Category Archives: 2006 Movies

2006 Movies

unnai-kandane-song-lyrics-in-tamil-parijatham

உன்னை கண்டேனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண் & ஸ்ருதிதரன் குமார்பாரிஜாதம்

Unnai Kandane Song Lyrics in Tamil


BGM

பெண் : உன்னை கண்டேனே முதல் முறை நான்…
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்…
உன்னை கண்டேனே முதல் முறை நான்…
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்…

பெண் : காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்…
ஹய்யோ ஹய்யயோ அச்சம் வருதே…
தப்பி செல்லவே வழிகள் இல்லை இங்கே…
ஹய்யோ ஹய்யயோ சீ என்னவோ பண்ணினாய் நீயே…

பெண் : உன்னை கண்டேனே முதல் முறை நான்…
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்…

ஆண் : எரிகிற மழை இது…
குளிர்கிற வெயில் இது…
கொதிக்கிற நீர் இது…
அணைக்கிற தீ இது…
இனிக்கிற வலி இது…
இனமுழ பூ இது…
இதயத்தில் மலர்வது…
ஓ பெண்ணே…

ஆண் : நிஜமுள்ள பொய் இது…
நிறமுள்ள இருட்டு இது…
மௌனத்தின் மொழி இது…
மரணத்தின் வால் இது…
அந்தரத்தின் கடல் இது…
கட்டி வந்த கனவு இது…
அகிம்சையில் கொல்லுவது…
ஏன் பெண்ணே…

பெண் : ஏங்கினேன் நான் தேங்கினேன்…
ஏனடா போதும் இம்சைகள்…
வானமும் இந்த பூமியும்…
உந்தன் தோற்றமே…
உன் பேர் சொன்னாலே…
உள்ளே தித்திக்குமே…

BGM

பெண் : காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும்…
கண்ணோடு இருக்கும் பல கடிதம்…

ஆண் : பெண்ணே நானும் உன் கண்ணை படிப்பேன்…
புரியாமல் தவித்தேன்…
பொய் சொல்லுதோ மெய் சொல்லுதோ…
ஓ காதல் என்னை தாக்கிடுதே…

பெண் : சரி தான் என்னையும்…
அது சாய்த்திடுதே…

ஆண் : இரவில் கனவும்…
என்னை சாப்பிடுதே…

பெண் : பொதுவாய் வயதில்…
இதில் தப்பிக்க யாரும் இல்லையே…

பெண் : உன்னை கண்டேனே முதல் முறை நான்…
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்…

BGM

பெண் : ஏனோ இரவில் ஒரு பாடல் கேட்டால்…
உடனே என் உள்ளே நீ வருவாய்…

ஆண் : கோயில் உள்ளே…
கண் மூடி நின்றாய்…
உன் உருவம்தானே…
எந்நாளுமே நெஞ்சில் தோன்றுமே…

ஆண் : நான் உன்னால்தான் சுவாசிக்கிறேன்…

பெண் : நான் உன் பேர்…
தினம் வாசிக்கிறேன்…

ஆண் : உயிரை விடவும் உன்னை நேசிக்கிறேன்…

பெண் : கடவுள் நிலையை…
நம் கண்ணிலே காட்டிடும் காதல்…

பெண் : உன்னை கண்டேனே முதல் முறை நான்…
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்…

பெண் : காதல் பூதமே…
ஆண் : என்னை நீயும் தொட்டாய்…
பெண் : ஹய்யோ ஹய்யயோ…
ஆண் : அச்சம் வருதே…
பெண் : தப்பி செல்லவே…
வழிகள் இல்லை இங்கே…
ஆண் : ஹய்யோ ஹய்யயோ…
பெண் : சீ என்னவோ பண்ணினாய் நீயே…

ஆண் : எரிகிற மழை இது…
குளிர்கிற வெயில் இது…
கொதிக்கிற நீர் இது…
அணைக்கிற தீ இது…
இனிக்கிற வலி இது…
இனமுழ பூ இது…
இதயத்தில் மலர்வது…
ஓ பெண்ணே…

ஆண் : நிஜமுள்ள பொய் இது…
நிறமுள்ள இருட்டு இது…
மௌனத்தின் மொழி இது…
மரணத்தின் வால் இது…
அந்தரத்தின் கடல் இது…
கட்டி வந்த கனவு இது…
அகிம்சையில் கொல்லுவது…
ஏன் பெண்ணே…

பெண் : ஏங்கினேன் நான் தேங்கினேன்…
ஏனடா போதும் இம்சைகள்…
வானமும் இந்த பூமியும்…
உந்தன் தோற்றமே…
உன் பேர் சொன்னாலே…
உள்ளே தித்திக்குமே…

பெண் : மனசுக்குள் ஏதோ சொல் சொல்…
எதிரினில் வந்து நில் நில்…
உயிருக்குள் ஏதோ ஜல் ஜல்…
இது சரிதானா நீ சொல் சொல்…

பெண் : மனசுக்குள் ஏதோ சொல் சொல்…
எதிரினில் வந்து நில் நில்…
உயிருக்குள் ஏதோ ஜல் ஜல்…
இது சரிதானா நீ சொல் சொல்…


Notes : Unnai Kandane Song Lyrics in Tamil. This Song from Parijatham (2006). Song Lyrics penned by Na Muthukumar. உன்னை கண்டேனே பாடல் வரிகள்.


நெருப்பே சிக்கி முக்கி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபிராங்கோ, சோலார் சாய் & சௌமியா ராவ்ஹாரிஸ் ஜெயராஜ்வேட்டையாடு விளையாடு

Neruppe Sikki Mukki Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே…
இதமா ஒத்தடம் கொடுப்பேன்…
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி…
மடியில் படுப்பேன்…

BGM

ஆண் : தினமும் உன்ன உன்ன நினைச்சு…
உடம்பு குச்சியா இளச்சேன்…
கனவில் எட்டி எட்டி பார்த்தேன்…
அதனால் பொளைச்சேன்…

ஆண் : ஓ ஓஹோ… மேகம் மேகம் தூரம் போகட்டும்…
போகும் போதே தூறல் போடட்டும்…
மேகம் மேகம் தூரம் போகட்டும்…
போகும் போதே தூறல் போடட்டும்…

ஆண் : நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே…
இதமா ஒத்தடம் கொடுப்பேன்…
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி…
மடியில் படுப்பேன்…

ஆண் : தினமும் உன்ன உன்ன நினைச்சு…
உடம்பு குச்சியா இளச்சேன்…
கனவில் எட்டி எட்டி பார்த்தேன்…
அதனால் பொளைச்சேன்…

BGM

ஆண் : மழையே மழையே…
என்மேலே வந்து விழவா விழவா…
வெயிலே வெயிலே…
உன் வேர்வை வலையை நிறுத்திடவா…

ஆண் : பனியே பனியே…
என் பாயில் கொஞ்சம் படுவா படுவா…
இதழோரம் சிரிப்பு பிறக்கிறதே… ஆஹா…
புதுசாக எதையோ நினைச்சேன்…

பெண் : நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே…
இதமா ஒத்தடம் கொடுப்பேன்…
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி…
மடியில் படுப்பேன்…

பெண் : தினமும் உன்ன உன்ன நினைச்சு…
உடம்பு குச்சியா இளச்சேன்…
கனவில் எட்டி எட்டி பார்த்தேன்…
அதனால் பொளைச்சேன்…

BGM

ஆண் : ஹாவா… சகியே சகியே…
சல்லாபத் தோின் மணியே மணியே…
ரதியே ரதியே…
உன் நாவில் நானும் நுழைத்திடவா…
கனியே கனியே…
என் நாவில் உந்தன் ருசியே ருசியே…

ஆண் : விரலோடு விரல்கள் நெருங்கிடவே…
நகத்தோடு நடனம் தொடங்கும்…

ஆண் : நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே…
இதமா ஒத்தடம் கொடுப்பேன்…
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி…
மடியில் படுப்பேன்…

ஆண் : தினமும் உன்ன உன்ன நினைச்சு…
உடம்பு குச்சியா இளச்சேன்…
கனவில் எட்டி எட்டி பார்த்தேன்…
அதனால் பொளைச்சேன்…

பெண் : ஓ ஓஹோ… மேகம் மேகம் தூரம் போகட்டும்…
போகும் போதே தூறல் போடட்டும்…
மேகம் மேகம் தூரம் போகட்டும்…
போகும் போதே தூறல் போடட்டும்…

BGM


Notes : Neruppe Sikki Mukki Song Lyrics in Tamil. This Song from Vettaiyaadu Vilaiyaadu (2006). Song Lyrics penned by Thamarai. நெருப்பே சிக்கி முக்கி பாடல் வரிகள்.


மஞ்சள் வெயில் மாலையிலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஹரன், கிரிஷ் & நகுல்ஹாரிஸ் ஜெயராஜ்வேட்டையாடு விளையாடு

Manjal Veyil Song Lyrics in Tamil


ஆண் : வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே…
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய்…
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே…
நட்சத்திரப் பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்…

BGM

ஆண் : மஞ்சள் வெயில் மாலையிலே…
மெல்ல மெல்ல இருளுதே…
பளிச்சிடும் விளக்குகள்…
பகல் போல் காட்டுதே…

ஆண் : தயக்கங்கள் விலகுதே…
தவிப்புகள் தொடருதே…
அடுத்தது என்ன என்ன…
என்றேதான் தேடுதே…

குழு : வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே…
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய்…
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திரப் பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்…

ஆண் : உலகத்தின் கடைசிநாள்…
இன்றுதானா என்பது போல்…
பேசிப்பேசித் தீர்த்த பின்னும்…
ஏதோ ஒன்று குறையுதே…

ஆண் : உள்ளே ஒரு சின்னஞ்சிறு…
மரகத மாற்றம் வந்து…
குறுகுறு மின்னல் என…
குறுக்கே ஓடுதே…

குழு : வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே…
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய்…
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே…
நட்சத்திரப் பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்…

BGM

ஆண் : மஞ்சள் வெயில் மாலையிலே…
மெல்ல மெல்ல இருளுதே…
பளிச்சிடும் விளக்குகள்…
பகல் போல் காட்டுதே…

ஆண் : தயக்கங்கள் விலகுதே…
தவிப்புகள் தொடருதே…
அடுத்தது என்ன என்ன…
என்றேதான் தேடுதே…

ஆண் : வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற…
வழியில் வழியில் சில…
நடக்கிறார் நடக்கிறார்… ஆ…
மஞ்சளும் பச்சையும் கொண்டு…
பெய்து பெய்து மழை…
நனைகிறார் நனைகிறார்…

ஆண் : யாரோ யாரோ யாரோ அவள்… ஹே…
யாரோ யாரோ யாரோ அவன்…
ஒரு கோடும் கோடும் வெட்டிக்கொள்ள…
இரு தண்டவாளம் ஒட்டிச்செல்ல…

குழு : வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே…
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய்…
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே…
நட்சத்திரப் பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்…

ஆண் : இன்னும் கொஞ்சம் நீள வேண்டும்…
இந்த நொடி இந்த நொடி…
எத்தனையோ காலம் தள்ளி…
நெஞ்சோரம் பனித்துளி…

ஆண் : நின்று பார்க்க நேரம் இன்றி…
சென்று கொண்டே இருந்தேனே…
நிக்க வைத்தாள் பேச வைத்தாள்…
நெஞ்சோரம் பனித்துளி… ஓஹோ ஹோ…

BGM


Notes : Manjal Veyil Song Lyrics in Tamil. This Song from Vettaiyaadu Vilaiyaadu (2006). Song Lyrics penned by Thamarai. மஞ்சள் வெயில் மாலையிலே பாடல் வரிகள்.


விழிகளில் விழிகளில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஹரிஷ் ராகவேந்திராடி. இமான்திருவிளையாடல் ஆரம்பம்

Vizhigalil Vizhigalil Song Lyrics in Tamil


BGM

ஆண் : விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்…
எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய்…
சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய்…
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்…

ஆண் : யார் என்று நான் யார் என்று…
அடி மறந்தே போனதே…
உன்பேரை கூட தெரியாமல்…
மனம் உன்னை சுற்றுதே…

ஆண் : ஒரு நாள் வரைதான் என நினைத்தேன்…
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்…
காதல் என் காதில் சொல்வாய்…
காதல் என் காதில் சொல்வாய்…

ஆண் : விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்…
எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய்…
சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய்…
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்…

BGM

ஆண் : சாலையில் நீ போகையில…
மரமெல்லாம் கூடி முணுமுணுக்கும்…
காலையில் உன்னை பார்ப்பதற்கு…
சூரியன் கிழக்கில் தவமிருக்கும்…

ஆண் : யாரடி நீ யாரடி…
அதிருதே என் ஆறடி…

ஆண் : ஒரு கார்பன் கார்டு என…
கண்ணை வைத்து காதலை எழுதி விட்டாய்…
அந்த காதலை நானும்…
வாசிக்கும் முன்னே எங்கே ஓடுகிறாய்…

ஆண் : போகாதே அடி போகாதே…
என் சுடிதார் சொர்கமே…
நீ போனாலே நீ போனாலே…
என் வாழ்நாள் சொற்பமே…

ஆண் : விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்…
எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய்…
சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய்…
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்…

BGM

ஆண் : பூவிலே செய்த சிலை அல்லவா…
பூமியே உனக்கு விலையல்லவா…
தேவதை உந்தன் அருகினிலே…
வாழ்வதே எனக்கு வரமல்லவா…

ஆண் : மேகமாய் அங்கு நீயடி…
தாகமாய் இங்கு நானடி…
உன் பார்வை தூறலில் விழுந்தேன்…
அதனால் காதலும் துளிர்த்ததடி…

ஆண் : அந்த காதலை நானும்…
மறுநொடி பார்த்தேன்…
மரமாய் அசையுதடி…

ஆண் : இன்றோடு அடி இன்றோடு…
என் கவலை முடிந்ததே…
ஒரு பெண் கோழி நீ கூவித்தான்…
என் பொழுதும் விடிந்ததே…

BGM

ஆண் : எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய்…
சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய்…
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்…

ஆண் : காதல் என் காதில் சொல்வாய்…
காதல் என் காதில் சொல்வாய்…

BGM


Notes : Vizhigalil Vizhigalil Song Lyrics in Tamil. This Song from Thiruvilayadal Aarambam (2006). Song Lyrics penned by Viveka. விழிகளில் விழிகளில் பாடல் வரிகள்.


தாஜ்மஹால் ஓவிய காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவிஜய் யேசுதாஸ் & மதுமிதாயுவன் ஷங்கர் ராஜாகள்வனின் காதலி

Tajmahal Oviya Kadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாஜ்மஹால் ஓவிய காதல்…
தேவதாஸ் காவிய காதல்…
தனிரகம் இந்த காதல்தான்…
தேசம்தான் பேசும் இதையே…
இந்த உறவு இறுதி வரைக்கும்…

ஆண் : இறைவன் போல் எங்க வாழ்வும்…
இருந்திடும் ஜென்மம் ஏழேழும்…
பிரிவு இல்லையே…
உதடு எல்லாம் உனது பெயரே…

BGM

ஆண் : ஓ… உனை விட ஒரு முகம்…
எனக்கில்லை அறிமுகம்…

பெண் : ஓ… இவள் உந்தன் திருமதி…
இறைவனின் விதிப்படி…

ஆண் : நீ மட்டும் இல்லை என்றால்…
நிற்காது எந்தன் மூச்சு…

பெண் : நானும் தான் உன்னை போல…
இன்னும் என்ன பேச்சு…

ஆண் : கல்யாண தேதி கற்கண்டு சேதி…
காதோரம் நீ சொல் தோழி…

பெண் : ஓ… நேரம் மாலை போடும் வேளை…
கண்ணா உன் கையில்தான்…

ஆண் : தாஜ்மஹால் ஓவிய காதல்…
தேவதாஸ் காவிய காதல்…

BGM

ஆண் : ஓ… தலை முதல் கால் வரை…
தழுவவா ஒரு முறை…

பெண் : பறக்குமோ தீப்பொறி…
பதியுமோ நகக் குறி…

ஆண் : கீழ் மேலாய் அங்கங்க நான்…
கொஞ்சம் கொஞ்சம் கிள்ள…

பெண் : கூச்சங்கள் தாளாமல் நான்…
தூண்டில் மீனாய் துள்ள…

ஆண் : வான் மழை நேறும் வாடிடும் வேரும்…
ஒன்றாக கூடும் நேரம்…

BGM

ஆண் : தாஜ்மஹால் ஓவிய காதல்…
தேவதாஸ் காவிய காதல்…

பெண் : தனிரகம் இந்த காதல்தான்…

ஆண் & பெண் : தேசம்தான் பேசும் இதையே…
இந்த உறவு இறுதி வரைக்கும்…

BGM


Notes : Tajmahal Oviya Kadhal  Song Lyrics in Tamil. This Song from Kalvanin Kadhali (2006). Song Lyrics penned by Vaali. தாஜ்மஹால் ஓவிய காதல் பாடல் வரிகள்.


கண்ணுக்குள் ஏதோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஜய் யேசுதாஸ் & ரீட்டாடி. இமான்திருவிளையாடல் ஆரம்பம்

Kannukkul Yetho Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ…
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே…
நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ…
காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே…

ஆண் : உன் உயிர் வந்து…
எந்தன் உயிர் தொட்டது…
என் உலகமே உன்னால்…
மாறிவிட்டது…

பெண் : கண்ணே சொல் இதுதான்…
காதல் என்பதா…

பெண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ…
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே…

BGM

ஆண் : காதல் வந்து கெடுத்த பின்…
கவிதைகள் படிக்கிறேன்…

பெண் : தோழிகளை தவிர்கிறேன்…
உன்னை தேடி வருகிறேன்…

ஆண் : தாய் தந்தை இருந்தும் ஏன்…
தனிமையில் தவிக்கிறேன்…
சொந்தமாய் நீ வா பிழைக்கிறேன்…

பெண் : எந்தன் வீட்டு சொந்தம் என்று…
நேற்று வரை நினைத்தவள்…
உன் வீட்டில் குடி வர நினைக்கிறேன்…

ஆண் : உன்னை காதலித்த கணமே…
உனக்குள் வந்தேன்…

பெண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ…
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே…

BGM

ஆண் : கனவிலே நீயும் வந்தால்…
புகைப்படம் எடுக்கிறேன்…

பெண் : கனவுகள் இங்கு இல்லை…
கண் விழித்து நினைக்கிறேன்…

ஆண் : பெண்ணே நானோ உன்னை என்றும்…
மறப்பது இல்லையடி…
மறந்தால்தானே நினைத்திட…

பெண் : அன்பே நானோ இருக்கையில்…
உந்தன் சுவாசம் தீண்டட்டும்…
உடனே நானும் பிறந்திட…

ஆண் : உண்மை காதல்…
சாதல் இல்லையடி…

ஆண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ…
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே…

பெண் : நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ…
காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே…

ஆண் : உன் உயிர் வந்து…
எந்தன் உயிர் தொட்டது…
என் உலகமே உன்னால்…
மாறிவிட்டது…

பெண் : கண்ணே சொல் இதுதான்…
காதல் என்பதா…

BGM


Notes : Kannukkul Yetho Song Lyrics in Tamil. This Song from Thiruvilaiyaadal Aarambam (2006). Song Lyrics penned by Na. Muthukumar. கண்ணுக்குள் ஏதோ பாடல் வரிகள்.


ஒரு முறை பிறந்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஹரன் & சாதனா சர்கம்ஸ்ரீகாந்த் தேவாநெஞ்சிருக்கும் வரை

Orumurai Piranthen Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்…
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்…
மனதினில் உன்னை சுமப்பதினாலே…
மரணத்தைதாண்டி வாழ்ந்திருப்பேன்…

ஆண் : என் கண்ணில் உன்னை வைத்தே…
காட்சிகளை பார்ப்பேன்…
ஒரு நிமிடம் உன்னை மறக்க…
முயன்றதில்லை தோற்றேன்…

ஆண் : நீயே என் இதயமடி…
நீயே என் ஜீவனடி…

ஆண் : ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்…
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்…
மனதினில் உன்னை சுமப்பதினாலே…
மரணத்தைதாண்டி வாழ்ந்திருப்பேன்…

ஆண் : என் கண்ணில் உன்னை வைத்தே…
காட்சிகளை பார்ப்பேன்…
ஒரு நிமிடம் உன்னை மறக்க…
முயன்றதில்லை தோற்றேன்…

ஆண் : நீயே என் இதயமடி…
நீயே என் ஜீவனடி…

BGM

ஆண் : ஓஓ… உந்தன் நெற்றி மீதிலே…
துளி வேர்வை வரலாகுமா…
சின்ன தாக நீயும்தான் முகம் சுளித்தால்…
மனம் தாங்குமா…

ஆண் : உன் கண்ணிலே துளி நீரையும்…
நீ சிந்தவும் விடமாட்டேன்…
உன் நிழலையும் தரை மீதிலே…
நடமாடவும் விடமாட்டேன்…

பெண் : ஒரே உடல் ஒரே உயிர்…
ஒரே மனம்…
நினைக்கையில் இனிக்கிறதே…

ஆண் : நீயே என் இதயமடி…
நீயே என் ஜீவனடி…

BGM

பெண் : காற்று வீசும் மாலையில்…
கடற் கரையில் நடை போடணும்…
உன் மடிதான் பாய் மரம்…
படகேறி திசை மாறனும்…

பெண் : ஒளி வீசிடும் இரு கண்கள்தான்…
வழி காத்திடும் கலங்கரையா…
கரை சேரவே மனம் இல்லையே…
என தோன்றிதல் அது பிழையா…

ஆண் : நெஞ்சுக்குள்ளே உன்னை வைத்து…
பூட்டி விட்டு…
சாவியை தொலைத்து விட்டேன்…

பெண் : நீயே என் இதயமடா…
நீயே என் ஜீவனடா…

பெண் : ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்…
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்…
மனதினில் உன்னை சுமப்பதினாலே…
மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன்…

பெண் : என் கண்ணில் உன்னை வைத்தே…
காட்சிகளை பார்ப்பேன்…
ஒரு நிமிடம் உன்னை மறக்க…
முயன்றதில்லை தோற்றேன்…

பெண் : நீயே என் இதயமடா…
நீயே என் ஜீவனடா…

BGM


Notes : Orumurai Piranthen Song Lyrics in Tamil. This Song from Nenjirukkum Varai (2006). Song Lyrics penned by Thamarai. ஒரு முறை பிறந்தேன் பாடல் வரிகள்.


சித்திரையில் என்ன வரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசுவர்ணலதா & கார்த்திக்வித்யாசாகர்சிவப்பதிகாரம்

Chithiraiyil Enna Varum Song Lyrics in Tamil


BGM

பெண் : சித்திரையில் என்ன வரும்…
வெயில் சிந்துவதால் வெக்க வரும்…
நித்திரையில் என்ன வரும்…
கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்…

பெண் : கண்ணான கண்ணுக்குள்ளே…
காதல் வந்தால் உண்மையில் என்ன வரும்…
தேசங்கள் அத்தனையும் வென்றுவிட்ட…
தித்திப்பு நெஞ்சில் வரும்…

பெண் : சித்திரையில் என்ன வரும்…
வெயில் சிந்துவதால் வெக்க வரும்…
நித்திரையில் என்ன வரும்…
கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்…

BGM

பெண் : பாவிப் பயனால…
இப்போ நானும் படும் பாடு என்ன…

ஆண் : ஆவிப் புகைபோலே…
தொட்டிடாம இவ போவதென்ன…

பெண் : கண்ணுக்கு காவலா…
சொப்பனத்த போடற…
கன்னத்துக்கு பவுடர…
முத்தங்களப் பூசுற…

ஆண் : நூலப் போல சீல…
பெத்தத் தாயப் போல காள…
யாரு போல காதல்…
சொல்ல யாருமே இல்ல…

ஆண் : சித்திரையில் என்ன வரும்…

பெண் : வெயில் சிந்துவதால் வெக்க வரும்…

ஆண் : நித்திரையில் என்ன வரும்…

பெண் : கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்…

BGM

ஆண் : கேணிக் கயிறாக…
உங்க பார்வ என்ன மேலிழுக்க

பெண் : கூனி முதுகாக…
செல்ல வார்த்த வந்து கீழிழுக்க…

ஆண் : மாவிளக்கு போல நீ…
மனசையும் கொளுத்துற…
நா இடுக்கு ஓரமா…
நாணத்தப் பதுக்குற…

பெண் : யாரும் இறைச்சிடாத…
ஒரு ஊத்து போலத் தேங்கி…
ஆகிப் போச்சு வாரம்…
இவ கண்ணு முழி தூங்கி…

ஆண் : சித்திரையில் என்ன வரும்…

பெண் : வெயில் சிந்துவதால் வெக்க வரும்…

ஆண் : நித்திரையில் என்ன வரும்…

பெண் : கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்…

ஆண் : கண்ணான கண்ணுக்குள்ளே…
காதல் வந்தால் உண்மையில் என்ன வரும்…

பெண் : தேசங்கள் அத்தனையும்…
வென்றுவிட்ட தித்திப்பு நெஞ்சில் வரும்…

பெண் : சித்திரையில் என்ன வரும்…

ஆண் : வெயில் சிந்துவதால் வெக்க வரும்…
நித்திரையில் என்ன வரும்…

பெண் : கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்…


Notes : Chithiraiyil Enna Varum Song Lyrics in Tamil. This Song from Sivappathigaram (2006). Song Lyrics penned by Yugabharathi. சித்திரையில் என்ன வரும் பாடல் வரிகள்.


ரகசியமானது காதல்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விஜய் சாகர்ஹரிணி & ஹரிஷ் ராகவேந்திராசிற்பிகோடம்பாக்கம்

Ragasiyamanathu Kadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரகசியமானது காதல்…
மிக மிக ரகசியமானது காதல்…
ரகசியமானது காதல்…
மிக மிக ரகசியமானது காதல்…

ஆண் : முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்…
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்…
சுவாரசியமானது காதல்…
மிக மிக சுவாரசியமானது காதல்…

BGM

ஆண் : சொல்லாமல் செய்யும் காதல் கனமானது…
சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மனமானது…
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது…
இந்த சோகம்தானே காதலிலே சுகமானது…

ஆண் : வாசனை வெளிச்சத்தை போல…
அது சுதந்திரமானதும் அல்ல…
ஈரத்தை இருட்டினை போல…
அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல…

ஆண் : ரகசியமானது காதல்…
மிக மிக ரகசியமானது காதல்…

ஆண் : முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்…
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்…
சுவாரசியமானது காதல்…
மிக மிக சுவாரசியமானது காதல்…

BGM

பெண் : கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது…
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது…
கேட்கும் கேள்விக்காகதானே பதில் வாழுது…
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது…

பெண் : நீரினை நெருப்பினைப் போல…
விரல் தொடுதலில் புரிவதும் அல்ல…
காதலும் கடவுளை போல…
அதை உயிரினில் உணரனும் மெல்ல…

பெண் : ரகசியமானது காதல்…
மிக மிக ரகசியமானது காதல்…

பெண் : முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்…
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்…
சுவாரசியமானது காதல்…
மிக மிக சுவாரசியமானது காதல்…


Notes : Ragasiyamanathu Kadhal Song Lyrics in Tamil. This Song from Kodambakkam (2006). Song Lyrics penned by Vijay Sagar. ரகசியமானது காதல் பாடல் வரிகள்.


அய்யய்யோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கிருஷ்ணராஜ், மாணிக்க விநாயகம் & ஸ்ரேயா கோஷல்யுவன் ஷங்கர் ராஜாபருத்திவீரன்

Ayyayyo Song Lyrics in Tamil


ஆண் : ஏலே ஏலேலேலே…
ஏலே ஏலேலேலே…
ஒத்த பனை மரத்துல…
செத்த நேரம் உன் மடியில்…
தல வச்சு சாஞ்சிக்கிறேன்…
சங்கதிய சொல்லி தாறேன் வாடி நீ வாடி…

ஆண் : பத்துக்கண்ணு பாலத்துல…
மேய்ச்சலுக்குக் காத்திருப்பேன்…
பாய்ச்சலோட வாடி புள்ள…
கூச்சம் கீச்சம் தேவையில்லை வாடி நீ வாடி…

ஆண் : ஏலே ஏலேலேலே…
ஏலே ஏலேலேலே…
செவ்வளனி சின்னக்கனி…
உன்ன சிறை எடுக்கப்போறேன் வாடி…

பெண் : அய்யய்யோ என் உசுருக்குள்ள தீய வச்சான்…
அய்யய்யோ என் மனசுக்குள்ள நோயத் தச்சான்…
அய்யய்யோ…

ஆண் : சண்டாளி உன் பாசத்தால…
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள…

பெண் : நீ கொன்னாக்கூட குத்தமில்ல…
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள…
அய்யய்யோ என் வெட்கம் பத்தி வேகுறதே…
அய்யய்யோ என் சமஞ்ச தேகம் சாயிறதே…
அய்யய்யோ…

ஆண் : அரளி விதை வாசக்காரி…
ஆள கொல்லும் பாசக்காரி…
என் உடம்பு நெஞ்ச கீறி…
நீ உள்ள வந்தா கெட்டிக்காரி…

ஆண் : அய்யய்யோ என் இடுப்பு வேட்டி இறங்கிப்போச்சே…
அய்யய்யோ என் மீச முறுக்கும் மடங்கிப்போச்சே…
அய்யய்யோ…

BGM

பெண் : கல்லுக்குள்ள தேரப் போல…
கலைஞ்சிருக்கும் தாடிக்குள்ள ஒளிஞ்சுக்கவா…
காலச் சுத்தும் நிழலப் போல…
பொட்டக்காட்டில் உன்கூடவே தங்கிடவா…

BGM

பெண் : அய்யானார பாத்தாலே உன் நெனப்புதான்டா…
அம்மிக்கல்லு பூப்போல மாறிப்போச்சு ஏன்டா…
நான் வாடாமல்லி…
நீ போடா அல்லி…

ஆண் : தொரட்டிக்கண்ணு கருவாச்சியே…
நீ தொட்டா அருவா கரும்பாகுதே…
ஏய்… தொரட்டிக்கண்ணு கருவாச்சியே…
நீ தொட்டா அருவா கரும்பாகுதே…

ஆண் : சண்டாளி உன் பாசத்தால…
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள…

பெண் : நீ கொன்னாக்கூட குத்தமில்ல…
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள…


Notes : Ayyayyo Song Lyrics in Tamil. This Song from Paruthiveeran (2006). Song Lyrics penned by Snehan. அய்யய்யோ பாடல் வரிகள்.