சித்தமெல்லாம் எனக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி. எம். சௌந்தரராஜன்கே. வி. மகாதேவன்திருவருட்செல்வர்

Sitthamellaam Enakku Song Lyrics in Tamil


ஆண் : பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா…
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை…
வைத்தாய்ப் பெண்ணை தென்பால்…
வெண்ணை நல்லூர் அருள் துறையுள்…
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே…

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே…
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே…

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…

ஆண் : அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை…
அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை…
அந்த அம்மையில்லாமல் இந்தப்பிள்ளை இல்லை…

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே…

BGM

ஆண் : பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக…
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக…

ஆண் : பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக…
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக…
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக…
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக…
எந்தன் சந்ததியே உந்தனுக்கு அடி பணிய இறைவா…

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே…

BGM

ஆண் : கண்ணைத் திறந்து வைத்த கருப் பொருளே…
கோவில் கதவைத் திறந்தழைத்த திருவருளே…
கண்ணைத் திறந்து வைத்த கருப் பொருளே…
கோவில் கதவைத் திறந்தழைத்த திருவருளே…

ஆண் : வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே…
வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே…
வந்து என்னை என்றும் ஆளுகின்ற பரம்பொருளே இறைவா…

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே…
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…


Notes : Sitthamellaam Enakku Song Lyrics in Tamil. This Song from Thiruvarutchelvar (1967). Song Lyrics penned by Kannadasan. சித்தமெல்லாம் எனக்கு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top