பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | அருண்மொழி & கே.எஸ். சித்ரா | தேவா | பாரதி கண்ணம்மா |
Thendralukku Theriyuma Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சேத்து மட தொறக்க…
செவ்வாள மீன் துடிக்க…
தாவி குதிச்ச மீனு…
தாவணிக்குள் விழுந்துவிட…
ஆண் : பாம்பு புகுந்ததுன்னு…
பருவ பொண்ணு கூச்சலிட…
முறைமாமன் ஓடிவந்து…
முந்தானைக்குள் மீன் எடுக்க…
ஆண் : வாலமீன புடிக்க வந்து…
சேலை மீன புடிச்சதென்ன… ஓ…
—BGM—
ஆண் : தென்றலுக்கு தெரியுமா…
தெம்மாங்கு பாட்டு…
அது என்னான்னு கேட்டு…
ஒரு மெட்டு போட்டு காட்டு…
ஆண் : தென்றலுக்கு தெரியுமா…
தெம்மாங்கு பாட்டு…
அது என்னான்னு கேட்டு…
ஒரு மெட்டு போட்டு காட்டு…
பெண் : தென்றலுக்கு தெரியுமே…
தெம்மாங்கு பாட்டு…
அது பாசமெனும் பாட்டு…
அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு…
பெண் : தென்றலுக்கு தெரியுமே…
தெம்மாங்கு பாட்டு…
—BGM—
பெண் : உள்ளங்கையில் வந்து தேன் விழுந்தா…
அத உறிஞ்சி குடிப்பதில் தப்பிருக்கா…
வண்ண சிறுக்கொடி பூத்திருக்க…
வண்டு கண்ண மூடிக்கொண்டால் அர்த்தமுண்டா…
ஆண் : வானத்தில நிலா பூத்திருக்கு…
வண்டு தேனெடுக்க ஒரு தெம்பிருக்கா…
மாட்டுக்கொம்பில் வந்து பால் கறக்க…
மனம் ஆசப்பட்டா அதில் தோதிருக்கா…
பெண் : எறும்பு ஊற கல்லும் தேயும்…
இது தெரியாதா…
ஆண் : கல்ல விடவும் உள்ளம் உறுதி…
இது தெரியாதா…
பெண் : விடுகதை போட்டேன்…
ஒரு விடை தெரியாதா…
விடுகதை போட்டேன்…
ஒரு விடை தெரியாதா…
பெண் : அட ஏன்டா பேராண்டி…
அதை சொல்ல தெரியலையா…
நான் சொல்லி தாரேன் வாறியா…
—BGM—
பெண் : எண்ணையும் தண்ணியும்…
ஆண் : எண்ணையும் தண்ணியும்…
ஒண்ணா கலந்ததில்லே கலந்ததில்லே…
நெல்லை போல கோரையிருக்கும்…
விளைஞ்சதில்ல விளைஞ்சதில்ல…
பெண் : நட்டு வச்ச நாத்து பூமிய…
பிடிப்பதில்ல பிடிப்பதில்ல…
வேரு விட்ட பிறகு மண்ணை…
பிரிவதில்ல பிரிவதில்ல…
ஆண் : பாறையில் விதைச்ச விதை…
பலனுக்கு வருவதில்ல…
பெண் : பாறையிலும் செடி முளைக்கும்…
ஏன் அதை பாத்ததில்ல…
ஆண் : கல்லுல நார் உரிக்கும்…
கதை எங்கும் நடந்ததில்ல…
பெண் : கல்லுல செல செதுக்கும்…
கலை அது பொய்யும் இல்ல…
ஆண் : இது விடுகதையா இல்ல விதியா…
என் தலை சுத்தி போச்சு…
பெண் : உண்மை நிலை தெரியும்…
அது புரியும் இது மழுப்புற பேச்சு…
பெண் : அட ஏன்டா பேராண்டி…
அவ சொன்னது கேட்கலையா…
நான் சொல்லி தாரேன் வாறியா…
ஆண் : தென்றலுக்கு தெரியுமா…
தெம்மாங்கு பாட்டு…
அது என்னான்னு கேட்டு…
ஒரு மெட்டு போட்டு காட்டு…
பெண் : தென்றலுக்கு தெரியுமே…
தெம்மாங்கு பாட்டு…
அது பாசமெனும் பாட்டு…
அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு…
பெண் : தென்றலுக்கு தெரியுமே…
தெம்மாங்கு பாட்டு…
அது பாசமெனும் பாட்டு…
அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு…
பெண் : தென்றலுக்கு தெரியுமே…
தெம்மாங்கு பாட்டு…
Notes : Thendralukku Theriyuma Song Lyrics in Tamil. This Song from Bharathi Kannamma (1997). Song Lyrics penned by Vairamuthu. தென்றலுக்கு தெரியுமா பாடல் வரிகள்.