பெண் : ஓ தண்ணியில மூழ்கி கண்ணீர சேர்த்து… கையை இரண்டும் ஏந்தி நின்னேன்… ஒலி இல்லாம போன புல்லாங்குழலுல… தொல்லையா மாறி நின்னேன்…
பெண் : திசையும் இழந்தேனே… திசையில சுழன்றேனே… அசையும் என் உசுரும் எனதில்லையே…
—BGM—
Notes : Dhesayum Ezhandheney Song Lyrics in Tamil. This Song from Jigarthanda (2014). Song Lyrics penned by Pradeep Kumar. திசையும் இழந்தேனே பாடல் வரிகள்.
ஆண் : நான் என்பது யாரோ பெருந்திரளினிலே ஏடே… நான் என்பதை வீசி எழுந்தேனே மனமே… தான் என்பது போகும் பெருங்கணத்தினிலே கூவி… வாவென்றொரு வாழ்க்கை சிறுகுரலாய் அருளாய்ப் பேச…
ஆண் : ஆழ் என்பது மெய்ஞான போதம்… இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும்… போல் என்பது பகட்டு வாதமே… இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும்…
ஆண் : நாள் என்பதும் பொய்யான காலம்… இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும்… கேள் என்குதே தெளிந்த ஞானமே… கேட்க கேட்க ஓசை மீறிக் கேட்கிறதே…
—BGM—
ஆண் : ஆறறிவென்றே அலட்டாமல் எளிதாய் நானும்… ஓர்உயிர் என்றே இருப்பேனே… குழம்பாமல் யார் உடைத்தாலும்… சிரிக்கின்ற பொம்மைப் போலே… நான் என் இயல்பில் இருப்பேன்…
ஆண் : ஓடும் நதியின் மேலே… உட்காரும் தட்டான் போலே… லேசாக அமர்ந்தே பறப்பேனே…
ஆண் : புவிமேலே தாய் தூங்கும் அழகைப் பார்த்து… தான் தூங்கும் மழலைப் போலே… பேரன்பைப் போலி செய்வேனே நிறுத்தாமல்…
ஆண் : பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன்… இப்போது இப்போது இப்போது கண்ணாக… பேருண்மையில் கலந்துபோகிறேன்… இப்போது இப்போது இப்போது ஒன்றாக…
ஆண் : பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன்… இப்போது இப்போது இப்போது நன்றாக… பேராற்றலில் கரைந்துபோகிறேன்… பூத பேத வாத மோகம் மறைகிறதே…
—BGM—
ஆண் : நான் எனக்குள்ளே அசைந்தேனே ஊஞ்சல் போலே… யார் எனை அசைத்தே ரசித்தாரோ… சலிக்காமல் பேரலை மேலே விளையாடும் காகம் போலே… யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்…
ஆண் : பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா… ஓர் கனவின் வழியில் அதே நிலா…
ஆண் : பால் சிரிப்பால் ஒளி பூ தெளித்தாள்… தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே… மேகம் கூடும் நேரம் பூ மழையே…
ஆண் : என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே… உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே… என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே… உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே…
—BGM—
ஆண் : வான்வெளி மீதே வெண்மதி தோன்றும்… ஆண்வெளி மேலே அவள் உதித்தாளே…
ஆண் : வெண் சிரகேற்றாள்… என் விரல் கோர்த்தாள்… கண்களை மறைத்தே கனவுக்குள் இழுத்தாள்…
ஆண் : ஆஹா ஹா… காலம் நேரம் மீறும் ஓர் நிலையே… தேகம் தோறும் தூவும் பூ மழையே…
ஆண் : பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா… ஓர் கனவின் வழியில் அதே நிலா…
ஆண் : பால் சிரிப்பால் ஒளி பூ தெளித்தாள்… தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே… மேகம் கூடும் நேரம் பூ மழையே…
ஆண் : என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே… உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே… என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே… உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே…
ஆண் : பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா… ஓர் கனவின் வழியில் அதே நிலா…
Notes : Poo Avizhum Pozhudhil Song Lyrics in Tamil. This Song from Enakkul Oruvan (2015). Song Lyrics penned by Vivek. பூ அவிழும் பொழுதில் பாடல் வரிகள்.
ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே… சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே… செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே… சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே…
ஆண் : உயிர் வேதனை தரும் வார்த்தையை… உறவே நீ பேசுவதோ… குயில் வீட்டையே குடை சாய்த்திட… புயல் காற்று வீசுவதோ…
ஆண் : விதியின் ஆட்டம் ஓயாதே… எதுவும் விளையாட்டே வாடாதே…
ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே… சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே…
—BGM—
ஆண் : அன்னை மடி மீது தூங்கையிலே… தொல்லைகளும் ஏதடா… ஆ… தந்தை நம்மை தாங்கும் வேளையிலே… கைகளிலே வானடா…
ஆண் : தெரு மண்ணோடு நாம் நடந்தாலுமே… அழுக்கில்லாமலே இருந்தோமடா… நிலை கண்ணாடியில் சிறு கீறல் போல்… பல துண்டாயின்று உடைந்தோமடா…
ஆண் : வயதாகும் போது நாமே… வழி மாறி போகிறோமே…
ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே… சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே…
—BGM—
ஆண் : மொட்டு விடும் பூவை காட்டுவது… எப்பொழுதும் வாசமே… உள்ளவரை வாழ தேவை எது… உண்மையிலே பாசமே…
ஆண் : எதை சொன்னாலுமே தவறாகவே… பொருள் கொள்வோரிடம் நலம் ஏதடா… உறவில்லாமலே ஒரு ஜீவனும்… உயிர் வாழாதென உணர்வோமடா…
ஆண் : வயலோடு வாழ நாமே… வரப்பாக மாறுவோமே…
ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே… சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே…
Notes : Sengathire Song Lyrics in Tamil. This Song from Kadaikutty Singam (2018). Song Lyrics penned by Yugabharathi. செங்கதிரே பாடல் வரிகள்.