Tag Archives: கார்த்திக் நேத்தா

யாரும் காணாத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேத்தாகபில் கபிலன் & கீர்த்தனா வைத்தியநாதன்கோவிந்த் வசந்தாFight Club

Yaarum Kaanadha Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரும் காணாத விண்மீனே…
மனம் காணும் பூந்தருணம்…
சந்தம் சிந்தும் சாரல் போலே…
விழும் கண்ணே உன் மெளனம்…

ஆண் : யாரும் கேட்காத ஓசைகளால்…
மீட்டும் உன் பார்வையே…
யாரும் பேசாத வார்த்தைகளால்…
பேசும் உன் காதலே…

ஆண் : யாரும் காணாத கண்ணீரே…
உனை தாங்கும் என் நெஞ்சம்…
போதை இனிமேல் தீராதே…
காதல்…

ஆண் & பெண் : பெருந்துணையென வருதே…

பெண் : ஊழை கடலாய் வேண்டாமே…

ஆண் & பெண் : பேதை நானாகும் யோகம் இனி…
தேனில் நடனம் என் உயிரில் ஆடும் தருணம்…
மெய்யே தீரா தாளம்…

பெண் : யாரும் கேட்காத ஓசைகளால்…
மீட்டும் உன் பார்வையே…

ஆண் : யாரும் பேசாத வார்த்தைகளால்…
பேசும் உன் காதலே…

பெண் : யாரும் காணாத விண்மீனே…

BGM

பெண் : நேற்றே இனியும் வாராதே…
காதல் முடிவிலி என வருதே…

ஆண் : யாரும் துணையாய் வேண்டாமே…
காதல் தாலாட்டும் தாயின் மடி…

ஆண் & பெண் : தேடல் விரதம்…
உன் விழியின் காம்பில் கருகும்…
நீயே வாழ்வின் தூரம்…

ஆண் & பெண் : யாரும் கேட்காத ஓசைகளால்…
மீட்டும் உன் பார்வையே…

ஆண் & பெண் : யாரும் பேசாத வார்த்தைகளால்…
பேசும் உன் காதலே…

ஆண் : யாரும் காணாத விண்மீனே…


Notes : Yaarum Kaanadha Song Lyrics in Tamil. This Song from Fight Club (2023). Song Lyrics penned by Karthik Netha. யாரும் காணாத பாடல் வரிகள்.


தாமிரபரணியில் நீந்தி வந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேத்தாசி. சத்யாசி. சத்யாநெடுஞ்சாலை

Thamirabarani Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாமிரபரணியில் நீந்தி வந்த…
என் ஆலம் பூவிலையே…
ஆயிரம் கனவ நீ வெதச்சுப்புட்டு…
கை வீசி போறவளே…

ஆண் : கரட்டு காட்டுக்குள்ள மொளச்ச நெல்ல போல…
மொரட்டு நெஞ்சுக்குள்ள முட்டி வந்து மொளச்ச…
எதுக்கு குத்த வச்ச மனச பத்த வச்ச…
கொசுவம் போல என்ன பின்ன வச்சு முடியடியே…
பெருகான்முடியே அடியே உருவாஞ்சுருக்கே…

BGM

ஆண் : பத்துப் பனிரெண்டு மணி வர நானும்…
கண்டபடி திரிஞ்சேன்…
பொட்டப்புள்ள இவ பாத்துட்டு போனா…
பொட்டிக்குள்ள அடஞ்சேன்…

BGM

ஆண் : ஒத்தத் துணி மட்டும் பொழுதுக்கும் உடுத்தி…
இஷ்டத்துக்கு கெடந்தேன்…
பொட்டுக்கன்னி இவ சிரிச்சிட்டு போனா…
எட்டு மொற குளிச்சேன்…

ஆண் : மருதானி எல போல என் மனச நசுக்குறே…
அருக்கானி அழகாதான் என் உசுர குடிக்குறே…
ராட்டின தூரிய போல என்ன அடி ஏண்டி உருளவிட்ட…

ஆண் : பொள்ளாச்சி சூட்டு தச்சி கண்காச்சி பாக்கையில…
அன்னாசி பழம் போல என்ன வெட்டி தின்ன அடி…

ஆண் : அடியே கொடுவா நுனியே…
அடியே கருவா ஒளியே…

BGM

ஆண் : சல்லிப் பய இவன் மனசுல நீதான்…
மல்லிச் செடிய வச்ச…
ஓட்டக் காசு என்ன உருப்படியாக்கி…
நெஞ்சுக் குழியில் வச்ச…

ஆண் : அடிப் போடி ஒன்ன பாத்தா ஒரு கிறுக்கு புடிக்குதே…
தல மேல ஒரு மேகம் அட தமுக்கு அடிக்குதே…
கோழிய போல என் உறக்கத்த நீ அட வெரச முழுங்குறியே…

ஆண் : வித்தாரக் கள்ளி ஒன்ன கொத்தாக அள்ளி வந்து…
பொத்தான போட்டுச் சின்ன நெஞ்சுக்குள்ள பூட்ட வரவா…
தனியே தனியே… அருவா மினுங்கும் விழியே…

BGM


Notes : Thamirabarani Song Lyrics in Tamil. This Song from Nedunchalai (2014). Song Lyrics penned by Karthik Netha. தாமிரபரணியில் நீந்தி வந்த பாடல் வரிகள்.


சீமைக்காரியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேத்தாசஞ்சித் ஹெக்டேலியோன் ஜேம்ஸ்சபா நாயகன்

Seemakaariye Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னவொரு பார்வையம்மாடி…
என்னவொரு ஜாடையம்மாடி…
என்னவொரு ஆடையம்மாடி…

ஆண் : என்னவொரு மாயக்கண்ணாடி…
வந்து நின்னு நானும் முன்னாடி…
துள்ளி வரும் ஆடும் தள்ளாடி…

ஆண் : விரல் அசைவே எனை ஏதோ செய்தாய்…
ஒளி கசிவே ஒருவித மாயம் செய்தாய்…
தலை முடியால் அடி தூண்டில் இட்டாய்…
விரும்பி அழகாய் சிறு மீனாக மாற்றினேன்…

BGM

ஆண் : யே… சீமைக்காரியே மாயமாகியே…
ஏனோ வானாகி வேலாகி பார்த்தாய்…
சீமைக்காரியே ஆலங்கட்டியே…
நீதான் உள்ளூரில் வீழ்ந்திடும் மழையா பனியா…

ஆண் : என்னவொரு பார்வையம்மாடி…
என்னவொரு ஜாடையம்மாடி…
என்னவொரு ஆடையம்மாடி…

BGM

ஆண் : தூங்கா ஆந்தை அடி நான் கொண்ட வாழ்க்கை…
உன் நினைவாலே வீழ்ந்து கிடக்கும் ஏனோ ஏனோ…
தூங்கா ஆந்தை அடி நான் கொண்ட வாழ்க்கை…
உன் நினைவாலே வீழ்ந்து கிடக்கும் ஏனோ ஏனோ…

ஆண் : வாவீர்ப்பின் வாசம்…
அது தானாக வீசும்…
என் புலன் ஐந்தும் வளளல்கள் ஆகும் ஏனோ ஏனோ…

ஆண் : நீ ஆகாயம் காணத பஞ்ச வர்ண மேகம்…
நீ பூலோகம் கேட்காத ராக தாளம்…
நீ யாரோடும் பேசாத தூர தேசம் மெளனம்…
நீ ஜல் ஜல் ஊஞ்சல்…

ஆண் : யே… சீமைக்காரியே மாயமாகியே…
ஏனோ வானாகி வேலாகி பார்த்தாய்…
சீமைக்காரியே ஆலங்கட்டியே…
நீதான் உள்ளூரில் வீழ்ந்திடும் மழையா பனியா…

BGM

ஆண் : என்னவொரு பார்வையம்மாடி…
என்னவொரு ஜாடையம்மாடி…
என்னவொரு ஆடையம்மாடி…

ஆண் : என்னவொரு மாயக்கண்ணாடி…
வந்து நின்னு நானும் முன்னாடி…
துள்ளி வரும் ஆடும் தள்ளாடி…


Notes : Seemakaariye Song Lyrics in Tamil. This Song from Saba Nayagan (2023). Song Lyrics penned by Karthik Netha. சீமைக்காரியே பாடல் வரிகள்.


போறானே போறானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேத்தாரஞ்சித் & நேஹா பாசின்ஜிப்ரான்வாகை சூட வா

Poraney Poraney Song Lyrics in Tamil


பெண் : போறானே போறானே…

BGM

பெண் : போறானே போறானே காத்தோட தூத்தலப்போல…
போறானே போறானே போவாமத்தான் போறானே…
போறானே போறானே காத்தோட தூத்தலப்போல…
போறானே போறானே போவாமத்தான் போறானே…

பெண் : அழகாய் நீ நிறைஞ்ச…
அடடா பொந்துக்குள் புவியல் போல…

ஆண் : போறாளே போறாளே காத்தோட தூத்தலப்போல…
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே…
போறாளே போறாளே காத்தோட தூத்தலப்போல…
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே…

BGM

பெண் : பருவம் தொடங்கி ஆச வச்சேன்…
இல்லாத சாமிக்கும் பூச வச்சேன்…

ஆண் : மழையில் நனைஞ்ச காத்த போல…
மனச நீயும் நனைச்சுப்புட்ட…

பெண் : ஈரக்கொலைய கொஞ்சம் இரவல் தாயா…
உன்ன மனச கொஞ்சம் புனைய வாயா…
ஏற இறங்க பார்க்கும் ரோசக்காரா…
டீதூளு வாசம் கொண்ட மோசக்காரா…

ஆண் : அட நெல்லாங்குருவி ஒன்னு மனச மனச…
சிறு கன்னங்குழியிலே பாத்துகிருச்சே…
சின்ன சின்ன கொறத்தி பொன்னு…
கண்ணு முழியத்தான் ஈச்சங்காய ஆஞ்சிருச்சே…

பெண் : போறானே போறானே காத்தோட தூத்தலப்போல…
போறானே போறானே போவாமத்தான் போறானே…
போறானே போறானே காத்தோட தூத்தலப்போல…
போறானே போறானே போவாமத்தான் போறானே…

BGM

ஆண் : கிணத்து நிலவா நான் இருந்தேன்…
கல்ல எறிஞ்சு குழப்பிப்புட்ட…

பெண் : உன்ன பார்த்து பேசயில…
ரெண்டாம் முறையா குத்த வைச்சேன்…

ஆண் : மூக்கான கவுனப் போல உன் நினைப்பு…
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு…

பெண் : அடகாக்கும் கோழி போல என் தவிப்பு…
பொசுக்குன்னு பூத்திருக்கே என் பொழப்பு…

ஆண் : அடி மஞ்ச கிழங்கே உன்ன நினைச்சு நினைச்சு…
தினம் மனசுக்குள்ள வச்சி பூட்டிகிட்டேன்…
உன் பிஞ்சு விரல் பதிச்ச மண்ண எடுத்து…
நான் காயத்துக்கு பூசிக்கிட்டேன்…

ஆண் : போறாளே போறாளே…
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே…

பெண் : அழகாய் நீ நிறைஞ்ச…
அடடா பொந்துக்குள் புவியல் போல…

பெண் : போறானே போறானே காத்தோட தூத்தலப்போல…
போறானே போறானே போவாமத்தான் போறானே…
போறானே போறானே காத்தோட தூத்தலப்போல…
போறானே போறானே போவாமத்தான் போறானே…


Notes : Poraney Poraney Song Lyrics in Tamil. This Song from Vaagai Sooda Vaa (2011). Song Lyrics penned by Karthik Netha. போறானே போறானே பாடல் வரிகள்.


தி லைப் ஆஃப் ராம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேத்தாபிரதீப் குமார்கோவிந் வசந்தா96

The Life of Ram Song Lyrics in Tamil


BGM

ஆண் : கரை வந்த பிறகே பிடிக்குது கடலை…
நரை வந்த பிறகே புரியுது உலகை…

ஆண் : நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே…
இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே…
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே…
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே…

ஆண் : வாழா என் வாழ்வை வாழவே…
தாளாமல் மேலே போகிறேன்…
தீர உள் ஊற்றை தீண்டவே…
இன்றே இங்கே மீள்கிறேன்…
இங்கே இன்றே ஆள்கிறேன்…

BGM

ஆண் : ஹே… யாரோபோல் நான் என்னை பார்க்கிறேன்…
ஏதும் இல்லாமலே இயல்பாய் சுடர் போல் தெளிவாய்…
நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்…
கண்ணாடியாய் பிறந்தே காண்கின்ற எல்லாமும்…
நான் ஆகிறேன்…

ஆண் : இரு காலின் இடையிலே உரசும் பூனையாய்…
வாழ்க்கை போதும் அடடா…
எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகா…

ஆண் : நானே நானாய் இருப்பேன்…
நாளில் பூராய் வசிப்பேன்…
போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறைக்கிறேன்…
வாகாய் வாகாய் வாழ்கிறேன்…
பாகாய் பாகாய் ஆகிறேன்…

BGM

ஆண் : தோ… காற்றோடு வல்லூருதான் போகுதே…
பாதை இல்லாமலே அழகாய் நிகழே அதுவாய்…
நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே…
ஓசை எல்லாம் துறந்தே காண்கின்ற காட்சிக்குள்…
நான் மூழ்கினேன்…

ஆண் : திமிலேரி காளை மேல் தூங்கும் காகமாய்…
பூமி மீது இருப்பேன்…
புவி போகும் போக்கில் கை கோர்த்து…
நானும் நடப்பேன்…

ஆண் : ஏதோ ஏகம் எழுதே…
ஆஹா… ஆழம் தருதே…
தாய் போல் வாழும் கணமே…
ஆரோ பாடுதே…
ஆரோ ஆரிராரிரோ…
ஆரோ ஆரிராரிரோ…

ஆண் : கரை வந்த பிறகே பிடிக்குது கடலை…
நரை வந்த பிறகே புரியுது உலகை…

ஆண் : நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே…
இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே…
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே…
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே…

{ ஆண் : தானே தானே னானே னே…
தானே தானே னானே னே…
தானே தானே னானே னே…
தானே தானே னானே னே… } * (2)
தானே… ஆஆ…


Notes : The Life of Ram Song Lyrics in Tamil. This Song from 96 (2018). Song Lyrics penned by Karthik Netha. தி லைப் ஆஃப் ராம் பாடல் வரிகள்.


athana-per-mathiyila-song-lyrics-in-tamil

அத்தன பேர் மத்தியில

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேத்தாயாசின் நிசார், வந்தனா ஸ்ரீனிவாசன்ஜஸ்டின் பிரபாகரன்இராவண கோட்டம்

Athana Per Mathiyila Song Lyrics in Tamil


பெண் : அத்தன பேர் மத்தியில…
பொத்துகிட்ட முத்தம் பட்டு…
குத்த வச்ச பொண்ணு ஒண்ணு உச்சி பூத்துருச்சே…

பெண் : கத்தும் மாடு கத்தயிலே…
மத்து சத்தம் மத்தியிலே…
ஒத்த முத்தம் உள்ள வந்து குட்டி போட்டுறிச்சே…

பெண் : கனக்கா சிரிக்கிறேன்…
எதுக்கோ ரசிக்கிறேன்…
ஊத்தான ஊத்துல ஒயிலா நனஞ்சேன்…

பெண் : புதுசா பிறக்குறேன்…
படுத்தே பறக்குறேன்…
கண்ணாடிய கிள்ளி கிள்ளி கிறுக்கா முழிக்குறேன்…

ஆண் : அப்ப பாத்தது உன்ன…
கட்ட தாவணி புள்ள…
இப்ப பாக்குறேன் கண்ண…
ஏறுது ஏறுது பித்தம்…

ஆண் : கட்டிப்போடுது கண்ணு…
முட்டி போடுவது நெஞ்சு…
ஆச்சு வருஷங்கள் அஞ்சு…
சீறுது சீறுது நெஞ்சு…

ஆண் : எதையோ எதையோ செஞ்ச…
உள்ள ஆங்குது ஊங்குது…
இன்னும் தாங்குது தாங்குது நெஞ்சம்…

ஆண் : ஒருவாய் நெருப்ப ஓட்டிட்ட…
உள்ள தக தக தக…
தகக்குது சிலுக்குது…

ஆண் : வெகுநாள் வெறியே…
வெரசா அனையே…
கடவா உலகம் தொறந்துருச்சே…

ஆண் : பல நாள் திருடி…
உதட்ட திறடி…
என நான் தொலைச்சேன் எடுத்துக்கறேன்…

ஆண் : உதட்டான் குளத்துல…
பெரட்ட பிடிக்குறா…
சுழட்டி துவைக்குறா…
தலுக் மலுக் மலுக் மலுக்…

ஆண் : வறட்டி மனசுல…
மழையா விழுகுறா…
கலையா புழியுறா…
தாவணி காட்டுல வெள்ளம்…

பெண் : அத்தன பேர் மத்தியில…
பொத்துகிட்ட முத்தம் பட்டு…
குத்த வச்ச பொண்ணு ஒண்ணு உச்சி பூத்துருச்சே…

BGM

பெண் : ஊரணி தண்ணியில…

ஆண் : மீனு ரெண்டு…

பெண் : மாலைய மாத்திக்குச்சு…

ஆண் : கிட்ட நின்னு…

பெண் : ஆசையா பெத்துகிட்டு…
சுத்தி சுத்தி வருது…

ஆண் : சேதிய கூறடி கூறடி…
காட்டுக்குள்ள தும்பி ரெண்டு…

பெண் : பின்னிகிட்டு…

ஆண் : வானம் ஒண்ணு கட்டிகிச்சு…

பெண் : பேச்சிகிட்டு…

ஆண் : ஊரு கண்ணா ஏச்சிப்புட்டு…
முத்தி முத்தி விழுதே…

பெண் : பாதைய மூடிடு மூடிடு…

ஆண் : தொலைவா நானும் கிடந்தேன்…
சிறு தவக்கள தீண்டாத…
விண்மீன போல…

ஆண் : உனக்குள் இப்போ கரஞ்சேன்…
ஆடி உதிரத்தில் ஓடும்…
தாய்ப்பாலின் ஈரம் போல…

ஆண் : அழகா அதட்டுறா…
மெதுவா வெறட்டுறா…
நிலவ பொறட்டுறா…
திடுக் திடுக் திடுக்குன்னு…

ஆண் : வெயிலா தொரத்துறறா…
வெறப்பா ரசிக்குறா…
இனிப்பா இனிக்குறா…
கலுக் கலுக் கலுக் கலுக்…

ஆண் : அத்தன பேர் மத்தியில…
பொத்துகிட்ட முத்தம் பட்டு…
குத்த வெச்சா பொண்ணு ஒண்ணு உச்சி பூத்துருச்சே…

பெண் : கத்தும் மாடு கத்தயிலே…
மத்து சத்தம் மதியிலே…
ஒத்த முத்தம் உள்ள வந்து குட்டி போட்டுறிச்சே…

BGM

ஆண் : நாக்குல சொட்டுது…

பெண் : மௌனம் ஒன்னு…

ஆண் : பார்வையும் நிக்குது…

பெண் : வேணுமின்னு…

ஆண் : ஆசையும் முத்தத்துல…
பொத்தி வச்சு தார…

பெண் : வாங்கிடு வாங்கிடு வந்து…
வீட்டுக்குள்ள சுத்துது…

ஆண் : வெளிச்சம் ஒன்னு…

பெண் : வாசலில கத்துது…

ஆண் : மனசு நின்னு…

பெண் : ஊரு கண்ண பூட்டிப்புட்டு…
ரெண்டும் ரெக்கையில…

ஆண் : தாண்டுது தாண்டுது சென்று…

ஆண் : கொடுவா மேல பனியா…
இவ திடுக்குனு பாக்குற பார்வையே போதும்…
உனக்காக நானும் இறப்பேன்…
அடி புதைக்குற நேரம் முடியாத முத்தம்தாடி…

ஆண் : கதவோ திறக்குதே…
திறந்து…
மனசோ பறக்குதே…
பறந்து…
முழுசா பிறக்குதே…

ஆண் & பெண் : அதுவா நடக்குதே…
நடக்க எதுவோ இயக்குதே…
இயக்க பொதுவா நிலைக்குதே…

ஆண் & பெண் : காதலும் சாமியும் ஒன்னு…


Notes : Athana Per Mathiyila Song Lyrics in Tamil. This Song from Raavana Kottam (2023). Song Lyrics penned by Karthik Netha. அத்தன பேர் மத்தியில பாடல் வரிகள்.


யாத்ரி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேத்தாரவி. ஜிகோவிந்த் வசந்தாகார்கி

Yaathri Song Lyrics in Tamil


BGM

ஆண் : மீனுக்கு நீந்த கற்று தரும் நீர்…
இறகிற்கு பறக்க கற்று தரும் காற்று…
மனிதர்க்கு வாழ கற்று தரும் வலி…
அணங்கே மாதே யாத்ரி யாத்ரி…

ஆண் : இருளில் மருளில் உழன்று…
தெருளைய் அருளைய் அடைவாய்…
யாத்ரி யாத்ரி யாத்ரி…

BGM

ஆண் : எத்தனை இடர்…
எத்தனை துயர்…
எத்தனை வலி…
எத்தனை பழி…
எத்தனை கயமை…
எத்தனை மடமை…
எத்தனை அகந்தை…
அத்தனை அத்தனை…
அளந்து கடந்து கடந்து போ…
யாத்ரி யாத்ரி யாத்ரி…

ஆண் : எத்தனை இடர்…
எத்தனை துயர்…
எத்தனை வலி…
எத்தனை பழி…
எத்தனை கயமை…
எத்தனை மடமை…
எத்தனை அகந்தை…
அத்தனை அத்தனை…
அளந்து கடந்து கடந்து போ…
யாத்ரி யாத்ரி யாத்ரி…

BGM


Notes : Yaathri Song Lyrics in Tamil. This Song from Gargi (2022). Song Lyrics penned by Karthik Netha. யாத்ரி பாடல் வரிகள்.


காதலே காதலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேத்தாசின்மயி & கோவிந் வசந்தாகோவிந் வசந்தா96

Kaathalae Kaathalae Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆஆ… கொஞ்சும் பூரணமே வா…
நீ… கொஞ்சும் எழிலிசையே…
பஞ்சவர்ண பூதம்…
நெஞ்சம் நிறையுதே…
காண்பதெல்லாம் காதலடி…

BGM

ஆண் & பெண் : காதலே காதலே தனி பெருந்துணையே…
கூட வா கூட வா போதும் போதும்…

ஆண் & பெண் : காதலே காதலே வாழ்வின் நீளம்…
போகலாம் போக வா…

பெண் : நீ… நீ… நீ…

BGM


Notes : Kaathalae Kaathalae Song Lyrics in Tamil. This Song from 96 (2018). Song Lyrics penned by Karthik Netha. காதலே காதலே பாடல் வரிகள்.


இதுவும் கடந்து போகும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேத்தாசித் ஶ்ரீராம் கிரிஷ் கோபாலகிருஷ்ணன்நெற்றிக்கண்

Idhuvum Kadandhu Pogum Song Lyrics in Tamil


—BGM—

குழு (ஆண்கள் & பெண்கள்) : இதுவும் கடந்து போகும்…
இதுவும் கடந்து போகும்…

ஆண் : சூடரி… இருளில் ஏங்காதே…
வெளிதான் கதவை மூடாதே…
அட ஆறு காலங்களும் மாறி மாறி வரும்…
இயற்கையின் விதி இதுவே…

ஆண் : அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை…
அனுபவம் கொடுத்திடுமே…
மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன…
அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன…

ஆண் : சூடரி… சூடரி… உடைந்து போகாதே…
உடனே வலிகள் மறைந்து போகாதே…
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே…
அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே…

ஆண் : இதுவும் கடந்து போகும்…
இதுவும் கடந்து போகும்…

—BGM—

குழு (ஆண்கள் & பெண்கள்) : இதுவும் கடந்து போகும்…
இதுவும் கடந்து போகும்…
இதுவும் கடந்து போகும்…
எதுவும் கடந்து போகும்…

ஆண் : அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்…
மனந்தான் ஒரு குழந்தையே…
அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்…
அதுபோல் இந்த கவலையே…

ஆண் : நாள்தோறும் ஏதோ மாறுதல்…
வானும் மண்ணும் வாழும் ஆறுதல்…
பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்…

ஆண் : மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன…
அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன…

ஆண் : சூடரி… சூடரி… உடைந்து போகாதே…
உடனே வலிகள் மறைந்து போகாதே…
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே…
அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே…

ஆண் : இதுவும் கடந்து போகும்…
இதுவும் கடந்து போகும்…

—BGM—

ஆண் : அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே…
குழந்தை நடை பழகுதே…
மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே…
பறவை திசை அமைக்குதே…

ஆண் : வாசம்தான் பூவின் பார்வைகள்…
காற்றில் ஏறி காணும் காட்சிகள்…
காணாமல் வெளியாக பார்த்திடுமே…

ஆண் : சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே…
பெரும் காற்றாக மாறிச்சென்று உறவாடுமே…

ஆண் : சூடரி… சூடரி… வெளிச்சம் தீராதே…
அதை நீ உணர்ந்தால் பயணம் தீராதே…
அழகே… சூடரி… அட ஏங்காதே…
மலரின் நினைவில் மணம் வாடாதே…

ஆண் : இதுவும் கடந்து போகும்…
இதுவும் கடந்து போகும்…
இதுவும் கடந்து போகும்…
இதுவும் கடந்து போகும்…
கடந்து போகும்…
கடந்து போகும்…


Notes : Idhuvum Kadandhu Pogum Song Lyrics in Tamil. This Song from Netrikann (2021). Song Lyrics penned by Karthik Netha. இதுவும் கடந்து போகும் பாடல் வரிகள்.


அண்ணாத்த சேதி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேத்தாஅறிவுகோவிந்த் வசந்தாதுக்ளக் தர்பார்

Annathe Sethi Song Lyrics in Tamil


ஆண் (வசனம்) : எங்கையோ இருந்து வந்த ஒருத்தன்…
நம்பள ஏமாத்தி நம்ம இடத்த புடிச்சி…
நம்ம தலை மேல ஏறி உக்கார வரைக்கும்…
எல்லாமே தன்னால சரியாவும் நெனச்சி…
நம்ப சும்மாவே இருந்துருக்கோம்…
துரு புடிச்சிரும்…

ஆண் (வசனம்) : நம்பளோட உரிமைகிறது…
இன்னொருத்தன்கிட்ட கேட்டு வாங்குற…
பிச்சை கிடையாது…
அது நம்பளோட இயல்பு…
நம்பளோட உரிமைய தடுக்கணும் நினச்சா…
தடுக்குறவன் மூஞ்சிய விட்டுட்டு…
அவன் மூளைய அடிச்சி ஒடைக்கணும்…
அப்போதான் அடுத்து வரவனுக்கும்…
அப்பிடி யோசிக்கணும்னு எண்ணமே வராது…
எப்பவுமே மெயின் சுவிட்ச்தான் மஸ்ட்டு…

—BGM—

ஆண் : வா ஒரு வழி வந்தது…
சூரிய விதைகளை பயிரிடுவோம்…
கடுங் காட்டுல மேட்டுல…
வெளிச்சத்த மச்சான் விரித்திடுவோம்…

ஆண் : அட வேலிய மீறி…
பிழம்பா நின்னுட்டோம்…
மள மள மளவென…
அடிமைகள் கண்ணை முழிச்சிட்டோம்…

ஆண் : அட கோட்டையில் ஏறிட…
வேட்டைகள் யாவும் தொடங்கிட்டோம்…
எளச்சவன் ஒழச்சவன் எழணும்…
ஒதச்சவன் முதுகுல தரனும்…

ஆண் : இரு கண்ணுல துடிக்குது பொறி பொறி…
ஒரு கையில யானைய முறி முறி…
எவன் தந்தது தீமைய…
அவன் அரசியல் மூளைய கிழி கிழித்திடு…
மர மண்டைய அறிவில பிளந்திட…
அவன் தொண்டைய உரிமைகள் திறந்திட…
உரப்படுவோம் மறப்படுவோம்…
தலைமுறை எல்லாம் கொண்டாட புறப்படுவோம்…

குழு (ஆண்கள்) : சேரி மாறி போகட்டும்…
இந்த செய்தி நிலை ஆகட்டும்…
மேல கீழ தீரட்டும்…
நம்ம பூமி புதிதாகட்டும்…

குழு (ஆண்கள்) : சேரி மாறி போகட்டும்…
இந்த செய்தி நிலை ஆகட்டும்…
மேல கீழ தீரட்டும்…
நம்ம பூமி புதிதாகட்டும்…

—BGM—

ஆண் : பங்காளி யார் சொன்னது…
கடன் வாங்கி உயிர் வாழ்ந்துவிட…
தினம் தூங்கிவிட…
அச்சம் கூச்சம் வெட்கம் கொண்டு…
உயிர் வாழ்க என்று…

ஆண் : யார் தந்தது எவன் தந்தது…
நடு வீட்டிலே குடி வந்தது…
சிரம் தாழ்த்தியே…
கிட கிட கிட அட அட என்று…

ஆண் : ஏமாந்தவன் மாறனும் மாறனும்…
அன்னாந்தவன் ஏறனும் ஏறனும்…
சுண்ணாம்புல வானவில் ஊத்தி…
அடி அடி அடி வண்ணங்கள் அள்ளும்…

ஆண் : விழி சேர்ந்திட விண்மீனும் சித்திக்கும்…
கரம் சேர்ந்திட கண்ணீரும் தித்திக்கும்…
குப்பனும் சுப்பனும் எக்கணும் எக்கனும்…
என்னான்னு கேட்க்கன்னும்…

குழு (ஆண்கள்) : ராமாயி கிருஷ்ணாயி ஏங்காத என் தாயி…
எல்லாமே உன்னை வந்து சேரும்…
புலி வேஷம் போட்டாலும் நாய் என்றும் உறுமாதே…
எதிர்த்தாலே எல்லாமே மாறும்…
சோமாறி பேமானி வார்த்தைகள் உருமாறி…
அண்ணாத்த வந்தாச்சி செய்தி…
அட கோமாளி ஏமாளி வேஷங்கள் தூளாகி…
ராஜாளி இடமாச்சி சேரி…
நீ பாதி நான் பாதி அதுதானே சம நீதி…
வாடா டே பங்காளி…

குழு (ஆண்கள்) : சேரி மாறி போகட்டும்…
இந்த செய்தி நிலை ஆகட்டும்…
மேல கீழ தீரட்டும்…
நம்ம பூமி புதிதாகட்டும்…

குழு (ஆண்கள்) : சேரி மாறி போகட்டும்…
இந்த செய்தி நிலை ஆகட்டும்…
மேல கீழ தீரட்டும்…
நம்ம பூமி புதிதாகட்டும்…

—BGM—


Notes : Annathe Sethi Song Lyrics in Tamil. This Song from Tughlaq Durbar (2021). Song Lyrics penned by Karthik Nehta. அண்ணாத்த சேதி பாடல் வரிகள்.