பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | ஹரிசரண் | யுவன் ஷங்கர் ராஜா | நான் மகான் அல்ல |
Va Va Nilava Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வா வா நிலவை புடிச்சுத் தரவா…
வெள்ளி பொம்மையாக்கி தரவா…
ஓஹோ விடியும் போதுதான் மறைஞ்சு போகுமே…
கட்டிப்போடு மெதுவா…
ஆண் : வா வா நிலவை புடிச்சுத் தரவா…
வெள்ளி பொம்மையாக்கி தரவா…
ஓஹோ… விடியும் போதுதான் மறைஞ்சு போகுமே…
கட்டிப்போடு மெதுவா…
ஆண் : வானத்தில் ஏறி ஏணி கட்டு…
மேகத்தை அள்ளி மால கட்டு…
குழு : வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு…
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு…
—BGM—
ஆண் : வா வா நிலவை புடிச்சுத் தரவா…
வெள்ளி பொம்மையாக்கி தரவா…
ஓஹோ… விடியும் போதுதான் மறைஞ்சு போகுமே…
கட்டிப்போடு மெதுவா…
—BGM—
ஆண் : கவலை நம்மை சில நேரம்…
கூரு போட்டு துண்டாக்கும்…
தீயினை தீண்டி வாழும் போதே…
தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்…
ஆண் : கடலை சேரும் நதி யாவும்…
தன்னை தொலைத்து உப்பாகும்…
ஆயினும் கூட மழையாய் மாறி…
மீண்டும் அதுவே முத்தாகும்…
ஆண் : ஒரு வட்டம்போலே வாழ்வாகும்…
வாசல்கள் இல்லா கனவாகும்…
அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை…
புரிந்தால் துயரம் இல்லை…
குழு : வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு…
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு…
—BGM—
ஆண் : வா வா நிலவை புடிச்சுத் தரவா…
வெள்ளி பொம்மையாக்கி தரவா…
ஓஹோ… விடியும் போதுதான் மறைஞ்சு போகுமே…
கட்டிப்போடு மெதுவா…
—BGM—
ஆண் : ஆஹா… இரவை பார்த்து மிரளாதே…
இதயம் வேர்த்து துவளாதே…
இரவுகள் மட்டும் இல்லை என்றால்…
நிலவின் அழகு தெரியாதே…
ஆண் : கனவில் நீயும் வாழாதே…
கலையும் போது வருந்தாதே…
கனவில் பூக்கும் பூக்களை எல்லாம்…
கைகளில் பறித்திட முடியாதே…
ஆண் : அந்த வானம் போலே உறவாகும்…
மேகங்கள் தினமும் வரும் போகும்…
அட வந்தது போனால்…
மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும்…
குழு : வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு…
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு…
—BGM—
Notes : Va Va Nilava Song Lyrics in Tamil. This Song from Naan Mahaan Alla (2010). Song Lyrics penned by Na Muthukumar. வா வா நிலவை பாடல் வரிகள்.