Category Archives: 2002 Movies

mottugale-mottugale-song-lyrics-in-tamil

மொட்டுகளே மொட்டுகளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசாதனா சர்கம் & ஹரிஹரன் பரத்வாஜ்ரோஜா கூட்டம்

Mottugale Mottugale Song Lyrics in Tamil


BGM

ஆண் : மொட்டுகளே மொட்டுகளே…
மூச்சுவிடா மொட்டுகளே…
கண்மணியாய் தூங்குகிறாள்…
காலையில் மலருங்கள்…

ஆண் : பொன்னரும்புகள் மலர்கையிலே…
மென் மெல்லிய சத்தம் வரும்…
என் காதலி துயில் கலைந்தால்…
என் இதயம் தாங்காது…

பெண் : மொட்டுகளே மொட்டுகளே…
மூச்சுவிடா மொட்டுகளே…
காதலன்தான் தூங்குகிறான்…
காலையில் மலருங்கள்…

பெண் : பொன்னரும்புகள் மலர்கையிலே…
மென் மெல்லிய சத்தம் வரும்…
என் காதலன் துயில் கலைந்தால்…
என் இதயம் தாங்காது…

BGM

பெண் : நீ ஒரு பூ கொடுத்தால்…
அதை மார்புக்குள் சூடுகிறேன்…
வாடிய பூக்களையும்…
பேங்க் லாக்கரில் சேமிக்கிறேன்…

ஆண் : உன்வீட்டுத் தோட்டம் கண்டு…
இரவில் வந்து சேர்வேன்…
ரோஜாக்களை விட்டு விட்டு…
முட்கள் திருடிப்போவேன்…

பெண் : நீ ஆகட்டும் என்று சொல்லி விடு…
உன் சட்டையில் பூவாய் பூப்பேன்…

ஆண் : மொட்டுகளே மொட்டுகளே…
மூச்சுவிடா மொட்டுகளே…
கண்மணியாய் தூங்குகிறாள்…
காலையில் மலருங்கள்…

ஆண் : பொன்னரும்புகள் மலர்கையிலே…
மென் மெல்லிய சத்தம் வரும்…
என் காதலி துயில் கலைந்தால்…
என் இதயம் தாங்காது…

BGM

ஆண் : காதலி மூச்சுவிடும்…
காற்றையும் சேகரிப்பேன்…
காதலி மிச்சம் வைக்கும்…
தேனீர் தீர்த்தம் என்பேன்…

பெண் : கடற் கரை மணலில் நமது…
பேர்கள் எழுதி பார்ப்பேன்…
அலை வந்து அள்ளிச் செல்ல…
கடலை கொல்ல பார்ப்பேன்…

ஆண் : உன் நெற்றியில் வேர்வை கண்டவுடன்…
நான் வெயிலை வெட்ட பார்ப்பேன்… பார்ப்பேன்…

பெண் : மொட்டுகளே மொட்டுகளே…
மூச்சுவிடா மொட்டுகளே…
காதலன்தான் தூங்குகிறான்…
காலையில் மலருங்கள்…

பெண் : பொன்னரும்புகள் மலர்கையிலே…
மென் மெல்லிய சத்தம் வரும்…
என் காதலன் துயில் கலைந்தால்…
என் இதயம் தாங்காது…

BGM


Notes : Mottugale Mottugale Song Lyrics in Tamil. This Song from Roja Kootam (2002). Song Lyrics penned by Vairamuthu. மொட்டுகளே மொட்டுகளே பாடல் வரிகள்.


என்னை தாலாட்டும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசுஜாதா மோகன் & உன்னி மேனன்சிற்பிஉன்னை நினைத்து

Ennai Thalattum Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா…
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா…

ஆண் : உன்னை மழை என்பதா…
இல்லை தீ என்பதா…
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா…
உன்னை நான் என்பதா…

பெண் : என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா…
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா…

BGM

ஆண் : நதியாக நீயும்…
இருந்தாலே நானும்…
நீயிருக்கும் தூரம் வரை கரையாகிறேன்…

பெண் : இரவாக நீயும்…
நிலவாக நானும்…
நீயிருக்கும் நேரம் வரை உயிா் வாழ்கிறேன்…

ஆண் : முதல் நாள் என் மனதில்…
விதையாய் நீ இருந்தாய்…
மறுநாள் பாா்க்கையிலே…
வனமாய் மாறிவிட்டாய்…
நாடி துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய்…
நெஞ்சில் நீ வாழ்கிறாய்…

பெண் : என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா…
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா…

BGM

பெண் : பூலோகம் ஓா் நாள்…
காற்றின்றி போனால்…
எந்தன் உயிா் உந்தன் மூச்சு காற்றாகுமே…

ஆண் : ஆகாயம் ஓா் நாள்…
விடியாமல் போனால்…
எந்தன் ஜீவன் உந்தன் கையில் விளக்காகுமே…

பெண் : அன்பே நான் இருந்தேன்…
வெள்ளை காகிதமாய்…
என்னில் நீ வந்தாய்…
பேசும் ஓவியமாய்…

பெண் : தீபம் நீயென்றால்…
அதில் நானே திாி ஆகிறேன்…
தினம் திாியாகிறேன்…

ஆண் : என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா…
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா…

ஆண் : உன்னை மழை என்பதா…
இல்லை தீ என்பதா…
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா…
உன்னை நான் என்பதா…

பெண் : என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா…
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா…


Notes : Ennai Thalattum Song Lyrics in Tamil. This Song from Unnai Ninaithu (2002). Song Lyrics penned by P. Vijay. என்னை தாலாட்டும் பாடல் வரிகள்.


ரோஜா காத்து

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்தேவாரெட்

Roja Kaathu Song Lyrics in Tamil


குழு : ஹோ பேபி ஹோ பேபி ஹோ பேபி ஹோ…
ஹோ பேபி ஹோ பேபி ஹோ பேபி ஹோ…
ஹோ பேபி ஹோ பேபி ஹோ பேபி ஹோ…
ஹோ பேபி ஹோ பேபி ஹோ பேபி ஹோ…

ஆண் : ரோஜா காத்து சுடிதார் போட்டு…
மதுரை வீதியில் வந்தா…
அட மனம் குதிக்குது பந்தா…
கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா…

ஆண் : தீயாய் இருந்தேனடா…
திரியாய் வந்தாளடா…
கலக்கும் காட்டாறு நான்…
கரையே அவள்தானடா…

ஆண் : ரோஜா காத்து சுடிதார் போட்டு…

குழு : ஹோ பேபி ஹோ பேபி ஹோ பேபி ஹோ…
ஹோ பேபி ஹோ பேபி ஹோ பேபி ஹோ…
ஹோ ஹோ பேபி ஹோ ஹோ பேபி…
ஹோ ஹோ பேபி ஹோ ஹோ பேபி…

BGM

ஆண் : அழகு பெண்ணழகு ஆயிரம்தான் இருக்குதடி…
ஆனா என் மனசு உன் மடியில் விழுந்ததடி…

குழு : ஓ பையாரே ஓ பையாரே…
ஓ பையா ஓ பையா ஓ பையாரே…

ஆண் : ஓ பிடிச்சது முன்னழகோ பின்னழகோ இல்லையடி…
அதுக்கும் மேல ஒரு தாயழகும் உள்ளதடி…

குழு : ஓ பையாரே ஓ பையாரே…
ஓ பையா ஓ பையா ஓ பையாரே…

ஆண் : அவள பொண்ணு கேட்டு போடப் போறேன் தாலி…
திருப்பரங்குன்றத்து கோயிலிலே…
மேல மாசி வீதி வர மேல சத்தம் கேட்கும்…
மூணு முடி போடும் வேளையிலே…

ஆண் : வீட்டுக்குள்ளே பாய் போடுவேன்…
பிள்ளை பெத்து வெளியேறுவேன்…

ஆண் : ரோஜா காத்து சுடிதார் போட்டு…
மதுரை வீதியில் வந்தா…
அட மனம் குதிக்குது பந்தா…
கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா…

ஆண் : தீயாய் இருந்தேனடா…
திரியாய் வந்தாளடா…
கலக்கும் காட்டாறு நான்…
கரையே அவள்தானடா…

BGM

ஆண் : அவள மனம் முடிச்சி அரசர் அடியில் குடியிருப்பேன்…
வேர்த்தா அழகர் மலை காத்த கொஞ்சம் திருப்பி வெப்பேன்…

குழு : ஓ பையாரே ஓ பையாரே…
ஓ பையா ஓ பையா ஓ பையாரே…

ஆண் : மதுரை மல்லிகை பூ வண்டி கட்டி வாங்கி வருவேன்…
மேட்டினிக்கு டைடானிக் இங்கிலீஷ் படம் பாக்க வப்பேன்…

குழு : ஓ பையாரே ஓ பையாரே…
ஓ பையா ஓ பையா ஓ பையாரே…

ஆண் : செம்பவள விரல் விட்டு நகம் விழுந்தாலும்…
அத ஒரு முத்தா வச்சிருப்பேன்…
பட்டு வண்ண கூந்தல் விட்டு முடி விழுந்தாலும்…
பரம்பரை சொத்தா வச்சிருப்பேன்…

ஆண் : மடியில் சீராட்டுவேன்…
விடிந்தும் வாலாட்டுவேன்…

ஆண் : ரோஜா காத்து சுடிதார் போட்டு…
மதுரை வீதியில் வந்தா…
அட மனம் குதிக்குது பந்தா…
கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா…

ஆண் : தீயாய் இருந்தேனடா…
திரியாய் வந்தாளடா…
கலக்கும் காட்டாறு நான்…
கரையே அவள்தானடா…

ஆண் : ரோஜா காத்து சுடிதார் போட்டு…

BGM


Notes : Roja Kaathu Song Lyrics in Tamil. This Song from Red (2002). Song Lyrics penned by Vairamuthu. ரோஜா காத்து பாடல் வரிகள்.


சகலகலா வல்லவனே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஹரிஹரன் & சுஜாதாதேவாபம்மல் கே. சம்பந்தம்

Sakalakala Vallavane Song Lyrics in Tamil


BGM

பெண் : சகலகலா வல்லவனே…
சலவை செய்த சந்திரனே…

BGM

பெண் : சகலகலா வல்லவனே…
சலவைச் செய்த சந்திரனே…
தென்னவனே சின்னவனே…
தேவதையின் மன்னவனே…
இவன் பருவத்தை அணைக்கின்ற போது…
பத்து விரல் பத்தாது…

ஆண் : கனவா இவள் காதலியா…
மனதைக் கிள்ளும் மனைவியா…

BGM

பெண் : காதல் ஒற்றைக் கண்ணில்…
காமம் ஒற்றைக் கண்ணில்…
எந்தக் கண்ணால் என்னைப் பார்க்கிறாய்…
கண்ணா கண்ணா…

BGM

ஆண் : காமம் காதல் ரெண்டும்…
எந்தன் கண்ணில் இல்லை…
கண்கள் மூடி உன்னைக் காண்கிறேன்…
கண்ணே கண்ணே…

பெண் : நீ வேறு நான் வேறு…
நாம் வேரு பூவும் ஆவோம்…

ஆண் : நீ என்னை வளைக்காதே…
நான் கேள்விக்குறி ஆகிப்போவேனே…

BGM

ஆண் : சிற்பம் போல வாழ்ந்தேன்…
என்னை செதுக்க வந்தாய்…
மீண்டும் பாறை ஆவேன்…
நியாயமா காதல் பெண்ணே பெண்ணே…

BGM

பெண் : தொட்டில் செடி ஆனேன்…
தோட்டம் வந்து சேர்ந்தேன்…
காம்பைத் தீண்டும் வேளை…
கைகளில் விழுந்தேன் கண்ணா…

ஆண் : உன் வாயால் என் பேரை…
நான் உச்சரிக்க வேண்டும்…

பெண் : உன் தீயால் என் சேலை…
தினம் தீக்குளிக்க வேண்டும் வேண்டுமே…

BGM

பெண் : சகலகலா வல்லவனே…
சலவைச் செய்த சந்திரனே…
தென்னவனே சின்னவனே…
தேவதையின் மன்னவனே…

ஆண் : என்னை பூவுக்குள் நீ பூட்டும் வேலை…
போதும் போதும் உன் லீலை…

BGM


Notes : Sakalakala Vallavane Song Lyrics in Tamil. This Song from Pammal K. Sambandam (2002). Song Lyrics penned by Kabilan. சகலகலா வல்லவனே பாடல் வரிகள்.


வெள்ளை பூக்கள்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி.ஜெயச்சந்திரன்ஏ.ஆர்.ரகுமான்கன்னத்தில் முத்தமிட்டால்

Vellai Pookal Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே…
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே…
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே…
மலரே சோம்பல் முறித்து எழுகவே…

ஆண் : குழந்தை விழிக்கட்டுமே…
தாயின் கத கதப்பில்…
உலகம் விடியட்டுமே…
பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்…

ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே…
மலர்கவே…
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே…
விடிகவே…

ஆண் : மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே…
மலரே சோம்பல் முறித்து எழுகவே…

ஆண் : குழந்தை விழிக்கட்டுமே…
தாயின் கத கதப்பில்…
உலகம் விடியட்டுமே…
பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்…

ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே…

BGM

ஆண் : காற்றின் பேரிசையும்…
மழை பாடும் பாடல்களும்…
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ…

ஆண் : கோடி கீர்த்தனையும்…
கவி கோர்த்த வார்தைகளும்…
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ…
ஆஹாஹா… ஆஹாஹா…

ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே…
மலர்கவே…
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே…
விடிகவே…

ஆண் : மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே…
மலரே சோம்பல் முறித்து எழுகவே…

BGM

ஆண் : எங்கு சிறு குழந்தை…
தன் கைகள் நீட்டிடுமோ…
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே…

ஆண் : எங்கு மனித இனம்…
போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ…
அங்கு கூவாதோ வெள்ளை குயிலே…

ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே…
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே…
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே…
மலரே சோம்பல் முறித்து எழுகவே…

ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே…
மலர்கவே…
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே…
விடிகவே…


Notes : Vellai Pookal Song Lyrics in Tamil. This Song from Kannathil Muthamittal (2002). Song Lyrics penned by Vairamuthu. வெள்ளை பூக்கள் பாடல் வரிகள்.


மூங்கில் காடுகளே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & திப்புஹாரிஸ் ஜெயராஜ்சாமுராய்

Moongil Kaadugale Song Lyrics in Tamil


ஆண் : மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே…

BGM

ஆண் : மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே…

ஆண் : இயற்கை தாயின் மடியில் பிறந்து…
இப்படி வாழ இதயம் தொலைந்து…
சலித்து போனேன் மனிதனாய் இருந்து…
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து…
பறந்து பறந்து…

ஆண் : மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே…

BGM

ஆண் : சேற்று தண்ணீரில்…
மலரும் சிவப்பு தாமரையில்…
சேறும் மணப்பதில்லை…
பூவின் ஜீவன் மணக்கிறது…

ஆண் : வேரை அறுத்தாலும்…
மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை…
அறுத்த நதியின் மேல்…
மரங்கள் ஆனந்த பூசொறியும்…

ஆண் : தாமரை பூவாய் மாறேனோ…
ஜென்ம சாபல் எங்கே காணேனோ…
மரமாய் நானும் மாறேனோ…
என் மனித பிறவியில் உய்யேனோ… ஓஓ…

ஆண் : வெயிலோ முயலோ…
பருகும் வண்ணம்…
வெள்ளை பனி துளி ஆவேனோ…

ஆண் : மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
ஓஹோ… தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே…

BGM

ஆண் : உப்பு கடலோடு…
மேகம் உற்பத்தி ஆனாலும்…
உப்பு தண்ணீரை…
மேகம் ஒரு போதும் சிந்தாது…

ஆண் : மலையில் விழுந்தாலும்…
சூரியன் மறித்து போவதில்லை…
நிலவுக்கு ஒளியூட்டி…
தன்னை நீட்டித்து கொள்கிறதே…

ஆண் : மேகமாய் நானும் மாறேனோ…
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ…
சூரியன் போலவே மாறேனோ…
என் ஜோதியில் உலகை ஆளேனோ…

ஆண் : ஜனனம் மரணம் அறியா வண்ணம்…
நானும் மழை துளி ஆவேனோ…

ஆண் : மூங்கில் காடுகளே…
மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
வண்டு முனகும் பாடல்களே…
தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே…

ஆண் : இயற்கை தாயின் மடியில் பிறந்து…
இப்படி வாழ இதயம் தொலைந்து…
சலித்து போனேன் மனிதனாய் இருந்து…
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து…
பறந்து பறந்து…

BGM


Notes : Moongil Kaadugale Song Lyrics in Tamil. This Song from Samurai (2002). Song Lyrics penned by Vairamuthu. மூங்கில் காடுகளே பாடல் வரிகள்.


ஆகாய சூரியனை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஷ் ராகவேந்திரா & ஹரிணிஹாரிஸ் ஜெயராஜ்சாமுராய்

Aagaya Suriyanai Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…

BGM

பெண் : ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…
இவள்தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…

பெண் : கொடி நான் உன் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடி நான்…
என் எண்ணம் எதுவோ…
கிளிதான் உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளி நான்…
உன்னை கொஞ்சும் என்னமோ…

BGM

ஆண் : ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…
நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…

ஆண் : அடியே என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடியே சகியே…
உன் எண்ணம் என்னவோ…
என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே…
என்னை கொல்லும் என்னமோ…

BGM

பெண் : காதல் பந்தியில் நாமே உணவுதான்…
உண்ணும் பொருளே உன்னை உண்ணும் விந்தை இங்கேதான்…

ஆண் : காதல் பார்வையில் பூமி வேறுதான்…
மார்கழி வேர்க்கும் சித்திரை குளிரும் மாறுதல் இங்கேதான்…

பெண் : உன் குளிருக்கு இதமாய்…
என்னை அடிக்கடி கொளுத்து…

ஆண் : என் வெயிலுக்கு சுகம் தா…
உன் வேர்வையில் நனைத்து…

பெண் : காதல் மறந்தவன் காமம் கடந்தவன்…
துறவை துறந்ததும் சொர்கம் வந்தது…

ஆண் : ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…
நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…

BGM

ஆண் : என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய்…
டோரா போரா மலை சென்றாலும் துரத்தி வருவேனே…

பெண் : உன்னை நீங்கி நான் எங்கே செல்வது…
உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே ஒளிந்து கொல்வேனே…

ஆண் : அடி காதல் வந்தும் ஏன் கண்ணாமூச்சி…

பெண் : நீ கண்டு கண்டு பிடித்தால்…
பின் காமன் ஆட்சி…

ஆண் : கத்தி பறித்து நீ பூவை தெளிக்கிறாய்…
பாரம் குறைந்தது ஏதோ நிம்மதி…

பெண் : ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…
இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…

ஆண் : அடியே என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடியே…
உன் எண்ணம் என்னவோ…
சகியே என்னைகொஞ்சம் கொஞ்சம் கொத்திதின்னும் கிளியே…
என்னை கொல்லும் என்னமோ…

BGM


Notes : Aagaya Suriyanai Song Lyrics in Tamil. This Song from Samurai (2002). Song Lyrics penned by Vairamuthu. ஆகாய சூரியனை பாடல் வரிகள்.


ஒரு தெய்வம் தந்த பூவே (பெண்)

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி.ஜெயச்சந்திரன் & சின்மயிஏ.ஆர்.ரகுமான்கன்னத்தில் முத்தமிட்டால்

Oru Dheivam Thandha Poove (Female) Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்…
காதில் தில் தில் தில் தில்…
கன்னத்தில் முத்தமிட்டால் நீ…
கன்னத்தில் முத்தமிட்டால்…

ஆண் : நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்…
காதில் தில் தில் தில் தில்…
கன்னத்தில் முத்தமிட்டால் நீ…
கன்னத்தில் முத்தமிட்டால்…

பெண் : ஒரு தெய்வம் தந்த பூவே…
கண்ணில் தேடல் என்ன தாயே…
ஒரு தெய்வம் தந்த பூவே…
கண்ணில் தேடல் என்ன தாயே…

பெண் : வாழ்வு தொடங்கும் இடம் நீதானே…
ஆஹா… ஆஆ… ஆஆ… ஆஆ…
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே…
வானம் முடியுமிடம் நீதானே…
காற்றைப் போல நீ வந்தாயே…
சுவாசமாக நீ நின்றாயே…
மார்பில் ஊறும் உயிரே…

பெண் : ஒரு தெய்வம் தந்த பூவே…
கண்ணில் தேடல் என்ன தாயே…

ஆண் : நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்…
காதில் தில் தில் தில் தில்…
கன்னத்தில் முத்தமிட்டால் நீ…
கன்னத்தில் முத்தமிட்டால்…

ஆண் : நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்…
காதில் தில் தில் தில் தில்…
கன்னத்தில் முத்தமிட்டால் நீ…
கன்னத்தில் முத்தமிட்டால்…

BGM

பெண் : எனது சொந்தம் நீ…
எனது பகையும் நீ…
காதல் மலரும் நீ…
கருவில் முள்ளும் நீ…

பெண் : செல்ல மழையும் நீ…
சின்ன இடியும் நீ…
செல்ல மழையும் நீ…
சின்ன இடியும் நீ…

பெண் : பிறந்த உடலும் நீ…
பிரியும் உயிரும் நீ…
பிறந்த உடலும் நீ…
பிரியும் உயிரும் நீ…
மரணம் ஈன்ற ஜனனம் நீ…

பெண் : ஒரு தெய்வம் தந்த பூவே…
கண்ணில் தேடல் என்ன தாயே…

ஆண் : நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்…
காதில் தில் தில் தில் தில்…
கன்னத்தில் முத்தமிட்டால் நீ…
கன்னத்தில் முத்தமிட்டால்…

BGM

பெண் : எனது செல்வம் நீ…
எனது வறுமை நீ…
இழைத்த கவிதை நீ…
எழுத்துப் பிழையும் நீ…
இரவல் வெளிச்சம் நீ…
இரவின் கண்ணீர் நீ…
இரவல் வெளிச்சம் நீ…
இரவின் கண்ணீர் நீ…

பெண் : எனது வானம் நீ…
இழந்த சிறகும் நீ…
எனது வானம் நீ…
இழந்த சிறகும் நீ…
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ…

பெண் : ஒரு தெய்வம் தந்த பூவே…
கண்ணில் தேடல் என்ன தாயே…
ஒரு தெய்வம் தந்த பூவே…
கண்ணில் தேடல் என்ன தாயே…

பெண் : வாழ்வு தொடங்கும் இடம் நீதானே…
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே…
வானம் முடியுமிடம் நீதானே…
காற்றைப் போல் நீ வந்தாயே…
சுவாசமாய் நீ நின்றாயே…
மார்பில் ஊறும் உயிரே…

பெண் : ஒரு தெய்வம் தந்த பூவே…
கண்ணில் தேடல் என்ன தாயே…

BGM


Notes : Oru Dheivam Thandha Poove (Female) Song Lyrics in Tamil. This Song from Kannathil Muthamittal (2002). Song Lyrics penned by Vairamuthu. ஒரு தெய்வம் தந்த பூவே (பெண்) பாடல் வரிகள்.


சக்கரை நிலவே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹாிஷ் ராகவேந்திராமணி சா்மாயூத்

Sakkarai Nilavea Song Lyrics in Tamil


BGM

ஆண் : சக்கரை நிலவே பெண் நிலவே…
காணும் போதே கரைந்தாயே…
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே…

ஆண் : சக்கரை நிலவே பெண் நிலவே…
காணும் போதே கரைந்தாயே…
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே…

ஆண் : மனம் பச்சை தண்ணிதான் பெண்ணே…
அதை பற்ற வைத்தது உன் கண்ணே…
என் வாழ்க்கை என்னும் காட்டை எரித்து…
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே…

ஆண் : கவிதை பாடின கண்கள்…
காதல் பேசின கைகள்…
கடைசியில் எல்லாம் பொய்கள்…
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா…

ஆண் : சக்கரை நிலவே பெண் நிலவே…
காணும் போதே கரைந்தாயே…
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே…

BGM

ஆண் : காதல் என்ற ஒன்று அது கடவுள் போல…
உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை…
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல…
வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை…

ஆண் : அன்பே உன் புன்னகை எல்லாம்…
அடி நெஞ்சில் சேமித்தேன்…
கண்ணே உன் புன்னகை எல்லாம்…
கண்ணீராய் உருகியதேன்…

ஆண் : வெள்ளை சிரிப்புகள் உன் தவறா…
அதில் கொள்ளை போனது என் தவறா…
பிரிந்து சென்றது உன் தவறா…
நான் புரிந்து கொண்டது என் தவறா…
ஆண் கண்ணீா் பருகும் பெண்ணின் இதயம்…
சதையல்ல கல்லின் சுவரா…

ஆண் : கவிதை பாடின கண்கள்…
காதல் பேசின கைகள்…
கடைசியில் எல்லாம் பொய்கள்…
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா…

BGM

ஆண் : நவம்பா் மாத மழையில்…
நான் நனைவேன் என்றேன்…
எனக்கும் கூட நனைதல்…
மிக பிடிக்கும் என்றாய்…

ஆண் : மொட்டை மாடி நிலவில்…
நான் குளிப்பேன் என்றேன்…
எனக்கும் அந்த குளியல்…
மிக பிடிக்கும் என்றாய்…

ஆண் : சுகமான குரல் யார் என்றால்…
சுசீலாவின் குரல் என்றேன்…
எனக்கும் அந்த குரலில் ஏதோ…
மயக்கம் என நீ சொன்னாய்…

ஆண் : கண்கள் மூடிய புத்தா் சிலை…
என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்…
தயக்கம் என்பதே சிறிதும் இன்றி…
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்…

ஆண் : அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க…
என்னை ஏன் பிடிக்காதென்றாய்…

ஆண் : கவிதை பாடின கண்கள்…
காதல் பேசின கைகள்…
கடைசியில் எல்லாம் பொய்கள்…
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா…

BGM


Notes : Sakkarai Nilavea Song Lyrics in Tamil. This Song from Youth (2002). Song Lyrics penned by Vairamuthu. சக்கரை நிலவே பாடல் வரிகள்.


ஹேப்பி நியூ இயர்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்பி. உன்னிகிருஷ்ணன் & சுஜாதா மோகன்சிற்பிஉன்னை நினைத்து

Happy New Year Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹேப்பி நியூ இயர் ஹேப்பி நியூ இயர் வந்ததே…
அன்பைச் சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே…
சூர்ய காந்திப்பூ போல முகம் மாறுதே சுகம் சேருதே…

பெண் : லல லால லால லா லா…
லல லால லால லா லல லால லால…
லா லா லல லால லால லா…

பெண் : ஹேப்பி நியூ இயர் ஹேப்பி நியூ இயர் வந்ததே…
அன்பைச் சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே…

BGM

பெண் : வாரணம் ஆயிரம் சூழ வரம் செய்து…
நாரண நம்பி நடக்கின்றான் இன்றெதிர்…
பூரண பொற் குடம் வைத்து பூரவெங்கும்…
தோரணம் நாட்ட கனாக் கண்டேன் தோழி…

BGM

பெண் : எங்கள் வாழ்வை கவிதைத் தொகுப்பாய் ஆக்கலாம்…
அஞ்சல் வழியே எல்லோருக்கும் அனுப்பலாம்…

ஆண் : வானத்து மேகமாய் நாம் சேர்ந்து போகலாம்…
பூங்கொத்தைப் போலவே முகம் வைத்து வாழலாம்…

பெண் : நம் சிரிப்பை படம் பிடித்து…
வாழ்த்து மடல் வழங்கிடலாம்…

ஆண் : நூற்றாண்டை தாண்டியும் நம் பேரை நாளை நிலைத்திடலாமே…

பெண் : லல லால லால லா லா…
லல லால லால லாலா…

ஆண் : ஹேப்பி நியூ இயர் ஹேப்பி நியூ இயர் வந்ததே…
அன்பைச் சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே…

BGM

ஆண் : துளசிச் செடியில் மழையின் துளியைப் போலவே…
எங்கள் விழியில் ஆனந்தத்தின் ஈரமே…

பெண் : பூவில் ஓர் பாத்திரம் நாம் செய்து பார்க்கலாம்…
பால் சோறை போட்டு நாம் பறவைக்கும் ஊட்டலாம்…

ஆண் : குடை பிடிக்கும் தென்னை மரம் நமது குணம் சொல்லியதே…

பெண் : வாழ்நாட்கள் யாவுமே வசந்தங்கள் வீச வாழ்ந்திருப்போமே…

ஆண் : லல லால லால லா லா… லல லால லால லா…

பெண் : ஹேப்பி நியூ இயர் ஹேப்பி நியூ இயர் வந்ததே…

ஆண் : அன்பைச் சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே…
சூர்ய காந்திப்பூ போல முகம் மாறுதே சுகம் சேருதே…

ஆண் : லல லால லால லா லா லல லால லால லா…
லல லால லால லா லா லல லால லால லா…


Notes : Happy New Year Song Lyrics in Tamil. This Song from Unnai Ninaithu (2002). Song Lyrics penned by Kalaikumar. ஹேப்பி நியூ இயர் வந்ததே பாடல் வரிகள்.