Category Archives: 1990 Movies

1990 Movies

உன்னைக் காணாமல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்அருண்மொழி & கே.எஸ். சித்ராஇளையராஜாகவிதை பாடும் அலைகள்

Unnai Kaanamal Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னைக் காணாமல் நான் ஏது…
உன்னை எண்ணாத நாள் ஏது…

ஆண் : உன்னைக் காணாமல் நான் ஏது…
உன்னை எண்ணாத நாள் ஏது…
பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீதான்…

பெண் : உன்னைக் காணாமல் நான் ஏது…
உன்னை எண்ணாத நாள் ஏது…

BGM

ஆண் : கம்பனின் பிள்ளை நான்…
காவியம் பாட வந்தேன்…
காவிரிக் கரையெல்லாம் காலடி தேடி நின்றேன்…

பெண் : கவிஞனைத் தேடி கவிதை கேட்க வந்தேன்…
ஆண் : வானமும் பூமி எங்கும் பாடிடும் பாடல் கேட்கும்…

பெண் : ஜீவனில் ஜீவன் சேரும் ஆயிரம் ஆண்டு காலம்…
ஆண் : இனி எந்நாளும் பிரிவேது அன்பே… ஏஏஏ…

பெண் : உன்னைக் காணாமல் நான் ஏது…
உன்னை எண்ணாத நாள் ஏது…
பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீதான்…

ஆண் : உன்னைக் காணாமல் நான் ஏது…
உன்னை எண்ணாத நாள் ஏது…

BGM

பெண் : ஆயிரம் காலம்தான் வாழ்வது காதல் கீதம்…
கண்ணனின் பாடலில் கேட்பது காதல் வேதம்…

ஆண் : பிரிவினை ஏது இணைந்து பாடும் போது…
பெண் : காவியம் போன்ற காதல் பூமியை வென்று ஆளூம்…

ஆண் : காலங்கள் போனபோதும் வானத்தைப்போல வாழும்…
பெண் : இது மாறாது மறையாது அன்பே… ஏஏஏ…

ஆண் : உன்னைக் காணாமல் நான் ஏது…
உன்னை எண்ணாத நாள் ஏது…
பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீதான்…

பெண் : உன்னைக் காணாமல் நான் ஏது…
உன்னை எண்ணாத நாள் ஏது…

ஆண் : உன்னைக் காணாமல் நான் ஏது…
உன்னை எண்ணாத நாள் ஏது…


Notes : Unnai Kaanamal Song Lyrics in Tamil. This Song from Kavidhai Paadum Alaigal (1990). Song Lyrics penned by Gangai Amaren. உன்னைக் காணாமல் பாடல் வரிகள்.


பொம்பள இல்லாம நீதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & எஸ். ஜானகிஇளையராஜாமருது பாண்டி

Pombala Illama Song Lyrics in Tamil


பெண் : பொம்பள இல்லாம நீதான்…
இங்கு என்ன செய்ய முடியும் மாமா…
பொம்பள இல்லாம நீதான்…
இங்கு என்ன செய்ய முடியும் மாமா…

பெண் : சட்டை துவைக்கவும் போட்டு தேய்க்கவும்…
கட்டு போடவும் கட்டிக் காக்கவும்…
என்ன வேணும் எண்ணி பாரு மாமா…
கன்னிப் பொண்ணு வேணும் சொல்லிப்புட்டேன் ஆமா…

BGM

ஆண் : பொம்பள துணை எனக்கு வேணா…
வாயப் பொத்திக்கிட்டு அந்தப்பக்கம் போடி…
பொம்பள துணை எனக்கு வேணா…
வாயப் பொத்திக்கிட்டு அந்தப்பக்கம் போடி…

ஆண் : கெண்டக் காலையும் கொண்டப் பூவையும்…
கண்டு மயங்குற காள நானில்லை…
அடி எட்டிக் கொஞ்சம் தள்ளி நில்லு மானே…
இல்ல எக்குத்தப்பா ஆகிப்போகும் வீணே…

BGM

பெண் : ஆடி ஓடி வேலை செஞ்சா…
காலு கையி நோகுமே…
அங்கே இங்கே நானும் தொட்டு…
கைய வச்சா தீருமே…

ஆண் : ஹேய்… தெம்பிருக்கு வேலை செய்ய…
ஒஞ்சதில்லை நானம்மா…
வந்து வந்து வம்பிழுக்கும்…
வேல இப்ப வீணம்மா…

பெண் : வெளக்கு ஏத்தவும் கொஞ்சம் கொறைக்கவும்…
வேணும் பொம்பள…

ஆண் : நானெடுத்து ஏத்தி வச்சா…
வெளக்கு என்ன எரியாதா…
ஏத்தி வச்ச என்னோட கைதான்…
எறக்கி வைக்க முடியாதா…

பெண் : அந்த கஷ்டம் ஆம்பளைக்கெதுக்கு…
அதுதான் பொம்பளைக்கு…

ஆண் : பொம்பள துணை எனக்கு வேணா…
வாயப் பொத்திக்கிட்டு அந்தப்பக்கம் போடி…
பொம்பள துணை எனக்கு வேணா…
வாயப் பொத்திக்கிட்டு அந்தப்பக்கம் போடி போடி…

BGM

ஆண் : பெண்ணாசையால் சாபம் வாங்கி…
போனானம்மா இந்திரன்…
பூமி மேலே ஆசை வச்சு…
தேஞ்சானம்மா சந்திரன்…

பெண் : எல்லோருக்கும் சாபம் தீர்க்க…
உள்ள இனம் பொம்பள…
உங்களுக்கு ஏதுமில்ல ஆனாலும் நீ ஆம்பள…

ஆண் : பருவக் கிறுக்குல பட்டப் பகலுல…
கனவில் மிதக்குற…

பெண் : மருதுபாண்டி பேரையும் சொல்ல…
மகனும் பொறக்க வேணாமா…
ஓ… மகன தாங்க அம்மா நான்தான்…
மனச கொஞ்சம் தா மாமா…

ஆண் : யம்மா யம்மா சொன்னது சரிதான்…
நாளொண்ணு பார்ப்போமா…

பெண் : பொம்பள இல்லாம நீதான்…
இங்கு என்ன செய்ய முடியும் மாமா…

ஆண் : பொம்பள இல்லாம யாரும்…
இங்கு என்ன செய்ய முடியும் வாம்மா…

பெண் : சட்டை துவைக்கவும் போட்டு தேய்க்கவும்…
கட்டு போடவும் கட்டிக் காக்கவும்…

ஆண் : பொண்ணு ஒண்ணு வேணுமடி மானே…
நீ சொன்னதெல்லாம் ஒத்துக்கிட்டேன் நானே…

பெண் : பொம்பள இல்லாம நீதான்…
இங்கு என்ன செய்ய முடியும் மாமா…


Notes : Pombala Illama Song Lyrics in Tamil. This Song from Maruthu Pandi (1990). Song Lyrics penned by Gangai Amaran. பொம்பள இல்லாம நீதான் பாடல் வரிகள்.


ஏய் ராசாத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன்இளையராஜாஎன் உயிர்த் தோழன்

Yeraasaathi Song Lyrics in Tamil


குழு : ஏய் ராசாத்தி ராசாத்தி ராசாத்தி…
ஏய் ராசாத்தி ராசாத்தி ராசாத்தி…
ஜும்ஜும்சும் ஜும்ஜும்சும் ராசாத்தி…
ஜும்ஜும்சும் ஜும்ஜும்சும் ராசாத்தி…

குழு : ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி…
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி…

குழு : ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா…
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா…

குழு : தேவதையே திருமகளே…
தேவதையே திருமகளே…
மாங்கனியே மணமகளே…
மாலை சூடும் குணமகளே…

ஆண் : ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா…
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா…

BGM

ஆண் : கண்கள் இமை மூடும் போதும்…
உனதன்பு எனதன்பைத் தேடும்…
குழு : அடடடா…

ஆண் : மஞ்சம் இரண்டான போதும்…
நம் எண்ணம் ஒன்றாகத் தூங்கும்…
குழு : அடடடா…

ஆண் : தூர இருந்தும்…
குழு : ஹாஆஅ… ஆஅஆஅ…
ஆண் : அருகில் இருப்போம்…
குழு : ஹாஆஅ… ஆஅஆஅ…

ஆண் : தனித்து இருந்தும்…
குழு : ஹாஆஅ… ஆஅஆஅ…
ஆண் : இணைந்தே இருப்போம்…
குழு : ஹாஆஅ… ஆஅஆஅ…

BGM

குழு : ஆகாயம் பூப்பந்தல் அங்கே பொன்னூஞ்சல்…
நீ ஆட அதில் நான் ஆட நேரம் வந்தாட…
ஆகாயம் பூப்பந்தல் அங்கே பொன்னூஞ்சல்…
நீ ஆட அதில் நான் ஆட நேரம் வந்தாட…

குழு : மின்னும் வெள்ளி மீன்களை மேனி எங்கும் சூடுவேன்…
மேடை என்னும் தேவியை ஆடை என்று மூடுவேன்…
அங்கம் எங்கும் தங்கம்…
ஹே எங்கும் இன்பம் பொங்கும்…

ஆண் : ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா…
குழு : தனனா…
ஆண் : அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா…
குழு : தனனனனனா…

குழு : தேவதையே திருமகளே…
தேவதையே திருமகளே…
மாங்கனியே மணமகளே…
மாலை சூடும் குணமகளே…

ஆண் : ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா…
குழு : தனனா…
ஆண் : அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா…
குழு : தனனனனனா…

BGM

ஆண் : பந்தலிட்டு பரிசம் போட்டு…
சொந்தம் கூடி நாள் குறிக்க…

குழு : பந்தலிட்டு பரிசம் போட்டு…
சொந்தம் கூடி நாள் குறிக்க…

ஆண் : அம்மி மிதித்து அருந்ததி பார்த்து…
அழகாக மங்கைக்கு மாலை அணிந்து…
மங்கல வாத்தியம் மந்திரம் முழங்க…
மஞ்சள் கயிறு மணிக் கழுத்தில்…
ஏறிடும் அந்நாள் வந்திடும் வந்திடும்…

BGM

குழு : வான்வெளியில் பூ விரித்து…
காண்போம் முதல் இரவு…
தேன் மொழியில் இசைதான் கலந்து…
படிப்போம் இணைந்திருந்து…

குழு : வான்வெளியில் பூ விரித்து…
காண்போம் முதல் இரவு…
தேன் மொழியில் இசைதான் கலந்து…
படிப்போம் இணைந்திருந்து…

குழு : வானும் இந்த பூமியும்…
நானும் தந்தேன் சீதனம்…
கையில் வந்த பூவுடல்…
காதல் மலர்ப் பூ வனம்…

குழு : கண்ணே காதல் பெண்ணே…
காமன் கோயில் வாசல் முன்னே…

ஆண் : ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா…
குழு : தனனா…
ஆண் : அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா…
குழு : தனனனனனா…

குழு : தேவதையே திருமகளே…
தேவதையே திருமகளே…
மாங்கனியே மணமகளே…
மாலை சூடும் குணமகளே…

ஆண் : ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா…
குழு : தனனா…
ஆண் : அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா…
குழு : தனனனனனா…


Notes : Yeraasaathi Song Lyrics in Tamil. This Song from En Uyir Thozhan (1990). Song Lyrics penned by Gangai Amaran. ஏய் ராசாத்தி பாடல் வரிகள்.


ஆதாமும் ஏவாளும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்அருண்மொழி & எஸ். ஜானகிஇளையராஜாமருது பாண்டி

Adhamum Yevalum Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆதாமும் ஏவாளும் போல…
குழு : வேண்டாம் வேண்டாம்…
பெண் : பூவாடை மேலாடை ஆக…
குழு : போதும் போதும்…

பெண் : ஆதாமும் ஏவாளும் போல…
குழு : வேண்டாம் வேண்டாம்…
பெண் : பூவாடை மேலாடை ஆக…
குழு : போதும் போதும்…

ஆண் : நீராட நான் தேடும் காவேரி நீயாக…
பூமேனி தாலாட்டும் பூங்காற்றும் சூடாக…

பெண் : ஆடைதான் பாரம் ஆகும்…
நீயும் நானும் சேரத்தான்…

ஆண் : ஆதாமும் ஏவாளும் போல…
குழு : வேண்டாம் வேண்டாம்…
ஆண் : பூவாடை மேலாடை ஆக…
குழு : போதும் போதும்…

BGM

பெண் : ஆகாயம் பூமிக்கென்றே ஆடை இங்கேது…
நிர்வாண கோலமென்றே ஊரும் கூறாது…

ஆண் : பாலாடை மூடிக் கொண்டால் ருசியும் பொங்காது…
பூ மீது ஆடையிட்டால் வசியம் பண்ணாது…

பெண் : நூலாடை நானாக மேலாடை நீயாக…
யார் இதை தடுப்பாரோ…

ஆண் : தீராதே தீராதே மோகந்தான் தீராதே…
பெண் : எங்கெங்கோ வாழும் சொர்க்கம்…
இன்றே கொஞ்சம் காண்போமே…

ஆண் : ஆதாமும் ஏவாளும் போல…
குழு : வேண்டாம் வேண்டாம்…
ஆண் : பூவாடை மேலாடை ஆக…
குழு : போதும் போதும்…

பெண் : நீராட நான் தேடும் காவேரி நீயாக…
பூமேனி தாலாட்டும் பூங்காற்றும் சூடாக…

ஆண் : ஆடைதான் பாரம் ஆகும்…
நீயும் நானும் சேரத்தான்…

பெண் : ஆதாமும் ஏவாளும் போல…
குழு : வேண்டாம் வேண்டாம்…
பெண் : பூவாடை மேலாடை ஆக…
குழு : போதும் போதும்…

BGM

ஆண் : கானங்கள் சொல்லி சொல்லி வானில் செல்வோமா…
குழு : வேண்டாமே…
ஆண் : வானத்தில் ஊஞ்சல் கட்டி ஆடிப் பார்ப்போமா…
குழு : வேண்டாமே…

பெண் : மேகத்தில் மெத்தையிட்டு மோகம் கொள்வோமா…
குழு : வேண்டாமே…
பெண் : மோகத்தில் முத்தம் சிந்தி தாகம் தீர்ப்போமா…
குழு : வேண்டாமே…

ஆண் : நாம் காணும் ஆனந்தம் கானல் நீர் ஆகாது…
என்றென்றும் மறையாது…

பெண் : வாராயோ வாராயோ…
தோள் மீது சேராயோ…

ஆண் : எங்கெங்கோ வாழும் சொர்க்கம்…
இன்றே கொஞ்சம் காண்போமே…

பெண் : ஆதாமும் ஏவாளும் போல…
குழு : வேண்டாம் வேண்டாம்…
பெண் : பூவாடை மேலாடை ஆக…
குழு : போதும் போதும்…

ஆண் : நீராட நான் தேடும் காவேரி நீயாக…
பூமேனி தாலாட்டும் பூங்காற்றும் சூடாக…

பெண் : ஆடைதான் பாரம் ஆகும்…
நீயும் நானும் சேரத்தான்…

ஆண் : ஆதாமும் ஏவாளும் போல…
குழு : வேண்டாம் வேண்டாம்…
ஆண் : பூவாடை மேலாடை ஆக…
குழு : போதும் போதும்…

பெண் : ஆதாமும் ஏவாளும் போல…
குழு : வேண்டாம் வேண்டாம்…
பெண் : பூவாடை மேலாடை ஆக…
குழு : போதும் போதும்…


Notes : Adhamum Yevalum Song Lyrics in Tamil. This Song from Maruthu Pandi (1990). Song Lyrics penned by Piraisoodan. ஆதாமும் ஏவாளும் பாடல் வரிகள்.


மழை வருது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ரா & கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாராஜா கைய வெச்சா

Mazhai Varuthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : மழை வருது மழை வருது…
குடை கொண்டு வா…
மானே உன் மாராப்பிலே… ஹொய்…

பெண் : வெயில் வருது வெயில் வருது…
நிழல் கொண்டு வா…
மன்னா உன் பேரன்பிலே…

ஆண் : மழை போல் நீயே…
பொழிந்தாய் தேனே…

பெண் : மழை வருது மழை வருது…
குடை கொண்டு வா…
ஆண் : மானே உன் மாராப்பிலே… ஹொய்…

ஆண் : வெயில் வருது வெயில் வருது…
நிழல் கொண்டு வா…
பெண் : மன்னா உன் பேரன்பிலே…

ஆண் : மழை போல் நீயே…
பொழிந்தாய் தேனே…

பெண் : மழை வருது மழை வருது…
குடை கொண்டு வா…
ஆண் : மானே உன் மாராப்பிலே…

BGM

பெண் : இரவும் இல்லை…
ஆண் : பகலும் இல்லை…

பெண் : இணைந்த கையில்…
ஆண் : பிரிவும் இல்லை…

பெண் : சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்…

ஆண் : நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்…
நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்…

பெண் : சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்…
உனது தோளில் நான் பிள்ளை போலே…
உறங்க வேண்டும் கண்ணா வா…

ஆண் : மழை வருது மழை வருது…
குடை கொண்டு வா…
மானே உன் மாராப்பிலே… ஹொய்…

பெண் : வெயில் வருது வெயில் வருது…
நிழல் கொண்டு வா…
மன்னா உன் பேரன்பிலே…

ஆண் : மழை போல் நீயே…
பொழிந்தாய் தேனே…

பெண் : மழை வருது மழை வருது…
குடை கொண்டு வா…
ஆண் : மானே உன் மாராப்பிலே… ஹொய்…

ஆண் : வெயில் வருது வெயில் வருது…
நிழல் கொண்டு வா…

பெண் : மன்னா உன் பேரன்பிலே…

BGM

ஆண் : கடந்த காலம்…
பெண் : மறந்து போவோம்…

ஆண் : கரங்கள் சேர்த்து…
பெண் : நடந்து போவோம்…

ஆண் : உலகம் எங்கும் நமது ஆட்சி…

பெண் : நிலமும் வானும் அதற்கு சாட்சி…
நிலமும் வானும் நமது ஆட்சி…

ஆண் : உலகம் எங்கும் நமது ஆட்சி…
இளைய தென்றல் தாலாட்டுப் பாடும்…
இனிய ராகம் கேட்கும் வா…

பெண் : வெயில் வருது வெயில் வருது…
நிழல் கொண்டு வா…
மன்னா உன் பேரன்பிலே… ஹொய்…

ஆண் : மழை வருது மழை வருது…
குடை கொண்டு வா…
மானே உன் மாராப்பிலே…

ஆண் : மழை போல் நீயே…
பொழிந்தாய் தேனே…

பெண் : மழை வருது மழை வருது…
குடை கொண்டு வா…
ஆண் : மானே உன் மாராப்பிலே ஹொய்…

ஆண் : வெயில் வருது வெயில் வருது…
நிழல் கொண்டு வா…
பெண் : மன்னா உன் பேரன்பிலே…


Notes : Mazhai Varuthu Song Lyrics in Tamil. This Song from Raja Kaiya Vacha (1990). Song Lyrics penned by Vaali. மழை வருது பாடல் வரிகள்.


ஆகாய வெண்ணிலாவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஉமா ரமணன் & கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாஅரங்கேற்ற வேளை

Aagaya Vennilave Song Lyrics in Tamil


ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ…
பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ…

BGM

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ…
பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ…

ஆண் : மலர்சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட…
பெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட…

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ…
பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ…

BGM

ஆண் : தேவார சந்தம் கொண்டு தினம்பாடும் தென்றல் ஒன்று…
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று…

பெண் : தென் பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு…
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று…

ஆண் : இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்…
பெண் : கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்…

ஆண் : கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனிதான் ஆட…
பெண் : நடு ஜாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட…

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ…
பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ…

ஆண் : மலர்சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட…
பெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட…

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ…
பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ…

BGM

பெண் : தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்…
பாதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்…

ஆண் : வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்…
கேளாத வேணு கானம் கிளி பேச்சை கேட்கக் கூடும்…

பெண் : அடியாளின் ஜீவன் மேனி அதிகாரம் செய்வதென்ன…
ஆண் : அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன…

பெண் : இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட…
ஆண் : ஸ்ருதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட…

பெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ…
ஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ…

பெண் : மலர்சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட…
ஆண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

பெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ…
ஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ…


Notes : Aagaya Vennilave Song Lyrics in Tamil. This Song from Arangetra Velai (1990). Song Lyrics penned by Vaali. ஆகாய வெண்ணிலாவே பாடல் வரிகள்.


Paadi Parantha Song Lyrics in Tamil

பாடிப் பறந்த கிளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகிழக்கு வாசல்

Paadi Parantha Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…

ஆண் : ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே…
கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே…

ஆண் : பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…

BGM

ஆண் : ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி…
அந்த வழி போகையில காது ரெண்டும் ஊனமடி…
ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி…
அந்த வழி போகையில காது ரெண்டும் ஊனமடி…

ஆண் : கண்ட கனவு அது கானா ஆச்சு…
கண்ணு முழிச்சா அது வாழாது…
வட்ட நிலவு அது மேலே போச்சு…
கட்டியிழுத்தா அது வாராது…
வீணாச தந்தவரு யாரு யாரு…

ஆண் : பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…

BGM

ஆண் : சொல்லெடுத்து வந்த கிளி…
நெஞ்செடுத்துப் போனதடி…
நெல்லறுக்கும் சோலை ஒன்னு…
நெல்லரிச்சிப் போனதடி…

ஆண் : சொல்லெடுத்து வந்த கிளி…
நெஞ்செடுத்துப் போனதடி…
நெல்லறுக்கும் சோலை ஒன்னு…
நெல்லரிச்சிப் போனதடி…

ஆண் : கல்லிலடிச்சா அது காயம் காயம்…
சொல்லிலடிச்சா அது ஆறாது…
பஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும்…
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது…
சேதாரம் செஞ்சவரு யாரு யாரு…

ஆண் : பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…

ஆண் : ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே…
கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே…

ஆண் : பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…


Notes : Paadi Parantha Song Lyrics in Tamil. This Song from Kizhakku Vaasal (1990). Song Lyrics penned by R. V. Udayakumar. பாடிப் பறந்த கிளி பாடல் வரிகள்.


பச்ச மலப்பூவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி. உதய குமார்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகிழக்கு வாசல்

Pachamala Poovu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…

BGM

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…

ஆண் : அழகே பொன்னுமணி…
சிரிச்சா வெள்ளிமணி…
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி… ஹோய்…

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…

BGM

ஆண் : காத்தோடு மலராட கார்குழலாட…
காதோரம் லோலாக்கு சங்கதி பாட…
காத்தோடு மலராட கார்குழலாட…
காதோரம் லோலாக்கு சங்கதி பாட…

ஆண் : மஞ்சளோ தேகம்…
கொஞ்ச வரும் மேகம்…
அஞ்சுகம் தூங்க கொண்டு வரும் ராகம்…

ஆண் : நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன்…
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத்தாரேன்… ஹோய்…

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…

ஆண் : அழகே பொன்னுமணி…
சிரிச்சா வெள்ளிமணி…
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி… ஹோய்…

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…

BGM

ஆண் : பூநாத்து முகம் பார்த்து வெண்ணிலா நாண…
தாளாமல் தடம் பாா்த்து வந்த வழி போக…
பூநாத்து முகம் பார்த்து வெண்ணிலா நாண…
தாளாமல் தடம் பாா்த்து வந்த வழி போக…

ஆண் : சித்திரத்துச் சோல முத்துமணி மாலை…
மொத்ததுல தாரேன் துக்கமென்ன மானே…

ஆண் : வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்…
விண்ணிலே நூல் புடிச்சு சேல தச்சுத் தாரேன்… ஹோய்…

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…

ஆண் : அழகே பொன்னுமணி…
சிரிச்சா வெள்ளிமணி…
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி… ஹோய்…

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…


Notes : Pachamala Poovu Song Lyrics in Tamil. This Song from Kizhakku Vaasal (1990). Song Lyrics penned by R.V. Udhaya Kumar. பச்ச மலப்பூவு பாடல் வரிகள்.


நீ பாதி நான் பாதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & உமா ரமணன்இளையராஜாகேளடி கண்மணி

Nee Pathi Naan Pathi Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே…
பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே…

ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே…
பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே…

ஆண் : நீயில்லையே இனி நானில்லையே…
உயிர் நீயே…

பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா…
ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே…

BGM

பெண் : வானப்பறவை வாழ நினைத்தால்…
வாசல் திறக்கும் வேடந்தாங்கல்…

ஆண் : கானப்பறவை பாட நினைத்தால்…
கையில் விழுந்த பருவப்பாடல்…

பெண் : மஞ்சள் மணக்கும்…
என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு…
அர்த்தமிருக்கும் உன்னாலே…

ஆண் : மெல்ல சிரிக்கும்…
உன் முத்துநகை ரத்தினத்தை…
அள்ளித்தெளிக்கும் முன்னாலே…

பெண் : மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது…

ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே…
பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே…

பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா…
ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே…

BGM

ஆண் : இடது விழியில் தூசி விழுந்தால்…
வலது விழியும் கலங்கி விடுமே…

பெண் : இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்…
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்…

ஆண் : சொர்கம் எதற்கு…
என் பொன்னுலகம் பெண்ணுருவில்…
பக்கம் இருக்கு கண்ணே வா…

பெண் : இந்த மனம்தான்…
என் மன்னவனும் வந்து உலவும்…
நந்தவனம் தான் அன்பே வா…

ஆண் : சுமையானது ஒரு சுகமானது…
சுவை நீதான்…

பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா…

ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே…
நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே…

பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா…
ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே…

BGM


Notes : Nee Pathi Naan Pathi Song Lyrics in Tamil. This Song from Keladi Kannmani (1990). Song Lyrics penned by Vaali. நீ பாதி நான் பாதி பாடல் வரிகள்.


கல்யாண தேன் நிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்கே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ராஇளையராஜாமௌனம் சம்மதம்

Kalyana Then Nila Song Lyrics in Tamil


BGM

ஆண் : கல்யாண தேன் நிலா…
காய்ச்சாத பால் நிலா…
நீதானே வான் நிலா…
என்னோடு வா நிலா…

ஆண் : தேயாத வெண்ணிலா…
உன் காதல் கண்ணிலா…
ஆகாயம் மண்ணிலா…

ஆண் : கல்யாண தேன் நிலா…
காய்ச்சாத பால் நிலா…

BGM

ஆண் : தென்பாண்டி கூடலா…
தேவார பாடலா…
தீராத ஊடலா…
தேன் சிந்தும் கூடலா…

பெண் : என் அன்பு காதலா…
எந்நாளும் கூடலா…
பேரின்பம் மெய்யிலா…
நீ தீண்டும் கையிலா…

ஆண் : பார்ப்போமே ஆவலா…
வா வா நிலா…

பெண் : கல்யாண தேன் நிலா…
காய்ச்சாத பால் நிலா…

ஆண் : நீதானே வான் நிலா…
என்னோடு வா நிலா…

BGM

பெண் : உன் தேகம் தேக்கிலா…
தேன் உந்தன் வாக்கிலா…
உன் பார்வை தூண்டிலா…
நான் கைதி கூண்டிலா…

ஆண் : சங்கீதம் பாட்டிலா…
நீ பேசும் பேச்சிலா…
என் ஜீவன் என்னிலா…
உன் பார்வை தன்னிலா…

பெண் : தேனூறும் வேர்ப்பலா…
உன் சொல்லிலா… ஆஆ…

ஆண் : கல்யாண தேன் நிலா…
காய்ச்சாத பால் நிலா…
நீதானே வான் நிலா…
என்னோடு வா நிலா…

பெண் : தேயாத வெண்ணிலா…
உன் காதல் கண்ணிலா…
ஆகாயம் மண்ணிலா…

ஆண் : கல்யாண தேன் நிலா…
காய்ச்சாத பால் நிலா…


Notes : Kalyana Then Nila Song Lyrics in Tamil. This Song from Mounam Sammadham (1990). Song Lyrics penned by Pulamaipithan. கல்யாண தேன் நிலா பாடல் வரிகள்.