Tag Archives: யுவன் ஷங்கர் ராஜா

idhayam-song-lyrics-billa2

இதயம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஸ்வேதா பண்டிட்யுவன் ஷங்கர் ராஜாபில்லா 2

Idhayam Song Lyrics in Tamil


BGM

பெண் : இதயம் இந்த இதயம்…
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ…
இதயம் இந்த இதயம்…
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ…

பெண் : ஆசை தூண்டிலில் மாட்டிக்கொண்டு…
இது தத்தளித்து துடிக்கிறதே…
காயம் யாவையும் தேற்றிகொண்டு…
இது மறுபடியும் நினைக்கிறதே…
உள்ளுக்குளே துடிக்கும் சிறு இதயம்…
எத்தனையோ கடலை இது விழுங்கும்…

BGM

பெண் : வேண்டும் வேண்டும் என்று கேட்கையிலே…
வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுமே…
வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால்…
வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே…

பெண் : இது தவித்திடும் நெருப்பா…
இல்லை குளிர்ந்திடும் நீரா…
இது பனி எரிமலையா…
இதை அறிந்தோர் யாருமில்லை…

பெண் : உள்ளத்திலே அறை உண்டு வாசல் இல்லை…
உள்ளே வந்திடும் நினைவோ திரும்பவில்லை…

BGM

பெண் : ஓ… ஓ… தூங்கும் போதும் இது துடித்திடுமே…
ஏங்கும் போதோ இது வெடிக்கும்…
தீண்டும் விரல் என்று தெரிந்த பின்பும்…
வேண்டும் என்றே இது நடிக்கும்…

பெண் : இது கடவுளின் பிழையா…
இல்லை படைத்தவன் கொடையா…
கேள்வி இல்லா விடையா…
இதை அறிந்தோர் யாருமில்லை…

பெண் : இதயம் எல்லை என்றால் என்ன நடக்கும்…
கண்ணீர் என்னும் வார்த்தையை மதி இழக்கும்…

பெண் : இதயம் இந்த இதயம்…
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ…
இதயம் இந்த இதயம்…
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ…


Notes : Idhayam Song Lyrics in Tamil. This Song from Billa 2 (2012). Song Lyrics penned by Na. Muthukumar. இதயம் பாடல் வரிகள்.


ஆனந்த யாழை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஸ்ரீராம் பார்த்தசாரதியுவன் ஷங்கர் ராஜாதங்கமீன்கள்

Aanandha Yaazhai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய்…
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்…
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்…

ஆண் : இரு நெஞ்சம் இணைந்து பேசிட…
உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை…
சிறு புல்லில் உறங்கும் பனியில்…
தெரியும் மழையின் அழகோ தாங்கவில்லை…

ஆண் : உந்தன் கைகள் பிடித்து போகும் வழி…
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி…
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே…
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி…

ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய்…
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்…
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்…

BGM

ஆண் : தூரத்து மரங்கள் பார்க்குதடி…
தேவதை இவளா கேக்குதடி…
தன்னிலை மறந்தா பூக்குதடி…
காற்றினில் வாசம் தூக்குதடி…

ஆண் : அடி கோவில் எதற்கு…
தெய்வங்கள் எதற்கு…
உனது புன்னகை போதுமடி…
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே…
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி…

ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய்…
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…

BGM

ஆண் : உன் முகம் பார்த்தால் தோணுதடி…
வானத்து நிலவு சின்னதடி…
மேகத்தில் மறைந்தே பார்க்குதடி…
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி…
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து…
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி…

ஆண் : இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே…
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி…

ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய்…
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…
ஆனந்த யாழை மீட்டுகிறாய்…
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…


Notes : Aanandha Yaazhai Song Lyrics in Tamil. This Song from Thangameenkal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. ஆனந்த யாழை பாடல் வரிகள்.


அரக்கியே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்யுவன் ஷங்கர் ராஜாஹிப் ஹாப் தமிழாஅன்பறிவு

Arakkiyae Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… கதற கதற கதற விட்டுட்டியே…
ஏய் செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் தனியா…
கதற கதற கதற விட்டுட்டியே அடியே…
செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் சரியா…

ஆண் : ஒரு வாட்டி பாத்ததுக்கே ஒரு வாரம் தூங்கலியே…
ஒரசாம பத்தி எரியும்…
பகல் மேல பால் தெளிச்சி உருவான ஓவியமே…
ஊரெல்லாம் உன்ன தெரியும்…

ஆண் : அரக்கியே உன் அழகிலே அடங்குனேன்…
தானா னா னா னா…
கிறுக்கியே உன் காதலால் எறங்குறேன் பாப்பாளி பழமே…
சும்மா பட்டாசா வெடிக்கிறியே…
வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே…

ஆண் : ஐயோ… தெறிக்கிறியே தெறிக்கிறியே தெறிக்கிறியே…
சும்மா சிரிக்கிறியே சிரிக்கிறியே சிரிக்கிறியே…
நெஞ்ச நொறுக்கிறியே…

BGM

ஆண் : நான் உன்ன பாத்த நாளு வரைக்கும்…
பொண்ண பத்தி பேச நேரம் இல்லடி…
நான் உன்ன பாத்து சாஞ்ச பிறகு…
உன்னவிட்டா ஏதும் பேச்சு இல்லடி…

ஆண் : பதறுதே பதறுதே…
பார்வை ஒண்ணு பார்த்தா போதும் பதறுதே…
செதறுதே செதறுதே…
உன் கல்க்க ஸ்மாஷ் அழகால பீசு பீஸா செதறுதே…

ஆண் : கதற கதற கதற கதற செதற விட்டுட்டியே…
ஹேய்… செதற செதற செதற கதற விட்டுட்டியே…

ஆண் : அரக்கியே உன் அழகிலே…
கிறுக்கியே உன் காதலால்…

ஆண் : கதற கதற கதற விட்டுட்டியே…
ஏய் செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் தனியா…
கதற கதற கதற விட்டுட்டியே அடியே…
செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் சரியா…

ஆண் : பாப்பாளி பழமே சும்மா பட்டாசா வெடிக்கிறியே…
பாப்பாளி பழமே பட்டாசா வெடிக்கிறியே…
வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே…

ஆண் : ஐயோ… தெறிக்கிறியே தெறிக்கிறியே தெறிக்கிறியே…
சும்மா சிரிக்கிறியே சிரிக்கிறியே சிரிக்கிறியே…
நெஞ்ச நொறுக்கிறியே…


Notes : Arakkiyae Song Lyrics in Tamil. This Song from Anbarivu (2022). Song Lyrics penned by Vivek. அரக்கியே பாடல் வரிகள்.


நாங்க வேற மாறி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்யுவன் ஷங்கர் ராஜா & அனுராக் குல்கர்னியுவன் ஷங்கர் ராஜாவலிமை

Naanga Vera Maari Song Lyrics in Tamil


BGM

ஆண் : நாங்க வேற மாறி வேற மாறி வேற மாறி…
நாங்க வேற மாறி வேற மாறி வேற மாறி…
நாங்க வேற மாறி…
நாங்க வேற மாறி…
நாங்க வேற வேற வேற வேற வேற வேற…

ஆண் : எல்லா நாளுமே…
நல்ல நாளுதான்…
எல்லா நேரமும்…
நல்ல நேரம்தான்…

ஆண் : எல்லா ஊருமே…
நம்ம ஊருதான்…
எல்லா பயலும்…
நல்ல பயதான்…

ஆண் : மேல இருக்கவன நம்ப நல்லா கத்துக்கோ…
கூட இருக்கவன நட்பா நல்லா வச்சுக்கோ…
கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ…
காலத்தோட நீயும் ஓட ஒத்துக்கோ…

ஆண் : தகதகனு மின்னலாம்…
தென்னாவட்டா துள்ளலாம்…
வளவளனு பேசாமா…
வேலையை செஞ்சா…

ஆண் : ஏய்… கடகடனு ஏறலாம்…
வேற மாறி மாறலாம்…
வரமுறையை மாத்தலாம்…
நல்லது செஞ்சா…

ஆண் : ஏய்… தகதகனு மின்னலாம்…
தென்னாவட்டா துள்ளலாம்…
வளவளனு பேசாமா…
வேலையை செஞ்சா…

ஆண் : ஏய்… கடகடனு ஏறலாம்…
வேற மாறி மாறலாம்…
வரமுறையை மாத்தலாம்…
நல்லது செஞ்சா…

ஆண் : நாங்க வேற மாறி வேற மாறி வேற மாறி…
நாங்க வேற மாறி வேற மாறி வேற மாறி…
நாங்க வேற மாறி…
நாங்க வேற மாறி…
நாங்க வேற வேற வேற வேற வேற வேற…

BGM

ஆண் : ஏய்… உன் வீட்டை முதல் பாரு…
அட தானாவே சரியாகும் உன் ஊரு…
கருத்து சொல்ல நான் ஞானி இல்ல…
ஆனா எடுத்து சொன்னா எந்த தப்பும் இல்ல…

ஆண் : நாளைக்கு நிம்மதியா நீ இருக்க…
இன்னைக்கு இறங்கி செதுக்கிடனும்…
உன் எண்ணத்த அழகா நீ அமைச்சுக்கிட்டா…
எல்லாமே அழகாகும்… சரியாகும்…

ஆண் : வாழு வழ விடு அவ்வளோதான் தத்துவோம்…
அதுல காலவிட்டா ஒடச்சிடுவோம்…
கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ…
கண்டுபிடிச்சுட்டா…

ஆண் : தகதகனு மின்னலாம்…
தென்னாவட்டா துள்ளலாம்…
வளவளனு பேசாமா…
வேலையை செஞ்சா…

ஆண் : ஏய்… கடகடனு ஏறலாம்…
வேற மாறி மாறலாம்…
வரமுறையை மாத்தலாம்…
நல்லது செஞ்சா…

ஆண் : ஏய்… தகதகனு மின்னலாம்…
தென்னாவட்டா துள்ளலாம்…
வளவளனு பேசாமா…
வேலையை செஞ்சா…

ஆண் : ஏய்… கடகடனு ஏறலாம்…
வேற மாறி மாறலாம்…
வரமுறையை மாத்தலாம்…
நல்லது செஞ்சா…

ஆண் : நாங்க வேற மாறி வேற மாறி வேற மாறி…
நாங்க வேற மாறி வேற மாறி வேற மாறி…
நாங்க வேற மாறி…
நாங்க வேற மாறி…
நாங்க வேற வேற வேற வேற வேற வேற…

BGM


Notes : Naanga Vera Maari Song Lyrics in Tamil. This Song from Valimai (2022). Song Lyrics penned by Vignesh Shivan. நாங்க வேற மாறி பாடல் வரிகள்.


ஆகூழிலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கியுவன் ஷங்கர் ராஜா, ஹரிணி ஐவதுரி ஜஸ்டின் பிரபாகரன்ராதே ஷியாம்

Aagoozhilae Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரோ யாரவளோ…
உனைத் தாண்டிச் சென்றவளோ…
ஏதோ தேவதையோ…
எதிர்காலக் காதலியோ…

ஆண் : நீங்கி போவதற்கா…
இந்த ஞாபகம் ஞாபகம்…
நாளை சேர்வதற்கா…
இந்த நாடகம் இந்த நாடகம்…

ஆண் : அடர்காட்டிலே விழுந்திடுந்துளிகளாய்…
அவனேட்டிலே இலக்கணப் பிழைகளாய்…
நீயும் நானும்…

ஆண் : ஆகூழிலே… ஆகூழிலே…
ஆகூழிலே… ஆகூழிலே…

BGM

ஆண் : யாரோ யாரவளோ…
உனைத் தாண்டிச் சென்றவளோ…
ஏதோ தேவதையோ…
எதிர்காலக் காதலியோ…

BGM

ஆண் : இரு நிழல்களும் உரசியதோ…
இருதயம் இடம் நழுவியதோ…

பெண் : சொல் என்னானது சொல்…
என்னாகுது சொல்…
என்னாகிடும் என்பதையேனும்…

ஆண் : முடிவிலியினில் தொடங்கிடுமோ…
முதல் முத்தத்தினில் முடிந்திடுமோ…

பெண் : சொல் இல்லை எனச் சொல்…
உண்மை எது சொல்…
ஏதாவது பொய்க்கதையேனும்…

ஆண் : காலத்தை பின்னே…

பெண் : இழுத்திட முயல்வதும்…

ஆண் : காலத்தை முன்னே…

பெண் : நகர்த்திட துடிப்பதும்…

ஆண் & பெண் : எங்கே காலம் பாயும்…
காண்போம் நானும் நீயும்…

ஆண் : ஆகூழிலே… ஆகூழிலே…
ஆகூழிலே…

பெண் : சொல் என்னானது சொல்…
என்னாகுது சொல்…
என்னாகிடும் என்பதையேனும்…

ஆண் : ஆகூழிலே…

பெண் : சொல் இல்லை எனச் சொல்…
உண்மை எது சொல்…
ஏதாவது பொய்க்கதையேனும்…

பெண் : யாரோ யாரவனோ…
உனைத்தாண்டி சென்றவனோ…
உந்தன் கண் அறியா…
தொலைதூரக் காதலனோ…


Notes : Aagoozhilae Song Lyrics in Tamil. This Song from Radhe Shyam (2022). Song Lyrics penned by Madhan Karky. ஆகூழிலே பாடல் வரிகள்.


சிறகுகள் வந்தது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஜாவேத் அலி & மது ஸ்ரீயுவன் ஷங்கர் ராஜாசர்வம்

Siragugal Vanthathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சிறகுகள் வந்தது எங்கோ செல்ல…
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல…
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே…

ஆண் : கனவுகள் பொங்குது எதிலே அள்ள…
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள…
சுகங்களும் கூடுது உன்னை தேடியே…

பெண் : உன்னை உன்னை தாண்டி செல்ல…
கொஞ்ச காலம் கொஞ்ச தூரம்…
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ…

பெண் : உன்னை உன்னை தேடி தானே…
இந்த ஏக்கம் இந்த பாதை…
இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ…

ஆண் : கனவுகள் பொங்குது எதிலே அள்ள…
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள…
சுகங்களும் கூடுது உன்னை தேடியே…

பெண் : ஆஆ… ஆஆ… ஆஆ…
ஆஆ… ஆஆ… ஆஆ…

BGM

பெண் : ஆஆஹா… ஆஆஹா…
ஆஆஹா… ஆஆஹா…

BGM

ஆண் : ஓ… நதியே நீ எங்கே என்று…
கரைகள் தேட கூடாதா…
நிலவே நீ எங்கே என்று…
முகில்கள் தேட கூடாதா…

பெண் : ஓ… மழை இரவினில் குயிலின் கீதம்…
துடிப்பதை யார் அறிவார்…
கடல் மடியினில் கிடக்கும் பலரின்…
கனவுகள் யார் அறிவார்…

ஆண் : அழகே நீ எங்கிருக்கிறாய்…
வலித்தால் அன்பே நீ அங்கிருக்கிறாய்…
உயிரே நீ என்ன செய்கிறாய்…
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்…

பெண் : அன்பே எந்தன் நெஞ்சம் எங்கே…
பூவின் உள்ளே நிலவின் மேலே…
தீயின் கீழே காற்றின் வெளியே இல்லையே…

பெண் : உந்தன் கண்ணில் உந்தன் மூச்சில்…
உந்தன் இரவில் உந்தன் நெஞ்சில்…
உந்தன் கையில் உந்தன் உயிரில் உள்ளதே…

BGM

ஆண் : ஓஓ… எனக்கே நான் சுமையாய் மாறி…
என்னை சுமந்து வந்தேனே…
உனக்கே நான் நிழலாய் மாறி…
உன்னை தேடி வந்தேன்…

பெண் : விழி நனைந்திடும் நேரம் பார்த்து…
இமை விலகுகி விடாது…
உயிர் துடித்திடும் முன்னே எந்தென்…
உயிர் ஒதுக்கி விடாது…

ஆண் : உலகம் ஒரு புள்ளியாகுதே…
நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே…
உயிரில் ஒரு பூ வெடிக்குதே…
சுகமோ வழியோ எல்லை மீறுதே…

BGM

ஆண் : சிறகுகள் வந்தது எங்கோ செல்ல…
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல…
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே…

ஆண் : ஒரு இமை எங்கிலும் தேனில் மூழ்க…
ஒரு இமை மாத்திரம் வலியில் நோக…
இடையினில் எப்படி கனவும் காணுமோ…

பெண் : உன்னை உன்னை தாண்டி செல்ல…
கொஞ்ச காலம் கொஞ்ச தூரம்…
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ…

பெண் : உன்னை உன்னை தேடி தானே…
இந்த ஏக்கம் இந்த பாதை…
இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ…

BGM


Notes : Siragugal Vanthathu Song Lyrics in Tamil. This Song from Sarvam (2010). Song Lyrics penned by Pa Vijay. சிறகுகள் வந்தது பாடல் வரிகள்.


கை படாமலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் சங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாகாதல் கொண்டேன்

Kai Padamale Song Lyrics in Tamil


BGM

குழு (ஆண்கள்) : ஓ ஹோ ஹோ ஓ…
ஓ ஹோ ஹோ ஓ…

BGM

குழு (ஆண்கள்) : ஹோ ஓஹோ ஓ…
ஹோ ஓஹோ ஓ…
ஹோ ஓ ஓ…

குழு (ஆண்கள்) : ஹோ ஓஹோ ஓ…
ஹோ ஓஹோ ஓ…
ஹோ ஓ ஓ ஓ…

ஆண் : தொடாமலே ஒரு தீ…
எரியுதே விடாமலே உள்ளே…
கை படாமலே ஒரு போதை ஏறுதே…
நினைவுகள் சுடுதே…

ஆண் : தொடாமலே ஒரு தீ…
எரியுதே விடாமலே உள்ளே…
கை படாமலே ஒரு போதை ஏறுதே…
நினைவுகள் சுடுதே…

ஆண் : மனம் வேக வேக…
உயிர் நோக நோக துடித்தேன்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : ஓஹோ ஓஓ…

ஆண் : உனை காண காண…
வலி ஏறி ஏறி உடைந்தேன்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : ஓஹோ ஓஓ…

ஆண் : உன் பார்வை என்று திரும்பும்…
என் யாகம் என்று முடியும்…
இந்த அழகின் அருகிலே இருந்து கொண்டு…
தினம் வேர்த்து வேர்த்து…
இந்த நரகத்தில் துடித்திட…

BGM

குழு (ஆண்கள்) : ஹோ ஓஹோ ஓ…
ஹோ ஓஹோ ஓ…
ஹோ ஓ ஓ…

குழு (ஆண்கள்) : ஹோ ஓஹோ ஓ…
ஹோ ஓஹோ ஓ…
ஹோ ஓ ஓ ஓ…


Notes : Kai Padamale Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by Na. Muthu Kumar. கை படாமலே பாடல் வரிகள்.


காதல் மட்டும் புரிவதில்லை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிவிஜய் யேசுதாஸ்யுவன் ஷங்கர் ராஜாகாதல் கொண்டேன்

Kadhal Mattum Purivathillai Song Lyrics in Tamil


ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்…
கண்ணாமூச்சி ஆடுதடா…
தேடும் கண்ணில் பட படவென்று…
பட்டாம்பூச்சி ஓடுதடா…

ஆண் : எங்கேயோ எங்கேயோ…
இவனை இவனே தேடுகிறான்…
தாய் மொழி எல்லாம் மறந்து விட்டு…
தனக்குள் தானே பேசுகிறான்…

ஆண் : காதல் மட்டும் புரிவதில்லை…
காற்றா நெருப்பா தெரிவதில்லை…
காதல் தந்த மூர்ச்சை நிலை…
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை…

BGM

ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்…
கண்ணாமூச்சி ஆடுதடா…
தேடும் கண்ணில் பட படவென்று…
பட்டாம்பூச்சி ஓடுதடா…

BGM

ஆண் : ஹே… நேற்று வரைக்கும் இங்கிருந்தேன்…
இன்று என்னை காணவில்லை…
வெயில் இல்லை மழை இல்லை…
பார்த்தேனே வானவில்லை…

ஆண் : என் நெஞ்சோடு ரசித்தேன்…
கொல்லாமல் கொல்கின்ற அழகை…
உயிரில் ஓர் வண்ணம் குழைத்து…
வரைந்தேன் அவளை…

ஆண் : காதல் மட்டும் புரிவதில்லை…
காற்றா நெருப்பா தெரிவதில்லை…
காதல் தந்த மூர்ச்சை நிலை…
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை…

BGM

ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்…
கண்ணாமூச்சி ஆடுதடா…
தேடும் கண்ணில் பட படவென்று…
பட்டாம்பூச்சி ஓடுதடா…

BGM

ஆண் : பாலைவனத்தில் நடந்திருந்தேன்…
நீ வந்து குடை விரித்தாய்…
எந்தன் பெயரே மறந்திருந்தேன்…
நீ இன்று குரல் கொடுத்தாய்…

ஆண் : என் கண்ணாடி மனதில்…
இப்போது என் முகம் பார்த்தேன்…
நீ வந்த பொழுதில்…
எந்தன் நெஞ்சம் பூத்தேன்…

ஆண் : நதிகள் கடலில் தெரிவதில்லை…
நட்பில் கவலை புரிவதில்லை…
இதயம் ரெண்டும் சேர்ந்திருந்தால்…
இரவும் பகலும் பார்ப்பதில்லை…

BGM

ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்…
கண்ணாமூச்சி ஆடுதடா…
தேடும் கண்ணில் பட படவென்று…
பட்டாம்பூச்சி ஓடுதடா…

ஆண் : எங்கேயோ எங்கேயோ…
இவனை இவனே தேடுகிறான்…
தாய் மொழி எல்லாம் மறந்து விட்டு…
தனக்குள் தானே பேசுகிறான்…

ஆண் : காதல் மட்டும் புரிவதில்லை…
காற்றா நெருப்பா தெரிவதில்லை…
காதல் தந்த மூர்ச்சை நிலை…
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை…


Notes : Kadhal Mattum Purivathillai Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by Pazhani Bharathi. காதல் மட்டும் புரிவதில்லை பாடல் வரிகள்.


வெண்மேகம் பெண்ணாக

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஹரன்யுவன் ஷங்கர் ராஜாயாரடி நீ மோகினி

Venmegam Pennaga Song Lyrics in Tamil


ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
லலல லலலலா…

ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ…
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ…
உன்னாலே பல ஞாபகம்…
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

ஆண் : வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன…
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன…
உன்னாலே பல ஞாபகம்…
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ…
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ…

BGM

ஆண் : மஞ்சள் வெயில் நீ…
மின்னல் ஒளி நீ…
உன்னைக் கண்டவரை கண் கலங்க…
நிற்க வைக்கும் தீ…

ஆண் : பெண்ணே என்னடி உண்மை சொல்லடி…
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி…
தேவதை வாழ்வது வீடில்லை கோயில்…
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்…
ஒன்றா இரண்டா உன் அழகை பாட…

ஆண் : கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்…
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்…
உன்னாலே பல ஞாபகம்…
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

BGM

ஆண் : எங்கள் மனதை கொள்ளை அடித்தாய்…
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்…
விழி அசைவில் வலை விரித்தாய்…
உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல…
கட்டளைகள் விதித்தாய்…

ஆண் : உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க…
உயிருடன் வாழ்கிறேன் நானடி…
என் காதலும் என்னாகுமோ…
உன் பாதத்தில் மண்ணாகுமோ…

BGM

ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ…
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ…

BGM


Notes : Venmegam Pennaga Song Lyrics in Tamil. This Song from Yaaradi Nee Mohini (2008). Song Lyrics penned by Na. Muthu Kumar. வெண்மேகம் பெண்ணாக பாடல் வரிகள்.


எங்கேயோ பார்த்த

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்உதித் நாராயண்யுவன் ஷங்கர் ராஜாயாரடி நீ மோகினி

Enkeyoo Partha Song Lyrics in Tamil


BGM

ஆண் : எங்கேயோ பார்த்த மயக்கம்…
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்…
தேவதை இந்த சாலை ஓரம்…
வருவது என்ன மாயம் மாயம்…
கண் திறந்து இவள் பார்க்கும் போது…
கடவுளை இன்று நம்பும் மனது…

ஆண் : இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்…
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்…
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்…
அறிவை மயக்கும் மாய தாகம்…
இவளைப் பார்த்த இன்பம் போதும்…
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்…

BGM

ஆண் : கனவுகளில் வாழ்ந்த நாளை…
கண் எதிரே பார்க்கிறேன்…
கதைகளிலே கேட்டப் பெண்ணா…
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்…

ஆண் : அங்கும் இங்கும் ஓடும் கால்கள்…
அசைய மறுத்து வேண்டுதே…
இந்த இடத்தில் இன்னும் நிற்க…
இதயம் கூட ஏங்குதே…

ஆண் : என்னானதோ ஏதானதோ…
கண்ணாடி போல் உடைந்திடும் மனது…
கவிதை ஒன்று பார்த்து போக…
கண்கள் கலங்கி நானும் ஏங்க…
மழையின் சாரல் என்னைத் தாக்க…
விடைகள் இல்லா கேள்வி கேட்க…

ஆண் : எங்கேயோ பார்த்த மயக்கம்…
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்…
தேவதை இந்த சாலை ஓரம்…
வருவது என்ன மாயம் மாயம்…
கண் திறந்து இவள் பார்க்கும் போது…
கடவுளை இன்று நம்பும் மனது…

BGM

ஆண் : ஆதி அந்தமும் மறந்து…
உன் அருகில் கரைந்து நான் போனேன்…
ஆண்கள் வெக்கபடும் தருணம்…
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்…

ஆண் : இடி விழுந்த வீட்டில் இன்று…
பூச்செடிகள் பூக்கிறதே…
இவள் தானே உந்தன் பாதி…
கடவுள் பதில் கேக்கிறதே…

ஆண் : வியந்து வியந்து…
உடைந்து உடைந்து…
சரிந்து சரிந்து…
மிரண்டு மிரண்டு…

ஆண் : இந்த நிமிடம் மீண்டும் பிறந்து…
உனக்குள் கலந்து…
தொலைந்து தொலைந்து…

BGM


Notes : Enkeyoo Partha Song Lyrics in Tamil. This Song from Yaaradi Nee Mohini (2008). Song Lyrics penned by Na. Muthu Kumar. எங்கேயோ பார்த்த பாடல் வரிகள்.