Tag Archives: ஹரிசரண்

vaanam-thaiyaga-song-lyrics-in-tamil

வானம் தாயாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஹரிசரண்சுந்தரமூர்த்தி கே.எஸ்பொம்மை நாயகி

Vaanam Thaiyaga Song Lyrics in Tamil


BGM

ஆண் : வானம் தாயாக…
பூமி நானாக…
வாழும் நாளெல்லாம் யாவும் நீயாக…

ஆண் : தகப்பன் சாமி நீயடி…
இரு விழியால் வரம் தருவாய்…
கலங்கமில்லா தெய்வமே கலங்குவதேன்…

ஆண் : எழுதி பார்க்க வண்ணமில்லை…
உழுது பார்க்க மண்ணுமில்லை…
அழுது பார்க்க எண்ணமில்லை…
அதற்கு யாரா… ஆரிராரோ…

ஆண் : எழுதி பார்க்க வண்ணமில்லை…
உழுது பார்க்க மண்ணுமில்லை…
அழுது பார்க்க எண்ணமில்லை…
அதற்கு யாரா… ஆரிராரோ…

BGM

ஆண் : நாடோடடி ஆனாலும் வழித்துணை இவளடா…
நான் இடரி வீழந்தாலும் நடை வண்டி இவளடா…

ஆண் : கிளியின் தோள்களில் மிருகம் சாய்ந்திட…
பயந்து போனதே பறவை ஜாதி…
இதற்கு காரணம் அறிவேன் யாரிடம்…
உலகம் மாறிடுமோ…

ஆண் : கடலும் நீரும் மலையும் தேனும்…
இரண்டை போல இவளும் நானும்…
இதற்கு மேல என்ன வேணும்… ம்ம் ம்ம்…

பெண் : அப்பா…

ஆண் : எழுதி பார்க்க வண்ணமில்லை…
உழுது பார்க்க மண்ணுமில்லை…
அழுது பார்க்க எண்ணமில்லை…
அதற்கு யாரா… ஆரிராரோ…

BGM

ஆண் : வானம் தாயாக…
பூமி நானாக…
வாழும் நாளெல்லாம் யாவும் நீயாக…

ஆண் : தகப்பன் சாமி நீயடி…
இரு விழியால் வரம் தருவாய்…
கலங்கமில்லா தெய்வமே கலங்குவதேன்…

BGM


Notes : Vaanam Thaiyaga Song Lyrics in Tamil. This Song from Bommai Nayagi (2023). Song Lyrics penned by Kabilan. வானம் தாயாக பாடல் வரிகள்.


அழகியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅர்ஜுன் சாண்டி, ஹரிசரண் & ஜொனிடா காந்திஏ.ஆர்.ரகுமான்காற்று வெளியிடை

Azhagiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெய்டிங் ஃபாா் தி புன்னகை… சிாிடி…
காணவில்லை ஹாா்ட் பீட்… திருடி…

ஆண் : அடடா நான் கவிஞன்…
உனை பாா்த்து கெட்டுப்போன கவிஞன்…
ஹானஸ்ட்டா நான் பேசவா…
இல்ல இது போதுமா…
ஓ மை டாா்லிங்… நாங்க கம்மிங்…
புது புது கணக்கெல்லாம் பென்டிங்…
ஓ கோரஸ்ஸா நான் கேட்கவா…
எஸ்சா… எஸ்சா… நோவா… எஸ்சா…

ஆண் : அழகியே… மோி மீ மோி மீ… அழகியே…
பிளிா்ட் வித் மீ கெட் ஹை வித் மீ… அழகியே…
கோவம் வந்தா கூச்சம் வந்தா டோன்ட் ஒா்ாி …
அழகியே ஹே அழகியே…

ஆண் : ஹே அழகியே… மோி மீ மோி மீ… அழகியே…
பிளிா்ட் வித் மீ கெட் ஹை வித் மீ… அழகியே…
காதல் வந்தா மேட்டா் வந்தா கால் அடி…
அழகியே ஹே அழகியே ஹே…

BGM

ஆண் : யாரும் கேட்கா எது ஒன்றை எது ஒன்றை…
நான் கேட்டேன் உன்னை…
அதை தந்தால் நன்றி பிடிவாதம் இன்றி…
நீ தந்தால் நன்றி துளி துளிரே…
துளி காலம் கேட்டேன்…
துளி காதல் கேட்டேன்…
துளி காமம் கேட்டேன்…
மறு உயிரே…
மறுக்காதே நீ…
மறக்காதே நீ…
எந்தன் அழகியே நீ…

ஆண் : நீ நீ நீ… நீ நீ நீ…
நின் நீ நின் நீ நின் நீ…

ஆண் : அழகியே… மோி மீ மோி மீ… அழகியே…
பிளிா்ட் வித் மீ கெட் ஹை வித் மீ… அழகியே…
கோவம் வந்தா கூச்சம் வந்தா டோன்ட் ஒா்ாி…
அழகியே ஹே அழகியே…

ஆண் : ஹே அழகியே… மோி மீ மோி மீ அழகியே…
பிளிா்ட் வித் மீ கெட் ஹை வித் மீ… அழகியே…
காதல் வந்தா மேட்டா் வந்தா கால் அடி…
அழகியே ஹே அழகியே ஹே…


Notes : Azhagiye Song Lyrics in Tamil. This Song from Kaatru Veliyidai (2017). Song Lyrics penned by Madhan Karky. அழகியே பாடல் வரிகள்.


சின்னஞ்சிறு நிலவே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
இளங்கோ கிருஷ்ணன்ஹரிசரண்ஏ.ஆர்.ரகுமான்பொன்னியின் செல்வன் 2

Chinnanjiru Nilave Lyrics in Tamil


BGM

ஆண் : சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ…
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ…
அர்த்தம் அழிந்ததடி அன்னமே ரத்தமும் ஓய்ந்ததடி…
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே யாதினி கோல்யானே…

ஆண் : யாங்குனைத் தேடுவலும் அன்னமே ஏதினி செய்குவனோ…
ஓங்கூழ் ஆனதடி அன்னமே தீங்கிருள் சூழ்ந்ததடி…

BGM

ஆண் : துள்ளும் நயனமெங்கே…
வெள்ளம்போல் சொல்லும் மொழிகள் எங்கே…
கன்னல் சிரிப்புமெங்கே…
என்னை சேர் ஆரண மார்புமெங்கே…

ஆண் : மஞ்சின் நிலங்குளிராய் நெஞ்சிலே சேர்ந்திடும் கைகள் எங்கே…
கொஞ்சும் இளம் வெயிலாய் என்னையே தீண்டிடும் பார்வையெங்கே…

ஆண் : சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ…
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ…

BGM

ஆண் : கானகம் எரியுதடி…
வஞ்சியே ஞாலமும் நழுவுதடி…
வானம் உடைந்ததடி…
அழகே பூமியும் சரிந்ததடி…

ஆண் : கொல்லை நெருப்பினிலே தள்ளியே எப்படி நீந்தினியோ…
எற்றடி கொற்றமுற்றே பிரிவை சாபமாய் தந்தனையோ…

ஆண் : சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ…
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ…

ஆண் : அர்த்தம் அழிந்ததடி…
அன்னமே ரத்தமும் ஓய்ந்ததடி…
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி…
சகியே யாதினி கோல்யானே…


Notes : Chinnanjiru Nilave Song Lyrics in Tamil. This Song from Ponniyin Selvan – 2 (2023). Song Lyrics penned by Ilango Krishnan. சின்னஞ்சிறு நிலவே பாடல் வரிகள்.


என்னடி செய்தாய்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன ராஜாஹரிசரண் & பிரியா மாலியுவன் ஷங்கர் ராஜா1945

Yennadi Seidhaai Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னடி செய்தாய் எனை…
என் விழி தேடும் உனை…
உறைகிறேன் உடைகிறேன்…
எதிலும் நீதானே…

பெண் : முன் அந்தி நேர மழை…
நெஞ்செல்லாம் வீசும் அலை…
கரைகிறேன் கலைகிறேன்…
எதுவும் நீதானே…

ஆண் : மறந்து போன ஞாபகம்…
திரும்ப வருவதுபோல்…

பெண் : கடந்து போன காலங்கள்…
திரும்பி வருகிறதோ…

ஆண் : மேகம் மண்ணை சேரும் வரை…
காற்றின் கைகளில் பொம்மையடி…

ஆண் : என்னடி செய்தாய் எனை…
என் விழி தேடும் உனை…
உறைகிறேன் உடைகிறேன்…
எதிலும் நீதானே…

பெண் : முன் அந்தி நேர மழை…
நெஞ்செல்லாம் வீசும் அலை…
கரைகிறேன் கலைகிறேன்…
எதுவும் நீதானே…

BGM

ஆண் : என் வசத்தில் நானுமில்லை…
உன் வசத்தில் நீயுமில்லை…
உடல்கள் மாறும்…
உணர்வு மாறாதே…

பெண் : ஆ ஆ… சொந்தமெல்லாம் உண்மை இல்லை…
உண்மை எல்லாம் சொல்லில் இல்லை…
உதட்டில் உதடு உறங்கும் நேரம்…
மொழிகள் தூங்காதே…

ஆண் : உனக்கென நான் பிறந்தவன்…
புரிந்தது இந்த நிமிடமே…

பெண் : உயிரென உனை நினைத்தவள்…
கிடைத்தது புது வெளிச்சமே…

ஆண் : கடலும் தீரும்…
கடவுள் தீரும்…
காதல் தீராதே…

ஆண் : என்னடி செய்தாய் எனை…
என் விழி தேடும் உனை…
உறைகிறேன் உடைகிறேன்…
எதிலும் நீதானே…

பெண் : முன் அந்தி நேர மழை…
நெஞ்செல்லாம் வீசும் அலை…
கரைகிறேன் கலைகிறேன்…
எதுவும் நீதானே…

BGM


Notes : Yennadi Seidhaai Song Lyrics in Tamil. This Song from 1945 (2022). Song Lyrics penned by Mohana Raja. என்னடி செய்தாய் பாடல் வரிகள்.


யார் இந்த

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண்யுவன் ஷங்கர் ராஜாபாஸ் (எ) பாஸ்கரன்

Yaar Intha Song Lyrics in Tamil


BGM

ஆண் : யார் இந்த பெண்தான் என்று கேட்டேன்…
முன்னாலே…
இவள் எந்தன் பாதி என்று கண்டேன்…
தன்னாலே…

ஆண் : என்னை பார்க்கிறாள்…
ஏதோ கேட்கிறாள்…
எங்கும் இருக்கிறாள்… ஓ… ஓ…

ஆண் : கண்ணால் சிரிக்கிறாள்…
முன்னால் நடக்கிறாள்…
நெஞ்சை கிழிக்கிறாள்… ஓ… ஓ…

ஆண் : கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்…
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள்…
என்னை ஏதோ செய்தாள்…

ஆண் : யார் இந்த பெண்தான் என்று கேட்டேன்…
முன்னாலே…
இவள் எந்தன் பாதி என்று கண்டேன்…
தன்னாலே…

BGM

ஆண் : என் வீட்டு முற்றத்தில்…
இவள் போடும் கோலங்கள்…
எப்போதும் வேண்டும் என்று கேட்பேன்…
அணில் ஆடும் கூடத்தில்…
இவள் பாடும் ராகத்தில்…
அதிகாலை சூரியனை பார்பேன்…

ஆண் : கண்ணாடி வளையலை போல…
கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன்…
கால் கட்டும் கொழுசில் என்னோட மனசை…
சேர்த்து கோர்க்கவே தவிப்பேன்…

ஆண் : காதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன்…
கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்…

குழு (ஆண்கள்) : என்னை ஏதோ செய்தாள்…

ஆண் : யார் இந்த பெண்தான் என்று கேட்டேன்…
முன்னாலே…
இவள் எந்தன் பாதி என்று கண்டேன்…
தன்னாலே…

BGM

ஆண் : நான் கொஞ்சம் பார்த்தால்…
எங்கேயோ பார்ப்பாள்…
பார்க்காத நேரம் என்னை பார்ப்பாள்…

ஆண் : எனை பார்த்து சிரிப்பாள்…
நான் பார்த்தால் மறைப்பாள்…
மெய்யாக பொய்யாகத்தான் நடிப்பாள்…

ஆண் : பெண் நெஞ்சம் புதிர்கதை போல…
எப்போதும் யாரும் அறிந்ததே இல்லை…
ஆண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும்…
பெண்கள் மதிப்பதேயில்லை…

ஆண் : மனம் நொந்த பிறகே…
முதல் வார்த்தை சொல்வாள்…
மழை நின்ற பிறகே…
குடை தந்து செல்வாள்…

குழு (ஆண்கள்) : என்னை ஏதோ செய்தாள்…

ஆண் : யார் இந்த பெண்தான் என்று கேட்டேன்…
முன்னாலே…
இவள் எந்தன் பாதி என்று கண்டேன்…
தன்னாலே…

ஆண் : என்னை பார்க்கிறாள்…
ஏதோ கேட்கிறாள்…
எங்கும் இருக்கிறாள்… ஓ… ஓ…

ஆண் : கண்ணால் சிரிக்கிறாள்…
முன்னால் நடக்கிறாள்…
நெஞ்சை கிழிக்கிறாள்… ஓ… ஓ…

ஆண் : கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்…
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள்…
என்னை ஏதோ செய்தாள்…

BGM


Notes : Yaar Intha Song Lyrics in Tamil. This Song from Boss (a) Baskaran (2010). Song Lyrics penned by Na. Muthukumar. யார் இந்த பாடல் வரிகள்.


ஒரு பாதி கதவு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்வந்தனா ஸ்ரீனிவாசன் & ஹரிசரண்ஜி. வி. பிரகாஷ் குமார்தாண்டவம்

Oru Paadhi Kadhavu Song Lyrics in Tamil


ஆண் : நீ என்பதே நான்தானடி…
நான் என்பதே நாம்தானடி… ஹே…

BGM

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்…
சோ்த்து வைக்க காத்திருந்தோம்…

பெண் : ஒரு பாதி கதவு நீயடா…
மறு பாதி கதவு நானடா…
தாழ் திறந்தே காத்திருந்தோம்…
காற்று வீச பார்த்திருந்தோம்…

ஆண் : நீ என்பதே நான்தானடி…
நான் என்பதே நாம்தானடி…

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…

BGM

ஆண் : இரவு வரும் திருட்டு பயம்…
கதவுகளை சோ்த்து விடும்…

பெண் : ஓ… கதவுகளை திருடிவிடும்…
அதிசயத்தை காதல் செய்யும்…

ஆண் : இரண்டும் கை கோர்த்து சோ்ந்தது…
இடையில் பொய்பூட்டு போனது…

பெண் : வாசல் தல்லாடுதே…
திண்டாடுதே… கொண்டாடுதே…

BGM

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…

BGM

ஆண் : ஓ… இடி இடித்தும் மழை அடித்தும்…
அசையாமல் நின்றிருந்தோம்…

பெண் : ஓ… இன்றேனோ நம் மூச்சும்…
மென் காற்றில் இணைந்து விட்டோம்…

ஆண் : இதயம் ஒன்றாகி போனதே…
கதவே இல்லாமல் ஆனதே…

பெண் : இனிமேல் நம் வீட்டிலே…
பூங்காற்றுதான் தினம் வீசுமே…

BGM

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்…
சோ்த்து வைக்க காத்திருந்தோம்…

பெண் : ஒரு பாதி கதவு நீயடா…
மறு பாதி கதவு நானடா…
தாழ் திறந்தே காத்திருந்தோம்…
காற்று வீச பார்த்திருந்தோம்…

ஆண் : நீ என்பதே நான்தானடி…
நான் என்பதே நாம்தானடி…


Notes : Oru Paadhi Kadhavu Song Lyrics in Tamil. This Song from Thaandavam (2012). Song Lyrics penned by Na. Muthukumar. ஒரு பாதி கதவு பாடல் வரிகள்.


பூக்களே சற்று ஓய்வெடுங்கள்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஹரிசரண் & ஸ்ரேயா கோஷல்ஏ.ஆர்.ரகுமான்

Pookkalae Sattru Oyivedungal Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

BGM

ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

ஆண் : ஹே… ஐ என்றால் அது அழகு என்றால்…
அந்த ஐகளின் ஐ அவள்தானா…
ஹே… ஐ என்றால் அது கடவுள் என்றால்…
அந்த கடவுளின் துகள் அவள்தானா…

ஆண் : ஹையோ என திகைக்கும்…
ஐ என வியக்கும்…
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை…
அவள் தந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

பெண் : தின தக்கிடுதானே நா…
தின தக்கிடுதானே நா…
தின தக்கிடுதானே நா…
தி திரேரேநா ஆ ஆஆ…
தின தக்கிடுதானே நா…
திரேரேநா… ஆ… தாரே நா நா…
நீ நீ… ஆஆ…

பெண் : இந்த உலகில் உனைவெல்ல ஒருவன் இல்லை…
உந்தன் அசைவுகளில் யாவிலும் ஐ…
விழி அழகை கடந்து உன் இதயம் நுழைந்து…
என் ஐன்புலன் உணர்ந்திடும் ஐ…

ஆண் : இவன் பயத்தை அணைக்க…
அவள் இவனை அணைக்க…
அவள் செய்கையில் பெய்வது ஐ…
அவள் விழியின் கனிவில் எந்த உலகம் பணியும்…
சிறு நோயளவு ஐயமில்லை…

பெண் : என் கைகளை கோர்த்திடு ஐ விரலை…
இனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை…

ஆண் : அவள் இதழ்களை நுகர்ந்துவிட…
பாதை நெடுக…

பெண் : தவம் புரியும்…

ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

ஆண் : ஹே… ஐ என்றால் அது அழகு என்றால்…
அந்த ஐகளின் ஐ அவள்தானா…
ஹே… ஐ என்றால் அது கடவுள் என்றால்…
அந்த கடவுளின் துகள் அவள்தானா…

ஆண் : ஹையோ என திகைக்கும்…
ஐ என வியக்கும்…
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை…
அவள் தந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

BGM

பெண் : நீர்வீழ்ச்சி போலே நின்றவன்…
நான் நீந்த ஒரு ஓடை ஆனாய்…
வான் முட்டும் மலையை போன்றவன்…
நான் ஆட ஒரு மேடை ஆனாய்…

ஆண் : என்னுள்ளே என்னை கண்டவள் யாரென்று…
எனை காணச்செய்தாள்…
கேளாமல் நெஞ்சை கொய்தவள் சிற்பம் செய்து…
கையில் தந்தாள்…

பெண் : யுகம் யுகம் காண முகம் இது போதும்…
புகலிடம் என்றே உந்தன் நெஞ்சம் மட்டும் போதும்…

ஆண் : மறு உயிர் தந்தாள்…
நிமிர்ந்திடச் செய்தாள்…
நகர்ந்திடும் பாதை எங்கும் வாசம் வீச வந்தாளே…

ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

ஆண் : ஹே… ஐ என்றால் அது அழகு என்றால்…
அந்த ஐகளின் ஐ அவள்தானா…

பெண் : ஹே… ஐ என்றால் அது தலைவன் என்றால்…
அந்த ஐகளில் ஐ அவன் நீயா…
ஹையோ என திகைக்கும்…
ஐ என வியக்கும்…
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை…
அவள் தந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…


Notes : Pookkalae Sattru Oyivedungal Song Lyrics in Tamil. This Song from I (2015). Song Lyrics penned by Madhan Karky. பூக்களே சற்று ஓய்வெடுங்கள் பாடல் வரிகள்.


மனமெங்கும் மாய ஊஞ்சல்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிசரண், அனந்து & தீசந்தோஷ் நாராயணன்ஜிப்சி

Manamengum Maaya Oonjaal Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மனமெங்கும் மாய ஊஞ்சல்…

ஆண் : மனமெங்கும் மாய ஊஞ்சல்…

பெண் : உனதன்பில் ஆட ஆட…

ஆண் : உனதன்பில் ஆட ஆட…

பெண் : மழை பொங்கும் தூய மேகம்…

ஆண் : மழை பொங்கும் தூய மேகம்…

பெண் : உயிர் உள்ளேச் சாரல் போட…

ஆண் : உயிர் உள்ளேச் சாரல் போட…

பெண் : கோடையும் வாடையும்…
பாத்திடா தாவரம்…
வரம் நீ தந்தாய்…

குழு (பெண்கள்) : வான் பூக்குதே…

ஆண் : நான் உன் தோளில் கண் சாய…
விண்மீன்கள் பொன் தூவ…
ஆ… ஆ… ஆ… ஆ…

ஆண் : காற்றிலே சிறகை நாம் விரித்தால்…
துளி ஆகாதோ பூமி…
வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்…
அதற்கீடேது சாமி…

ஆண் : எங்கும் மாய ஊஞ்சல்…
உனதன்பில் ஆட ஆட…
மழைப் பொங்கும் தூய மேகம்…
உயிர் உள்ளேச் சாரல் போட…

—BGM—

ஆண் : முத்தம் வைக்கும்…
வேனீர் காலங்கள்…
கட்டிக் கொள்ளும் ஈரக் கோலங்கள்…

பெண் : உன் கால் தடம் நானே…
என் தாய் நிலம் கண்டேனே…
தடாகம் தேகம் வாழும்…
காணும் மீன்கள் நீ…

ஆண் & பெண் : நான் மண் சேர்ந்து நீர்ப் போல…
உன் சாயல் கொண்டேனே…

ஆண் : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…

ஆண் : காற்றிலே சிறகை நாம் விரித்தால்…
துளி ஆகாதோ பூமி…
வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்…
அதற்கீடேது சாமி…

ஆண் : எங்கும் மாய ஊஞ்சல்…
உனதன்பில் ஆட ஆட…
மழைப் பொங்கும் தூய மேகம்…
உயிர் உள்ளேச் சாரல் போட…

—BGM—

ஆண் : மரம் ஒரு இசை…
மொட்டரும்பு ஒரு இசை…
கடல் ஒரு இசை…
நம் உடல் ஒரு இசை…
நிலவொளி வீசும்…
காற்றில் பேசும்…
பறவையின் தாய்மை யாழிசை…

பெண் : வெண் சிறகை வீசும்…
மூச்சுக் காற்றிலே…
கண் உருகப் பாடும்…
கோடி மூங்கிலே…

ஆண் : உன் மொழிகளோடு…
தேன் வழிகிறதே…

ஆண் & பெண் : என் மார்பிலே…
நீ பேசும் வாசம்…

ஆண் : நீ அல்லவா… ஆ… ஆ… ஆ…

ஆண் & பெண் : காற்றிலே சிறகை நாம் விரித்தால்…
துளி ஆகாதோ பூமி…

ஆண் : வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்…

பெண் : அதற்கீடேது சாமி…

பெண் : எங்கும் மாய ஊஞ்சல்…
உனதன்பில் ஆட ஆட…
மழை பொங்கும் தூய மேகம்…
உயிர் உள்ளேச் சாரல் போட…


Notes : Manamengum Maaya Oonjaal Song Lyrics in Tamil. This Song from Gypsy (2020). Song Lyrics penned by Yugabharathi. மனமெங்கும் மாய ஊஞ்சல் பாடல் வரிகள்.


புன்னகையே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிச்சரன் & ஷாஷா திருப்பதிஏ. ஆர். ரகுமான்24

Punnagaye Song Lyrics in Tamil


—BGM—

பெண் : புன்னகையே…
பள பள பளவென ஒளிகளின் துளிகளில் விழுகிறதே…
கனவுகள் கனவுகள் அடிமன கனவுகள் பலிக்கிறதே…

பெண் : இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ…
இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ…

பெண் : மழை சாதுவான இசையென சாதுவான இசையென…
என்னோடு இசைக்கிறதே…
மனிதர்கள் பறவைகள் விலங்குகள் உடன் மழை…
என்னோடு இசைக்கிறதே…

ஆண் : அடி ஆத்தி மழை சாத்தி…
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக…

குழு (ஆண்கள்) : அடி ஆத்தி மழை சாத்தி…
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக…

ஆண் : அந்த வானமே…
பல துண்டானதே…

குழு (ஆண்கள்) : அது மண்ணில் விழுந்து…
நம்மைக் கொண்டாடுதே…
இனி கல்லும் முள்ளும் சொல்லும்…
மழையின் ரகசியமே…

பெண் : புன்னகையே…
பள பள பளவென ஒளிகளின் துளிகளில் விழுகிறதே…
கனவுகள் கனவுகள் அடிமன கனவுகள் பலிக்கிறதே…

பெண் : இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ…
இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ…

பெண் : மழை சாதுவான இசையென சாதுவான இசையென…
என்னோடு இசைக்கிறதே…
மனிதர்கள் பறவைகள் விலங்குகள் உடன் மழை…
என்னோடு இசைக்கிறதே…

—BGM—

ஆண் : ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…
கான மழையோ ஏழு ஸ்வரமே…
காதல் மழையோ நூறு ஸ்வரமே…
உன் சின்னத் திமிரோ நாதஸ்வரமே…
நீ என்னுள் கலந்தால் ஜீவ ஸ்வரமே…

பெண் : மறக்காமலே நான்…
நன்றி சொல்வேன்…
மழை துளியால் மாலை கட்டுவேன்…

ஆண் & பெண் : புன்னகையே…
பள பள பள பளவென ஒளிகளின் துளிகளில் விழுகிறதே…
கனவுகள் கனவுகள் அடிமன கனவுகள் பலிக்கிறதே…

ஆண் & பெண் : இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ…
இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ…

பெண் : மழை சாதுவான இசையென சாதுவான இசையென…
என்னோடு இசைக்கிறதே…
மனிதர்கள் பறவைகள் விலங்குகள் உடன் மழை…
என்னோடு இசைக்கிறதே…

ஆண் : அடி ஆத்தி மழை சாத்தி…
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக…

குழு (ஆண்கள்) : அடி ஆத்தி மழை சாத்தி…
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக…

ஆண் : அந்த வானமே…
பல துண்டானதே…

குழு (ஆண்கள்) : அது மண்ணில் விழுந்து…
நம்மைக் கொண்டாடுதே…
இனி கல்லும் முள்ளும் சொல்லும்…
மழையின் ரகசியமே…


Notes : Punnagaye Song Lyrics in Tamil. This Song from 24 (2016). Song Lyrics penned by Vairamuthu. புன்னகையே பாடல் வரிகள்.


தாலாட்டு பாடும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வனமாலிஹரிச்சரன்சாந்தனு மொய்த்ராகாடன்

Thaalaattu Paadum Poita Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தாலாட்டு பாடும் தென்றல்…
எச பாட்டு பாடும் குயில்கள்…
கை தாளம் போடும் கிளிகள்…
அதை கேட்டு ஆடும் மயில்கள்…
கை தட்டி காடெல்லாம்…
தோளோடு தோள் சேருவோம்…

ஆண் & குழு (பெண்கள்) : ஆடுவோம் ஆடுவோம்…
பள்ளுதான் பாடுவோம்…
ஆடுவோம் ஆடுவோம்…
பள்ளுதான் பாடுவோம்…

—BGM—

ஆண் : தாலாட்டு பாடும் தென்றல்…
எச பாட்டு பாடும் குயில்கள்…
கை தாளம் போடும் கிளிகள்…
அதை கேட்டு ஆடும் மயில்கள்…
கை தட்டி காடெல்லாம்…
தோளோடு தோள் சேருவோம்…

ஆண் & குழு (பெண்கள்) : ஆடுவோம் ஆடுவோம்…
பள்ளுதான் பாடுவோம்…
ஆடுவோம் ஆடுவோம்…
பள்ளுதான் பாடுவோம்…

—BGM—

ஆண் : புள்ளி மானின் கூட்டங்களே…
இந்த காட்டின் பிள்ளைகளே…
துள்ளி தாவி ஓடுங்களேன்…
பயம் இல்லை வாழுங்களேன்…

ஆண் : காட்டு பூ வாசம் வாசம்…
வாழ்த்து சொல்லி பேசும் பேசும்…
ஊத காத்து வீசும் வீசும்…
உன்னை கொஞ்சி பேசும் பேசும்…
நீ போகும் பாதையிலே…
ஒரு வானவில் தீட்டுவோம்…

—BGM—


Notes :Thaalaattu Paadum Song Lyrics in Tamil. This Song from Kaadan (2021). Song Lyrics penned by Vanamali. தாலாட்டு பாடும் பாடல் வரிகள்.