ஆண் : ஏமாற்றாதே ஏமாற்றாதே… ஏமாறாதே ஏமாறாதே… ஏமாற்றாதே ஏமாற்றாதே… ஏமாறாதே ஏமாறாதே…
—BGM—
ஆண் : அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்… எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்… அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்… எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்…
ஆண் : சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்… சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்… தக்க சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும்…
ஆண் : ஏமாற்றாதே ஏமாற்றாதே… ஏமாறாதே ஏமாறாதே…
—BGM—
ஆண் : ஒரு நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு… நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு… ஒரு நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு… நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு…
ஆண் : இன்றோடு போகட்டும் திருந்திவிடு… இன்றோடு போகட்டும் திருந்திவிடு… உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பிவிடு…
ஆண் : ஏமாற்றாதே ஏமாற்றாதே… ஏமாறாதே ஏமாறாதே…
—BGM—
ஆண் : நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு… அது அழிவதில்லை கால் அடிகள் பட்டு… நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு… அது அழிவதில்லை கால் அடிகள் பட்டு…
ஆண் : நீ நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்… நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்… இங்கு நடப்பது நலமாய் நடந்து விடும்…
ஆண் : ஏமாற்றாதே ஏமாற்றாதே… ஏமாறாதே ஏமாறாதே… ஏமாற்றாதே ஏமாற்றாதே… ஏமாறாதே ஏமாறாதே…
Notes : Yemmattraathe Song Lyrics in Tamil. This Song from Adimai Penn (1969). Song Lyrics penned by Vaali. ஏமாற்றாதேபாடல் வரிகள்.
ஆண் : பச்சை மாமலைபோல் மேனி… பவள வாய் கமலச் செங்கண்… அச்சுதா அமரர்றே… ஆயர் தம் கொழுந்தே என்னும்…
ஆண் : பச்சை மாமலைபோல் மேனி… பவள வாய் கமலச் செங்கண்… அச்சுதா அமரர்றே… ஆயர் தம் கொழுந்தே என்னும்…
ஆண் : இச்சுவை தவிர யான் போய்… இந்திர லோகம் ஆளும்… இச்சுவை தவிர யான் போய்… இந்திர லோகம் ஆளும்… அச்சுவை பெறினும் வேண்டேன்… அரங்கமா நகர் உளானே…
ஆண் : ஊரிலேன் காணி இல்லை… உறவு மற்று ஒருவர் இல்லை… பாரில் நின் பாதம் மூலம்… பற்றிலேன் பரம மூர்த்தி…
ஆண் : ஊரிலேன் காணி இல்லை… உறவு மற்று ஒருவர் இல்லை… பாரில் நின் பாதம் மூலம்… பற்றிலேன் பரம மூர்த்தி…
ஆண் : காரொளி வண்ணனே… கண்ணனே கதறுகின்றேன்… காரொளி வண்ணனே… கண்ணனே கதறுகின்றேன்…
ஆண் : ஆருளர் கலைஞன் அம்மா… அரங்கமா நகர் உளானே…
Notes : Pachchai Maa Malaipol Song Lyrics in Tamil. This Song from Thirumal Perumai (1968). Song Lyrics penned by Kannadasan. பச்சை மாமலைபோல்பாடல் வரிகள்.
குழு : கலை மகள் துணை கொண்டு… கலை வென்று புகழ் கொண்ட… காவலன் வாழ்க வாழ்க…
—BGM—
குழு : மலை மகள் வரம் கொண்டு… மலை போன்ற பலம் கொண்ட… மன்னவன் வாழ்க வாழ்க…
—BGM—
குழு : திருமகள் அருள் கொண்டு பொருள் கொண்ட… திருவருட்செல்வரே வாழ்க வாழ்க…
—BGM—
குழு : இயல் இசை நாடகம் முத்தமிழ் காக்கின்ற… தலைவனே வாழ்க வாழ்க…
—BGM—
குழு : குடி மக்கள் மனம் போல முடியாட்சி காண்கின்ற… கொற்றவா வாழ்க வாழ்க…
—BGM—
குழு : நின் கொடி வாழ்க படை வாழ்க… குடி வாழ்க குலம் வாழ்க… நலமும் பல்லாண்டு வாழ்க…
—BGM—
பெண் : மன்னவன் வந்தானடி தோழி…
—BGM—
பெண் : மன்னவன் வந்தானடி தோழி… மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த… மன்னவன் வந்தானடி தோழி… மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த… மன்னவன் வந்தானடி…
பெண் : மாயவனோ தூயவனோ நாயகனோ நான் அறியேன்… மாயவனோ தூயவனோ நாயகனோ நான் அறியேன்… மன்னவன் வந்தானடி தோழி…
—BGM—
பெண் : செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன்… வண்ண சந்தத்திலே கவிதைச் சரம் கொடுப்பேன்… செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன்… வண்ண சந்தத்திலே கவிதைச் சரம் கொடுப்பேன்…
பெண் : மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன்… மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன்… இனி முப்பொழுதும் கற்பனையில் அற்புதமாய் வாழ்ந்திருக்கும்…
பெண் : மன்னவன் வந்தானடி தோழி… மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த… மன்னவன் வந்தானடி…
—BGM—
பெண் : தூவிய பூவினில் மேனிகள் ஆடிட… நாயகன் நாயகி பாவனை காட்ட வரும்… மன்னவன் வந்தானடி…
Notes : Mannavan Vandhaanadi Song Lyrics in Tamil. This Song from Thiruvarutchelvar (1967). Song Lyrics penned by Kannadasan. மன்னவன் வந்தானடிபாடல் வரிகள்.
பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே… எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே… ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே… எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே…
பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே…
—BGM—
பெண் : வேதங்களின் தத்துவத்தை நாடிடுவோமே… திரு வெந்நீரும் குங்குமமும் சூடிடுவோமே… வேதங்களின் தத்துவத்தை நாடிடுவோமே… திரு வெந்நீரும் குங்குமமும் சூடிடுவோமே…
பெண் : அஞ்செழுத்தை காலமெல்லாம் நெஞ்சில் வைப்போம்… அஞ்செழுத்தை காலமெல்லாம் நெஞ்சில் வைப்போம்… அவன் அடியவருக்கும் அன்பருக்கும் தொண்டு செய்வோமே… அவன் அடியவருக்கும் அன்பருக்கும் தொண்டு செய்வோமே…
பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே… எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே…
பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே…
பெண் : நாவுக்கரசர் பாடிப்புகழும் நாதனல்லவா… அந்த நாதத்துக்கே பெருமை தந்தா ஜீவன் அல்லவா… நாவுக்கரசர் பாடிப்புகழும் நாதனல்லவா… அந்த நாதத்துக்கே பெருமை தந்தா ஜீவன் அல்லவா…
பெண் : பேசும் தமிழ் பாட்டுக்கெல்லாம் தந்தை அல்லவா… பேசும் தமிழ் பாட்டுக்கெல்லாம் தந்தை அல்லவா… அதை பிள்ளை தமிழ் என்று சொன்னா அன்னையல்லவா… அதை பிள்ளை தமிழ் என்று சொன்னா அன்னையல்லவா…
பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே… எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே…
ஆண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே… எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே…
ஆண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே… ஏ…
Notes : Aadhi Sivan Song Lyrics in Tamil. This Song from Thiruvarutchelvar (1967). Song Lyrics penned by Kannadasan. ஆதி சிவன்பாடல் வரிகள்.
ஆண் : பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா… எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை… வைத்தாய்ப் பெண்ணை தென்பால்… வெண்ணை நல்லூர் அருள் துறையுள்… அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே…
ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா… சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா… உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே… சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா… உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே…
ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
ஆண் : அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை… அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை… அந்த அம்மையில்லாமல் இந்தப்பிள்ளை இல்லை…
ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே…
—BGM—
ஆண் : பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக… அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக…
ஆண் : பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக… அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக… சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக… சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக… எந்தன் சந்ததியே உந்தனுக்கு அடி பணிய இறைவா…
ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே…
—BGM—
ஆண் : கண்ணைத் திறந்து வைத்த கருப் பொருளே… கோவில் கதவைத் திறந்தழைத்த திருவருளே… கண்ணைத் திறந்து வைத்த கருப் பொருளே… கோவில் கதவைத் திறந்தழைத்த திருவருளே…
ஆண் : வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே… வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே… வந்து என்னை என்றும் ஆளுகின்ற பரம்பொருளே இறைவா…
ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா… உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே… சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
Notes : Sitthamellaam Enakku Song Lyrics in Tamil. This Song from Thiruvarutchelvar (1967). Song Lyrics penned by Kannadasan. சித்தமெல்லாம் எனக்குபாடல் வரிகள்.
பெண் : நானாட்சி செய்து வரும் நான்மாட கூடலிலே… மீனாக்ஷி என்ற பெயர் எனக்கு… நானாட்சி செய்து வரும் நான்மாட கூடலிலே… மீனாக்ஷி என்ற பெயர் எனக்கு…
பெண் : கங்கை நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில்… விசாலாக்ஷி என்ற பெயர் வழக்கு… கங்கை நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில்… விசாலாக்ஷி என்ற பெயர் வழக்கு…
பெண் : கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலை காஞ்சி தன்னில்… காமாக்ஷி என்ற பெயர் எனக்கு… கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலை காஞ்சி தன்னில்… காமாக்ஷி என்ற பெயர் எனக்கு…
பெண் : கொடும் கோலாட்சி தன்னை எதிர்க்கும் மாரியம்மன்… என்ற பெயர் கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு… கொடும் கோலாட்சி தன்னை எதிர்க்கும் மாரியம்மன்… என்ற பெயர் கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு…
—BGM—
பெண் : ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும்… அது நீரோடும் பாதை தன்னை குறிக்கும்… ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும்… அது நீரோடும் பாதை தன்னை குறிக்கும்…
பெண் : நிற்கும் ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி… ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்… நிற்கும் ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி… ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்…
—BGM—
Notes : Naan Atchi Song Lyrics in Tamil. This Song from Aathi Parasakthi (1971). Song Lyrics penned by Kannadasan. நானாட்சி செய்து வரும்பாடல் வரிகள்.
பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா… திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்… திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா… திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…
—BGM—
பெண் : திருச்செந்தூரிலே வேலாடும்… உன் திருப்புகழ் பாடியே கடலாடும்… திருச்செந்தூரிலே வேலாடும்… உன் திருப்புகழ் பாடியே கடலாடும்…
பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா… திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…
—BGM—
பெண் : பழநியிலே இருக்கும் கந்தப் பழம்… நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்… பழநியிலே இருக்கும் கந்தப் பழம்… நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்…
பெண் : பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்… பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்… பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்… பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்…
பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா… திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…
—BGM—
பெண் : சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு… உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு… சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு… உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு…
பெண் : உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை… உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை… அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை… அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை…
பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா… திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…
பெண் : திருச்செந்தூரிலே வேலாடும்… உன் திருப்புகழ் பாடியே கடலாடும்…
பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா… திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…
Notes : Thirupparang Kundrathil Song Lyrics in Tamil. This Song from Kandhan Karunai (1967). Song Lyrics penned by Poovai Senguttuvan. திருப்பரங்குன்றத்தில்பாடல் வரிகள்.