பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | உமா ரமணன் & கே.ஜே. யேசுதாஸ் | இளையராஜா | அரங்கேற்ற வேளை |
Aagaya Vennilave Song Lyrics in Tamil
ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ…
பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ…
—BGM—
ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ…
பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ…
ஆண் : மலர்சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட…
பெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட…
ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ…
பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ…
—BGM—
ஆண் : தேவார சந்தம் கொண்டு தினம்பாடும் தென்றல் ஒன்று…
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று…
பெண் : தென் பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு…
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று…
ஆண் : இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்…
பெண் : கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்…
ஆண் : கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனிதான் ஆட…
பெண் : நடு ஜாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட…
ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ…
பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ…
ஆண் : மலர்சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட…
பெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட…
ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ…
பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ…
—BGM—
பெண் : தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்…
பாதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்…
ஆண் : வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்…
கேளாத வேணு கானம் கிளி பேச்சை கேட்கக் கூடும்…
பெண் : அடியாளின் ஜீவன் மேனி அதிகாரம் செய்வதென்ன…
ஆண் : அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன…
பெண் : இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட…
ஆண் : ஸ்ருதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட…
பெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ…
ஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ…
பெண் : மலர்சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட…
ஆண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
பெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ…
ஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ…
Notes : Aagaya Vennilave Song Lyrics in Tamil. This Song from Arangetra Velai (1990). Song Lyrics penned by Vaali. ஆகாய வெண்ணிலாவே பாடல் வரிகள்.