பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மோகன ராஜா | ஹரிசரண் & பிரியா மாலி | யுவன் ஷங்கர் ராஜா | 1945 |
Yennadi Seidhaai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : என்னடி செய்தாய் எனை…
என் விழி தேடும் உனை…
உறைகிறேன் உடைகிறேன்…
எதிலும் நீதானே…
பெண் : முன் அந்தி நேர மழை…
நெஞ்செல்லாம் வீசும் அலை…
கரைகிறேன் கலைகிறேன்…
எதுவும் நீதானே…
ஆண் : மறந்து போன ஞாபகம்…
திரும்ப வருவதுபோல்…
பெண் : கடந்து போன காலங்கள்…
திரும்பி வருகிறதோ…
ஆண் : மேகம் மண்ணை சேரும் வரை…
காற்றின் கைகளில் பொம்மையடி…
ஆண் : என்னடி செய்தாய் எனை…
என் விழி தேடும் உனை…
உறைகிறேன் உடைகிறேன்…
எதிலும் நீதானே…
பெண் : முன் அந்தி நேர மழை…
நெஞ்செல்லாம் வீசும் அலை…
கரைகிறேன் கலைகிறேன்…
எதுவும் நீதானே…
—BGM—
ஆண் : என் வசத்தில் நானுமில்லை…
உன் வசத்தில் நீயுமில்லை…
உடல்கள் மாறும்…
உணர்வு மாறாதே…
பெண் : ஆ ஆ… சொந்தமெல்லாம் உண்மை இல்லை…
உண்மை எல்லாம் சொல்லில் இல்லை…
உதட்டில் உதடு உறங்கும் நேரம்…
மொழிகள் தூங்காதே…
ஆண் : உனக்கென நான் பிறந்தவன்…
புரிந்தது இந்த நிமிடமே…
பெண் : உயிரென உனை நினைத்தவள்…
கிடைத்தது புது வெளிச்சமே…
ஆண் : கடலும் தீரும்…
கடவுள் தீரும்…
காதல் தீராதே…
ஆண் : என்னடி செய்தாய் எனை…
என் விழி தேடும் உனை…
உறைகிறேன் உடைகிறேன்…
எதிலும் நீதானே…
பெண் : முன் அந்தி நேர மழை…
நெஞ்செல்லாம் வீசும் அலை…
கரைகிறேன் கலைகிறேன்…
எதுவும் நீதானே…
—BGM—
Notes : Yennadi Seidhaai Song Lyrics in Tamil. This Song from 1945 (2022). Song Lyrics penned by Mohana Raja. என்னடி செய்தாய் பாடல் வரிகள்.