பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | ஆண்ட்ரியா ஜெரெமையா & அஜீஷ் | யுவன் சங்கர் ராஜா | கோவா |
Idhu Varai Song Lyrics in Tamil
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…
—BGM—
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…
ஹ்ம்ம் ஹ்ம்ம்…
—BGM—
பெண் : இதுவரை இல்லாத உணர்விது…
இதயத்தில் உண்டான கனவிது…
பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ…
பெண் : இதுவரை இல்லாத உணர்விது…
இதயத்தில் உண்டான கனவிது…
பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ…
பெண் : மூடாமல் மூடி மறைத்தது…
தானாக பூத்து வருகுது…
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே…
பெண் : மூடாமல் மூடி மறைத்தது…
தானாக பூத்து வருகுது…
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே…
—BGM—
பெண் : இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய…
எப்போது என் உண்மை நிலை அறிய…
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே… ஹேய்…
பெண் : இல்லாமலே நித்தம் வரும் கனவு…
கொல்லாமல் கொள்ள…
சுகம் என்னென்று சொல்ல…
நீ துணை வர வேண்டும்…
நீண்ட வழி என் பயணம்… ஓ… ஓ…
—BGM—
ஆண் : அங்கே இங்கே வந்து வந்து கலக்கும்…
வெண்மேகமும் வெண்ணிலவும் போல…
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்…
ஆண் : என் நெஞ்சமோ உன் போல அல்ல…
ஏதோ ஓர் மாற்றம்…
நிலை புரியாத தோற்றம்…
பெண் : இது நிரந்தரம் அல்ல…
மாறிவிடும் மன நிலை தான்… ஓஓ…
—BGM—
ஆண் : மனதிலே முன்னூறு உணர்வுகள்…
மலர்ந்ததே முத்தான உணர்வுகள் …
திறந்ததே தன்னாலே கதவுகள்…
நமக்கு முன்னாலே…
ஆண் : மனதிலே முன்னூறு உணர்வுகள்…
மலர்ந்ததே முத்தான உணர்வுகள்…
திறந்ததே தன்னாலே கதவுகள்…
நமக்கு முன்னாலே…
ஆண் : தேகம் இப்போது உணர்ந்தது…
தென்றல் என் மீது படர்ந்தது…
மோகம் முன்னேறி வருகுது முன்னே…
ஆண் : தேகம் இப்போது உணர்ந்தது…
தென்றல் என் மீது படர்ந்தது…
மோகம் முன்னேறி வருகுது முன்னே…
Notes : Idhu Varai Song Lyrics in Tamil. This Song from Goa (2010). Song Lyrics penned by Gangai Amaran. இதுவரை இல்லாத பாடல் வரிகள்.