Tag Archives: சித் ஶ்ரீராம்

sanjaaram-sanjaaram-song-lyrics

சஞ்சாரம் சஞ்சாரம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதானந்த்சித் ஶ்ரீராம்ஜாவித் ரியாஸ்அன்பிற்கினியால்

Sanjaaram Sanjaaram Song Lyrics in Tamil


குழு (ஆண்கள்) : சஞ்சாரம் சஞ்சாரம் சஞ்சாரம் வாழ்வே…
வஞ்சாராம் வஞ்சாராம் வஞ்சாராப் பூவே…

ஆண் : நெருங்கி பார்க்குதே நெருங்கி பார்க்குதே…
இதயமே இதயமே…
தினம் பழகி போகலாம் விழகி போகுமா…
உறவுகள் எதுவுமே…

குழு (ஆண்கள்) : சஞ்சாரம் சஞ்சாரம் சஞ்சாரம் வாழ்வே…
வஞ்சாராம் வஞ்சாராம் வஞ்சாராப் பூவே…
சஞ்சாரம் சஞ்சாரம் சஞ்சாரம் வாழ்வே…
வஞ்சாராம் வஞ்சாராம் வஞ்சாராப் பூவே…

ஆண் : நெருங்கி பார்க்குதே நெருங்கி பார்க்குதே…
இதயமே… இதயமே…

—BGM—

ஆண் : வா… வா வளர்ந்து போனாலும்…
நீ… நீ குழந்தை போல் வாழும் பெண்ணே…
பேசும் கண்ணே…
நீ பேசும் பேச்சை கேட்டு ரசிக்கும்…
யார் காதும் பதில் அளிக்கும்…

ஆண் : நட்பால் நண்பால் நீ பார்த்திடும் பார்வையால்…
பாளர்கள் ஆகவே…
பாறை ஒன்று ஈரம் கொண்டு…
பாசம் கண்டு எங்காதோ…


Notes : Sanjaaram Sanjaaram Song Lyrics in Tamil. This Song from Anbirkiniyal (2021). Song Lyrics penned by Lalithanand. சஞ்சாரம் சஞ்சாரம் பாடல் வரிகள்.


என் இனிய தனிமையே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசித் ஶ்ரீராம்டி. இமான்டெடி

En Iniya Thanimaye Song Lyrics in Tamil


ஆண் : என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே… ஏ… ஏ… ஏ…
என் இனிய தனிமையே…

—BGM—

ஆண் : புதிதான அதிகாலையோ…
புகை சூடும் நெடுஞ்சாலையோ…
உன்னோடு நான் நடந்தால் எல்லாம் பேரழகு…

ஆண் : மழை வீழும் இள மாலையோ…
இசையில்லா இடைவேளையோ…
என்னோடு நீ நடந்தால் இன்பம் என் உலகு…

ஆண் : உன்னோடு மட்டும்தான்…
என் நேரம் எனது…
உன்னோடு மட்டும்தான்…
மெய் பேசும் மனது…

ஆண் : மனிதரின் மொழி கேட்டு… கேட்டு…
இதயம் பழுதாய்…
உணதமைதியில் தானே ஆனேன் முழுமுழுதாய்…

ஆண் : என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே… ஏ… ஏ… ஏ…
என் இனிய தனிமையே…

—BGM—

ஆண் : அலை மோதும் கரை மீதிலோ…
மணல் பாதம் சுடும் போதிலோ…
உன்னோடு நான் நடந்தால் மண்ணே பூச்சிறகு…

ஆண் : கரைகின்ற அடி வானமோ…
குறையாத பெருந்தூரமோ…
என்னோடு நீ நடந்தால் இன்பம் என் உலகு…

ஆண் : என் தாயின் கருவில்…
என்னோடு பிறந்தாய்…
என் வாழ்வின் முடிவில்…
என்னோடு இருப்பாய்…

ஆண் : உறவுகள் வந்து சேரும் நீங்கும்…
நீதான் நிலையாய்…
அதற்க்கு உணர்க்கொரு நன்றி சொன்னேன்…
முதல் முறையாய்…

ஆண் : என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே… ஏ… ஏ… ஏ…
என் இனிய தனிமையே…

—BGM—

ஆண் : இதுவரை கற்கா கலைகள் எல்லாம்…
உன்னுடன் கற்கும் வேளையிலே…
என்னுயிர் தோழி நீயென்பேன் நீயென்பேன்…

ஆண் : இதுவரை காணா காட்சிகளை…
உன்னுடன் காணும் வேளையிலே…
எந்தன் காதல் நீயென்பேன் நீயென்பேன்…

ஆண் : ஒரு சிலர் என்னை நெருங்க…
என்னிடம் பேச தொடங்க…
சிறு ஊடல் கொண்டு நீங்கி போகின்றாய்…

ஆண் : கவலைகள் என்னை வருத்த…
உன்னிடம் என்னை துரத்த…
உன் மடியை தந்து தாயாய் ஆகின்றாய்…

ஆண் : எனை துயிலென அணைத்திடு தனிமையே…
என் கனவிலும் தொடர்ந்திடு தனிமையே…
கண் விழிக்கையில் இருந்திடு தனிமையே…
தனிமையே…

ஆண் : என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே… ஏ… ஏ… ஏ…
என் இனிய தனிமையே…

—BGM—

ஆண் : என் இனிய தனிமையே… ஓஹோ…
என் இனிய தனிமையே… ஏ… ஏ… ஏ…
என் இனிய தனிமையே…


Notes : En Iniya Thanimaye Song Lyrics in Tamil. This Song from Teddy (2021). Song Lyrics penned by Madhan Karky. என் இனிய தனிமையே பாடல் வரிகள்.


அன்பே பேரன்பே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிசித் ஶ்ரீராம் & ஸ்ரேயா கோஷல்யுவன் ஷங்கர் ராஜாஎன்.ஜி.கே (நந்த கோபாலன் குமரன்)

Anbe Peranbe Song Lyrics in Tamil


ஆண் : அன்பே… அன்பே அன்பே அன்பே…
அன்பே… அன்பே அன்பே அன்பே…
பேரன்பே… பேரன்பே பேரன்பே…
பேரன்பே… பேரன்பே பேரன்பே…

BGM

ஆண் : ஹோ… ஓ ஓ ஹோ…
ஓ ஓ ஹோ…
ஓ ஓ ஹோ…

BGM

பெண் : ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்…
உறவொன்று கேட்கிறேன்…
வரைமீறும் இவளின் ஆசை நிறைவேற பார்க்கிறேன்…
நதி சேரும் கடலின் மீது மழை நீராய் சேருவேன்…

பெண் : அமுதே பேரமுதே…
பெண் மனதின் கனவின் ஏக்கம் தீர்க்குமா…
ஈர்க்குமா… ஆ…
மதியை தன் மதியை இவன் அழகின் பிம்பம்…
கண்கள் பார்க்குமா… தோற்குமா…

ஆண் : மழைவானம் தூறும் போது மணல் என்ன கூசுமோ…
மலரோடு மலர்கள்கூட ஊர் என்ன தூற்றுமோ…
திரையே திரை கடலே…
உன் அதிரும் அன்பு மதிலை தாண்டுதே… தூண்டுதே…

BGM

பெண் : ஆஅ… ஆஅ… ஆ…
நெஞ்சோரம் தூங்கும் மோகம்…
கண்ணோரம் தூபம் போட…
சொல்லாத ரகசியம் நீதானே…
ஊர் கேட்க்க ஏங்குதே…

பெண் : தனிமையில் துணை வரும் யோசனை…
நினைவிலும் மணக்குது உன் வாசனை…
எல்லாமே ஒன்றாக மாறுதே…
மணந்திட சேவல் கூவுதே…

ஆண் : ஓ… கோடை காலத்தின் மேகங்கள்…
கார்காலம் தூறும்… ம்ம்…
ஆள் இல்லாத காட்டிலும்…
பூபாளம் கேட்க்கும்…
ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…

ஆண் & பெண் : அன்பே பேரன்பே…
நெடுவாழ்வின் நிழல்கள் வண்ணம் ஆகுதே…
ஆகுதே… ஏ… ஏ…
உறவே நம் உறவே…
ஒரு அணுவின் பிரிவில் அன்றில் ஆகுதே… ஆகுதே…

ஆண் : ஹோ… ஹோ ஓ…
உறையாத சொல்லின் பொருளை…
மொழி இங்கு தாங்குமோ…
உறவாக அன்பில் வாழ…
ஒரு ஆயுள் போதுமோ…

BGM


Notes : Anbe Peranbe Song Lyrics in Tamil. This Song from NGK (Nandha Gopalan Kumaran) (2019). Song Lyrics penned by Uma Devi. அன்பே பேரன்பே பாடல் வரிகள்.


மறுவார்த்தை பேசாதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசித் ஶ்ரீராம்தர்புகா சிவாஎன்னை நோக்கி பாயும் தோட்டா

Maruvaarthai Song Lyrics in Tamil


BGM

ஆண் : மறுவார்த்தை பேசாதே…
மடிமீது நீ தூங்கிடு…
இமை போல நான் காக்க…
கனவாய் நீ மாறிடு…

ஆண் : மயில் தோகை போலே…
விரல் உன்னை வருடும்…
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்…

ஆண் : விழி நீரும் வீணாக…
இமைத்தாண்ட கூடாதென…
துளியாக நான் சேர்த்தேன்…
கடலாக கண்ணானதே…

ஆண் : மறந்தாலும் நான் உன்னை…
நினைக்காத நாள் இல்லையே…
பிரிந்தாலும் என் அன்பு…
ஒருபோதும் பொய் இல்லையே…

BGM

ஆண் : விடியாத காலைகள்…
முடியாத மாலைகளில்…
வடியாத வேர்வை துளிகள்…
பிரியாத போர்வை நொடிகள்…

ஆண் : மணி காட்டும் கடிகாரம்…
தரும் வாடை அறிந்தோம்…
உடைமாற்றும் இடைவேளை…
அதன் பின்பே உணர்ந்தோம்…

ஆண் : மறவாதே மனம்…
மடிந்தாலும் வரும்…
முதல் நீ… முடிவும் நீ…
அலர் நீ… அகிலம் நீ…

BGM

ஆண் : தொலைதூரம் சென்றாலும்…
தொடு வானம் என்றாலும்…
நீ விழியோரம் தானே மறைந்தாய்…
உயிரோடு முன்பே கலந்தாய்…

ஆண் : இதழ் எனும் மலர் கொண்டு…
கடிதங்கள் வரைந்தாய்…
பதில் நானும் தரும் முன்பே…
கனவாகி கலைந்தாய்…

ஆண் : பிடிவாதம் பிடி…
சினம் தீரும் அடி…
இழந்தோம் எழில்கோலம்…
இனிமேல் மழைக்காலம்…

BGM

ஆண் : மறுவார்த்தை பேசாதே…
மடிமீது நீ தூங்கிடு…
இமை போல நான் காக்க…
கனவாய் நீ மாறிடு…

ஆண் : மயில் தோகை போலே…
விரல் உன்னை வருடும்…
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்…

ஆண் : விழி நீரும் வீணாக…
இமைத்தாண்ட கூடாதென…
துளியாக நான் சேர்த்தேன்…
கடலாக கண்ணானதே…

ஆண் : மறந்தாலும் நான் உன்னை…
நினைக்காத நாள் இல்லையே…
பிரிந்தாலும் என் அன்பு…
ஒருபோதும் பொய் இல்லையே…
ஏ… ஏ… ஏ… ஏ… ஏ… ஏ…

BGM

ஆண் : மறுவார்த்தை பேசாதே…
மடிமீது நீ தூங்கிடு…


Notes : Maruvaarthai Song Lyrics in Tamil. This Song from Enai Noki Paayum Thota (2019). Song Lyrics penned by Thamarai. மறுவார்த்தை பேசாதே பாடல் வரிகள்.


யாருமில்லா வாழ்க்கையில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்சித் ஶ்ரீராம்ராதன்ஆதித்ய வர்மா

Yaarumillaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆஅ… ஆஅ… ஆ…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆ…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆ…

ஆண் : யாருமில்லா வாழ்க்கையில்…
நீ இருக்க ஏங்கினேன்…
காலம் வரை காதலாய்…
உன் மடியில் தூங்கினேன்…

ஆண் : நீ பிரிந்து போகிறாய்…
என் உயிரில் ஒடைகிறேன்…
எஞ்சி விட்ட தூசிலே…
நான் என்னை கோர்க்கிறேன்…

ஆண் : அவள் பார்வைகள் சுமக்காமலே…
அந்த நாளையும் வருதே…
நொடி நேரத்தில் உயர்வானது…
அந்த சாவென்னும் வரமே…

ஆண் : நீ தொலைத்த ஆழத்தில்…
நான் ஒழிகிறேன்…
அனாதை காட்டிலே நான் கரைகிறேன்…
கண்ணீரை காப்பாற்றி உனக்காக சேர்க்கிறேன்…
தடாகமே…

BGM

ஆண் : தாகம் இல்லாத மீனும் தண்ணீரில்…
வாழும் நியாத்தை ஏற்கிறேன்…
யாரும் செல்லாத தீவின் மையத்தில்…
புள்ளி பூவாக போகிறேன்…

ஆண் : ஈசல் ரெக்கைமேல் ஈயின் பாதங்கள்…
பாரம் எப்படி தாங்குவேன்…
நீயே இல்லாத கீறல் கொள்ளாத…
நெஞ்சை எங்கே நான் வாங்குவேன்…

ஆண் : கண்ணீரை காப்பாற்றி…
உனக்காக சேர்க்கிறேன்…
தடாகமே…

ஆண் : ஆஅ… ஆஅ… ஆ…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆ…

BGM


Notes : Yaarumillaa Song Lyrics in Tamil. This Song from Adithya Varma (2019). Song Lyrics penned by Vivek. யாருமில்லா வாழ்க்கையில் பாடல் வரிகள்.


மெய் நிகரா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசித் ஶ்ரீராம், சனா மொய்டுட்டி & ஜொனிடா காந்திஏ. ஆர். ரகுமான்24

Mei Nigara Song Lyrics in Tamil


பெண் : ஓடாதே தித்திக்காரி…
ஓடாதே பொட்டுக்காரி…
ஓடாதே சிட்டுக்காரி…
ஓடாதே விட்டு…
ஓடாதே சிட்டு…
ஓட ஓடாதே…
ஓட ஓடாதே…
செல்லம் ஓடாதே…

ஆண் : மெய் நிகரா…
மெல்லிடையே…

பெண் : அ… ஆ… ஓடாதே…

ஆண் : பொய் நிகரா…
பூங்கொடியே…

பெண் : ஓடாதே பொட்டுக்காரி…
ஓடாதே தித்திக்காரி…
ஓடாதே பொட்டுக்காரி…

ஆண் : அரசியே அடிமையே அழகியே… ஏ…
அரக்கியே… உன் விழியால்…
மொழியால்… பொழிந்தால்…
என்னாவேன்…
உன் அழகால்…
சிரிப்பால்… அடித்தால்…
என்னாவேன்…
எனக்கென்ன ஆயினும்…
சிரிப்பதை நிறுத்தாதே…

பெண் : ஓடாதே தித்திக்காரி…

ஆண் : அரசியே அடிமையே…
அழகியே.. ஏ அரக்கியே…
மெய் நிகரா மெல்லிடையே…
பொய் நிகரா…
பூங்கொடியே… ஏ… ஏ…

பெண் : அரசனே அடிமையே…
கிறுக்கனே எ… எ… எ…
அரக்கனே…

பெண் : என் இமையே இமையே…
இமையே இமைக்காதே…
இது கனவா… நனவா…
குழப்பம் சமைக்காதே…

ஆண் : அரசியே அடிமையே… ஏ…
அழகியே… அரக்கியே… ஓ…. ஓ…

பெண் : ஓடாதே பொட்டுக்காரி…
ஓடாதே ஓடாதே…
ஓட ஓ ஓடாதே…

ஆண் : ஏ… உன்னை…
சிறு சிறிதாய்…
எய்த்தேனே…
ஓ… ஓ… ஓ… ஓ…

பெண் : நான் உந்தன்…
வலையில் விழுந்தேனே…
ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : புல்லாங்குழலே…
வெள்ளை வயலே…

பெண் : பட்டாம் புலியே…
கிட்டார் ஒலியே…
மிட்டாய்க் குயிலே…
ஓ… ஓ…
ரெக்கை முயலே… ஏ…

பெண் : ஓடாதே தித்திக்காரி…
ஓடாதே பொட்டுக்காரி…

ஆண் : அரசியே…

பெண் : காதலில் பணிந்திடு…

ஆண் : அடிமையே…

பெண் : விடுதலை செய்திடு…

ஆண் : அழகியே…

பெண் : நீ வந்து தழுவிடு…

ஆண் : அரக்கியே…

பெண் : நான்…
நான் நடுங்கிட…

ஆண் : உன் விழியால்…
மொழியால்…. பொழிந்தால்…
என்னாவேன்…
உன் அழகால்…
சிரிப்பால்… அடித்தால்…
என்னாவேன்…
எனக்கென்ன ஆயினும்…
சிரிப்பதை நிறுத்தாதே…

பெண் : ஓடாதே தித்திக்காரி…
ஓடாதே பொட்டுக்காரி…
ஓடாதே…
ஓடாதே தித்திக்காரி…
ஓடாதே தித்திக்காரி…
ஓடாதே…

ஆண் : ஓ… ஓ… ஓ… ஓ…

பெண் : ஓடாதே…

ஆண் : ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…

ஆண் : தினம் புதிதாய்…
புது புதிதாய்…
ஆவாயா…
ஓ… ஓ… ஓ… ஓ…

பெண் : ஒவ்வொர்…
நொடியும் நொடியும்…
டிக் டிக் டிக்…
ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : பேசும் பனி நீ…
ஆசைப் பிணி நீ…

பெண் : விண்மீன் நுனி நீ…
என் மீன் இனி நீ…
ஹேய்… இன்பக்கனி நீ…
கம்பன் வீட்டுக்கனி நீ… நீ…

பெண் : அரசனே…

ஆண் : களங்களை ஜெயித்திடு…

பெண் : அடிமையே…

ஆண் : சங்கிலி உடைத்திடு…

பெண் : அரக்கனே…

ஆண் : என் கோபம் இறக்கிடு…

பெண் : கிக் கிக் கிறுக்கனே…

ஆண் : கிக் கிக் கிறுக்கிடி…

ஆண் : என் இமையே இமையே…
இமையே இமையாதே…
இவள் கரைந்தால் பிரிந்தால்…
வாழ்வே அமையாதே…

பெண் : எனக்கென்ன ஆனாலும்…
அணைப்பதை தளர்த்தாதே…

ஆண் : எனக்கென்ன ஆயினும்…
சிரிப்பதை நிறுத்தாதே…

பெண் : ஓடாதே தித்திக்காரி…
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே தித்திக்காரி…
ஓடாதே தித்திக்காரி…
ஓடாதே தித்திக்காரி…
ஓடாதே தித்திக்காரி…
ஓடாதே ஓடாதே…
ஓடாதே ஓடாதே…
ஓடாதே தித்திக்காரி…


Notes : Mei Nigara Song Lyrics in Tamil. This Song from 24 (2016). Song Lyrics penned by Madhan Karky. மெய் நிகரா பாடல் வரிகள்.


உழவா உழவா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசித் ஶ்ரீராம் & யோகி பிடி. இமான்பூமி

Uzhavaa Song Lyrics in Tamil


ஆண் : உழவா… உழவா…
உலகை உழ வா…
புதியதாய் உலகைப் படைக்க…
எழுந்திடு தலைவா…

ஆண் : உழவா உழவா உழவா…
உலகை உழ வா…
புதியதாய் உலகைப் படைக்க…
எழுந்திடு தலைவா எழு தலைவா…

BGM

ஆண் : பாட்டனை பூட்டனை உனக்குள்ளே பூட்டிடு…
மண்ணெணும் தாய் இவள் உயிரினை ஈட்டிடு…
மரபனு யாவிழும் உழவென தீட்டிடு…
நாம் இனி யார் என எதிரிக்கு காட்டிடு…

ஆண் : விதை நெல்லாய் நீ உருமாற…
அஞ்சாதே வா வா…

ஆண் : வா வா…

ஆண் : உரம் இங்கே நெஞ்சுரம் தானே…
கை கோர்த்து வா வா…

ஆண் : வா வா…

ஆண் : உதிரத்தை நீரெனப் பாய்ச்ச…
என்னோடு வா வா…

ஆண் : கம் வித் மீ…

ஆண் : விரல் எல்லாம் ஏரென மாற…
மண் மாற்ற வா வா…

ஆண் : பிணியென பரவிடும் வளர்ச்சியை…
உன் அறிவினில் அழிக்க வா…

ஆண் : வா வா…

ஆண் : புதிதொரு வயல்வெளி புரட்சியை…
இந்த நொடியினில் தொடங்க வா…

குழு (ஆண்கள்) : உழவா உழவா உழவா…
உலகை உழ வா…
புதியதாய் உலகைப் படைக்க…
எழுந்திடு தலைவா எழு தலைவா…

குழு (ஆண்கள்) : உழவா உழவா உழவா…
உலகை உழ வா…
இளைஞன் நினைத்தால் முடியும்…
முடிவெடு தலைவா எடு தலைவா…

ஆண் : ஆடியும் பாடியும் உழைத்திட்ட நம் இனம்…
கணினியில் திரையினில் சிறை பட்டுக் கிடப்பதா…
உழவனின் கட்டுடல் உழைத்திட கிடக்கையில்…
விசைப் பொறி தரையினில் மனிதர்கள் நடப்பதா…

ஆண் : ஓ… உலகின் முதல் பேரறிவாளன்…
நீதானே வா வா…

ஆண் : கம் ஆன்…

ஆண் : தரையில் கால் வைத்திடும் தேவதை…
நீதானே வா வா…

ஆண் : லெட்ஸ் கோ…

ஆண் : ஐம்பூதம் உடன் வரும் தோழன்…
நீதானே வா வா…

ஆண் : நீதான்…

ஆண் : பசி ஆற்றி மகிழ்கிற தாயும்…
நீதானே வா வா…

ஆண் : நரம்பினில் தெரிகிற பசுமையை…
இந்த வயல்களில் இறக்க வா…
நெழிந்திடும் புழுக்களின் சகதியில்…
இளம் சரித்திரம் செதுக்க வா…

குழு (ஆண்கள்) : உழவா உழவா உழவா…
உலகை உழ வா…
புதியதாய் உலகைப் படைக்க…
எழுந்திடு தலைவா எழு தலைவா…

குழு (ஆண்கள்) : உழவா உழவா உழவா…
உலகை உழ வா…
இளைஞன் நினைத்தால் முடியும்…
முடிவெடு தலைவா எடு தலைவா…

BGM

ஆண் : உழவு என்பது…
ஒரு பொழுது போக்கு இல்லை…
விளையும் பயிரும் உழவன் உயிரும்…
உனக்கு ஆட்டமே…

ஆண் : உனது அரசியல் எமக்குத் தேவையில்ல…
இளைஞர் உழுது இணையும் பொழுது…
பெருகும் ஈட்டமே…

ஆண்: இனி ஒரு உயிரும் வீணாய்…
அழிந்திட விட மாட்டோம்…
மருத்துவம் சட்டம் பொறியியல் போர்…
உளவியல் தொழில் நுட்பமும் மாறும்…

BGM

ஆண் : உடல் அழிக்கும் பாணம் விற்க்க…
எங்கள் நீரை விற்றது யாரடா…
புகை உமிழும் ஆலைக்காக…
எங்கள் மண்ணை விற்ப்பதாரடா…

ஆண் : இலவசம் மின்சாரம் வேண்டாம்…

குழு (ஆண்கள்) : வேண்டாம்…

ஆண் : ஒளியினில் மின்சாரம் காண்போம்…

குழு (ஆண்கள்) : காண்போம்…

ஆண் : கடன்களை நீ நீக்க வேண்டாம்…

குழு (ஆண்கள்) : வேண்டாம்…

ஆண் : உழைப்பினில் எல்லாமே தீர்ப்போம்…

குழு (ஆண்கள்) : தீர்ப்போம்…

குழு (ஆண்கள்) : வா வா மண்ணை ஆள உழவனே…

ஆண் : வா வா உழவா…

குழு (ஆண்கள்) : நீதான் உண்மை பச்சைத் தமிழனே…

ஆண் : பச்சைத் தமிழா வா வா…

குழு (ஆண்கள்) : நிலம் கிழித்திடும்…
உந்தன் தோளின் ஏரோடு எதிரிகளின்…
முகம் கிழித்திட ஒன்றாய் கூடி போராடு…

குழு (ஆண்கள்) : உழவா உழவா உழவா…
உலகை உழ வா…
புதியதாய் உலகைப் படைக்க…
எழுந்திடு தலைவா எழு தலைவா…

குழு (ஆண்கள்) : உழவா உழவா உழவா…
உலகை உழ வா…
இளைஞன் நினைத்தால் முடியும்…
முடிவெடு தலைவா எடு தலைவா…

ஆண் : உழவா உழவா உழ வா…

ஆண் : உலகை உழ வா…

ஆண் : புதிதாய் உலகைப் படைக்க…

ஆண் : எழுந்திடு தலைவா எழு தலைவா…


Notes : Uzhavaa Song Lyrics in Tamil. This Song from Bhoomi (2021). Song Lyrics penned by Madhan Karky. உழவா உழவா பாடல் வரிகள்.


காதல் தீவே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நிக்சிசித் ஶ்ரீராம்சீன் ரோல்டன்தாராள பிரபு

Kaadhal Theevey Song Lyrics in Tamil


குழு (ஆண்கள்) : என்னோடு வாழ்வாயோ…
உயிரோடு சேர்வாயோ…
உன் கைகள் சேர்ந்தால்…
நான் வாழ்வேன் உரு மாறுவேன்…

குழு (ஆண்கள்) : என்னோடு வாழ்வாயோ…
உயிரோடு சேர்வாயோ…
உன் கைகள் சேர்ந்தால்…
நான் வாழுவேன் உரு மாறுவேன்…

BGM

ஆண் : காதல் தீவே…
நில்லாயோடி…
காதல் செய்ய வந்தேனடி…
கண்ணைப் பார்த்து…
கொள்ளாதடி…
மண்ணைப் பார்க்க மறந்தேனடி…

ஆண் : இது ஒரு வித போராட்டம்…
இதயத்தில் ஒரு புது வித மாற்றம்…
அணுக்களும் உன் பேர் சொல்லும்…
மாயம் என்னடி…

ஆண் : பனி கனவுகள் நாள் தோறும்…
தனி இரவுகள் நடந்தால் போதும்…
உயிர்க்குள் தினம் ஆர்பாட்டம்…
நியாயம் என்னடி…

குழு (ஆண்கள்) : தன்னந்தீவாய்…

ஆண் : தீவாய்…

குழு (ஆண்கள்) : போகாதடி…

ஆண் : போகாதடி…

ஆண் : தஞ்சம் கொள்ள வந்தேனடி…

குழு (ஆண்கள்) : கொஞ்சம் வார்த்தை…

ஆண் : வார்த்தை…

குழு (ஆண்கள்) : மறேந்தேனடி…

ஆண் : மறேந்தேனடி…

குழு (ஆண்கள்) : கொஞ்சும் பேச்சில் விழுந்தேனடி…

ஆண் : விழுந்தேனடி…

BGM

ஆண் : சரிகமப நிச ரிக ரி…
நி ப ம க ரி த ரி…
ரி க ரி…
சரிகமப நிச ரிக ரி…
நி ப ம க ரி த ரி…
ரி க ரி…

ஆண் : பொய் உண்மை…
ரெண்டும் சொல்லத் தயக்கம் இல்லை…
அடி நீ சிரித்தாள்…
அதில் மென்மையே உண்மையே…

ஆண் : புல் வெளியில்…
இரு துளிகளாக பிரிந்தோம்…
இன்று காவேரியில்…
நாம் ஓடினோம் கூடினோம்…

ஆண் : ஊடல் ஏதும் இல்லாத…
காதல் எங்கும் இல்லையடி…
குறைகள் ஏதும் இல்லாத…
எந்த உறவிலும் நிலை இல்லையடி…

ஆண் : இது ஒரு விதப் போராட்டம்…
இதயத்தில் ஒரு புது வித மாற்றம்…
அணுக்களும் உன் பேர் சொல்லும்…
மாயம் என்னடி…

ஆண் : பனி கனவுகள் நாள் தோறும்…
தனி இரவுகள் நடந்தால் போதும்…
உயிர்க்குள் தினம் ஆர்பாட்டம்…
நியாயம் என்னடி…

ஆண் : காதல் தீவே…
நில்லாயோடி…
காதல் செய்ய வந்தேனடி…
கண்ணைப் பார்த்து…
கொள்ளாதடி…
மண்ணைப் பார்க்க மறந்தேனடி…

ஆண்கள் : என்னோடு வாழ்வாயோ…
உயிரோடு சேர்வாயோ…
உன் கைகள் சேர்ந்தால்…
நான் வாழ்வேன் உரு மாறுவேன்…

ஆண்கள் : என்னோடு வாழ்வாயோ…
உயிரோடு சேர்வாயோ…
உன் கைகள் சேர்ந்தால்…
நான் வாழுவேன் உரு மாறுவேன்…

ஆண் : காதல் தீவே… ஏ… ஏ…

ஆண் : காதல் தீவே…

ஆண் : காதல் தீவே… ஏ… ஏ…

ஆண் : காதல் தீவே… ஏ…


Notes : Kaadhal Theevey Song Lyrics in Tamil. This Song from Dharala Prabhu (2020). Song Lyrics penned by Nixy. காதல் தீவே பாடல் வரிகள்.


நீங்க முடியுமா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சித் ஶ்ரீராம்இளையராஜாசைக்கோ

Neenga Mudiyuma Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீங்க முடியுமா…
நினைவுத் தூங்குமா…

ஆண் : நீங்க முடியுமா…
நினைவுத் தூங்குமா…
காலம் மாறுமா…
காயம் மாறுமா…

ஆண் : வானம் பிரிந்த மேகமா…
வாழ்வில் உனக்கு சோகமா…
காதல் போயின் காதல் சாகுமா…
காற்றாகவே நேற்றாகவே…
நீ போனதேன்…

ஆண் : உயிர் போகும் நாள் வரை…
உன்னைத் தேடுவேன்…
உன்னை மீண்டும் பார்த்தப்பின்…
கண் மூடுவேன்…

ஆண் : நீங்க முடியுமா…
நினைவுத் தூங்குமா…

BGM

ஆண் : தேவன் ஈன்ற ஜீவனாக…
உன்னைப் பார்க்கிறேன்…
மீண்டும் உன்னை வேண்டுமென்று…
தானம் கேட்கிறேன்…

ஆண் : நீ கண்கள் தேடும் வழியோ…
என் கருணை கொண்ட மழையோ…
நீ மழலைப் பேசும் மொழியோ…
என் மனதை நெய்த இழையோ…

ஆண் : வீசும் தென்றல் என்னை விட்டு…
விலகிப் போகுமோ…
போனத் தென்றல் என்று எந்தன்…
சுவாசம் ஆகுமோ…
இரு விழியிலே ஒரு கனவென…
உன்னைத் தொடருவேன்…..

ஆண் : நீங்க முடியுமா…
நினைவுத் தூங்குமா…
காலம் மாறுமா…
காயம் மாறுமா…

BGM

ஆண் : மூன்று காலில் காதல் தேடி…
நடந்து போகிறேன்…
இரண்டு இரவு இருந்த போதும்…
நிலவைக் கேட்க்கிறேன்…

ஆண் : நீ கடந்து போன திசையோ…
நான் கேட்க மறந்த இசையோ…
நீ தெய்வம் தேடும் சிலையோ…
உன்னை மீட்க என்ன விலையோ…

ஆண் : இன்று இல்லை நீ எனக்கு…
உடைந்து போகிறேன்…
மீண்டு வாழ நாளை உண்டு…
மீட்க வருகிறேன்…

ஆண் : ஒரு தனிமையும்…
ஒரு தனிமையும்…
இனி இனையுமே…

ஆண் : நீங்க முடியுமா…
நினைவுத் தூங்குமா…
காலம் மாறுமா…
காயம் மாறுமா…

ஆண் : வானம் பிரிந்த மேகமா…
வாழ்வில் உனக்கு சோகமா…
காதல் போயின் காதல் சாகுமா…
காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன்…

ஆண் : உயிர் போகும் நாள் வரை…
உன்னைத் தேடுவேன்…
உன்னை மீண்டும் பார்த்தப்பின்…
கண் மூடுவேன்…

ஆண் : நீங்க முடியுமா…
நினைவுத் தூங்குமா…


Notes : Neenga Mudiyuma Song Lyrics in Tamil. This Song from Psycho (2020). Song Lyrics penned by Kabilan. நீங்க முடியுமா பாடல் வரிகள்.


கதைப்போமா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கோ. சேஷாசித் ஶ்ரீராம்லியோன் ஜேம்ஸ்ஓ மை கடவுளே

Kadhaippoma Song Lyrics in Tamil


குழு (பெண்கள்) : தினனா தினா நம்தினனா…
தினனா தினா நம்தினனா…
தனதோம் தனதோம் தனதோம்…
தரிதினா தாராரா…

குழு (பெண்கள்) : தினனா தினா நம்தினனா…
தினனா தினா நம்தினனா…
தனதோம் தனதோம்…
தனதோம் தரிதினா தாராரா…

குழு (பெண்கள்) : தனதோம் தனதோம்…
தனதோம் தரிதினா தாராரா…

BGM

ஆண் : நேற்று நான் உன்னை…
பார்த்த பார்வை வேறு…
நீங்காத எண்ணமாக…
ஆனாய் இன்று…
உன்னோடு நானும் போன…
தூரம் யாவும் நெஞ்சிலே…
ரீங்கார நினைவுகளாக…
அலையய் இங்கே மிஞ்சுதே…

ஆண் : நூலறுந்த பட்டம் போலே…
உன்னை சுற்றி நானும் ஆட…
கைகள் நீட்டி நீயும் பிடிக்க…
காத்திருக்கிறேன்…
இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன…
கேட்க வேண்டும் உன்னை…
காலம் கை கூடினால்…

ஆண் : கதைப்போமா… கதைப்போமா…
கதைப்போமா… ஆ
ஒன்றாக நீயும் நானும் தான்…
கதைப்போமா கதைப்போமா…
கதைப்போமா… ஆ… ஆ…
நீ பேச பேச…
காயம் ஆறுமே…

BGM

ஆண் : அதிகாலை வந்தால்…
அழகாய் என் வானில் நீ…
அணையாத சூரியன் ஆகிறாய்…
நெடு நேரம் காய்ந்து…
கத கதப்பு தந்தவுடன்…
நிலவாய் உருமாறி நிற்கிறாய்…

ஆண் : உன்னை இன்று பார்த்ததும்…
என்னை நானே கேட்கிறேன்…
வைரம் ஒன்றை…
கையில் வைத்து…
எங்கே தேடி அலைந்தாயோ…

ஆண் : உண்மை என்று தெரிந்துமே…
நெஞ்சம் சொல்ல தயங்குதே…
கைகள் கோர்த்து பேசினாலே…
தைரியங்கள் தோன்றுமே…

ஆண் : கதைப்போமா… கதைப்போமா…
கதைப்போமா…
ஒன்றாக நீயும் நானும் தான்…
கதைப்போமா… கதைப்போமா…
கதைப்போமா… ஆ…
நீ பேச பேச…
காயம் ஆறுமே…

BGM

ஆண் : கதைப்போமா…
கதைப்போமா…
கதைப்போமா…

BGM

குழு (பெண்கள்) : தினனா தினா நம்தினனா…
தினனா தினா நம்தினனா…
தனதோம் தனதோம் தனதோம்…
தரிதினா தாராரா…

குழு (பெண்கள்) : தினனா தினா நம்தினனா…
தினனா தினா நம்தினனா…
தனதோம் தனதோம் தனதோம்…
தரிதினா தாராரா…

குழு (பெண்கள்) : தனதோம் தனதோம் தனதோம்…
தரிதினா தாராரா…

ஆண் : கதைப்போமா… கதைப்போமா…
கதைப்போமா…
ஒன்றாக நீயும் நானும் தான்…
கதைப்போமா… கதைப்போமா…
கதைப்போமா…
நீ பேச பேச…
காயம் ஆறுமே…..


Notes : Kadhaippoma Song Lyrics in Tamil. This Song from Oh My Kadavule (2020). Song Lyrics penned by Ko Sesha. கதைப்போமா பாடல் வரிகள்.