நண்டூறுது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்பழனியம்மாள் & சின்னாசி. சத்யாநெடுஞ்சாலை

Nandooruthu Song Lyrics in Tamil


BGM

பெண் : நண்டூறுது நண்டூறுது…
நரியூறுது நரியூறுது…
என்னானது ஏனானது…
ஏன் ஒரு மாதிரி ஆகுது…

பெண் : காங்குது கதகதக்குது…
கனவோட தினம் குதிக்குது…
வர வர எனக்கு எனக்கு…
பருவக் கிறுக்கு புடிச்சிருக்குது…

பெண் : ஏலே ஏலே எங்கிருக்க…
இன்னுமாலே குந்திருக்க…
வாலே வாலே வம்பிழுக்க…
அதுக்குதானே வந்திருக்க…

பெண் : ராதா ராதா நான்தான் ராதா…
உனக்கே உனக்கா நான் பொறந்தேன்…
நாதா நாதா ஓ ரங்கநாதா…
காதல் பண்ணேன் கண் தொறந்தேன்…

BGM

பெண் : ஆங்குற ஊங்குற ஏங்குற என்னாங்குற…
வாங்குற போங்குற என்னாத்த நீ சொல்ல வர…
ஒவ்வொரு சொல்லது ஆயிரம் சொல்லுதடா…

பெண் : சேங்குற சோங்குற ச்சீங்குற சிணுங்குற…
தாங்குற தோங்குற எதுக்கு நீ தயங்குற…
சாமியே கொடுக்குது நீ அத அனுபவிடா…

ஆண் : மூடாத வீடு இது…
முந்தான காடு இது…
வாடானு கூப்பிடுது… ஓஓ…

ஆண் : வேரோடு வேகுனது…
எங்கேயோ ஏங்குனது…
இங்கேயே இருக்குதடா… ஓஓ…

பெண் : ஏலே ஏலே எங்கிருக்க…
இன்னுமாலே குந்திருக்க…
வாலே வாலே வம்பிழுக்க…
அதுக்கு தானே வந்திருக்க…

BGM

ஆண் : காத்துல காத்துல காத்துல காத்துல…

பெண் : காத்துல காத்துல வாசன பறக்குது…
ஏனத ஏனத பூக்களும் பரப்புது…
பூத்தத பூத்தத யாருக்கும் உணர்த்திடத்தான் தான் தான்…

பெண் : காத்தது காத்தது ஆடையில் மறச்சது…
தேவத கணக்குல அழகது இருக்குது…
அது அது எனக்கில்ல உனக்கது உனக்கதுதான்…

ஆண் : ஆடாத ஆட்டம் இது…
ஆடுகிற கூட்டம் இது…
அண்ணனையே சாச்சுபுட்டா… ஓஓ…

ஆண் : கூடாத கூட்டம் இது…
கூத்தாடும் நேரம் இது…
குண்டுகட்டா தூக்குங்கடா… ஓஓ…

BGM

பெண் : ராதா ராதா நான்தான் ராதா…
உனக்கே உனக்கா நான் பொறந்தேன்…
நாதா நாதா ஓ ரங்கநாதா…
காதல் பண்ணேன் கண் தொறந்தேன்…

BGM

ஆண் : ராதா ராதா நான்தான் ராதா…
உனக்கே உனக்கா நான் பொறந்தேன்…
நாதா நாதா ஓ ரங்கநாதா…
காதல் பண்ணு கண் தொறந்தேன்…


Notes : Nandooruthu Song Lyrics in Tamil. This Song from Nedunchalai (2014). Song Lyrics penned by Mani Amuthavan. நண்டூறுது பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top