மறுவார்த்தை பேசாதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசித் ஶ்ரீராம்தர்புகா சிவாஎன்னை நோக்கி பாயும் தோட்டா

Maruvaarthai Song Lyrics in Tamil


BGM

ஆண் : மறுவார்த்தை பேசாதே…
மடிமீது நீ தூங்கிடு…
இமை போல நான் காக்க…
கனவாய் நீ மாறிடு…

ஆண் : மயில் தோகை போலே…
விரல் உன்னை வருடும்…
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்…

ஆண் : விழி நீரும் வீணாக…
இமைத்தாண்ட கூடாதென…
துளியாக நான் சேர்த்தேன்…
கடலாக கண்ணானதே…

ஆண் : மறந்தாலும் நான் உன்னை…
நினைக்காத நாள் இல்லையே…
பிரிந்தாலும் என் அன்பு…
ஒருபோதும் பொய் இல்லையே…

BGM

ஆண் : விடியாத காலைகள்…
முடியாத மாலைகளில்…
வடியாத வேர்வை துளிகள்…
பிரியாத போர்வை நொடிகள்…

ஆண் : மணி காட்டும் கடிகாரம்…
தரும் வாடை அறிந்தோம்…
உடைமாற்றும் இடைவேளை…
அதன் பின்பே உணர்ந்தோம்…

ஆண் : மறவாதே மனம்…
மடிந்தாலும் வரும்…
முதல் நீ… முடிவும் நீ…
அலர் நீ… அகிலம் நீ…

BGM

ஆண் : தொலைதூரம் சென்றாலும்…
தொடு வானம் என்றாலும்…
நீ விழியோரம் தானே மறைந்தாய்…
உயிரோடு முன்பே கலந்தாய்…

ஆண் : இதழ் எனும் மலர் கொண்டு…
கடிதங்கள் வரைந்தாய்…
பதில் நானும் தரும் முன்பே…
கனவாகி கலைந்தாய்…

ஆண் : பிடிவாதம் பிடி…
சினம் தீரும் அடி…
இழந்தோம் எழில்கோலம்…
இனிமேல் மழைக்காலம்…

BGM

ஆண் : மறுவார்த்தை பேசாதே…
மடிமீது நீ தூங்கிடு…
இமை போல நான் காக்க…
கனவாய் நீ மாறிடு…

ஆண் : மயில் தோகை போலே…
விரல் உன்னை வருடும்…
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்…

ஆண் : விழி நீரும் வீணாக…
இமைத்தாண்ட கூடாதென…
துளியாக நான் சேர்த்தேன்…
கடலாக கண்ணானதே…

ஆண் : மறந்தாலும் நான் உன்னை…
நினைக்காத நாள் இல்லையே…
பிரிந்தாலும் என் அன்பு…
ஒருபோதும் பொய் இல்லையே…
ஏ… ஏ… ஏ… ஏ… ஏ… ஏ…

BGM

ஆண் : மறுவார்த்தை பேசாதே…
மடிமீது நீ தூங்கிடு…


Notes : Maruvaarthai Song Lyrics in Tamil. This Song from Enai Noki Paayum Thota (2019). Song Lyrics penned by Thamarai. மறுவார்த்தை பேசாதே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top