Tag Archives: Romantic Love Songs Lyrics

Romantic Love Songs Lyrics

oru-paadhi-kadhavu-song-lyrics

ஒரு பாதி கதவு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்வந்தனா ஸ்ரீனிவாசன் & ஹரிசரண்ஜி. வி. பிரகாஷ் குமார்தாண்டவம்

Oru Paadhi Kadhavu Song Lyrics in Tamil


ஆண் : நீ என்பதே நான்தானடி…
நான் என்பதே நாம்தானடி… ஹே…

BGM

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்…
சோ்த்து வைக்க காத்திருந்தோம்…

பெண் : ஒரு பாதி கதவு நீயடா…
மறு பாதி கதவு நானடா…
தாழ் திறந்தே காத்திருந்தோம்…
காற்று வீச பார்த்திருந்தோம்…

ஆண் : நீ என்பதே நான்தானடி…
நான் என்பதே நாம்தானடி…

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…

BGM

ஆண் : இரவு வரும் திருட்டு பயம்…
கதவுகளை சோ்த்து விடும்…

பெண் : ஓ… கதவுகளை திருடிவிடும்…
அதிசயத்தை காதல் செய்யும்…

ஆண் : இரண்டும் கை கோர்த்து சோ்ந்தது…
இடையில் பொய்பூட்டு போனது…

பெண் : வாசல் தல்லாடுதே…
திண்டாடுதே… கொண்டாடுதே…

BGM

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…

BGM

ஆண் : ஓ… இடி இடித்தும் மழை அடித்தும்…
அசையாமல் நின்றிருந்தோம்…

பெண் : ஓ… இன்றேனோ நம் மூச்சும்…
மென் காற்றில் இணைந்து விட்டோம்…

ஆண் : இதயம் ஒன்றாகி போனதே…
கதவே இல்லாமல் ஆனதே…

பெண் : இனிமேல் நம் வீட்டிலே…
பூங்காற்றுதான் தினம் வீசுமே…

BGM

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்…
சோ்த்து வைக்க காத்திருந்தோம்…

பெண் : ஒரு பாதி கதவு நீயடா…
மறு பாதி கதவு நானடா…
தாழ் திறந்தே காத்திருந்தோம்…
காற்று வீச பார்த்திருந்தோம்…

ஆண் : நீ என்பதே நான்தானடி…
நான் என்பதே நாம்தானடி…


Notes : Oru Paadhi Kadhavu Song Lyrics in Tamil. This Song from Thaandavam (2012). Song Lyrics penned by Na. Muthukumar. ஒரு பாதி கதவு பாடல் வரிகள்.


நீ பார்த்த விழிகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்ஸ்வேதா மோகன் & விஜய் யேசுதாஸ்அனிருத் ரவிச்சந்தா்மூனு

Nee Paartha Vizhigal Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ பார்த்த விழிகள்…
நீ பார்த்த நொடிகள்… ஹம்ம்… ஹம்ம்…
கேட்டாலும் வருமா…
கேட்காத வரமா…

பெண் : இது போதுமா…
இதில் அவசரமா…
இன்னும் வேண்டுமா…
அதில் நிறைந்திடுமா…
நாம் பார்த்தனால்…
நம் வசம் வருமா…
உயிர் தாங்குமா…
என் விழிகளில் முதல் வலி…

ஆண் : நிஜமடி பெண்ணே…
தொலைவினில் உன்னை…
நிலவினில் கண்டேன் நடமாட…
வலியடி பெண்ணே…
வரைமுறை இல்லை…
வதைக்கிறாய் என்னை மெதுவாக…

ஆண் : நீ பார்த்த விழிகள்…
நீ பார்த்த நொடிகள்… ஹம்ம்… ஹம்ம்…
கேட்டாலும் வருமா…
கேட்காத வரமா…

BGM

ஆண் : நிழல் தரும் இவள் பார்வை…
வழி எங்கும் இனி தேவை…
உயிரே… உயிரே…
உயிர் நீதான் என்றால்…
உடனே வருவாய்…
உடல் சாகும் முன்னாள்…

பெண் : அனலின்றி குளிர் வீசும்…
இது எந்தன் சிறை வாசம்…

ஆண் : இதில் நீ மட்டும் வேண்டும்…
பெண்ணே…

ஆண் : நிஜமடி பெண்ணே…
தொலைவினில் உன்னை…
நிலவினில் கண்டேன் நடமாட…
வலியடி பெண்ணே…
வரைமுறை இல்லை…
வதைக்கிறாய் என்னை மெதுவாக…

பெண் : நீ பார்த்த விழிகள்…
நீ பார்த்த நொடிகள்… ஹம்ம்… ஹம்ம்…
கேட்டாலும் வருமா…
கேட்காத வரமா…

குழு (ஆண்கள்) : இது போதுமா…

ஆண் : இதில் அவசரமா…

குழு (ஆண்கள்) : இன்னும் வேண்டுமா…

ஆண் : அதில் நிறைந்திடுமா…

குழு (ஆண்கள்) : நாம் பார்த்தனால்…

ஆண் : நம் வசம் வருமா…

குழு (ஆண்கள்) : உயிர் தாங்குமா…

ஆண் : ஓஹோ… ஓஓஹோஹோ…

BGM


Notes : Nee Paartha Vizhigal Song Lyrics in Tamil. This Song from மூனு 3 (2012). Song Lyrics penned by Dhanush. நீ பார்த்த விழிகள் பாடல் வரிகள்.


பார்த்த முதல் நாளே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபாம்பே ஜெயஸ்ரீ & உன்னி மேனன்ஹாரிஸ் ஜெயராஜ்வேட்டையாடு விளையாடு

Paartha Mudhal Naale Song Lyrics in Tamil


BGM

பெண் : பார்த்த முதல் நாளே…
உன்னைப் பார்த்த முதல் நாளே…
காட்சிப்பிழை போலே…
உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே…

பெண் : ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்…
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்…
என் பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம்…
என்றும் மறையாதே…

ஆண் : காட்டிக் கொடுக்கிறதே…
கண்ணே காட்டிக் கொடுக்கிறதே…
காதல் வழிகிறதே…
கண்ணில் காதல் வழிகிறதே…

ஆண் : உன் விழியில் வழியும் பிரியங்களை…
பார்த்தேன் கடந்தேன் பகல் இரவை…
உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின்…
நானும் மழை ஆனேன்…

BGM

பெண் : காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்…
தேடிப்பிடிப்பதுந்தன் முகமே…
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி…
காட்சிக்குள் நிற்பதும் உன்முகமே…

ஆண் : என்னைப் பற்றி எனக்கே…
தெரியாத பலவும் நீ அறிந்து நடப்பதை வியப்பேன்…
உனை ஏதும் கேட்காமல் உனதாசை அனைத்தும்…
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்…

பெண் : போகின்றேன் என நீ பல நூறு முறைகள்…
விடை பெற்றும் போகாமல் இருப்பாய்…
சரியென்று சரியென்று உனைப் போகச் சொல்லி…
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்…
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்…

ஆண் : காட்டிக் கொடுக்கிறதே…
கண்ணே காட்டிக் கொடுக்கிறதே…
காதல் வழிகிறதே…
கண்ணில் காதல் வழிகிறதே…

பெண் : ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்…
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்…

ஆண் : உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின்…
நானும் மழை ஆனேன்…

BGM

ஆண் : உன்னைமறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய்…
தூங்காமல் அதைக் கண்டு ரசித்தேன்…
தூக்கம் மறந்து நான் உனைப் பார்க்கும் காட்சி…
கனவாக வந்ததென்று நினைத்தேன்…

பெண் : யாரும் மானிடரே இல்லாத இடத்தில்…
சிறுவீடு கட்டிக்கொள்ளத் தோன்றும்…
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை…
மரம் தோறும் செதுக்கிட வேண்டும்…

ஆண் : கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்…
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்…
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும்…
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்…
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்…

பெண் : பார்த்த முதல் நாளே…
உன்னைப் பார்த்த முதல் நாளே…
காட்சிப்பிழை போலே உணர்ந்தேன்…
காட்சிப்பிழை போலே…

பெண் : ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்…
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்…
என் பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம்…
என்றும் மறையாதே…

BGM


Notes : Paartha Mudhal Naale Song Lyrics in Tamil. This Song from Vettaiyaadu Vilaiyaadu (2006). Song Lyrics penned by Thamarai. பார்த்த முதல் நாளே பாடல் வரிகள்.


முழுமதி அவளது முகமாகும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஸ்ரீனிவாஸ்ஏ.ஆர்.ரகுமான்ஜோதா அக்பர்

Mulumathy Avalathu Mugamaagum Song Lyrics in Tamil


BGM

ஆண் : முழுமதி அவளது முகமாகும்…
மல்லிகை அவளது மணமாகும்…
மின்னல்கள் அவளது விழியாகும்…
மௌனங்கள் அவளது மொழியாகும்…

ஆண் : மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்…

ஆண் : அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்…
இதயம் கொடு என வரம் கேட்டேன்…
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்… ஓஹோ…

ஆண் : ஓஹோ… முழுமதி அவளது முகமாகும்…
மல்லிகை அவளது மணமாகும்…
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்…

BGM

ஆண் : கால்தடமே பதியாத…
கடல்தீவு அவள்தானே…
அதன் வாசனை மணலில் பூச்செடி ஆக நினைத்தேன்…

ஆண் : கேட்டதுமே மறக்காத…
மெல்லிசையும் அவள்தானே…
அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் இருந்தேன்…

ஆண் : ஒரு கரையாக அவளிருக்க…
மறுகரையாக நான் இருக்க…
இடையில் தனிமை தளும்புதே நதியாய்…

ஆண் : கானல் நீரில் மீன் பிடிக்க…
கைகள் நினைத்தால் முடிந்திடுமா…
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே…

ஆண் : ஓஹோ… முழுமதி அவளது முகமாகும்…
மல்லிகை அவளது மணமாகும்…
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்…

BGM

ஆண் : அமைதியுடன் அவள் வந்தாள்…
விரல்களை நான் பிடித்து கொண்டேன்…
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்…

ஆண் : உறக்கம் வந்தே தலைகோத…
மரத்தடியில் இளைப்பாறி…
கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம்…

ஆண் : அருகில் இருந்தால் ஒரு நிமிடம்…
தொலைவில் தெரிந்தால் மறு நிமிடம்…
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்…

ஆண் : அவளுக்கும் எனக்கும் நடுவினிலே…
திரையொன்று தெரிந்தது எதிரினிலே…
முகம் மூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா…

ஆண் : ஓஹோ… முழுமதி அவளது முகமாகும்…
மல்லிகை அவளது மணமாகும்…
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்…

BGM


Notes : Mulumathy Avalathu Mugamaagum Song Lyrics in Tamil. This Song from Jodhaa Akbar (2008). Song Lyrics penned by Na. Muthukumar. முழுமதி அவளது முகமாகும் பாடல் வரிகள்.


கண்கள் இரண்டால்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபெல்லி ராஜ் & தீபா மரியம்ஜேம்ஸ் வசந்தன்சுப்ரமணியபுரம்

Kangal Irandal Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்…
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென…
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்…
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்…

ஆண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்…
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென…
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்…
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்…

பெண் : பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்…
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேனே…
மாற்றி கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்…
ஒரு வண்ணக் கவிதை காதல்தானா…
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே…
இதை இருளிலும் படித்திட முடிகிறதே…

BGM

ஆண் : இரவும் அல்லாத பகலும் அல்லாத…
பொழுதுகள் உன்னோடு கழியுமா…
தொடவும் கூடாத படவும் கூடாத…
இடைவெளி அப்போது குறையுமா…

பெண் : மடியினில் சாய்ந்திட துடிக்குதே…
மறுபுறம் நாணமும் தடுக்குதே…
இது வரை யாரிடமும் சொல்லாதகதை…

ஆண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்…
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென…
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்…
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்…

BGM

பெண் : கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத…
மனதிற்க்குள் எப்போது நுழைந்திட்டாய்…
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத…
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்…

ஆண் : உன்னை இன்றி வோ் ஒரு நினைவில்லை…
இனி இந்த ஊன் உயிர் எனதில்லை…
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர…

பெண் : கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்…
ஒரு வண்ணக் கவிதை காதல்தானா…
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே…
இதை இருளிலும் படித்திட முடிகிறதே…

ஆண் : பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்…
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேனே…
மாற்றி…

பெண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்…
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென…

ஆண் : சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்…
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்…


Notes : Kangal Irandal Song Lyrics in Tamil. This Song from Subramaniapuram (2008). Song Lyrics penned by Thamarai. கண்கள் இரண்டால் பாடல் வரிகள்.


அனல் மேலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசுதா ரகுநாதன்ஹாரிஸ் ஜெயராஜ்வாரணம் ஆயிரம்

Annul Maelae Song Lyrics in Tamil


பெண் : அனல் மேலே பனித்துளி…
அலைபாயும் ஒரு கிளி…
மரம் தேடும் மழைத்துளி…
இவைதானே இவள்இனி…
இமை இரண்டும் தனித்தனி…
உறக்கங்கள் உறைபனி…
எதற்காக தடை இனி…

பெண் : அனல் மேலே பனித்துளி…
அலைபாயும் ஒரு கிளி…
மரம் தேடும் மழைத்துளி…
இவைதானே இவள்இனி…
இமை இரண்டும் தனித்தனி…
உறக்கங்கள் உறைபனி…
எதற்காக தடை இனி…

BGM

பெண் : எந்தக்காற்றின் அலாவளில்…
மலா் இதழ்கள் விரிந்திடுமோ…
எந்த தேவ வினாடியில்…
மன்னரைகள் திறந்திடுமோ…

பெண் : ஒரு சிறுவலி இருந்ததுவே…
இதயத்திலே இதயத்திலே…
உனது இருவிழி தடவியதால்…
அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே…
உதிரட்டுமே உடலின் திரை…
அதுதானே இனி நிலாவின் கரை கரை…

பெண் : அனல் மேலே பனித்துளி…
அலைபாயும் ஒரு கிளி…
மரம் தேடும் மழைத்துளி…
இவைதானே இவள்இனி…
இமை இரண்டும் தனித்தனி…
உறக்கங்கள் உறைபனி…
எதற்காக தடை இனி…

BGM

பெண் : சந்தித்தோமே கனாக்களில்…
சில முறையா பல முறையா…
அந்தி வானில் உலாவினோம்…
அது உனக்கு நினைவில்லையா…

பெண் : இரு கரைகளை உடைத்திடவே…
பெருகிடுமா கடல் அலையே…
இரு இரு உயிர் தத்தளிக்கையில்…
வழிசொல்லுமா கலங்கரையே…
உனதலைகள் எனை அடிக்க…
கரை சோ்வதும் கனாவில் நிகழ்ந்திட…

பெண் : அனல் மேலே பனித்துளி…
அலைபாயும் ஒரு கிளி…
மரம் தேடும் மழைத்துளி…
இவைதானே இவள்இனி…
இமை இரண்டும் தனித்தனி…
உறக்கங்கள் உறைபனி…
எதற்காக தடை இனி…

BGM


Notes : Annul Maelae Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. அனல் மேலே பாடல் வரிகள்.


இறகை போலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதியுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாநான் மகான் அல்ல

Iragai Poley Song Lyrics in Tamil


BGM

ஆண் : இறகை போலே அலைகிறேனே…
உந்தன் பேச்சை கேட்கையிலே…
குழந்தை போலே தவழ்கிறேனே…
உந்தன் பார்வை தீண்டயிலே…

ஆண் : தொலையாமல் தொலைந்தேனே…
உன் கைகள் என்னை தொட்டதும்…
கரையாமல் கரைந்தேனே…
உன் மூச்சு காற்று பட்டதும்…

ஆண் : அநியாய காதல் வந்ததே…
அடங்காத ஆசை தந்ததே…
எனக்குள்ளே ஏதோ…
மின்னல் போலே தொட்டு சென்றதே…

ஆண் : கண்ணோரம் காதல் வந்தால்…
கண்ணீரும் தித்திப்பாகும்…
வேறுஒன்றும் தேவையில்லை…
நீ மட்டும் போதும் போதும்…

ஆண் : என்னோடு நீயும் வந்தால்…
எல்லாமே கையில் சேரும்…
வேறுஒன்றும் தேவையில்லை…
நீ மட்டும் போதும் போதும்… ஓ… ஓ… ஓ…

BGM

ஆண் : கூட வந்து நீ நிற்பதும்…
கூடுவிட்டு நான் செல்வதும்…
தொடருதே தொடருதே நாடகம்…

ஆண் : பாதி மட்டுமே சொல்வதும்…
மீதி நெஞ்சிலே என்பதும்…
புரியுதே புரியுதே காரணம்…

ஆண் : நேரங்கள் தீருதே…
வேகங்கள் கூடுதே…
பூவே உன் கண்ணுக்குள்ளே…
பூமி பந்து சுத்துதே…

ஆண் : கண்ணோரம் காதல் வந்தால்…
கண்ணீரும் தித்திப்பாகும்…
வேறுஒன்றும் தேவையில்லை…
நீ மட்டும் போதும் போதும்…

ஆண் : என்னோடு நீயும் வந்தால்…
எல்லாமே கையில் சேரும்…
வேறுஒன்றும் தேவையில்லை…
நீ மட்டும் போதும் போதும்… ஓ… ஓ… ஓ…

BGM

ஆண் : ஹே… என்னானதோ ஏதானதோ…
இல்லாமல் போச்சே தூக்கமும்…
கண்ணே உன்னை காணாமல்…
நான் இல்லை… ஓஓஓ…

ஆண் : என்மீதிலே உன் வாசனை…
எப்போதும் வீச பார்கிறேன்…
அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை… ஓஓஓ…

ஆண் : நீ என்னை காண்பதே…
வானவில் போன்றதே…
துாரத்தில் உன்னை கண்டால்…
தூறல் நெஞ்சில் சிந்துதே… ஓ… ஓ… ஓ…

BGM

ஆண் : கண்ணோரம் காதல் வந்தால்…
கண்ணீரும் தித்திப்பாகும்…
வேறுஒன்றும் தேவையில்லை…
நீ மட்டும் போதும் போதும்…

ஆண் : என்னோடு நீயும் வந்தால்…
எல்லாமே கையில் சேரும்…
வேறுஒன்றும் தேவையில்லை…
நீ மட்டும் போதும் போதும்… ஓ… ஓ… ஓ…

BGM


Notes : Iragai Poley Song Lyrics in Tamil. This Song from Naan Mahaan Alla (2010). Song Lyrics penned by Yugabharathi. இறகை போலே பாடல் வரிகள்.


மாலை மங்கும் நேரம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைரானினா ரெட்டிபிரகாஷ் நிக்கிரௌத்திரம்

Malai Mangum Neram Song Lyrics in Tamil


BGM

பெண் : மாலை மங்கும் நேரம்…
ஒரு மோகம் கண்ணின் ஓரம்…
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்…
போதும் என்று தோன்றும்…

பெண் : காலை வந்தால் என்ன…
வெயில் எட்டி பார்த்தால் என்ன…
கடிகாரம் காட்டும் நேரம்…
அதை நம்ப மாட்டேன் நானும்…

பெண் : பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்…
தீயாய் மாறும் தேகம் தேகம்…
உன் கைகள் என்னை தொட்டு கோலம் போடும்…
வாழ்வின் எல்லை தேடும் தேடும்…

பெண் : மாலை மங்கும் நேரம்…
ஒரு மோகம் கண்ணின் ஓரம்…
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்…
போதும் என்று தோன்றும்…

BGM

பெண் : ஒரு வீட்டில் நாம் இருந்து…
ஓர் இலையில் நம் விருந்து…
இரு தூக்கம் ஒரு கனவில்…
மூழ்கி வாழ்க்கை தொடங்கும்…

பெண் : நான் சமையல் செய்திடுவேன்…
நீ வந்து அணைத்திடுவாய்…
என் பசியும் உன் பசியும்…
சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்…

பெண் : நான் கேட்டு ஆசைபட்ட பாடல் நூறு…
நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்…
தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீதான்…
காலம் நேரம் தாண்டி வாழ்வோம்…

பெண் : மாலை மங்கும் நேரம்…
ஒரு மோகம் கண்ணின் ஓரம்…
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்…
போதும் என்று தோன்றும்…

பெண் : காலை வந்தால் என்ன…
வெயில் எட்டி பார்த்தால் என்ன…
கடிகாரம் காட்டும் நேரம்…
அதை நம்ப மாட்டேன் நானும்…

BGM

பெண் : பால் சிந்தும் பௌர்ணமியில்…
நாம் நனைவோம் பனி இரவில்…
நம் மூச்சுக் காய்ச்சலில்…
இந்த பனியும் நடுங்கும்…

பெண் : வீடெங்கும் உன் பொருட்கள்…
அசைந்தாடும் உன் உடைகள்…
தனியாக நான் இல்லை…
என்றே சொல்லி சினுங்கும்…

பெண் : தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே…
தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு…
உன் வாசம் என்னில் பட்டும் வாடி போனேன்…
வாசல் தூணாய் நானும் ஆனேன்…

பெண் : மாலை மங்கும் நேரம்…
ஒரு மோகம் கண்ணின் ஓரம்…
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்…
போதும் என்று தோன்றும்…

பெண் : காலை வந்தால் என்ன…
வெயில் எட்டி பார்த்தால் என்ன…
கடிகாரம் காட்டும் நேரம்…
அதை நம்ப மாட்டேன் நானும்…

BGM


Notes : Malai Mangum Neram Song Lyrics in Tamil. This Song from Rowthiram (2011). Song Lyrics penned by Thamarai. மாலை மங்கும் நேரம் பாடல் வரிகள்.


முன் அந்தி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & மேகாஹாரிஸ் ஜெயராஜ்ஏழாம் அறிவு

Mun Andhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : முன் அந்திச்சாரல் நீ…
முன் ஜென்மத் தேடல் நீ…
நான் தூங்கும் நேரத்தில் தொலைதூரத்தில்…
வரும் பாடல் நீ…

ஆண் : பூ பூத்த சாலை நீ…
புலராத காலை நீ…
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்…
வரும் கனவு நீ…

ஆண் : ஹேஹே… பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே…
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே…
தன்னால் உள்ளே உள்ளே…
உருகுது நெஞ்சமே…

ஆண் : வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே…
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே…
வந்தாய் இன்பம் சொல்ல…
வார்த்தைகள் கொஞ்சமே…

ஆண் : முன் அந்திச்சாரல் நீ…
முன் ஜென்மத் தேடல் நீ…
நான் தூங்கும் நேரத்தில் தொலைதூரத்தில்…
வரும் பாடல் நீ…

ஆண் : பூ பூத்த சாலை நீ…
புலராத காலை நீ…
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்…
வரும் கனவு நீ…

BGM

ஆண் : ஓ… அழகே ஓ… இமை அழகே ஏ…
கலைந்தாலும் உந்தன் கூந்தல் ஓரழகே…
விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே…

ஆண் : அடி உன்னைத் தீண்டத்தானே…
மேகம் தாகம் கொண்டு மழையாய் தூவாதோ…
வந்து உன்னைத் தொட்ட பின்னே…
தாகம் தீர்ந்ததென்று கடலில் சேராதோ… ஓஓ…

ஆண் : ஹேஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே…
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே…
தன்னால் உள்ளே உள்ளே…
உருகுது நெஞ்சமே…

ஆண் : ஓஹோ ஹோ… வா வா பெண்ணே பெண்ணே…
பெண்ணே பெண்ணே…
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே…
வந்தாய் இன்பம் சொல்ல…
வார்த்தைகள் கொஞ்சமே…

BGM

ஆண் : அதிகாலை ஓஹோ…
அந்தி மாலை ம்ம்…
உன்னை தேடி பார்க்கச் சொல்லிப் போராடும்…
உனைக் கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும்…

ஆண் : பெண்ணே பம்பரத்தை போலே…
என்னை சுற்ற வைத்தாய் எங்கும் நில்லாமல்…
தினம் அந்தரத்தின் மேலே…
என்னைத் தொங்க வைத்தாய் காதல் சொல்லாமல்…

ஆண் : ஹேஹே… பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே…
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே…
தன்னால் உள்ளே உள்ளே…
உருகுது நெஞ்சமே…

ஆண் : வா வா வா…

ஆண் : வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே…
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே…
வந்தாய் இன்பம் சொல்ல…
வார்த்தைகள் கொஞ்சமே…

ஆண் : முன் அந்திச்சாரல் நீ…
முன் ஜென்மத் தேடல் நீ…
நான் தூங்கும் நேரத்தில் தொலைதூரத்தில்…
வரும் பாடல் நீ…

ஆண் : பூ பூத்த சாலை நீ…
புலராத காலை நீ…
காலை நீ…
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்…
வரும் கனவு நீ…

BGM


Notes : Mun Andhi Song Lyrics in Tamil. This Song from 7 Aum Arivu (2011). Song Lyrics penned by Na. Muthukumar. முன் அந்தி பாடல் வரிகள்.


யாரோ இவன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா.முத்துக்குமார்சைந்தவி & ஜி. வி. பிரகாஷ் குமார்ஜி. வி. பிரகாஷ் குமார்உதயம் என் எச் 4

Yaaro Ivan Song Lyrics in Tamil


BGM

பெண் : யாரோ இவன் யாரோ இவன்…
என் பூக்களின் வேரோ இவன்…
என் பெண்மையை வென்றான் இவன்…
அன்பானவன்…

ஆண் : உன் காதலில் கரைகின்றவன்…
உன் பாா்வையில் உறைகின்றவன்…
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்…

பெண் : என் கோடையில் மழையானவன்…
என் வாடையில் வெயிலானவன்…
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்…

BGM

ஆண் : எங்கே உன்னை கூட்டிச்செல்ல…
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல…

பெண் : என் பெண்மையும் இளைப்பாறவே…
உன் மாா்பிலே இடம் போதுமே…

ஆண் : ஏன் இன்று இடைவெளி குறைகிறதே…

பெண் : மெதுவாக இதயங்கள் இணைகிறதே…

ஆண் : உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே…

பெண் : யாரோ இவன் யாரோ இவன்…
என் பூக்களின் வேரோ இவன்…
என் பெண்மையை வென்றான் இவன்…
அன்பானவன்…

BGM

பெண் : உன் சுவாசங்கள் எனைத் தீண்டினால்…
என் நாணங்கள் ஏன் தோற்குதோ…

ஆண் : உன் வாசனை வரும் வேளையில்…
என் யோசனை ஏன் மாறுதோ…

பெண் : நதியினில் ஒரு இலை விழுகிறதே…

ஆண் : அலைகளில் மிதந்தது தவழ்கிறதே…

பெண் : கரைசேருமா உன் கைசேருமா எதிா்காலமே…

BGM

பெண் : எனக்காகவே பிறந்தான் இவன்…
எனை காக்கவே வருவான் இவன்…
என் பெண்மையை வென்றான் இவன்…
அன்பானவன்…

பெண் : என் கோடையில் மழையானவன்…
என் வாடையில் வெயிலானவன்…
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்…

BGM


Notes : Yaaro Ivan Song Lyrics in Tamil. This Song from Udhayam NH4 (2014). Song Lyrics penned by Na. Muthukumar. யாரோ இவன் பாடல் வரிகள்.