பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே.ஜே. யேசுதாஸ் & உமா ரமணன் | இளையராஜா | கேளடி கண்மணி |
Nee Pathi Naan Pathi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே…
பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே…
ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே…
பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே…
ஆண் : நீயில்லையே இனி நானில்லையே…
உயிர் நீயே…
பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா…
ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே…
—BGM—
பெண் : வானப்பறவை வாழ நினைத்தால்…
வாசல் திறக்கும் வேடந்தாங்கல்…
ஆண் : கானப்பறவை பாட நினைத்தால்…
கையில் விழுந்த பருவப்பாடல்…
பெண் : மஞ்சள் மணக்கும்…
என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு…
அர்த்தமிருக்கும் உன்னாலே…
ஆண் : மெல்ல சிரிக்கும்…
உன் முத்துநகை ரத்தினத்தை…
அள்ளித்தெளிக்கும் முன்னாலே…
பெண் : மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது…
ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே…
பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே…
பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா…
ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே…
—BGM—
ஆண் : இடது விழியில் தூசி விழுந்தால்…
வலது விழியும் கலங்கி விடுமே…
பெண் : இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்…
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்…
ஆண் : சொர்கம் எதற்கு…
என் பொன்னுலகம் பெண்ணுருவில்…
பக்கம் இருக்கு கண்ணே வா…
பெண் : இந்த மனம்தான்…
என் மன்னவனும் வந்து உலவும்…
நந்தவனம் தான் அன்பே வா…
ஆண் : சுமையானது ஒரு சுகமானது…
சுவை நீதான்…
பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா…
ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே…
நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே…
பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா…
ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே…
—BGM—
Notes : Nee Pathi Naan Pathi Song Lyrics in Tamil. This Song from Keladi Kannmani (1990). Song Lyrics penned by Vaali. நீ பாதி நான் பாதி பாடல் வரிகள்.