பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா.முத்துக்குமார் | சைந்தவி & ஜி. வி. பிரகாஷ் குமார் | ஜி. வி. பிரகாஷ் குமார் | உதயம் என் எச் 4 |
Yaaro Ivan Song Lyrics in Tamil
—BGM—
பெண் : யாரோ இவன் யாரோ இவன்…
என் பூக்களின் வேரோ இவன்…
என் பெண்மையை வென்றான் இவன்…
அன்பானவன்…
ஆண் : உன் காதலில் கரைகின்றவன்…
உன் பாா்வையில் உறைகின்றவன்…
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்…
பெண் : என் கோடையில் மழையானவன்…
என் வாடையில் வெயிலானவன்…
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்…
—BGM—
ஆண் : எங்கே உன்னை கூட்டிச்செல்ல…
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல…
பெண் : என் பெண்மையும் இளைப்பாறவே…
உன் மாா்பிலே இடம் போதுமே…
ஆண் : ஏன் இன்று இடைவெளி குறைகிறதே…
பெண் : மெதுவாக இதயங்கள் இணைகிறதே…
ஆண் : உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே…
பெண் : யாரோ இவன் யாரோ இவன்…
என் பூக்களின் வேரோ இவன்…
என் பெண்மையை வென்றான் இவன்…
அன்பானவன்…
—BGM—
பெண் : உன் சுவாசங்கள் எனைத் தீண்டினால்…
என் நாணங்கள் ஏன் தோற்குதோ…
ஆண் : உன் வாசனை வரும் வேளையில்…
என் யோசனை ஏன் மாறுதோ…
பெண் : நதியினில் ஒரு இலை விழுகிறதே…
ஆண் : அலைகளில் மிதந்தது தவழ்கிறதே…
பெண் : கரைசேருமா உன் கைசேருமா எதிா்காலமே…
—BGM—
பெண் : எனக்காகவே பிறந்தான் இவன்…
எனை காக்கவே வருவான் இவன்…
என் பெண்மையை வென்றான் இவன்…
அன்பானவன்…
பெண் : என் கோடையில் மழையானவன்…
என் வாடையில் வெயிலானவன்…
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்…
—BGM—
Notes : Yaaro Ivan Song Lyrics in Tamil. This Song from Udhayam NH4 (2014). Song Lyrics penned by Na. Muthukumar. யாரோ இவன் பாடல் வரிகள்.