இறகை போலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதியுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாநான் மகான் அல்ல

Iragai Poley Song Lyrics in Tamil


BGM

ஆண் : இறகை போலே அலைகிறேனே…
உந்தன் பேச்சை கேட்கையிலே…
குழந்தை போலே தவழ்கிறேனே…
உந்தன் பார்வை தீண்டயிலே…

ஆண் : தொலையாமல் தொலைந்தேனே…
உன் கைகள் என்னை தொட்டதும்…
கரையாமல் கரைந்தேனே…
உன் மூச்சு காற்று பட்டதும்…

ஆண் : அநியாய காதல் வந்ததே…
அடங்காத ஆசை தந்ததே…
எனக்குள்ளே ஏதோ…
மின்னல் போலே தொட்டு சென்றதே…

ஆண் : கண்ணோரம் காதல் வந்தால்…
கண்ணீரும் தித்திப்பாகும்…
வேறுஒன்றும் தேவையில்லை…
நீ மட்டும் போதும் போதும்…

ஆண் : என்னோடு நீயும் வந்தால்…
எல்லாமே கையில் சேரும்…
வேறுஒன்றும் தேவையில்லை…
நீ மட்டும் போதும் போதும்… ஓ… ஓ… ஓ…

BGM

ஆண் : கூட வந்து நீ நிற்பதும்…
கூடுவிட்டு நான் செல்வதும்…
தொடருதே தொடருதே நாடகம்…

ஆண் : பாதி மட்டுமே சொல்வதும்…
மீதி நெஞ்சிலே என்பதும்…
புரியுதே புரியுதே காரணம்…

ஆண் : நேரங்கள் தீருதே…
வேகங்கள் கூடுதே…
பூவே உன் கண்ணுக்குள்ளே…
பூமி பந்து சுத்துதே…

ஆண் : கண்ணோரம் காதல் வந்தால்…
கண்ணீரும் தித்திப்பாகும்…
வேறுஒன்றும் தேவையில்லை…
நீ மட்டும் போதும் போதும்…

ஆண் : என்னோடு நீயும் வந்தால்…
எல்லாமே கையில் சேரும்…
வேறுஒன்றும் தேவையில்லை…
நீ மட்டும் போதும் போதும்… ஓ… ஓ… ஓ…

BGM

ஆண் : ஹே… என்னானதோ ஏதானதோ…
இல்லாமல் போச்சே தூக்கமும்…
கண்ணே உன்னை காணாமல்…
நான் இல்லை… ஓஓஓ…

ஆண் : என்மீதிலே உன் வாசனை…
எப்போதும் வீச பார்கிறேன்…
அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை… ஓஓஓ…

ஆண் : நீ என்னை காண்பதே…
வானவில் போன்றதே…
துாரத்தில் உன்னை கண்டால்…
தூறல் நெஞ்சில் சிந்துதே… ஓ… ஓ… ஓ…

BGM

ஆண் : கண்ணோரம் காதல் வந்தால்…
கண்ணீரும் தித்திப்பாகும்…
வேறுஒன்றும் தேவையில்லை…
நீ மட்டும் போதும் போதும்…

ஆண் : என்னோடு நீயும் வந்தால்…
எல்லாமே கையில் சேரும்…
வேறுஒன்றும் தேவையில்லை…
நீ மட்டும் போதும் போதும்… ஓ… ஓ… ஓ…

BGM


Notes : Iragai Poley Song Lyrics in Tamil. This Song from Naan Mahaan Alla (2010). Song Lyrics penned by Yugabharathi. இறகை போலே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top