Tag Archives: கே.வி. மகாதேவன்

ஏமாற்றாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம். சௌந்தரராஜன்கே.வி. மகாதேவன்அடிமைப் பெண்

Yemmattraathe Song Lyrics in Tamil


ஆண் : ஏமாற்றாதே ஏமாற்றாதே…
ஏமாறாதே ஏமாறாதே…

BGM

ஆண் : ஏமாற்றாதே ஏமாற்றாதே…
ஏமாறாதே ஏமாறாதே…
ஏமாற்றாதே ஏமாற்றாதே…
ஏமாறாதே ஏமாறாதே…

BGM

ஆண் : அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்…
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்…
அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்…
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்…

ஆண் : சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்…
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்…
தக்க சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும்…

ஆண் : ஏமாற்றாதே ஏமாற்றாதே…
ஏமாறாதே ஏமாறாதே…

BGM

ஆண் : ஒரு நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு…
நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு…
ஒரு நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு…
நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு…

ஆண் : இன்றோடு போகட்டும் திருந்திவிடு…
இன்றோடு போகட்டும் திருந்திவிடு…
உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பிவிடு…

ஆண் : ஏமாற்றாதே ஏமாற்றாதே…
ஏமாறாதே ஏமாறாதே…

BGM

ஆண் : நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு…
அது அழிவதில்லை கால் அடிகள் பட்டு…
நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு…
அது அழிவதில்லை கால் அடிகள் பட்டு…

ஆண் : நீ நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்…
நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்…
இங்கு நடப்பது நலமாய் நடந்து விடும்…

ஆண் : ஏமாற்றாதே ஏமாற்றாதே…
ஏமாறாதே ஏமாறாதே…
ஏமாற்றாதே ஏமாற்றாதே…
ஏமாறாதே ஏமாறாதே…


Notes : Yemmattraathe Song Lyrics in Tamil. This Song from Adimai Penn (1969). Song Lyrics penned by Vaali. ஏமாற்றாதே பாடல் வரிகள்.


அம்மா என்றால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஜெயலலிதாகே.வி. மகாதேவன்அடிமைப் பெண்

Amma Endral Song Lyrics in Tamil


BGM

பெண் : அம்மா என்றால் அன்பு…
அப்பா என்றால் அறிவு…
ஆசான் என்றால் கல்வி…
அவரே உலகில் தெய்வம்…

பெண் : அம்மா என்றால் அன்பு…
அப்பா என்றால் அறிவு…
ஆசான் என்றால் கல்வி…
அவரே உலகில் தெய்வம்…

BGM

பெண் : அன்னையை பிள்ளை பிள்ளையை அன்னை…
அம்மா என்றே அழைப்பதுண்டு…
அன்னையை பிள்ளை பிள்ளையை அன்னை…
அம்மா என்றே அழைப்பதுண்டு…

பெண் : அன்பின் விளக்கம் பண்பின் முழக்கம்…
அம்மா என்றொரு சொல்லில் உண்டு…
அன்பின் விளக்கம் பண்பின் முழக்கம்…
அம்மா என்றொரு சொல்லில் உண்டு…

பெண் : பத்து திங்கள் மடி சுமப்பாள்…
பிள்ளை பெற்றதும் துன்பத்தை மறப்பாள்…
பத்து திங்கள் மடி சுமப்பாள்…
பிள்ளை பெற்றதும் துன்பத்தை மறப்பாள்…

பெண் : பத்தியமிருந்து காப்பாள்…
தன் ரத்தத்தை பாலாக்கி கொடுப்பாள்…

பெண் : அம்மா என்றால் அன்பு…
அப்பா என்றால் அறிவு…
ஆசான் என்றால் கல்வி…
அவரே உலகில் தெய்வம்…

BGM

பெண் : இயற்கை கொடுக்கும் செல்வத்தை எல்லாம்…
பொதுவாய் வைத்திட வேண்டும்…
இயற்கை கொடுக்கும் செல்வத்தை எல்லாம்…
பொதுவாய் வைத்திட வேண்டும்…

பெண் : இல்லாதவர்க்கும் இருப்பவர் தமக்கும்…
பகிர்ந்தே கொடுத்திட வேண்டும்…
இல்லாதவர்க்கும் இருப்பவர் தமக்கும்…
பகிர்ந்தே கொடுத்திட வேண்டும்…

பெண் : ஒருவருக்காக மழை இல்லை…
ஒருவருக்காக நிலவில்லை…
ஒருவருக்காக மழை இல்லை…
ஒருவருக்காக நிலவில்லை…
வருவதெல்லாம் அனைவருக்கும்…
வகுத்தே வைத்தால் வழக்கில்லை…

பெண் : அம்மா என்றால் அன்பு…
அப்பா என்றால் அறிவு…
ஆசான் என்றால் கல்வி…
அவரே உலகில் தெய்வம்…

BGM

பெண் : மொழியும் நாடும் முகத்துக்கு இரண்டு…
விழிகள் ஆகும் என்று…
மொழியும் நாடும் முகத்துக்கு இரண்டு…
விழிகள் ஆகும் என்று…

பெண் : உணரும்போது உனக்கும் எனக்கும்…
நன்மை என்றும் உண்டு…
உணரும்போது உனக்கும் எனக்கும்…
நன்மை என்றும் உண்டு…

பெண் : வாழும் உயிரில் உயர்வும் தாழ்வும்…
வகுத்து வைப்பது பாவம்…
வாழும் உயிரில் உயர்வும் தாழ்வும்…
வகுத்து வைப்பது பாவம்…

பெண் : கருணை கொண்ட மனிதரெல்லாம்…
கடவுள் வடிவம் ஆகும்…

பெண் : அம்மா என்றால் அன்பு…
அப்பா என்றால் அறிவு…
ஆசான் என்றால் கல்வி…
அவரே உலகில் தெய்வம்…


Notes : Amma Endral Song Lyrics in Tamil. This Song from Adimai Penn (1969). Song Lyrics penned by Vaali. அம்மா என்றால் பாடல் வரிகள்.


தாய் இல்லாமல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆலங்குடி சோமுடி.எம்.சௌந்தரராஜன்கே.வி. மகாதேவன்அடிமைப் பெண்

Thaai Illamal Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாய் இல்லாமல் நான் இல்லை…
தானே எவரும் பிறந்ததில்லை…
எனக்கொரு தாய் இருக்கின்றாள்…
என்றும் என்னை காக்கின்றாள்…

ஆண் : தாய் இல்லாமல் நான் இல்லை…
தானே எவரும் பிறந்ததில்லை…
எனக்கொரு தாய் இருக்கின்றாள்…
என்றும் என்னை காக்கின்றாள்…

ஆண் : தாய் இல்லாமல் நான் இல்லை…

BGM

ஆண் : ஜீவ நதியாய் வருவாள்…
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்…
ஜீவ நதியாய் வருவாள்…
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்…

ஆண் : தவறினை பொறுப்பாள்…
தர்மத்தை வளர்ப்பாள்…
தரணியிலே வளம் சேர்த்திடுவாள்…

ஆண் : தவறினை பொறுப்பாள்…
தர்மத்தை வளர்ப்பாள்…
தரணியிலே வளம் சேர்த்திடுவாள்…

ஆண் : தாய் இல்லாமல் நான் இல்லை…

BGM

ஆண் : தூய நிலமாய் கிடப்பாள்…
தன் தோளில் என்னை சுமப்பாள்…
தூய நிலமாய் கிடப்பாள்…
தன் தோளில் என்னை சுமப்பாள்…

ஆண் : தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்…
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்…
தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்…

ஆண் : தாய் இல்லாமல் நான் இல்லை…

BGM

ஆண் : மேக வீதியில் நடப்பாள்…
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்…
மேக வீதியில் நடப்பாள்…
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்…

ஆண் : மலை முடி தொடுவாள்…
மலர் மணம் தருவாள்…
மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்…

ஆண் : மலை முடி தொடுவாள்…
மலர் மணம் தருவாள்…
மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்…

ஆண் : தாய் இல்லாமல் நான் இல்லை…

BGM

ஆண் : ஆதி அந்தமும் அவள்தான்…
நம்மை ஆளும் நீதியும் அவள்தான்…
ஆதி அந்தமும் அவள்தான்…
நம்மை ஆளும் நீதியும் அவள்தான்…

ஆண் : அகந்தையை அழிப்பாள்…
ஆற்றலை கொடுப்பாள்…
அவள்தான் அன்னை மகாசக்தி…

ஆண் : அகந்தையை அழிப்பாள்…
ஆற்றலை கொடுப்பாள்…
அவள்தான் அன்னை மகாசக்தி…

ஆண் : அந்த இல்லாமல் நான் இல்லை…
தானே எவரும் பிறந்ததில்லை…
எனக்கொரு தாய் இருக்கின்றாள்…
என்றும் என்னை காக்கின்றாள்…

ஆண் : தாய் இல்லாமல் நான் இல்லை…

BGM


Notes : Thaai Illamal Song Lyrics in Tamil. This Song from Adimai Penn (1969). Song Lyrics penned by Alangudi Somu. தாய் இல்லாமல் பாடல் வரிகள்.


பச்சை மாமலைபோல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்கே.வி. மகாதேவன்திருமால் பெருமை

Pachchai Maa Malaipol Song Lyrics in Tamil


BGM

ஆண் : பச்சை மாமலைபோல் மேனி…
பவள வாய் கமலச் செங்கண்…
அச்சுதா அமரர்றே…
ஆயர் தம் கொழுந்தே என்னும்…

ஆண் : பச்சை மாமலைபோல் மேனி…
பவள வாய் கமலச் செங்கண்…
அச்சுதா அமரர்றே…
ஆயர் தம் கொழுந்தே என்னும்…

ஆண் : இச்சுவை தவிர யான் போய்…
இந்திர லோகம் ஆளும்…
இச்சுவை தவிர யான் போய்…
இந்திர லோகம் ஆளும்…
அச்சுவை பெறினும் வேண்டேன்…
அரங்கமா நகர் உளானே…

ஆண் : ஊரிலேன் காணி இல்லை…
உறவு மற்று ஒருவர் இல்லை…
பாரில் நின் பாதம் மூலம்…
பற்றிலேன் பரம மூர்த்தி…

ஆண் : ஊரிலேன் காணி இல்லை…
உறவு மற்று ஒருவர் இல்லை…
பாரில் நின் பாதம் மூலம்…
பற்றிலேன் பரம மூர்த்தி…

ஆண் : காரொளி வண்ணனே…
கண்ணனே கதறுகின்றேன்…
காரொளி வண்ணனே…
கண்ணனே கதறுகின்றேன்…

ஆண் : ஆருளர் கலைஞன் அம்மா…
அரங்கமா நகர் உளானே…


Notes : Pachchai Maa Malaipol Song Lyrics in Tamil. This Song from Thirumal Perumai (1968). Song Lyrics penned by Kannadasan. பச்சை மாமலைபோல் பாடல் வரிகள்.


மன்னவன் வந்தானடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாகே. வி. மகாதேவன்திருவருட்செல்வர்

Mannavan Vandhaanadi Song Lyrics in Tamil


குழு : கலை மகள் துணை கொண்டு…
கலை வென்று புகழ் கொண்ட…
காவலன் வாழ்க வாழ்க…

BGM

குழு : மலை மகள் வரம் கொண்டு…
மலை போன்ற பலம் கொண்ட…
மன்னவன் வாழ்க வாழ்க…

BGM

குழு : திருமகள் அருள் கொண்டு பொருள் கொண்ட…
திருவருட்செல்வரே வாழ்க வாழ்க…

BGM

குழு : இயல் இசை நாடகம் முத்தமிழ் காக்கின்ற…
தலைவனே வாழ்க வாழ்க…

BGM

குழு : குடி மக்கள் மனம் போல முடியாட்சி காண்கின்ற…
கொற்றவா வாழ்க வாழ்க…

—BGM—

குழு : நின் கொடி வாழ்க படை வாழ்க…
குடி வாழ்க குலம் வாழ்க…
நலமும் பல்லாண்டு வாழ்க…

BGM

பெண் : மன்னவன் வந்தானடி தோழி…

BGM

பெண் : மன்னவன் வந்தானடி தோழி…
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த…
மன்னவன் வந்தானடி தோழி…
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த…
மன்னவன் வந்தானடி…

பெண் : மாயவனோ தூயவனோ நாயகனோ நான் அறியேன்…
மாயவனோ தூயவனோ நாயகனோ நான் அறியேன்…
மன்னவன் வந்தானடி தோழி…

BGM

பெண் : செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன்…
வண்ண சந்தத்திலே கவிதைச் சரம் கொடுப்பேன்…
செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன்…
வண்ண சந்தத்திலே கவிதைச் சரம் கொடுப்பேன்…

பெண் : மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன்…
மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன்…
இனி முப்பொழுதும் கற்பனையில் அற்புதமாய் வாழ்ந்திருக்கும்…

பெண் : மன்னவன் வந்தானடி தோழி…
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த…
மன்னவன் வந்தானடி…

BGM

பெண் : தூவிய பூவினில் மேனிகள் ஆடிட…
நாயகன் நாயகி பாவனை காட்ட வரும்…
மன்னவன் வந்தானடி…

ஆண் : தத்தித் தாங்கிட தக தரிகிடதோம்…
தித் தாங்கிட தக தரிகிடதோம்…
தகதித் தாங்கிட தக தரிகிடதோம்…
தித் தாங்கிட தக தரிகிடதோம்…

ஆண் : தக தரிகிடதோம் தக தரிகிடதோம்…
தக தரிகிடதோம் தக தரிகிடதோம்…
தரிகிடதோம் தரிகிடதோம்…
தரிகிடதோம் தரிகிடதோம் தத்தா…

பெண் : ஸ ரி க ம ப த நி…
ஸரிகமபதநி சுரமோடு ஜதியொடு…
நாத கீத ராக பாவம்தான் பெறவே…
மன்னவன் வந்தானடி…

ஆண் : தக்க தின்னம் தரித தகஜனுத துக்கு தரித…
துக்கு தகிட தத்திங்கு தக ஜனக்கு தத்தீம்…
தத் தகிட கிடதக தரிகிட தோம்…
தக தகிட கிடதக தரிகிட தோம்…
தா கிட தத்தோம் கிட தத்தோம் கிட தத்தோம் தத் தா…

பெண் : காதற்க் கவிதை கடலெனப் பெருகிட…
மாதர் மனமும் மயிலென நடமிடவே…
மன்னவன் வந்தானடி…

ஆண் : ததரி ததன தஜணு தஜணு…
ஜணு தஜுணு தத்திமி…
ஜுணு தகதிமி தரிகிட…
தித் தாங்கிட தக தரிகிட தகதா…
ஜுணு தாங்கிட தக தரிகிட தகதா…
தகதித் தாங்கிட தக தரிகிட தகதா தத் தா…

பெண் : திருமலர் மணமுற குறுநகை நலம் பெற…
மலர் விழி சிவந்திட கனி இதழ் கனிந்திடவே…
மன்னவன் வந்தானடி…

ஆண் : திரிகிட தரிகிட தரிகிட திரிகிட…
திரிகிட தரிகிட தரிகிட திரிகிட…
திரிகிட தரிகிட தரிகிட திரிகிட திரிகிட தரிகிட தத் தா…

பெண் : தித்தித்தால் அது செம்பொற்க் கிண்ணம்…
தத்தித் தாவிடும் தங்கக் கிண்ணம்…

ஆண் : ததின்ன தங்க ததின்ன தங்க…
ததின்ன தாங்கிட தரிகிட…
ததின்ன தங்க ததின்ன தாங்கிட…
தக தரிகிட தகதா…

பெண் : சித்தத்தால் ஒரு காதற்ச் சின்னம்…
தத்தித் தாவிய பாவையின் முன்னம்…
என் மன்னவன்…

BGM

ஆண் : தத்தித்தா கிடதக தரிகிட தோம்…
தித்தா கிடதக தரிகிட தோம்…
தா கிடதக தரிகிட தோம்…
கிடதக தரிகிட தோம் தாங்கிட தோம் தத்திம்…
தகத தகஜம் தகிட தகஜுணு தகிட தத்தா…

பெண் : விரைவினில் நீ நீ…
மண மலர் தா தா…
திருமாற்ப் பா பா…
தாமதமா மா…
மயில் எனைப் பார் கா…

பெண் : விரைவினில் நீ மண மலர் தா…
திருமாற்ப் பா தாமதமா…
மயில் எனைப் பார்…
நி த ப ம க நீதபமக நிதபமக…
ஸ சதமது தரவா…

ஆண் : தரிகிட ஜம் தீங்கிட தாங்கிட தக…
தரிகிட தகதா…

பெண் : ரீ ரிகமப தனிஸா…
ஆண் : தஜ்ஜம் தஜ்ஜம் தஜம் தரிகிட தா…

பெண் : கா கருனையின் தலைவா…
ஆண் : தாங்கிட தத்தீம் கிடதத்தீம் கிடதத்தீம் ததா…

பெண் : மா மதி மிகு முதல்வா…
ஆண் : தரிகிட தோம் த தரிகிட தோம் த தரிகிட தா…

பெண் : பா பரம் பொருள் இறைவா…
தா தனிமையில் வரவா…
நீ இறையருள் பெறவா…
ஆளும் புவி ஏழும் கடல் ஏழும்…
நடமாடும் படி வாராய் அருள் தாராய்…

ஆண் : தரிகிட திம் திரிகிடதா…

பெண் : ஆளும் புவி ஏழும் கடல் ஏழும் நடமாடும்…
படி வாராய் தாராய்…
அனுதினம் உனை வழிபடும் வளம்…
இனி ஒரு தலைவனை பணிவதில்லை…
மன்னவன் வந்தானடி…

ஆண் : தகதித் தாங்கிட தக தரிகிட தக…
ததித் தாங்கிட தக தரிகிட தக…
தரிகிட தோம் தரிகிட தோம்…
தரிகிட தோம் தரிகிட தோம் தா…


Notes : Mannavan Vandhaanadi Song Lyrics in Tamil. This Song from Thiruvarutchelvar (1967). Song Lyrics penned by Kannadasan. மன்னவன் வந்தானடி பாடல் வரிகள்.


ஆதி சிவன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாகே. வி. மகாதேவன்திருவருட்செல்வர்

Aadhi Sivan Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே…
எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே…
ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே…
எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே…

பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே…

BGM

பெண் : வேதங்களின் தத்துவத்தை நாடிடுவோமே…
திரு வெந்நீரும் குங்குமமும் சூடிடுவோமே…
வேதங்களின் தத்துவத்தை நாடிடுவோமே…
திரு வெந்நீரும் குங்குமமும் சூடிடுவோமே…

பெண் : அஞ்செழுத்தை காலமெல்லாம் நெஞ்சில் வைப்போம்…
அஞ்செழுத்தை காலமெல்லாம் நெஞ்சில் வைப்போம்…
அவன் அடியவருக்கும் அன்பருக்கும் தொண்டு செய்வோமே…
அவன் அடியவருக்கும் அன்பருக்கும் தொண்டு செய்வோமே…

பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே…
எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே…

பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே…

பெண் : நாவுக்கரசர் பாடிப்புகழும் நாதனல்லவா…
அந்த நாதத்துக்கே பெருமை தந்தா ஜீவன் அல்லவா…
நாவுக்கரசர் பாடிப்புகழும் நாதனல்லவா…
அந்த நாதத்துக்கே பெருமை தந்தா ஜீவன் அல்லவா…

பெண் : பேசும் தமிழ் பாட்டுக்கெல்லாம் தந்தை அல்லவா…
பேசும் தமிழ் பாட்டுக்கெல்லாம் தந்தை அல்லவா…
அதை பிள்ளை தமிழ் என்று சொன்னா அன்னையல்லவா…
அதை பிள்ளை தமிழ் என்று சொன்னா அன்னையல்லவா…

பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே…
எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே…

ஆண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே…
எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே…

ஆண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே… ஏ…


Notes : Aadhi Sivan Song Lyrics in Tamil. This Song from Thiruvarutchelvar (1967). Song Lyrics penned by Kannadasan. ஆதி சிவன் பாடல் வரிகள்.


சித்தமெல்லாம் எனக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி. எம். சௌந்தரராஜன்கே. வி. மகாதேவன்திருவருட்செல்வர்

Sitthamellaam Enakku Song Lyrics in Tamil


ஆண் : பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா…
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை…
வைத்தாய்ப் பெண்ணை தென்பால்…
வெண்ணை நல்லூர் அருள் துறையுள்…
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே…

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே…
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே…

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…

ஆண் : அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை…
அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை…
அந்த அம்மையில்லாமல் இந்தப்பிள்ளை இல்லை…

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே…

BGM

ஆண் : பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக…
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக…

ஆண் : பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக…
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக…
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக…
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக…
எந்தன் சந்ததியே உந்தனுக்கு அடி பணிய இறைவா…

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே…

BGM

ஆண் : கண்ணைத் திறந்து வைத்த கருப் பொருளே…
கோவில் கதவைத் திறந்தழைத்த திருவருளே…
கண்ணைத் திறந்து வைத்த கருப் பொருளே…
கோவில் கதவைத் திறந்தழைத்த திருவருளே…

ஆண் : வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே…
வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே…
வந்து என்னை என்றும் ஆளுகின்ற பரம்பொருளே இறைவா…

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே…
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…


Notes : Sitthamellaam Enakku Song Lyrics in Tamil. This Song from Thiruvarutchelvar (1967). Song Lyrics penned by Kannadasan. சித்தமெல்லாம் எனக்கு பாடல் வரிகள்.


வருகவே வருகவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாகே.வி. மகாதேவன்ஆதி பராசக்தி

Varugavae Varugavae Song Lyrics in Tamil


BGM

பெண் : வருகவே வருகவே இறைவா என் தலைவா…
வருகவே வருகவே இறைவா என் தலைவா…
வருகவே வருகவே…

BGM

பெண் : கருணையின் திரு முகம் வருகவே…
காலத்தின் நாயகன் வருகவே…
கருணையின் திரு முகம் வருகவே…
காலத்தின் நாயகன் வருகவே…

பெண் : பெருகிய வலிவோடு வருகவே…
பெருகிய வலிவோடு வருகவே…
பெரும்பொருள் பரம்பொருள் வருகவே…
இறைவா என் தலைவா வருகவே வருகவே…

BGM

பெண் : தான் நினைத்தபடி ஆடும் என்பவரின்…
ஆணவத்து நிலை அருகவே…

BGM

பெண் : வேல் எடுத்த இரு தோள் எடுத்தபடி…
நான் நினைத்த இடம் வருகவே…

BGM

பெண் : காரெடுத்த குழல் மேவு சக்தி தன்னை…
பூ முடிப்பதென்ன வருகவே…

BGM

பெண் : காத்திருக்கும் விழி கோடி கோடி…
அவை பார்த்திருக்க இவள் வருகவே…

பெண் : இறைவா என் தலைவா வருகவே வருகவே…

பெண் : மனிதர் ஆணவம் அழியவே…
நமது நாடகம் முடியவே…
அர்த்த நாரி என இணையவே…
அறிய சக்தியோடு வருகவே…

BGM


Notes : Varugavae Varugavae Song Lyrics in Tamil. This Song from Aathi Parasakthi (1971). Song Lyrics penned by Kannadasan. வருகவே வருகவே பாடல் வரிகள்.


நானாட்சி செய்து வரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாகே.வி. மகாதேவன்ஆதி பராசக்தி

Naan Atchi Song Lyrics in Tamil


BGM

பெண் : நானாட்சி செய்து வரும் நான்மாட கூடலிலே…
மீனாக்ஷி என்ற பெயர் எனக்கு…
நானாட்சி செய்து வரும் நான்மாட கூடலிலே…
மீனாக்ஷி என்ற பெயர் எனக்கு…

பெண் : கங்கை நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில்…
விசாலாக்ஷி என்ற பெயர் வழக்கு…
கங்கை நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில்…
விசாலாக்ஷி என்ற பெயர் வழக்கு…

பெண் : கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலை காஞ்சி தன்னில்…
காமாக்ஷி என்ற பெயர் எனக்கு…
கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலை காஞ்சி தன்னில்…
காமாக்ஷி என்ற பெயர் எனக்கு…

பெண் : கொடும் கோலாட்சி தன்னை எதிர்க்கும் மாரியம்மன்…
என்ற பெயர் கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு…
கொடும் கோலாட்சி தன்னை எதிர்க்கும் மாரியம்மன்…
என்ற பெயர் கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு…

BGM

பெண் : ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும்…
அது நீரோடும் பாதை தன்னை குறிக்கும்…
ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும்…
அது நீரோடும் பாதை தன்னை குறிக்கும்…

பெண் : நிற்கும் ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி…
ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்…
நிற்கும் ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி…
ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்…

BGM


Notes : Naan Atchi Song Lyrics in Tamil. This Song from Aathi Parasakthi (1971). Song Lyrics penned by Kannadasan. நானாட்சி செய்து வரும் பாடல் வரிகள்.


திருப்பரங்குன்றத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பூவை செங்குட்டுவன்ராஜலட்சுமி & பி. சுசீலாகே.வி.மகாதேவன்கந்தன் கருணை

Thirupparang Kundrathil Song Lyrics in Tamil


BGM

பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…

BGM

பெண் : திருச்செந்தூரிலே வேலாடும்…
உன் திருப்புகழ் பாடியே கடலாடும்…
திருச்செந்தூரிலே வேலாடும்…
உன் திருப்புகழ் பாடியே கடலாடும்…

பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…

BGM

பெண் : பழநியிலே இருக்கும் கந்தப் பழம்…
நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்…
பழநியிலே இருக்கும் கந்தப் பழம்…
நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்…

பெண் : பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்…
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்…
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்…
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்…

பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…

BGM

பெண் : சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு…
உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு…
சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு…
உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு…

பெண் : உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை…
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை…
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை…
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை…

பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…

பெண் : திருச்செந்தூரிலே வேலாடும்…
உன் திருப்புகழ் பாடியே கடலாடும்…

பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…


Notes : Thirupparang Kundrathil Song Lyrics in Tamil. This Song from Kandhan Karunai (1967). Song Lyrics penned by Poovai Senguttuvan. திருப்பரங்குன்றத்தில் பாடல் வரிகள்.