றேன்…

ஆண் : நான் போகிறேன் மேலே மேலே…
பூலோகமே காலின் கீழே…
விண்மீன்களின் கூட்டம் என் மேலே…

பெண் : ஹா… ஆ… பூவாலியின் நீரைப்போலே…
நீ சிந்தினாய் எந்தன் மேலே…
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே…

ஆண் : ஆஆ… தடுமாறிப்போனேன் அன்று…
உன்னைப்பார்த்த நேரம்…

பெண் : அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன்…
நெஞ்சின் ஓரம்…

ஆண் : ஏன் உன்னைப் பார்த்தேன் என்று…
உள்ளம் கேள்விக்கேட்கும்…

பெண் : ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்…
நா நா நா நான் நா…

ஆண் & பெண் : நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…


Notes : Naan Pogiren Song Lyrics in Tamil. This Song from Naanayam (2010). Song Lyrics penned by
Thamarai. நான் போகிறேன் பாடல் வரிகள்.


கண் இரண்டில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஏக்நாத் நரேஷ் ஐய்யர்விஜய் ஆண்டனிஉத்தம புத்திரன்

Kan Irandil Song Lyrics in Tamil


BGM

ஆண் : ‎‏‬கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே…
காரணம் இன்றியே நான் சிரித்தேனே…
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை…
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே…

ஆண் : என் உயிரின் உயிரே…
என் இரவின் நிலவே…
உன் அருகில் வரவே…
நீ தருவாய் வரமே… ஓ… ஓ… ஓ…

ஆண் : ஊருக்குள்ளே கோடி பொண்ணு…
யாரையும் நினைக்கலையே…
உந்தன் முகம் பார்த்த பின்னே…
எதுவும் பிடிக்கலையே…

ஆண் : உன்னுடைய பார்வையிலே…
என் உடம்பு வேகுதடி…
பக்கத்திலே நீ இருந்தா…
என் வயசு நோகுதடி…

ஆண் : ‎‏‬கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே…
காரணம் இன்றியே நான் சிரித்தேனே…
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை…
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே…

BGM

ஆண் : ஓ… ஏதோ ஒண்ணு சொல்ல…
என் நெஞ்சுகுழி தள்ள…
நீ பொத்தி வச்ச ஆசை எல்லாம்…
கண்ணுமுன்னே தள்ளாட…

ஆண் : கண்ணாமூச்சி ஆட்டம்…
என் கண்ணுக்குள்ளே ஆட…
நீ சொல்லும் சொல்லே கேக்காமலே…
உந்தன் உள்ளம் திண்டாட…

ஆண் : உள்ளுக்குள்ளே படபடக்க…
நெஞ்சுக்குள்ளே சிறகடிக்க…
கால் இரண்டும் ரெக்க கட்டி…
மேலே கீழே பரபரக்க…
பட்டுப்பூச்சி பட்டாம் பூச்சி ஆனேனே…

BGM

ஆண் : ம்ம்ம்… ம்ம்ம்… ஹ்ம்ம்… ம்ம்ம்…
ம்ம்ம்… ம்ம்ம்… ஹ்ம்ம்… ம்ம்ம்…

ஆண் : உன் முத்து முத்து பேச்சு…
என் சங்கீதமா ஆச்சு…
உன் சுண்டு விரல் தீண்டையில…
நின்னு போச்சு என் மூச்சு…

ஆண் : பஞ்சு மெத்த மேகம்…
அது செஞ்சு வச்ச தேகம்…
நீ தூரத்தில நின்னா கூட…
பொங்கிடுது என் முகம்…

ஆண் : முட்ட கண்ணு முழி அழகில்…
குத்தி குத்தி கொன்னவளே…
சிக்கி கிட்ட என் மனச…
ஊற வச்சு துவச்சவளே…
ஆத்துக்குள்ள அம்மி கல்லா போறேனே…

ஆண் : ஊருக்குள்ளே கோடி பொண்ணு…
யாரையும் நினைக்கலையே…
உந்தன் முகம் பார்த்த பின்னே…
எதுவும் பிடிக்கலையே…

ஆண் : உன்னுடைய பார்வையிலே…
என் உடம்பு வேகுதடி…
பக்கத்திலே நீ இருந்தா…
என் வயசு நோகுதடி…

ஆண் : ‎‏‬கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே…
காரணம் இன்றியே நான் சிரித்தேனே…
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை…
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே…

ஆண் : என் உயிரின் உயிரே…
என் இரவின் நிலவே…
உன் அருகில் வரவே…
நீ தருவாய் வரமே…


Notes : Kan Irandil Song Lyrics in Tamil. This Song from Uthama Puthiran (2010). Song Lyrics penned by
Eknath. கண் இரண்டில் பாடல் வரிகள்.


இதுவரை இல்லாத

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்ஆண்ட்ரியா ஜெரெமையா & அஜீஷ்யுவன் சங்கர் ராஜாகோவா

Idhu Varai Song Lyrics in Tamil


பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…

BGM

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…
ஹ்ம்ம் ஹ்ம்ம்…

BGM

பெண் : இதுவரை இல்லாத உணர்விது…
இதயத்தில் உண்டான கனவிது…
பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ…

பெண் : இதுவரை இல்லாத உணர்விது…
இதயத்தில் உண்டான கனவிது…
பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ…

பெண் : மூடாமல் மூடி மறைத்தது…
தானாக பூத்து வருகுது…
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே…

பெண் : மூடாமல் மூடி மறைத்தது…
தானாக பூத்து வருகுது…
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே…

BGM

பெண் : இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய…
எப்போது என் உண்மை நிலை அறிய…
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே… ஹேய்…

பெண் : இல்லாமலே நித்தம் வரும் கனவு…
கொல்லாமல் கொள்ள…
சுகம் என்னென்று சொல்ல…
நீ துணை வர வேண்டும்…
நீண்ட வழி என் பயணம்… ஓ… ஓ…

BGM

ஆண் : அங்கே இங்கே வந்து வந்து கலக்கும்…
வெண்மேகமும் வெண்ணிலவும் போல…
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்…

ஆண் : என் நெஞ்சமோ உன் போல அல்ல…
ஏதோ ஓர் மாற்றம்…
நிலை புரியாத தோற்றம்…

பெண் : இது நிரந்தரம் அல்ல…
மாறிவிடும் மன நிலை தான்… ஓஓ…

BGM

ஆண் : மனதிலே முன்னூறு உணர்வுகள்…
மலர்ந்ததே முத்தான உணர்வுகள் …
திறந்ததே தன்னாலே கதவுகள்…
நமக்கு முன்னாலே…

ஆண் : மனதிலே முன்னூறு உணர்வுகள்…
மலர்ந்ததே முத்தான உணர்வுகள்…
திறந்ததே தன்னாலே கதவுகள்…
நமக்கு முன்னாலே…

ஆண் : தேகம் இப்போது உணர்ந்தது…
தென்றல் என் மீது படர்ந்தது…
மோகம் முன்னேறி வருகுது முன்னே…

ஆண் : தேகம் இப்போது உணர்ந்தது…
தென்றல் என் மீது படர்ந்தது…
மோகம் முன்னேறி வருகுது முன்னே…


Notes : Idhu Varai Song Lyrics in Tamil. This Song from Goa (2010). Song Lyrics penned by Gangai Amaran. இதுவரை இல்லாத பாடல் வரிகள்.


உசுரே போகுதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக்ஏ.ஆர்.ரகுமான்ராவணன்

Usure Pogudhey Song Lyrics in Tamil


BGM

ஆண் : இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த…
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச…
அடி தேக்கு மர காடு பெருசுதான்…
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்…

ஆண் : அடி தேக்கு மர காடு பெருசுதான்…
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்…
ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி…
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி…

ஆண் : உசுரே போகுதே உசுரே போகுதே…
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே…
ஓஓ… மாமன் தவிக்கிறேன்…
மடி பிச்ச கேக்குறேன்…
மனச தாடி என் மணி குயிலே…

ஆண் : அக்கரைச் சீமையில் நீ இருந்தும்…
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி…
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்…
அடிக்கடி நாக்கு துடிக்குதடி…

ஆண் : ஒடம்பும் மனசும் தூரம் தூரம்…
ஒட்ட நினைக்கேன் ஆகல…
மனசு சொல்லும் நல்ல சொல்ல…
மாய ஒடம்பு கேக்கல…

ஆண் : தவியா தவிச்சு…
உசுர் தடம் கெட்டு திரியுதடி…
தையிலாங் குருவி…
என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி…

ஆண் : இந்த மம்முத கிறுக்கு தீருமா…
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா…
என் மயக்கத்த தீத்து வெச்சு மன்னிச்சிடுமா…

ஆண் : சந்திரனும் சூரியனும்…
சுத்தி ஒரே கோட்டில் வருகுதே…
சத்தியமும் பத்தியமும்…
இப்ப தலை சுத்தி கெடக்குதே…

ஆண் : உசுரே போகுதே உசுரே போகுதே…
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே…
ஓஓ… மாமன் தவிக்கிறேன்…
மடி பிச்ச கேக்குறேன்…
மனச தாடி என் மணி குயிலே…

ஆண் : அக்கரைச் சீமையில் நீ இருந்தும்…
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி…
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்…
அடிக்கடி நாக்கு துடிக்குதடி…

BGM

ஆண் : இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசுல்ல…
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்துல…
விதி சொல்லி வழி போட்டான் மனசபுள்ள…
விதி விலக்கில்லாத விதியுமில்ல…

ஆண் : எட்ட இருக்கும் சூரியன் பாத்து…
மொட்டு விரிக்குது தாமரை…
தொட்டு விடாத தூரம் இருந்தும்…
சொந்த பந்தமும் போகல…

ஆண் : பாம்பா விழுதா…
ஒரு பாகுபாடு தெரியலையே…
பாம்பா இருந்தும்…
நெஞ்சு பயப்பட நினைக்கலையே…

ஆண் : என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்…
என் கண்ணுல உன் முகம் போகுமா…
நா மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள…

ஆண் : சந்திரனும் சூரியனும்…
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே…
சத்தியமும் பத்தியமும்…
இப்ப தலை சுத்தி கெடக்குதே…

ஆண் : உசுரே போகுதே உசுரே போகுதே…
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே…
ஓஓ… மாமன் தவிக்கிறேன்…
மடி பிச்ச கேக்குறேன்…
மனச தாடி என் மணி குயிலே…

ஆண் : அக்கரைச் சீமையில் நீ இருந்தும்…
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி…
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்…
அடிக்கடி நாக்கு துடிக்குதடி…

BGM

ஆண் : உசுரே போகுதே உசுரே போகுதே…
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே…
ஓஓ… மாமன் தவிக்கிறேன்…
மடி பிச்ச கேக்குறேன்…
மனச தாடி என் மணி குயிலே…

ஆண் : அக்கரைச் சீமையில் நீ இருந்தும்…
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி…
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்…
அடிக்கடி நாக்கு துடிக்குதடி…

BGM


Notes : Usure Pogudhey Song Lyrics in Tamil. This Song from Raavanan (2010). Song Lyrics penned by Vairamuthu. உசுரே போகுதே பாடல் வரிகள்.


ஹோசன்னா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரை & ப்ளேஸிவிஜய் பிரகாஷ், ப்ளேஸி & சூசன்ஏ.ஆர்.ரகுமான்விண்ணைத்தாண்டி வருவாயா

Hosanna Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏன்… இதயம்…
உடைத்தாய் நொறுங்கவே…
என் மறு இதயம் தருவேன்…
நீ உடைக்கவே…

BGM

பெண் : ஹோ ஹோசன்னா…
ஹோசன்னா ஓஓ ஹோ…
ஹோசன்னா ஹோசன்னா….ஓஓ..

ஆண் : அந்த நேரம் அந்தி நேரம்…
கண் பார்த்து கந்தலாகி…
போன நேரம் ஏதோ ஆச்சே…
ஓ வானம் தீண்டி வந்தாச்சு…
அப்பாவின் திட்டு எல்லாம்…
காற்றோடு போயே போச்சே…
ஹோசன்னா என் வாசல்…

தாண்டி போனாளே… ஹோசன்னா…
வேறொன்றும் செய்யாமலே…
நான் ஆடி போகிறேன்
சுக்கு நூறாகிறேன்…
அவள் போன பின்பு…
எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்…

பெண் : ஹோசன்னா…
ஆண் : வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்…
பெண் : ஹோசன்னா…
ஆண் : சாவுக்கும் பக்கம் நின்றேன்…
பெண் : ஹோசன்னா…
ஆண் : ஏனென்றால் காதல் என்பேன்…
பெண் : ஹோசன்னா ஓ…

ஆண் : எவ்ரிபடி வான்னா…
நோ பி லைக் பி லைக் இ…
ரியல்லி வான்னா பி ஹேர்…
வித் யூ இஸ் தட் எனாப் டு…
சே தட் வி ஆர் மேட் பார் ஈச்…
அதர் இஸ் ஆல் தட் இஸ்…
ஹோசன்னா ட்ரு…

ஆண் : ஹோசன்னா பி தேர்…
வென் யூ ஆர் காலிங் ஐ…
வில் பி தேர் ஹோசன்னா…
பி தி லைப் தி ஹோல் லைப்…
ஐ ஷேர் ஐ நெவெர் வான்னா…
பி தி சேம் இட்ஸ் டைம் வி…
ஆர் அரேன்ஜ் ஐ டேக் எ ஸ்டெப்…
யூ டேக் எ ஸ்டெப் அண்ட் மீ…
காலிங் அவுட் டு யூ…

ஆண் : ஹலோ… ஹலோ….
ஹலோ ஓஓ…
ஹோசன்னா…..

பெண் : ஹோ ஹோசன்னா…
ஹோ ஹோ ஹோ ஹோசன்னா…
ஹோஹோ ஹோ ஓ ஓ ஹோ…
ஹோஹோஹோ ஹோஹோ…
ஹோஹோஹோஹோ…

ஆண் : வண்ண வண்ண பட்டு பூச்சி…
பூ தேடி பூ தேடி…
அங்கும் இங்கும் அலைகின்றதே…
ஒ சொட்டு சொட்டாய் தொட்டு…
போக மேகம் ஒன்று மேகம் ஒன்று…
எங்கெங்கோ நகர்கின்றதே…
ஹோசன்னா பட்டு பூச்சி வந்தாச்சா…
ஹோசன்னா மேகம் உன்னை தொட்டாச்சா…
கிளிஞ்சலாகிறேன் நான்
குழந்தை ஆகிறேன் நான்…
உன்னை அள்ளி கையில் வைத்து…
பொத்தி கொள்கிறேன்…

ஆண் : ஹலோ ஹலோ…
ஹலோ ஓஓ ஹோசன்னா…
பெண் : ஹோசன்னா…
ஆண் : என் மீது அன்பு கொள்ள…
பெண் : ஹோசன்னா…
ஆண் : என்னோடு சேர்ந்து செல்ல…
பெண் : ஹோசன்னா…
ஆண் : ஹம்ம் என்று…
சொல்லும் போதும்…
பெண் : ஹோ ஹோசன்னா…

ஆண் : ஏன்… இதயம்…
உடைத்தாய் நொறுங்கவே…
என் மறு இதயம் தருவேன்…
நீ உடைக்கவே…

ஆண் : ஏன்… இதயம்…
உடைத்தாய் நொறுங்கவே…
என் மறு இதயம் தருவேன்…
நீ உடைக்கவே…


Notes : Hosanna Song Lyrics in Tamil. This Song from Vinnaithaandi Varuvaayaa (2010). Song Lyrics penned by Thamarai & Blaaze. ஹோசன்னா பாடல் வரிகள்.


பூக்கள் பூக்கும் தருணம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ரூப் குமார் ரத்தோட், ஜி. வி. பிரகாஷ் குமார், ஹரினி & ஆண்ட்ரியா எரேமியாஜி. வி. பிரகாஷ் குமார்மதராசபட்டினம்

Pookal Pookum Song Lyrics in Tamil


ஆண் : தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…

ஆண் : பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே…
பார்த்ததாரும் இல்லையே…

பெண் : உலரும் காலை பொழுதை…
முழு மதியும் பிரிந்து போவதில்லையே…

ஆண் : நேற்றுவரை நேரம் போகவில்லையே…
உனது அருகே நேரம் போதவில்லையே…

பெண் : எதுவும் பேசவில்லையே…
இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…
இது எதுவோ…

ஆண் : இரவும் விடியவில்லையே…
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே…
பூந்தளிரே… ஓஹோ…

ஆண் : தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…

—BGM—

ஆண் : வார்த்தை தேவையில்லை…
வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே…

பெண் : நேற்று தேவை இல்லை…
நாளை தேவையில்லை…
இன்று இந்த நொடி போதுமே…

ஆண் : வேரின்றி விதையின்றி…
விண் தூவும் மழை இன்றி…
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே…

பெண் : வாள் இன்றி போர் இன்றி…
வலிக்கின்ற யுத்தம் இன்றி…
இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே…

ஆண் : இதயம் முழுதும் இருக்கும்…
இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்…

பெண் : இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்…
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்…

ஆண் : பூந்தளிரே… ஆ… ஆ…

பெண் : ஓ வேர் வுட் ஐ பி…
வித்அவுட் திஸ் ஜாய்…
இன்சைட் ஆப் மீ…
இட் மேக்ஸ் மீ வான்ட்…
டு கம் அலைவ்…
இட் மேக்ஸ் மீ வான்ட் டு ப்ளை…
இன்டு தி ஸ்கை…
ஓ வேர் வுட் ஐ பி…
இப் ஐ டிட்நாட் ஹவ் யூ நெக்ஸ்ட் டு மீ…
ஓ வேர் வுட் ஐ பி ஓ வேர்…
ஓ வேர்… ஓ வேர்…

—BGM—

ஆண் : எந்த மேகம் இது…
எந்தன் வாசல் வந்து…
எங்கும் ஈரமழை தூவுதே…

பெண் : எந்த உறவு இது…
எதுவும் புரியவில்லை…
என்ற போதும் இது நீளுதே…

ஆண் : யார் என்று அறியாமல்…
பேர் கூட தெரியாமல்…
இவளோடு ஒரு சொந்தம் உருவானதே…

பெண் : ஏன் என்று கேட்காமல்…
தடுத்தாலும் நிற்காமல்…
இவன் போகும் வழி எங்கும்…
மனம் போகுதே…

ஆண் : பாதை முடிந்த பிறகும்…
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே…

பெண் : காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்…

பெண் & ஆண் : இலை தொடங்கும்…
நடனம் முடிவதில்லையே…
இது எதுவோ…

ஆண் : தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…

ஆண் : பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனை…
பார்த்ததாரும் இல்லையே…

பெண் : உலரும் காலை பொழுதை…
முழு மதியும் பிரிந்து போவதில்லையே…

ஆண் : நேற்றுவரை நேரம் போகவில்லையே…
உனது அருகே நேரம் போதவில்லையே…

பெண் : எதுவும் பேசவில்லையே…
இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…

ஆண் & பெண் : என்ன புதுமை…
இரவும் விடியவில்லையே…
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே…

ஆண் : அது எதுவோ…

ஆண் : தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…


Notes : Pookal Pookum Song Lyrics in Tamil. This Song from Madrasapattinam (2010). Song Lyrics penned by Na. Muthu Kumar. பூக்கள் பூக்கும் தருணம் பாடல் வரிகள்.


என் காதல் சொல்ல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜா & தன்வியுவன் ஷங்கர் ராஜாபையா

En Kadhal Solla Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் காதல் சொல்ல நேரம் இல்லை…
உன் காதல் சொல்ல தேவை இல்லை…
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை…
உண்மை மறைத்தாலும் மறையாதடி…

ஆண் : உன் கையில் சேர ஏங்கவில்லை…
உன் தோளில் சாய ஆசை இல்லை…
நீ போன பின்பு சோகம் இல்லை…
என்று பொய் சொல்ல தெரியாதடி…

ஆண் : உன் அழகாலே… உன் அழகாலே…
என் வெயில் காலம் அது மழை காலம்…
உன் கனவாலே… உன் கனவாலே…
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்…

ஆண் : என் காதல் சொல்ல நேரம் இல்லை…
உன் காதல் சொல்ல தேவை இல்லை…
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை…
உண்மை மறைத்தாலும் மறையாதடி…

—BGM—

ஆண் : காற்றோடு கை வீசி நீ பேசினால்…
எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே…
வயதோடும் மனதோடும் சொல்லாமலே…
சில எண்ணங்கள் வலை வீசுதே…

ஆண் : காதல் வந்தாலே கண்ணோடுதான்…
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ…
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி…
இந்த விளையாட்டை ரசித்தேனடி…

ஆண் : உன் விழியாலே… உன் விழியாலே…
என் வழி மாறும் கண் தடுமாறும்…
அடி இது ஏதோ ஒரு புது ஏக்கம்…
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்…

—BGM—

ஆண் : ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி…
உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே…
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி…
இந்த நெருக்கங்கள் தொடரட்டுமே…

ஆண் : யாரும் பார்க்காமல் எனை பார்க்கிறேன்…
என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்…
சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது…
உன்னை கண்டாலே குதிகின்றதே…

ஆண் : என் அதிகாலை… என் அதிகாலை…
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்…
என் அந்தி மாலை என் அந்தி மாலை…
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்…

ஆண் : என் காதல் சொல்ல நேரம் இல்லை…
உன் காதல் சொல்ல தேவை இல்லை…
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை…
உண்மை மறைத்தாலும் மறையாதடி…

ஆண் : உன் கையில் சேர ஏங்கவில்லை…
உன் தோளில் சாய ஆசை இல்லை…
நீ போன பின்பு சோகம் இல்லை…
என்று பொய் சொல்ல தெரியாதடி…


Notes : En Kadhal Solla Song Lyrics in Tamil. This Song from Paiyaa (2010). Song Lyrics penned by Na. Muthu Kumar. என் காதல் சொல்ல பாடல் வரிகள்.