Tag Archives: வாலி

oru-kili-oru-kili-song-lyrics

ஒரு கிளி ஒரு கிளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசதீஷ் சக்ரவர்த்தி & ஸ்ரேயா கோஷல்சதீஷ் சக்ரவர்த்திலீலை

Oru Kili Oru Kili Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி…
உன்னை தொடவே அனுமதி…
ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
வழிகிறதே விழி வழி…

ஆண் : உனக்குள் நான் வாழும்…
விவரம் நான் கண்டு…
வியக்கிறேன் வியர்க்கிறேன்…

பெண் : எனக்கு நான் அல்ல…
உனக்குதான் என்று உணர்கிறேன்…

ஆண் : நிழல் என தொடர்கிறேன்…

ஆண் : ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி…
உன்னை தொடவே அனுமதி…
ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
வழிகிறதே விழி வழி…

BGM

பெண் : விழி அல்ல விரல் இது…
ஓர் மடல்தான் வரைந்தது…
உயிர் அல்ல உயில் இது…
உனக்குதான் உரியது…

ஆண் : இமைகளின் இடையில் நீ…
இமைப்பதை நான் தவிர்க்கிறேன்…
விழிகளின் வழியில் நீ…
உறக்கம் வந்தால் தடுக்கிறேன்…

பெண் : காதல்தான் எந்நாளும் ஒரு…
வார்த்தைக்குள் வராதது…

ஆண் : காலங்கள் சென்றாலும் அந்த…
வானம் போல் விழாதது…

ஆண் : ஒரு கிளி ஒரு கிளி…

பெண் : சிறு கிளி…
உன்னை தொடவே அனுமதி…
ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
வழிகிறதே விழி வழி…

BGM

ஆண் : தூரத்து மேகத்தை…
துரத்தி செல்லும் பறவை போலே…
தோகையே உன்னை நான்…
தேடியே வந்தேன் இங்கே…

பெண் : பொய்கையை போல் கிடந்தவள்…
பார்வை என்னும் கல் எறிந்தாய்…
தங்கினேன் உன் கையில்…
வழங்கினேன் இன்றே…

ஆண் : தோழியே உன் தேகம் இளம்…
தென்றல்தான் தொடாததோ…

பெண் : தோழனே உன் கைகள் தொட…
நாணம்தான் விடாததோ…

பெண் : ஒரு கிளி ஒரு கிளி…

ஆண் : சிறு கிளி…
உன்னை தொடவே அனுமதி…
ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
வழிகிறதே விழி வழி…

பெண் : உனக்குள் நான் வாழும்…
விவரம் நான் கண்டு…
வியக்கிறேன் வியர்க்கிறேன்…

ஆண் : எனக்கு நான் அல்ல…
உனக்குதான் என்று உணர்கிறேன்…

பெண் : நிழல் என தொடர்கிறேன்…

ஆண் & பெண் : ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி…
உன்னை தொடவே அனுமதி…
ஒரு துளி ஒரு துளி சிறு துளி…
வழிகிறதே விழி வழி…

BGM


Notes : Oru Kili Oru Kili Song Lyrics in Tamil. This Song from Leelai (2012). Song Lyrics penned by Vaali. ஒரு கிளி ஒரு கிளி பாடல் வரிகள்.


நிலாவே வா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாமௌன ராகம்

Nilavae Vaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிலாவே வா செல்லாதே வா…
எந்நாளும் உன்…
பொன்வானம் நான்…
எனை நீ தான் பிரிந்தாலும்…
நினைவாலே அணைப்பேன்…

ஆண் : நிலாவே வா…
செல்லாதே வா…

BGM

ஆண் : காவேரியா கானல் நீரா…
பெண்ணே என்ன உண்மை…
முள்வேலியா முல்லைப்பூவா…
சொல்லு கொஞ்சம் நில்லு…

ஆண் : அம்மாடியோ நீ தான்…
இன்னும் சிறு பிள்ளை…
தாங்காதம்மா நெஞ்சம்…
நீயும் சொன்ன சொல்லை…

ஆண் : பூந்தேனே நீ தானே…
சொல்லில் வைத்தாய் முள்ளை…

ஆண் : நிலாவே வா…
செல்லாதே வா…

BGM

ஆண் : பூஞ்சோலையில் வாடைக்காற்றும் வாட…
சந்தம் பாட…
கூடாதென்று கூறும் பூவும் ஏது…
மண்ணின் மீது…

ஆண் : ஒரே ஒரு பார்வை…
தந்தால் என்ன தேனே…
ஒரே ஒரு வார்த்தை…
சொன்னால் என்ன மானே…

ஆண் : ஆகாயம் தாங்காத…
மேகம் ஏது கண்ணே…

ஆண் : நிலாவே வா செல்லாதே வா…
எந்நாளும் உன்…
பொன்வானம் நான்…
எனை நீ தான் பிரிந்தாலும்…
நினைவாலே அணைப்பேன்…

ஆண் : நிலாவே வா…
செல்லாதே வா…
எந்நாளும் உன்…
பொன்வானம் நான்…


Notes : Nilavae Vaa Song Lyrics in Tamil. This Song from Mouna Ragam (1986). Song Lyrics penned by Vaali. நிலாவே வா பாடல் வரிகள்.


எனைக் காணவில்லையே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம், ஓ.எஸ். அருண் & ரஃபிஏ.ஆர்.ரகுமான்காதல் தேசம்

Ennai Kaanavillaiye Song Lyrics in Tamil


ஆண் : அன்பே… அன்பே…
அன்பே… அன்பே…

BGM

ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு…
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு…
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு…
அன்பே…

ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா…
என் நிழலும் நீயெனப் புரியாதா…
உடல் நிழலைச் சேரவே முடியாதா…
அன்பே… அன்பே…

ஆண் : நடை போடும் பூங்காற்றே…
பூங்காற்றே…

ஆண் : வா வா…

குழு (ஆண்கள்) : என் வாசல்தான்…

ஆண் : வந்தால்…

குழு (ஆண்கள்) : வாழ்வேனே நான்…

ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு…
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு…
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு…
அன்பே…

BGM

ஆண் : ஆகாரம் இல்லாமல் நான் வாழக்கூடும்…
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்…
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்…
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்…

ஆண் : நான் என்று சொன்னாலே…
நான் அல்ல நீதான்…
நீ இன்றி வாழ்ந்தாலே…
நீர்கூடத் தீதான்…
உன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான்…

ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு…
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு…
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு…
அன்பே…

ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா…
என் நிழலும் நீயெனப் புரியாதா…
உடல் நிழலைச் சேரவே முடியாதா…
அன்பே… அன்பே…

BGM

ஆண் : நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்…
நீ என்னை நீங்கிச் சென்றாலே…
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்…
நீ எந்தன் பக்கம் நின்றாலே…

ஆண் : மெய்யாக நீ என்னை…
விரும்பாத போதும்…
பொய் ஒன்று சொல் கண்ணே…
என் ஜீவன் வாழும்…
நிஜம் உந்தன் காதலென்றால்…

ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு…
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு…
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு…
அன்பே…

ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா…
என் நிழலும் நீயெனப் புரியாதா…
உடல் நிழலைச் சேரவே முடியாதா…
அன்பே… அன்பே…

ஆண் : நடை போடும் பூங்காற்றே…
பூங்காற்றே…

ஆண் : வா வா…

குழு (ஆண்கள்) : என் வாசல்தான்…

ஆண் : வந்தால்…

குழு (ஆண்கள்) : வாழ்வேனே நான்…

ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு…
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு…
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு…
அன்பே…

BGM


Notes : Ennai Kaanavillaiye Song Lyrics in Tamil. This Song from Kadhal Desam (1996). Song Lyrics penned by Vaali. எனைக் காணவில்லையே பாடல் வரிகள்.


மருதாணி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமதுஸ்ரீ & ஏ.ஆர்.ரகுமான்ஏ.ஆர்.ரகுமான்சக்கரகட்டி

Marudaani Song Lyrics in Tamil


BGM

பெண் : மருதாணி… மருதாணி…
மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
கங்கை என்று கானலை காட்டும்…
காதல் கானல் என்று கங்கையை காட்டும்…
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்…
காதல் கதைக்கு… கண்ணீர் வேண்டும்…

பெண் : மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
ஆகாயம் மண் மீது சாயாது…
நிஜமான காதல்தான்…
நிலையான பாடல்தான்…
அதன் ஓசை எந்நாளும் ஓயாது…

பெண் : மருதாணி…
மருதாணி விழியில் ஏன்…

BGM

பெண் : அவன் இதய வீட்டில் வாழும்…
அவள் தேகம் வெந்து போகும்…
என அவன் அருந்திட மாட்டான்…
சுடு நீரும் சுடு சோறும்…

பெண் : காதலி கை நகம் எல்லாம்…
பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான்…

BGM

பெண் : ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி… ஓஓ…
உணரவில்லை இன்னொரு பாதி…

பெண் : மருதாணி விழியில் ஏன்…
மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
ஆகாயம் மண் மீது சாயாது…
நிஜமான காதல்தான்…
நிலையான பாடல்தான்…
அதன் ஓசை எந்நாளும் ஓயாது…

BGM

பெண் : அவள் அவன் காதல் நெஞ்சில்…
கண்டாலே சிறு குற்றம்…
அவன் நெஞ்சம் தாய்பால் போலே…
எந்நாளும் பரிசுத்தம்…
ஆத்திரம் நேத்திரம் மூட… அஅ…
பாலையும் கள்ளாய் அவள் பார்க்கிறாள்…

BGM

பெண் : ஆக மொத்தம் அவசரக் கோலம்… ஓ… ஓஓ…
அவளுக்கிதை காட்டிடும் காலம்…

பெண் : மருதாணி… மருதாணி…
மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
கங்கை என்று கானலை காட்டும்…
காதல் கானல் என்று கங்கையை காட்டும்…
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்…
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்…

பெண் : மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
ஆகாயம் மண் மீது சாயாது…
நிஜமான காதல்தான்…
நிலையான பாடல்தான்…
அதன் ஓசை எந்நாளும் ஓயாது…

பெண் : மருதாணி… மருதாணி விழியில் ஏன்…
மருதாணி… மருதாணி… மருதாணி…
மருதாணி விழியில் ஏன்…


Notes : Marudaani Song Lyrics in Tamil. This Song from Sakkarakatti (2007). Song Lyrics penned by Vaali. மருதாணி பாடல் வரிகள்.


உன்னாலே உன்னாலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிணி, கார்த்திக் & கிரிஷ்ஹாரிஸ் ஜெயராஜ்உன்னாலே உன்னாலே

Unnale Unnale Song Lyrics in Tamil


ஆண் : முதல் முதலாக முதல் முதலாக…
பரவசமாக பரவசமாக…
வா வா வா அன்பே…
ஓஹோ… தனித்தனியாக தன்னந்தனியாக…
இலவசமாக இவன்வசமாக…
வா வா வா அன்பே…

BGM

ஆண் : உன்னாலே உன்னாலே…
விண்ணாளச்சென்றேனே…
உன் முன்னே உன் முன்னே…
மெய் காண நின்றேனே…

ஆண் : ஒரு சொட்டு கடலும் நீ…
ஒரு பொட்டு வானம் நீ…
ஒரு புள்ளி புயலும் நீ…
பிரமித்தேன்… ஹோ…

ஆண் : ஒளி வீசும் இரவும் நீ…
உயிர் கேட்கும் அமுதம் நீ…
இமை மூடும் விழியும் நீ…
யாசித்தேன்…

ஆண் : முதல் முதலாக முதல் முதலாக…
பரவசமாக பரவசமாக…
வா வா வா அன்பே…
ஓஹோ… தனித்தனியாக தன்னந்தனியாக…
இலவசமாக இவன்வசமாக…
வா வா வா அன்பே…

ஆண் : முதல் முதலாக முதல் முதலாக…
பரவசமாக பரவசமாக…
வா வா வா அன்பே…
ஓஹோ… தனித்தனியாக தன்னந்தனியாக…
இலவசமாக இவன்வசமாக…
வா வா வா அன்பே…

ஆண் : ஒரு பார்வை நீளத்தை…
ஒரு வார்த்தை நாணத்தை…
தாங்காமல் விழுந்தேனே…
தூங்காமல் வாழ்வேனே…

ஆண் : நதிமீது சருகை போல்…
உன் பாதை வருகின்றேன்…
கரை தேற்றி விடுவாயோ…
கதி மோட்சம் தருவாயோ…

ஆண் : மொத்தமாய் மொத்தமாய்…
நான் மாறிப்போனேனே…
சுத்தமாய் சுத்தமாய்…
தூள் தூளாய் ஆனேனே…

ஆண் : முதல் முதலாக முதல் முதலாக…
பரவசமாக பரவசமாக…
வா வா வா அன்பே…
ஓஹோ… தனித்தனியாக தன்னந்தனியாக…
இலவசமாக இவன்வசமாக…
வா வா வா அன்பே…

ஆண் : உன்னாலே உன்னாலே…
விண்ணாளச்சென்றேனே…
உன் முன்னே உன் முன்னே…
மெய் காண நின்றேனே…

BGM

ஆண் : நீ என்பது மழையாக…
நான் என்பது வெயிலாக…
மழையோடு வெயில் சேரும்…
அந்த வானிலை சுகமாகும்…

பெண் : சரி என்று தெரியாமல்…
தவறென்று புரியாமல்…
எதில் வந்து சேர்ந்தேன் நான்…
எதிர்பார்க்கவில்லை நான்…

ஆண் : என் வசம் என் வசம்…
இரண்டடுக்கு ஆகாயம்…
இரண்டிலும் போகுதே…
என் காதல் கார்மேகம்…

BGM

பெண் : உன்னாலே உன்னாலே…
விண்ணாளச்சென்றேனே…
உன் முன்னே உன் முன்னே…
மெய் காண நின்றேனே…

ஆண் : ஒரு சொட்டு கடலும் நீ…
ஒரு பொட்டு வானம் நீ…
ஒரு புள்ளி புயலும் நீ…
பிரமித்தேன்…

பெண் : ஒளி வீசும் இரவும் நீ…
உயிர் கேட்கும் அமுதம் நீ…
இமை மூடும் விழியும் நீ…
யாசித்தேன்…

BGM


Notes : Unnale Unnale Song Lyrics in Tamil. This Song from Unnale Unnale (2007). Song Lyrics penned by Vaali. உன்னாலே உன்னாலே பாடல் வரிகள்.


நண்பனே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலியுவன் ஷங்கர் ராஜா & மதுஸ்ரீ யுவன் ஷங்கர் ராஜாமங்காத்தா

Nanbane Song Lyrics in Tamil


BGM

பெண் : என் நண்பனே என்னை எய்த்தாய்… ஓ…
என் பாவமாய் வந்து வாய்த்தாய்…
உன் போலவே நல்ல நடிகன்… ஓ…
ஊா் எங்கிலும் இல்லை ஒருவன்…

பெண் : நல்லவர்கள் யாரோ… தீயவர்கள் யாரோ…
கண்டு கொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே…
கங்கை நதி எல்லாம் கானல் நதி என்று…
பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ…

ஆண் : காதல் என்பது கனவு மாளிகை…
புரிந்து கொள்ளடி என் தோழியே…
உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன்…
காணவில்லையே என் தோழியே…

BGM

பெண் : வலக்கையை பிடித்து வலக்கையில் விழுந்தேன்…
வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன்…
உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன்…

பெண் : எழுதிய கவிதை ஏன் முதல்வரி முதல்…
முழுவதும் பிழை…
விழிகளின் வழி விழுந்தது மழை…
எல்லாம் உன்னால்தான்…

பெண் : இதுவா உந்தன் நியாயங்கள்…
எனக்கேன் இந்த காயங்கள்…
கிழித்தாய் ஒரு காதல் ஓவியம்… ஓஓ…

பெண் : முருகன் முகம் ஆறுதான்…
மனிதன் முகம் நூறுதான்…
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ…
என் நண்பனே என்னை எய்த்தாய்…

ஆண் : காதல் வெல்லுமா காதல் தோற்குமா…
யாரும் அறிந்ததில்லையே என் தோழியே…
காதல் ஓவியம் கிழிந்துபோனதா…
கவலை ஏனடி இதுவும் கடந்திடும்…

BGM

பெண் : அடிக்கடி எனை நீ அணைத்ததை அறிவேன்…
அன்பென்னும் விளக்கை அணைத்தது அறியேன்…

பெண் : புயல் வந்து சாய்த்த மரம் ஒரு விறகு…
உனக்கென தெரியும்…
என் இதயத்தில் வந்து விழுந்தது இடி…
இள மனம் எங்கும் இருந்தது வலி…
எம்மா எம்மா…

பெண் : உலகில் உள்ள பெண்களே…
உரைப்பேன் ஒரு பொன்மொழி…
காதல் ஒரு கனவு மாளிகை… ஓஓ…

பெண் : எதுவும் அங்கு மாயம்தான்…
எல்லாம் வர்ணஜாலம்தான்…
நம்பாமல் வாழ்வதென்றும் நலமே…

ஆண் : காதல் என்பது கனவு மாளிகை…
புரிந்து கொள்ளடி என் தோழியே…
உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன்…
காணவில்லையே என் தோழியே…

BGM


Notes : Nanbane Song Lyrics in Tamil. This Song from Mankatha (2011). Song Lyrics penned by Vaali. நண்பனே பாடல் வரிகள்.


யமுனை ஆற்றிலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமிட்டலி பானர்ஜி பாவ்மிக்இளையராஜாதளபதி

Yamunai Aatrile Song Lyrics in Tamil


BGM

பெண் : யமுனை ஆற்றிலே…
ஈர காற்றிலே…
கண்ணனோடுதான் ஆட…
பார்வை பூத்திட…
பாதை பார்த்திட…
பாவை ராதையோ வாட…

குழு (பெண்கள்) : யமுனை ஆற்றிலே…
ஈர காற்றிலே…
கண்ணனோடுதான் ஆட…
பார்வை பூத்திட…
பாதை பார்த்திட…
பாவை ராதையோ வாட…

பெண் : இரவும் போனது…
பகலும் போனது…
மன்னன் இல்லையே கூட…
இளைய கன்னியின்…
இமைத்திடாத கண்…
இங்கும் அங்குமே தேட…

குழு (பெண்கள்) : இரவும் போனது…
பகலும் போனது…
மன்னன் இல்லையே கூட…
இளைய கன்னியின்…
இமைத்திடாத கண்…
இங்கும் அங்குமே தேட…

பெண் : ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ… ஓ…
ஆசை வைப்பதே…
அன்பு தொல்லையோ… ஓ…
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ…
ஆசை வைப்பதே…
அன்பு தொல்லையோ…
பாவம் ராதா…

குழு (பெண்கள்) : யமுனை ஆற்றிலே…
ஈர காற்றிலே…
கண்ணனோடுதான் ஆட…

பெண் : பார்வை பூத்திட…
பாதை பார்த்திட…
பாவை ராதையோ வாட…


Notes : Yamunai Aatrile Song Lyrics in Tamil. This Song from Thalapathi (1991). Song Lyrics penned by Vaali. யமுனை ஆற்றிலே பாடல் வரிகள்.


ரோஜா ரோஜா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. உன்னிகிருஷ்ணன்ஏ.ஆர்.ரகுமான்காதலர் தினம்

Roja Roja Song Lyrics in Tamil


ஆண் : ரோஜா… ரோஜா…

ஆண் : ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…

ஆண் : கண்ட பின்னே உன்னிடத்தில்…
என்னைவிட்டு வீடுவந்தேன்…
உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்…
அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன்…
உனை வேறு கைகளில் தரமாட்டேன்…
நான் தரமாட்டேன்…
நான் தரமாட்டேன்…
ரோஜா… ரோஜா… ரோஜா… ரோஜா…

BGM

ஆண் : நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்…
நிழல் விழுந்தால் மணலையும் மடியினில் தாங்குவேன்…
உடையென எடுத்து எனை உடுத்து…
நூலாடைக் கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா…

ஆண் : உன் பேர் மெல்ல நான் சொன்னதும்…
என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன…
ஓர் நாள் உன்னைக் காணாவிடில்…
எங்கே உன் அன்பென்று கேட்கின்றன…
நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே…

ஆண் : மழையில் நீ நனைகையில்…
எனக்குக் காய்ச்சல் வரும்…
வெயிலில் நீ நடக்கையில்…
எனக்கு வேர்வை வரும்…
உடல்களால் ரெண்டு உணர்வுகள் ஒன்று…
ரோஜா… ரோஜா… ரோஜா…

ஆண் : ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
கண்ட பின்னே உன்னிடத்தில்…
என்னைவிட்டு வீடுவந்தேன்…

BGM

ஆண் : இளையவளின் இடையொரு நூலகம்…
படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்…
இடைவெளி எதற்கு சொல் நமக்கு…
உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன…

ஆண் : என்னைத் தீண்டக் கூடாதென…
வானோடு சொல்லாது வங்கக்கடல்…
என்னை ஏந்தக் கூடாதென…
கையோடு சொல்லாது புல்லாங்குழல்…
நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே…

ஆண் : விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே…
எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே…
உனைவிட வேறு நினைவுகள் ஏது…
ரோஜா… ரோஜா… ரோஜா…

ஆண் : ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
கண்ட பின்னே உன்னிடத்தில்…
என்னைவிட்டு வீடுவந்தேன்…

ஆண் : ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
ரோஜா… ரோஜா…

BGM


Notes : Roja Roja Song Lyrics in Tamil. This Song from Kadhalar Dhinam (1999). Song Lyrics penned by Vaali. ரோஜா ரோஜா பாடல் வரிகள்.


தேக்கோ தேக்கோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுவி, ஸ்ரீ சரண் & சந்தியாஹாரிஸ் ஜெயராஜ்ஆதவன்

Dekho Dekho Song Lyrics in Tamil


BGM

பெண் : தேக்கோ தேக்கோ தேக்கோ…
தேக்கோ தேக்கோ தேக்கோ…
ஆஹா ஹா ஹா… ஹா ஆஆ…
ஆஹா ஹா ஹா… ஹா ஆஆ…

பெண் : கோ… ரெடி ரெடி ஜூட்டு…
தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு…
வெரி வெரி க்யூட்டு…
இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு…

ஆண் : அம்மா நீங்க…

பெண் : எதுக்கடி போட்டி…
குழல் விழி இது கொடைக்கானல் பியூட்டி…

ஆண் : ஹௌஸ் தட் பீப்பில்…

பெண் : கொடி இடை ஆட்டி…
கலக்கிடும் உந்தன் கன்னடத்து பியூட்டி….

ஆண் : யா…
ஹே ஓல்டு லேடிஸ் அன்ட் பேட்லீஸ்…
வான பி எ டாலி… யா…

பெண் : தேக்கோ தேக்கோ…
இருவரில் ஜெயம் யார்க்கோ யார்க்கோ…
பூக்கோ காய்க்கோ…
இரண்டுக்கும் சரிசமம் மார்க்கோ மார்க்கோ…
மூக்கோ நாக்கோ…
உனக்கென இரண்டுமே வீக்கோ வீக்கோ…
உன் தேகம் என்ன…
நான் தொட்டால் ஒட்டும் ஸ்பென்சர் கேக்கோ…

பெண் : ஏ நாட்டி ஆன்டி…
உன் நாக்கை நீட்டி…
ஏன் போட்டா போட்டி…
பாவம் ஓடிப்போவாயே…

ஆண் : மானம் போகுதம்மா…

பெண் : நீ அவ்வையாரு…
உன் அட்வைஸ் போரு…
தாங்காது ஊரு…
எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது…

BGM

ஆண் : ஹே ஆல்…
வாட்ச் த ஸ்பேஸ்…
பன்ச் ஆன் யுவர் பேஸ்…
சி ஸ் ஹாட் ஹாட் பட் சி ஸ் காட்…

ஆண் : அந்த உடம்ப பார்த்தா…
சும்மா தெரிஞ்சிடும் ஃபுல் ஹார்ட்…
ட்ரைசெப்ஸ் அன்ட் பைசெப்ஸ் அன்ட் பிளாட் ஆப்ஸ்…
என்ன மேட்ச் வித் ஆல் யுவர் ஹேங்கிங் ஃபெட்…

ஆண் : அங்கே பாரு தொங்கி போன குடுகுடு பார்ட்டி…
ரெண்டு பேரும் மோத இப்ப கிளம்புது போட்டி…
குடு குடு பார்ட்டி…
கிளம்பது போட்டி…

பெண் : மேலே மேலே…
பூட் வாக் கேட் வாக்…
போட்டால் போதும்…
கிளீன் போல்டு சேவாக்…

குழு (பெண்கள்) : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்…
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்…
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்…
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்…

பெண் : மென்மை கலந்தால் என்றும் பெண்மை விளங்கும்…
போக போகத்தான் இந்த உண்மை விளங்கும்…
இந்த பழமை அடி உன்னை வெள்ளும் புதுமை…
விழுதுகளின் வலிமை எல்லாமே வேர்களில்தான் இருக்கு…

BGM

ஆண் : ஆஹா…

பெண் : ரெடி ரெடி ஜூட்டு…
தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு…
வெரி வெரி க்யூட்டு…
இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு…

பெண் : எதுக்கடி போட்டி…
குழல் விழி இது கொடைக்கானல் பியூட்டி…
கொடி இடை ஆட்டி கலக்கிடும்…
உந்தன் கன்னடத்து பியூட்டி…

BGM

ஆண் : ஹேய் ஹேய்…
பஞ்ச் ஆன் யுவர்…
பஞ்ச் ஆன் யுவர்…

BGM

பெண் : நூடுல்ஸ் போலே…
இந்த ஹிப்பு…
நீடில்ஸ் போலே…
இந்த லுக்கு…

BGM

பெண் : சக்தி குறிச்சு ரொம்ப துள்ளக்கூடாது…
தன்னை பற்றியே தானே சொல்லக்கூடாது…
சின்ன நதியால் வங்ககடலை வெல்ல முடியும்…
டிராக் சூட்டும் டிசர்ட்டும் எதுக்கு…
புடவையில் கிக்கு இருக்கு…

பெண் : தேக்கோ தேக்கோ…
இருவரில் ஜெயம் யார்க்கோ யார்க்கோ…
பூக்கோ காய்க்கோ…
இரண்டுக்கும் சரிசமம் மார்க்கோ மார்க்கோ…
மூக்கோ நாக்கோ…
உனக்கென இரண்டுமேவீக்கோ வீக்கோ…
உன் தேகம் என்ன…
நான் தொட்டால் ஒட்டும் ஸ்பென்சர் கேக்கோ…

பெண் : ஏ நாட்டி ஆன்டி…
உன் நாக்கை நீட்டி…
ஏன் போட்டா போட்டி…
பாவம் ஓடிப்போவாயே…

பெண் : உன் கிராண்ட்மா ஓல்டு…
ஓல்டு எல்லாம் கோல்டு…
கோல்டு எல்லாம் போல்டு…

குழு (பெண்கள்) : எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது…


Notes : Dekho Dekho Song Lyrics in Tamil. This Song from Aadhavan (2009). Song Lyrics penned by Vaali. தேக்கோ தேக்கோ பாடல் வரிகள்.


இஞ்சி இடுப்பழகி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகமல்ஹாசன், எஸ். ஜானகி & மின்மினிஇளையராஜாதேவர் மகன்

Inji Idupazhagi Song Lyrics in Tamil


பெண் : இஞ்சி இடுப்பழகா…
மஞ்ச சிவப்பழகா…
கள்ள சிரிப்பழகா…
கள்ள… இஞ்சி…

பெண் (வசனம்) : வெறும் காத்து தாங்க வருது…

ஆண் (வசனம்) : ஹ்ம்ம்… இல்ல…
இது நால ஒன்னும் இல்ல பாட்டுதான்…

ஆண் : மறக்க மனம் கூடுதில்லையே…
ரைட்…

பெண் : மறுந்திருவேணிகளே…

ஆண் : ஹ்ம்ம்… ஹாஹா…

ஆண் : இஞ்சி இடுப்பழகி…
மஞ்ச சிவப்பழகி…
கள்ளச் சிரிப்பழகி…
மறக்க மனம் கூடுதில்லையே…

ஆண் : மறக்குமா மாமன் எண்ணம்…
மயக்குதே பஞ்சவர்ணம்…
மடியிலே ஊஞ்சல் போட மானே வா…

ஆண் : இஞ்சி இடுப்பழகி…
மஞ்ச சிவப்பழகி…
கள்ளச் சிரிப்பழகி…
மறக்க மனம் கூடுதில்லையே… ஏ…

—BGM—

பெண் : தன்னந் தனிச்சிருக்க தத்தளிச்சு தான் இருக்க…
உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே… ஏ…

ஆண் : புன்னை வனத்தினிலே…
பேடைக் குயில் கூவையிலே…
உன்னுடைய வேதனைய நான் அறிஞ்சேன்…

பெண் : உன் கழுத்தில் மாலையிட…
உன்னிரண்டு தோளைத் தொட…
என்ன தவம் செஞ்சேனோ என் மாமா… ஆ… ஆ…

ஆண் : வண்ணக்கிளி கையத் தொட…
சின்னக் சின்னக் கோலமிட…
உள்ளம் மட்டும் உன் வழியே நானே…
உள்ளம் மட்டும் உன் வழியே நானே…

பெண் : இஞ்சி இடுப்பழகா…
மஞ்ச சிவப்பழகா…
கள்ள சிரிப்பழகா…
மறக்க மனம் கூடுதில்லையே… ஆஆ…

ஆண் : இஞ்சி இடுப்பழகி…
மஞ்ச சிவப்பழகி…
கள்ளச் சிரிப்பழகி…
மறக்க மனம் கூடுதில்லையே…

பெண் : அடிக்கிற காத்தைக் கேளு…
அசையுற நாத்தைக் கேளு…
நடக்கிற ஆத்தைக் கேளு நீ தானா…

ஆண் : இஞ்சி இடுப்பழகி…
மஞ்ச சிவப்பழகி…
கள்ளச் சிரிப்பழகி…
மறக்க மனம் கூடுதில்லையே… ஹான்…

—BGM—


Notes : Inji Idupazhagi Song Lyrics in Tamil. This Song from Thevar Magan (1992). Song Lyrics penned by Vaali. இஞ்சி இடுப்பழகி பாடல் வரிகள்.