Category Archives: 2004 Movies

2004 Movies

ஒரே ஒரு பிறவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஹரிஹரன்யுவன் ஷங்கர் ராஜாபேரழகன்

Ore Oru Piravi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம்…
அதில் குறை வேண்டாமே…
நமக்குள் உள்ள ஆசைகள் நூறு…
முடிந்த வரையில் வாழ்வோமே…

ஆண் : கனவு கானும் வாழ்க்கை…
இனியும் வேண்டாம் நிஜங்களே மலரும்…
கண்கள் வந்த பின்னே…
காதல் நெஞ்சம் எப்படி உணரும்…

ஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம்…
அதில் குறை வேண்டாமே…
நமக்குள் உள்ள ஆசைகள் நூறு…
முடிந்த வரையில் வாழ்வோமே…

BGM

ஆண் : மனம் போலதான் அவள் வாழவே…
தினம்தோறும் இவன் ஏங்குவான்…
அவள் ஆசைகள் நிஜம் ஆகுமோ…
இவன் ஆசைகள் கனவாகுமோ…

ஆண் : பூமி போல ஓய்வின்றி…
சுற்றி சுற்றி வாரனே…
சாமியெல்லாம் தேடி தேடி…
உதவி கேட்டு போரானே…

ஆண் : இந்த வெள்ளை மனிதன்தான்…
விடியல் காண்பானோ நாளை…

ஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம்…
அதில் குறை வேண்டாமே…
நமக்குள் உள்ள ஆசைகள் நூறு…
முடிந்த வரையில் வாழ்வோமே…

ஆண் : கனவு கானும் வாழ்க்கை…
இனியும் வேண்டாம் நிஜங்களே மலரும்…
கண்கள் வந்த பின்னே…
காதல் நெஞ்சம் எப்படி உணரும்…

ஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம்…
அதில் குறை வேண்டாமே…
நமக்குள் உள்ள ஆசைகள் நூறு…
முடிந்த வரையில் வாழ்வோமே…


Notes : Ore Oru Piravi Song Lyrics in Tamil. This Song from Perazhagan (2004). Song Lyrics penned by Snehan. ஒரே ஒரு பிறவி பாடல் வரிகள்.


சூடாமணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ரஞ்சித் & பாப் ஷாலினிஹாரிஸ் ஜெயராஜ்அருள்

Soodamani Song Lyrics in Tamil


குழு : சூடாமணி மச்சினியே…

BGM

ஆண் : சூடாமணி ரொம்ப சூடா கொதிக்கிற…
கோவ பட வேண்டாம் ரொம்ப சிவக்கிற…

BGM

ஆண் : சூடாமணி ரொம்ப சூடா கொதிக்கிற…
கோவ பட வேண்டாம் ரொம்ப சிவக்கிற…

பெண் : சண்டியரை போலதானே மிரட்டுற…
என் கன்னத்த நீ மீசையாலே கிழிக்கிற…

ஆண் : கோழி பிரியாணி…
நான் வாங்கி தாரேன் வா நீ…
மூக்கு முட்ட தின்னு புட்டு தூங்காதடி…

பெண் : ஆசையா ஆசையா விடிஞ்சதும் பூசையா…
ஆண் : செல்லமா செல்லமா சம்மதம் சொல்லம்மா…

BGM

குழு : சூடாமணி… ஹோஜா ஹோஜா…
சூடாமணி மச்சினியே…

ஆண் : வெள்ளை குதிரையில ஜோரா நான் வருவேன்…
கொங்கு நாட்டு பெண்ணே உன்னை தூக்கி கிட்டு போவேன்…
கெஞ்சி கெஞ்சி கேட்டா கூட உன்னை விடமாட்டேன்…

பெண் : திமிரா அலையுறியே வீணா கொலையுறியே…
கண்ணாமூச்சி ஆட்டத்திலும் நானும் தோற்க மாட்டேன்…
கொஞ்சி கொஞ்சி கேட்டா கூட என்னை தர மாட்டேன்…

ஆண் : சித்தெறும்பு போல முத்தம் கொடுத்தா…
செங்கரும்பு நீதான் என்ன பண்ணுவ…

பெண் : வித்தை எல்லாம் நீதான் காட்ட பாக்குற…
வீணா வம்பு செஞ்சு நோட்டம் பாக்குற…

ஆண் : நெருங்கவா நெருங்கவா உன்னை நான் நெருங்கவா…
பெண் : அடக்கவா அடக்கவா உன்னை நான் அடக்கவா…

ஆண் : ஆத்தா… சூடாமணி ரொம்ப சூடா கொதிக்கிற…
ஐயோ… கோவ பட வேண்டாம் ரொம்ப சிவக்கிற…

பெண் : சண்டியரை போலதானே மிரட்டுற…
என் கன்னத்த நீ மீசையாலே கிழிக்கிற…

BGM

குழு : சூடாமணி சூடாமணி…
அடி சுட்டு புட்ட வெத்தலை நீ…

குழு : தோடா ஹையோடா…
தோடா ஹையோடா…

பெண் : ஆசை அடங்கலையா மீசை மடங்கலையா…
ஆம்பளைக்கு எப்போதுமே கையு கொஞ்சம் நீளம்…
குழு : ஓ யே…

பெண் : பக்கத்துல பொண்ணு இருந்தா…
சீண்டி பார்க்க தோணும்…
குழு : ஆஹா…

ஆண் : பழச கொடையிறியே மனச கெடையிறியே…
பொம்பளைக்கு எப்பவுமே வாயி கொஞ்சம் நீளம்…
குழு : ஆமா…

ஆண் : ஆம்பளைய கண்டா போதும்…
ஜாடை பேச தோணும்…

பெண் : வீட்டுக்காரி நானும் அடம் புடிச்சா…
வீட்டுக்காரன் நீயும் என்ன பண்ணுவ…

ஆண் : தப்பு செஞ்சா கூட கொஞ்சம் ரசிப்பேன்…
கொஞ்சம் நீயும் அசந்தா காத கடிப்பேன்…

பெண் : மொரடனா இருக்கிற திருட தான் பாக்குற…
ஆண் : கொஞ்சினா மிஞ்சுற மிஞ்சினா கெஞ்சுற…

ஆண் : சூடாமணி ரொம்ப சூடா…
கோவ பட வேணாம் வேணாம்…

ஆண் : சூடாமணி ரொம்ப சூடா கொதிக்கிற…
குழு : அயே மச்சான் மச்சான்…
ஆண் : கோவ பட வேண்டாம் ரொம்ப சிவக்கிற…
குழு : அயே மச்சான் மச்சான்…

பெண் : சண்டியரை போல தானே மிரட்டுற…
குழு : அயே மச்சினிச்சி…
பெண் : என் கன்னத்த நீ மீசையாலே கிழிக்கிற…
குழு : அயே மச்சினிச்சி…

ஆண் : சூட கோழி பிரியாணி…
நான் வாங்கி தாரேன் வா நீ…
மூக்கு முட்ட தின்னு புட்டு தூங்காதடி…

பெண் : ஆசையா ஆசையா விடிஞ்சதும் பூசையா…
ஆண் : செல்லமா செல்லமா சம்மதம் செப்பம்மா…


Notes : Soodamani Song Lyrics in Tamil. This Song from Arul (2004). Song Lyrics penned by Snehan. சூடாமணி பாடல் வரிகள்.


மனமே நலமா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்பரத்வாஜ்பரத்வாஜ்ஆட்டோகிராப்

Maname Nalama Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனமே நலமா…
உந்தன் மாற்றங்கள் நிஜமா…
புது புது விதமா…
ஏதோ வந்தது சுகமா…

ஆண் : நீ சொல்லு நடந்தது என்ன…
எனை மாற்றி போனது என்ன…
அவளை நான் கண்டுக்கொண்டேன்…
அங்கே நான் தொலைந்து போனேன்…

ஆண் : மனமே நலமா…
உந்தன் மாற்றங்கள் நிஜமா…
புது புது விதமா…
ஏதோ வந்தது சுகமா…

ஆண் : நீ சொல்லு நடந்தது என்ன…
எனை மாற்றி போனது என்ன…
அவளை நான் கண்டுக்கொண்டேன்…
அங்கே நான் தொலைந்து போனேன்…


Notes : Maname Nalama Song Lyrics in Tamil. This Song from Autograph (2004). Song Lyrics penned by Snehan. மனமே நலமா பாடல் வரிகள்.


ஞாபகம் வருதே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சேரன்பரத்வாஜ்பரத்வாஜ்ஆட்டோகிராப்

Gyabagam Varuthe Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த…
நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே…

BGM

ஆண் : ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே…
பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த…
நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே…

ஆண் : ஏதோ ஒன்றை தொலைத்தது போலே…
ஏதோ மீண்டும் பிறந்தது போலே…
தாயே என்னை வளா்த்தது போலே…
கண்களின் ஓரம் கண்ணீா் வருதே…

BGM

ஆண் : ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே…
முதல் முதல் பிடித்த தட்டாம்பூச்சி…
முதல் முதல் திருடிய திருவிழா வாட்சு…

ஆண் : முதல் முதல் குடித்த மலபாா் பீடி…
முதல் முதல் சோ்த்த உண்டியல் காசு…
முதல் முதல் பாா்த்த டூாின் சினிமா…
முதல் முதல் ஜெயித்த சடுகுடு போட்டி…

ஆண் : முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு…
முதல் முதல் ஆக்கிய கூட்டாஞ் சோறு…
முதல் முதல் போன சிக்கு புக்கு பயணம்…
முதல் முதல் அழுத சிநேகிதன் மரணம்…

BGM

ஆண் : ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே…
முதல் முதலாக பழகிய நீச்சல்…
முதல் முதலாக ஓட்டிய சைக்கிள்…
முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சா்…

BGM

ஆண் : முதல் முதலாக அப்பா அடித்தது…
முதல் முதலாக சாமிக்குப் பயந்தது…
முதல் முதலாக வானவில் ரசித்தது…

ஆண் : முதல் முதலாக அரும்பிய மீசை…
முதல் முதலாக விரும்பிய இதயம்…
முதல் முதலாக எழுதிய கடிதம்…
முதல் முதலாக வாங்கிய முத்தம்…

ஆண் : ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே…


Notes : Gyabagam Varuthe Song Lyrics in Tamil. This Song from Autograph (2004). Song Lyrics penned by Cheran. ஞாபகம் வருதே பாடல் வரிகள்.


பத்து விரல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஹாரிஸ் ஜெயராஜ்அருள்

Pathu Viral Song Lyrics in Tamil


BGM

பெண் : பத்து விரல் உனக்கு…
பத்து விரல் உனக்கு…
ஒத்த விரல் மட்டும்தான் தித்திக்குது எதுக்கு…

ஆண் : ஒன்ன தொட்ட விரல் தான் தித்திக்குது எனக்கு…
மத்த விரல் மொத்தமா பட்டினியா கெடக்கு…

பெண் : மூங்கில் காட்டு வண்டே…
என் மூளை கொடையும் நண்டே…
உன் பத்து விரலின் பசியை போக்கும்…
பந்தி நான்தானா…

ஆண் : அடி கொல்லைகார கண்ணே…
சிறு கொலைகள் செய்யும் பெண்ணே…
அட எட்டி போனா என்ன…
உன்ன விட்டு செல்வேனா… ஓஓ…

பெண் : திமிர் கொண்ட அழக மறைப்பதென் கடமை…
திரை விளக்காமல் பறிப்பது உன் திறம…

ஆண் : அழக மறைச்சா அது கொடுமை… ஓ…

பெண் : பத்து விரல் உனக்கு…
பத்து விரல் உனக்கு…
ஒத்த விரல் மட்டும்தான் தித்திக்குது எதுக்கு…

ஆண் : ஒன்ன தொட்ட விரல்தான் தித்திக்குது எனக்கு…
மத்த விரல் மொத்தமா பட்டினியா கெடக்கு…

BGM

பெண் : மனச கிள்ளும் மனுஷா…
அட மன்மத பாஷ தெலுசா…

பெண் : உடைகளை துளைக்கும் பார்வைகளாலே…
உள்ளுயிர் வரைக்கும் தடவுகின்றாய்…
விரல்கள் செய்யும் வேலைகள் எல்லாம்…
விழிகளாலே நடத்துகின்றாய்…

ஆண் : உன் வயச பாத்தா கொஞ்சம்தானே…
ஆனா வயச மீறிய நெஞ்சம்தானே…

பெண் : பத்து விரல் உனக்கு…
பத்து விரல் உனக்கு…
ஒத்த விரல் மட்டும்தான் தித்திக்குது எதுக்கு…

ஆண் : ஒன்ன தொட்ட விரல்தான் தித்திக்குது எனக்கு…
மத்த விரல் மொத்தமா பட்டினியா கெடக்கு…

BGM

பெண் : வெட்கம் காணோம் ஐயா…
அதை திருடி போனவன் நீயா…

பெண் : எதுவும் ஒட்டாத பாதரசம் போல…
இதுவரை இருந்தேன் தனிமையில…
ஓசையில்லாத பிம்பத்தை போல…
விழுந்து விட்டாயே மனசுக்குள்ள…

ஆண் : இன்னும் இன்னும் ஆழம் போவேன்…
உன் இதயத்துக்குள் புதையல் எடுப்பேன்…

பெண் : பத்து விரல் உனக்கு…
ஆண் : பத்து விரல் எனக்கு…
பெண் : ஒத்த விரல் மட்டும்தான்…
ஆண் : தித்திக்குது எதுக்கு…

ஆண் : ஒன்ன தொட்ட விரல்தான் தித்திக்குது எனக்கு…
மத்த விரல் மொத்தமா பட்டினியா கெடக்கு…

பெண் : மூங்கில் காட்டு வண்டே…
என் மூளை கொடையும் நண்டே…
உன் பத்து விரலின் பசியை போக்கும்…
பந்தி நான்தானா…

ஆண் : அடி கொல்லைகார கண்ணே…
சிறு கொலைகள் செய்யும் பெண்ணே…
அட எட்டி போனா என்ன…
உன்ன விட்டு செல்வேனா… ஓஓ…

ஆண் : திமிர் கொண்ட அழக மறைப்பது உன் கடமை…
திரை விளக்காமல் பறிப்பது என் திறம…

ஆண் : அழக மறைச்சா அது கொடுமை… ஹோய் ஹோய்…

BGM


Notes : Pathu Viral Song Lyrics in Tamil. This Song from Arul (2004). Song Lyrics penned by Vairamuthu. பத்து விரல் பாடல் வரிகள்.


ஒரு அழகான

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசூர்யா, சவிதா ரெட்டி, கங்கா சித்தராசு & மாதங்கியுவன் ஷங்கர் ராஜாபேரழகன்

Oru Azhagana Song Lyrics in Tamil


ஆண் : ஒரு அழகான பொண்ணிருந்தா…
அதைவிட ஒரு அழகான பையன் இருந்தான்…
அவங்க ஒரு நாள் சந்திச்சாங்க…
பெண் : என்னது…

ஆண் : அவளுக்கு தமிழே வரலடி…
பெண் : போடா…
ஆண் : ஏ ஓகே ஓகே…
அவனுக்கு அவள புடுச்சது…
ஆனா சொல்லல ஏன்னு தெரியல…
பெண் : என்ன…
ஆண் : ஒண்ணுல்ல…
பெண் : சொல்லு…

ஆண் : அந்த பொண்ணு பேசுவா பேசுவா…
பேசிக்ககிட்டே இருப்பா…
ஆனா அதுதான் அவனுக்கு பிடிச்ச ராகம்…
அவளுக்கு தூரத்துல இருந்தாலும் தெரியாது…
பரவா இல்ல…

ஆண் : தன்னோட உலகத்தையே…
அவளோட பெரிய பெரிய கண்ணுல பார்த்தான்…
அவ கையெழுத்து கிறுக்கல்…
ஆனா அந்த எழுத்துக்கள் மேல பைத்தியமா இருந்தான்…

ஆண் : அவள் நடந்தா கொஞ்சம் கசமுசானு இருக்கும்…
ஆனா அவ முடி அசையிறத பார்த்தா…
அந்த காத்துக்கே பொறாமை வரும்…

பெண் : ஏய் நிறுத்து…
ஆண் : யூ நோ ப்ரியா…
ஹி ஜஸ்ட் லவ்டு எவரிதிங்

ஆண் : அபௌட் ஹெர் அவ முடி அவ நெத்தி…
அவ கண்ணு அவ மூக்கு அவ கன்னம்…
அவ உதடு அவ கழுத்து அவ…

பெண் : நனனா நானா நானா னா…
நானா னா நானா நானா னா…
நனனா நானா நானா னா…
நானா னா நானா நானா னா…

BGM

ஆண் : அவனைப் பத்தின நெறைய விஷயங்கள்…
அவளுக்கு பிடிக்கல…
அவன் பேசுற விதம்…
சுமோக்கிங் தி வே ஹி பிகேவ்ஸ்…
இப்படி நெறையா…
கிண்டல் பண்ணியிருக்கான்…
அழ வச்சிருக்கான்…
அவன யாருக்கும் பிடிக்கல…

ஆண் : ஹி வாஸ் ரியலி பேட் ப்ரியா…
ஆனா தனியா எப்பவும் தனியா இருந்தான்…

ஆண் : அவளுக்கு அவன புடிச்சது ப்ரியா…
ஐ டோன்ட் நோ ஒய்…
ப்ரியா ஏன் ப்ரியா நீ ஏன் என்ன…
என்ன கல்யாணம் பண்ணிக்கோ…
எப்பவும் உன் கூடவே இருக்கணும்…

ஆண் : ஒன்ன காதலிக்கனும்…
ஒன்ன தொல்ல பண்ணனும்…
உனக்காக வீட்டுக்கு வரனும்…
ஒன் மடியில தூங்கனும்…

ஆண் : இதே மாதிரி எனக்கு ரெண்டு…
குட்டி ப்ரியா வேணும்…
ஏய் உன்ன பார்த்துக்கிட்டே…
எனக்கு வயசாயிரனும்…

ஆண் : நான் உன்னோடதான் சாகனும்…
அப்படி இல்லையினா சாகனும்…
இங்க இப்போ…

{ பெண் : நனனா நானா நானா னா…
நானா னா நானா நானா னா…
நனனா நானா நானா னா…
நானா னா நானா நானா னா… } * (2)

BGM


Notes : Oru Azhagana Song Lyrics in Tamil. This Song from Perazhagan (2004). Song Lyrics penned by . ஒரு அழகான பாடல் வரிகள்.


காற்று என்பதா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஷங்கர் மகாதேவன் & மாதங்கியுவன் ஷங்கர் ராஜாபேரழகன்

Kaatru Enbathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காற்று என்பதா… காற்று என்பதா…
காற்று என்பதா… காற்று என்பதா …

BGM

ஆண் : காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பதா சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்…

ஆண் & பெண் : காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பதா சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்…

பெண் : இது கொல்லாமல் கொல்கின்ற விஷம் என்பதா…
இது அமிலத்தில் உருவான அலை என்பதா…
இது பூவல்ல புயல் என்பதா… ஹோஹோஹோ…

{ ஆண் : காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பதா சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்… } * (2)

BGM

பெண் : சுற்றாமல் பூமி நின்றாலுமே…
என் நினைவுகள் உன்னை சுற்றி வரும்…

ஆண் : மேகங்கள் அமிலம் பெய்தாலுமே…
என் கண் இமை உனக்கு குடையாய் வரும்…

பெண் : என் கிளைகளில் தீயை வைத்து…
ஏன் வேர்களில் நீர் எடுத்தாய்…

ஆண் : நீ சிரிக்கின்ற ஓசைகள் உள்ளே…
என் நாடி துடிக்குதடி…

{ ஆண் : காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பதா சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்… } * (2)

BGM

பெண் : காற்றோடு காற்றாய் நீ மாறினால்…
என் சுவாசங்கள் உன்னை சிறை வைக்குமே…
நீரோடு நீராய் நீ ஓடினால்…
என் தாகங்கள் உன்னை கை பற்றுமே…

ஆண் : ஏய் அழகிய சமவெளி நிலமே…
பெண் : ஹேய்…
ஆண் : என் மழையினை ஏற்பாயோ…
பெண் : ஓஹோ…

ஆண் : போ வெளியே என்றே தள்ளி…
பொய் கோபம் பூப்பாயோ…

{ ஆண் : காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பத சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்… } * (2)

பெண் : இது கொல்லாமல் கொல்கின்ற விஷம் என்பதா…
இது அமிலத்தில் உருவான அலை என்பதா…
இது பூவல்ல புயல் என்பதா… ஹாஹாஹா…

{ ஆண் : காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பத சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்… } * (2)

BGM


Notes : Kaatru Enbathu Song Lyrics in Tamil. This Song from Perazhagan (2004). Song Lyrics penned by Pa. Vijay. காற்று என்பதா பாடல் வரிகள்.


நிஜமா நிஜமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கே.கே & ஸ்ரேயா கோஷல்யுவன் ஷங்கர் ராஜாபோஸ்

Nijama Nijama Song Lyrics in Tamil


ஆண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ வந்த நொடி நிஜமா…

BGM

ஆண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ வந்த நொடி நிஜமா…

பெண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ நான் ஆனால் நிஜமா…

ஆண் : ஒரு மரங்கொத்தி பறவை…
மனம் கொத்தி போகுதே…
மழை நின்ற போதும்…
மரக்கிளை தூறுதே…

ஆண் : பூட்டி வைத்த நெஞ்சில் பூப்பூக்குதே…
பார்க்கும் போதே கண்கள் பறிப்போகுதே…

பெண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ வந்த நொடி நிஜமா…

ஆண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ நான் ஆனால் நிஜமா…

BGM

ஆண் : நேற்று இன்று நாளை என்பதென்ன…
காலம் உறைந்து போனது…
நெற்றி பொட்டில் கோடி மின்னல் வீச…
கடவுள் ஆக தோணுதே…

பெண் : வேற்று கிரகம் போலே இன்று எனக்கு…
எந்தன் வீடு ஆனதே…
வெற்று கோபம் என்ன அர்த்தம் மாறி…
வெட்கம் ஆகி போனதே…

ஆண் : வண்ணத்து பூச்சி சிறகால் மோதியே…
வானமும் இடிந்தால் அதுதான் காதலே…

பெண் : இடி மின்னல் மழை இந்த மூன்றுமே
இதயத்தில் தந்தால் அது காதலே

ஆண் & பெண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ நாம் நிஜமா…

BGM

ஆண் : கோடை வாடை இளவேனில் காலம்…
கார்காலம் நான்குமே…
காதல் காலம் எந்த காலம் என்று…
உண்மை சொல்ல கூடுமோ…

பெண் : கிழக்கு மேற்கு வடக்கோடு தெற்கு…
திசைகள் நான்கு யாவுமே…
காதல் எந்த திசையில் செல்லும் என்று…
கண் சொல்ல கூடுமோ…

ஆண் : கருவறை எனக்கும் இருந்தால் முல்லையே…
கடைசி வரைக்கும் சுமப்பேன் உனையே…

பெண் : உயிர் அறை ஒன்றை உருவாக்கிய…
என் உயிர் உள்ள வரை என்னை பூட்டுவேன்…

ஆண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ வந்த நொடி நிஜமா…


Notes : Nijama Nijama Song Lyrics in Tamil. This Song from Bose (2004). Song Lyrics penned by Na. MuthuKumar. நிஜமா நிஜமா பாடல் வரிகள்.


வைத்த கண்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்மது பாலகிருஷ்ணன் & ஸ்ரீவர்த்தினியுவன் ஷங்கர் ராஜாபோஸ்

Vaitha Kann Song Lyrics in Tamil


BGM

குழு : வைத்த கண் வைத்தது தானோடி…
அப்படியே நிற்கின்றாய்…
தைத்த முள் தைத்தது தானோடி…
சொக்கியே போகின்றாய்…

குழு : அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க…
அவசரம் நீயும் பூப்பூக்க…
யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே…

குழு : வைத்த கண் வைத்தது தானோடி…
அப்படியே நிற்கின்றாய்…
தைத்த முள் தைத்தது தானோடி…
சொக்கியே போகின்றாய்…

குழு : அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க…
அவசரம் நீயும் பூப்பூக்க…
யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே…

BGM

பெண் : ஹா… யாரோ எந்தன் மனசின் நடுவிலே…
ரோஜா தோட்டம் வைத்தது…
உற்று பார்த்தேன் அந்த பகுதியில்…
உந்தன் கால் தடம்…

ஆண் : ஆஆ… யாரோ எந்தன் உயிரின் அறையிலே…
கவிதை புத்தகம் படித்தது…
தேடி பார்த்தேன் அந்த இடத்திலே…
உந்தன் வாசனை…

பெண் : உன் பேரழகு கொஞ்சம்…
உன் பேச்சழகு கொஞ்சம்…
என் பருவத்துக்குள் வந்து…
எனை பஸ்பம் செய்யுதடா…

ஆண் : உன் கண்ணழகு கொஞ்சம்…
உன் முன்னழகு கொஞ்சம்…
என் இரவுக்குள்ளே வந்து…
துளியாய் இறங்கி கடலாக மாறியதே…

பெண் : தந்திரா கண்களில் என்னென்ன…
தந்திரம் செய்தாயோ…
சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள்…
பத்திரம் ஆனாயோ…

BGM

பெண் : இந்த சிரிப்பு இந்த சிரிப்புதான்…
என்னை கொள்ளை கொண்டது…
இந்த கண்கள் இந்த கண்கள்தான்…
கலகம் செய்தது…

ஆண் : இந்த சிணுங்கள் இந்த சிணுங்கள்தான்…
எந்தன் அணுவில் நுழைந்தது…
இந்த செழுமை இந்த செழுமைதான்…
வயசை ஏத்துது…

பெண் : நீ முத்தம் மொத்தம் வைத்தே…
என் கண்ணம் பள்ளம் ஆச்சு…
உன் அத்துமீறல் பார்த்து…
என் பெண்மை திண்மை ஆச்சு…

ஆண் : நீ என்னை தீண்டி தீண்டி…
என் சுவாச பையில் ஏனோ…
ஒரு வெப்ப பந்து நின்று…
மெதுவாய் மெதுவாய் சூடாக சுழலுதடி…

பெண் : தந்திரா கண்களில் என்னென்ன…
தந்திரம் செய்தாயோ…
சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள்…
பத்திரம் ஆனாயோ…

பெண் : ஆ… வெண்ணிலா வேர்க்குது பாரம்மா…
வேர் வரை பூக்குது ஏனம்மா…

குழு : சிப்பியில் சமுத்திரம் சிக்கியது என்னம்மா…

குழு : வைத்த கண் வைத்தது தானோடி…
அப்படியே நிற்கின்றாய்…
தைத்த முள் தைத்தது தானோடி…
சொக்கியே போகின்றாய்…

குழு : அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க…
அவசரம் நீயும் பூப்பூக்க…
யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே…

BGM


Notes : Vaitha Kann Song Lyrics in Tamil. This Song from Bose (2004). Song Lyrics penned by Pa. Vijay. வைத்த கண் பாடல் வரிகள்.


முதல் முதலாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஹரன் & சாதனா சர்கம்தேவாஎங்கள் அண்ணா

Mudhan Mudhalaga Song Lyrics in Tamil


குழு : சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…
சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…

BGM

ஆண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில் என்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…

ஆண் : மௌனங்களால் என்னை நீ தாக்கினாய்…
மோஹங்களால் என்னை கைதாக்கினாய்…
இது நியாயம்தானா சொல்லு கண்ணே…

பெண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில்லென்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…

BGM

ஆண் : மார்கழியின் ராத்திரியில் மனசுக்குள் மல்லிகைப்பூ…
மூடி வைத்த உதடுகளில் முத்தங்களின் முணுமுணுப்பு…

பெண் : தூக்கத்தை தூக்கத்தை தூக்கிலே போடணும்…
கனவிலும் வந்து நீ இம்சைகள் செய்கிறாய்…

ஆண் : உன் ஜன்னல்களை மூடாதே…
என் தென்றலுக்கு வேர்க்கிறதே…

பெண் : என் கைப்பிடிக்க வருவாயா…
கை ரேகை என்னை கேட்கிறதே…

ஆண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில் என்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…

BGM

குழு : சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…
சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…

பெண் : தோற்கவில்லை தோகை மயில்…
இத்தனை நாள் ஏங்கியதே…
மேகத்திடம் அடம் பிடித்து…
மழைத் துளி வாங்கியதே…

ஆண் : ஏக்கங்கள் தீர்ந்ததா என்னுயிர்க்காதலி…
உன்னிடம் சாய்ந்ததே இந்த என் ஆறடி…

பெண் : உன் சட்டைக்குள்ளே இடம் தேடி…
என் மூச்சுக் காற்று அலைகிறதே…

ஆண் : உன் சேலை வாசம் வந்த பின்னே…
என் காலைகளும் விடிகிறதே…

பெண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில்லென்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…

பெண் : மௌனங்களால் என்னை நீ தாக்கினாய்…
மோஹங்களால் என்னை கைதாக்கினாய்…
இது நியாயம்தானா சொல்லு கண்ணே…

பெண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில்லென்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…


Notes : Mudhan Mudhalaga Song Lyrics in Tamil. This Song from Engal Anna (2004). Song Lyrics penned by Thamarai. முதல் முதலாக பாடல் வரிகள்.