தாமிரபரணியில் நீந்தி வந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேத்தாசி. சத்யாசி. சத்யாநெடுஞ்சாலை

Thamirabarani Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாமிரபரணியில் நீந்தி வந்த…
என் ஆலம் பூவிலையே…
ஆயிரம் கனவ நீ வெதச்சுப்புட்டு…
கை வீசி போறவளே…

ஆண் : கரட்டு காட்டுக்குள்ள மொளச்ச நெல்ல போல…
மொரட்டு நெஞ்சுக்குள்ள முட்டி வந்து மொளச்ச…
எதுக்கு குத்த வச்ச மனச பத்த வச்ச…
கொசுவம் போல என்ன பின்ன வச்சு முடியடியே…
பெருகான்முடியே அடியே உருவாஞ்சுருக்கே…

BGM

ஆண் : பத்துப் பனிரெண்டு மணி வர நானும்…
கண்டபடி திரிஞ்சேன்…
பொட்டப்புள்ள இவ பாத்துட்டு போனா…
பொட்டிக்குள்ள அடஞ்சேன்…

BGM

ஆண் : ஒத்தத் துணி மட்டும் பொழுதுக்கும் உடுத்தி…
இஷ்டத்துக்கு கெடந்தேன்…
பொட்டுக்கன்னி இவ சிரிச்சிட்டு போனா…
எட்டு மொற குளிச்சேன்…

ஆண் : மருதானி எல போல என் மனச நசுக்குறே…
அருக்கானி அழகாதான் என் உசுர குடிக்குறே…
ராட்டின தூரிய போல என்ன அடி ஏண்டி உருளவிட்ட…

ஆண் : பொள்ளாச்சி சூட்டு தச்சி கண்காச்சி பாக்கையில…
அன்னாசி பழம் போல என்ன வெட்டி தின்ன அடி…

ஆண் : அடியே கொடுவா நுனியே…
அடியே கருவா ஒளியே…

BGM

ஆண் : சல்லிப் பய இவன் மனசுல நீதான்…
மல்லிச் செடிய வச்ச…
ஓட்டக் காசு என்ன உருப்படியாக்கி…
நெஞ்சுக் குழியில் வச்ச…

ஆண் : அடிப் போடி ஒன்ன பாத்தா ஒரு கிறுக்கு புடிக்குதே…
தல மேல ஒரு மேகம் அட தமுக்கு அடிக்குதே…
கோழிய போல என் உறக்கத்த நீ அட வெரச முழுங்குறியே…

ஆண் : வித்தாரக் கள்ளி ஒன்ன கொத்தாக அள்ளி வந்து…
பொத்தான போட்டுச் சின்ன நெஞ்சுக்குள்ள பூட்ட வரவா…
தனியே தனியே… அருவா மினுங்கும் விழியே…

BGM


Notes : Thamirabarani Song Lyrics in Tamil. This Song from Nedunchalai (2014). Song Lyrics penned by Karthik Netha. தாமிரபரணியில் நீந்தி வந்த பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top