பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | மதுஸ்ரீ & ஏ.ஆர்.ரகுமான் | ஏ.ஆர்.ரகுமான் | சக்கரகட்டி |
Marudaani Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மருதாணி… மருதாணி…
மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
கங்கை என்று கானலை காட்டும்…
காதல் கானல் என்று கங்கையை காட்டும்…
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்…
காதல் கதைக்கு… கண்ணீர் வேண்டும்…
பெண் : மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
ஆகாயம் மண் மீது சாயாது…
நிஜமான காதல்தான்…
நிலையான பாடல்தான்…
அதன் ஓசை எந்நாளும் ஓயாது…
பெண் : மருதாணி…
மருதாணி விழியில் ஏன்…
—BGM—
பெண் : அவன் இதய வீட்டில் வாழும்…
அவள் தேகம் வெந்து போகும்…
என அவன் அருந்திட மாட்டான்…
சுடு நீரும் சுடு சோறும்…
பெண் : காதலி கை நகம் எல்லாம்…
பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான்…
—BGM—
பெண் : ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி… ஓஓ…
உணரவில்லை இன்னொரு பாதி…
பெண் : மருதாணி விழியில் ஏன்…
மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
ஆகாயம் மண் மீது சாயாது…
நிஜமான காதல்தான்…
நிலையான பாடல்தான்…
அதன் ஓசை எந்நாளும் ஓயாது…
—BGM—
பெண் : அவள் அவன் காதல் நெஞ்சில்…
கண்டாலே சிறு குற்றம்…
அவன் நெஞ்சம் தாய்பால் போலே…
எந்நாளும் பரிசுத்தம்…
ஆத்திரம் நேத்திரம் மூட… அஅ…
பாலையும் கள்ளாய் அவள் பார்க்கிறாள்…
—BGM—
பெண் : ஆக மொத்தம் அவசரக் கோலம்… ஓ… ஓஓ…
அவளுக்கிதை காட்டிடும் காலம்…
பெண் : மருதாணி… மருதாணி…
மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
கங்கை என்று கானலை காட்டும்…
காதல் கானல் என்று கங்கையை காட்டும்…
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்…
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்…
பெண் : மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
ஆகாயம் மண் மீது சாயாது…
நிஜமான காதல்தான்…
நிலையான பாடல்தான்…
அதன் ஓசை எந்நாளும் ஓயாது…
பெண் : மருதாணி… மருதாணி விழியில் ஏன்…
மருதாணி… மருதாணி… மருதாணி…
மருதாணி விழியில் ஏன்…
Notes : Marudaani Song Lyrics in Tamil. This Song from Sakkarakatti (2007). Song Lyrics penned by Vaali. மருதாணி பாடல் வரிகள்.