பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | அருண்மொழி & எஸ். ஜானகி | இளையராஜா | சிறையில் பூத்த சின்ன மலர் |
Vasa Karuveppilaiye Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வாசக் கருவேப்பில்லையே…
என் மாமன் பெத்த மல்லிகையே…
பெண் : வாசக் கருவேப்பில்லையே…
என் அத்தை பெத்த மன்னவனே…
ஆண் : ஊதக்குளிரு காத்து…
அது ஊசி குத்துற போது…
உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு…
பெண் : ஊதக்குளிரு காத்து…
அது ஊசி குத்துற போது…
உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு…
ஆண் : வாசக் கருவேப்பில்லையே…
என் மாமன் பெத்த மல்லிகையே…
—BGM—
ஆண் : நிலவு சேலை கட்டி நடக்குது பொண்ணா…
உலக அதிசயத்தில் இப்படி ஒண்ணா…
பெண் : நடந்தா தென்மதுரை பாண்டியன் போல…
நழுவுது பார்த்ததுமே இடுப்பில சேலை…
ஆண் : நன்றி கெட்ட சேலை…
அது வேணா விட்டுருடி…
கண்ணே உந்தன் சேலை…
இனி நான்தான் கட்டிக்கடி…
பெண் : எட்டி நில்லு சாமி…
நீ தொட்ட ஒட்டிகுவேன்…
தொட்டில் ஒன்னு போட…
ஒரு தோது பண்ணிக்குவேன்…
ஆண் : இப்போதே அம்மாவா நீ ஆனா…
என் பாடு என்னாகும் வாம்மா…
பெண் : வாசக் கருவேப்பில்லையே…
என் அத்தை பெத்த மன்னவனே…
—BGM—
ஆண் : ஒடம்போ தங்கத்தில வார்த்தது போல…
உதடும் முள்முருங்க பூத்தது போல…
பெண் : கருப்பு வைரத்தில செஞ்சது தேகம்…
கண்டதும் இளசுகெல்லாம் வந்திடும் மோகம்…
ஆண் : எந்த பொண்ணு கையும்…
என்னை இன்னும் தொட்டதில்ல…
இன்று மட்டும் கண்ணே…
நம்ம கற்பும் கெட்டதில்ல…
பெண் : கற்பு உள்ள ராசா…
நான் உன்ன மெச்சிக்குறேன்…
கட்டிகையா தாலி…
உன்ன நல்ல வச்சுகிறேன்…
ஆண் : கல்யாணம் கச்சேரி ஊர்கோலம்…
கையோடு கை சேர்த்து போவோம்…
பெண் : வாசக் கருவேப்பில்லையே…
என் அத்தை பெத்த மன்னவனே…
ஆண் : வாசக் கருவேப்பில்லையே…
என் மாமன் பெத்த மல்லிகையே…
பெண் : ஊதக்குளிரு காத்து…
அது ஊசி குத்துற போது…
உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு…
ஆண் : ஊதக்குளிரு காத்து…
அது ஊசி குத்துற போது…
உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு…
பெண் : வாசக் கருவேப்பில்லையே…
என் அத்தை பெத்த மன்னவனே…
Notes : Vasa Karuveppilaiye Song Lyrics in Tamil. This Song from Sirayil Pootha Chinna Malar (1990). Song Lyrics penned by Pulamaipithan. வாச கருவேப்பிலையே பாடல் வரிகள்.