பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | விஜய் யேசுதாஸ் & ரீட்டா | டி. இமான் | திருவிளையாடல் ஆரம்பம் |
Kannukkul Yetho Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ…
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே…
நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ…
காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே…
ஆண் : உன் உயிர் வந்து…
எந்தன் உயிர் தொட்டது…
என் உலகமே உன்னால்…
மாறிவிட்டது…
பெண் : கண்ணே சொல் இதுதான்…
காதல் என்பதா…
பெண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ…
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே…
—BGM—
ஆண் : காதல் வந்து கெடுத்த பின்…
கவிதைகள் படிக்கிறேன்…
பெண் : தோழிகளை தவிர்கிறேன்…
உன்னை தேடி வருகிறேன்…
ஆண் : தாய் தந்தை இருந்தும் ஏன்…
தனிமையில் தவிக்கிறேன்…
சொந்தமாய் நீ வா பிழைக்கிறேன்…
பெண் : எந்தன் வீட்டு சொந்தம் என்று…
நேற்று வரை நினைத்தவள்…
உன் வீட்டில் குடி வர நினைக்கிறேன்…
ஆண் : உன்னை காதலித்த கணமே…
உனக்குள் வந்தேன்…
பெண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ…
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே…
—BGM—
ஆண் : கனவிலே நீயும் வந்தால்…
புகைப்படம் எடுக்கிறேன்…
பெண் : கனவுகள் இங்கு இல்லை…
கண் விழித்து நினைக்கிறேன்…
ஆண் : பெண்ணே நானோ உன்னை என்றும்…
மறப்பது இல்லையடி…
மறந்தால்தானே நினைத்திட…
பெண் : அன்பே நானோ இருக்கையில்…
உந்தன் சுவாசம் தீண்டட்டும்…
உடனே நானும் பிறந்திட…
ஆண் : உண்மை காதல்…
சாதல் இல்லையடி…
ஆண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ…
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே…
பெண் : நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ…
காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே…
ஆண் : உன் உயிர் வந்து…
எந்தன் உயிர் தொட்டது…
என் உலகமே உன்னால்…
மாறிவிட்டது…
பெண் : கண்ணே சொல் இதுதான்…
காதல் என்பதா…
—BGM—
Notes : Kannukkul Yetho Song Lyrics in Tamil. This Song from Thiruvilaiyaadal Aarambam (2006). Song Lyrics penned by Na. Muthukumar. கண்ணுக்குள் ஏதோ பாடல் வரிகள்.