பெண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ… உன்பேரச் சொல்லும் ரோசாப்பூ…
—BGM—
பெண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ… உன்பேரச் சொல்லும் ரோசாப்பூ… ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ… உன்பேரச் சொல்லும் ரோசாப்பூ…
பெண் : காத்தில் ஆடும் தனியாக… என் பாட்டு மட்டும் துணையாக… ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
—BGM—
பெண் : மனசெல்லாம் பந்தலிட்டு… மல்லிக்கொடியாக உன்ன விட்டேன்… உசுருக்குள் கோயில் கட்டி… உன்னக் கொலுவெச்சிக் கொண்டாடினேன்…
பெண் : மழை பெஞ்சாத்தானே மண்வாசம்… உன்ன நெனச்சாலே பூவாசந்தான்… பாத மேல பூத்திருப்பேன்… கையில் ரேகை போல சேர்ந்திருப்பேன்…
பெண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ… உன்பேரச் சொல்லும் ரோசாப்பூ… ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
Notes : Rosappu Chinna Rosappu (Female) Song Lyrics in Tamil. This Song from Suryavamsam (1997). Song Lyrics penned by Ra. Ravishankar. ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ (பெண்)பாடல் வரிகள்.
பெண் : நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது… சிறகை விரித்துப் பறப்போம்… நம் உறவில் உலகை அளப்போம்… விளையாடலாம் நிலாவிலே… நிழல் மூழ்குமோ தண்ணீரிலே… வானைப் புரட்டிப்போடு… புது வாழ்வின் கீதம் பாடு…
ஆண் : நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது… சிறகை விரித்துப் பறப்போம்… நம் உறவில் உலகை அளப்போம்…
—BGM—
ஆண் : சித்திரங்களைப் பாடச்சொல்லலாம்… தென்றலை அஞ்சல் ஒன்று போடச்சொல்லலாம்…
பெண் : புத்தகங்களில் முத்தெடுக்கலாம்… பொன்னாடை இமயத்துக்குப் போட்டுவிடலாம்…
ஆண் : பூமிக்குப் பொட்டு வைத்து பார்க்கலாம் பார்க்கலாம்… பூவுக்கும் ஆடை தைத்துப் போடலாமா…
பெண் : சூரியத் தேரை மண்ணில் ஓட்டலாம் ஓட்டலாம்… சொர்கத்தின் புகைப்படத்தைக் காட்டலாமா…
ஆண் : வானம்பாடி வாழ்விலே… வருந்தி அழுவதில்லை… வணங்கி விழுவதில்லை…
—BGM—
பெண் : நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது…
ஆண் : சிறகை விரித்துப் பறப்போம்… நம் உறவில் உலகை அளப்போம்…
—BGM—
பெண் : சங்கீதப்புறா நெஞ்சில் பறக்கும்… சந்தோஷ முல்லை இங்கே வீட்டில் முளைக்கும்…
ஆண் : சந்தனமழை நம்மை நனைக்கும்… பூந்தென்றல் பாதை சொல்ல வந்து அழைக்கும்…
பெண் : சிட்டுக்குச் சிறகடிக்கச் சொல்லித்தந்ததாரடி… மீனுக்கு நீச்சல் கற்றுத் தந்ததாரோ…
ஆண் : மேகத்தில் வீடு கட்டி வாழலாம் வாழலாம்… மின்னலில் கூரை பின்னிப் போடலாமா…
பெண் : ஓங்கும் உந்தன் கைகளால்… வானைப் புரட்டிப்போடு… புது வாழ்வின் கீதம் பாடு…
—BGM—
ஆண் : நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது…
பெண் : சிறகை விரித்துப் பறப்போம்… நம் உறவில் உலகை அளப்போம்…
ஆண் : விளையாடலாம் நிலாவிலே… நிழல் மூழ்குமோ தண்ணீரிலே…
பெண் : வானைப் புரட்டிப்போடு… புது வாழ்வின் கீதம் பாடு…
ஆண் : நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது…
பெண் : லாலா லாலா… லா லா…
—BGM—
Notes : Natchathira Jannalil Song Lyrics in Tamil. This Song from Suryavamsam (1997). Song Lyrics penned by Mu. Metha. நட்சத்திர ஜன்னலில்பாடல் வரிகள்.
ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ… உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ… ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ… உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ…
ஆண் : காத்தில் ஆடும் தனியாக… என் பாட்டு மட்டும் துணையாக… காத்தில் ஆடும் தனியாக… என் பாட்டு மட்டும் துணையாக…
ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ… உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ…
—BGM—
ஆண் : மனசெல்லாம் பந்தலிட்டு… மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன்… உசுருக்குள் கோயில் கட்டி… ஒன்னக் கொலு வெச்சிக் கொண்டாடினேன்…
ஆண் : மழை பெஞ்சாத்தானே மண்வாசம்… உன்ன நெனச்சாலே பூவாசந்தான்… பாத மேல பூத்திருப்பேன்… கையில் ரேகை போல சேர்ந்திருப்பேன்…
ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ… உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ… காத்தில் ஆடும் தனியாக… என் பாட்டு மட்டும் துணையாக…
—BGM—
ஆண் : கண்ணாடி பார்க்கையில… அங்க முன்னாடி உன் முகந்தான்… கண்ணே நீ போகையில… கொஞ்சும் கொலுசாக என் மனந்தான்…
ஆண் : நெழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா… மலமேல் விளக்கா ஏத்தி வைப்பேன்… உன்னப் படம் போல் மனசில் மாட்டி வைப்பேன்…
ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ… உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ… ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ… உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
ஆண் : காத்தில் ஆடும் தனியாக… என் பாட்டு மட்டும் துணையாக…
ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ… உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ… காத்தில் ஆடும் தனியாக… என் பாட்டு மட்டும் துணையாக…
Notes : Rosappu Chinna Rosappu Song Lyrics in Tamil. This Song from Suryavamsam (1997). Song Lyrics penned by Ra. Ravishankar. ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ பாடல் வரிகள்.
ஆண்: ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே… அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே… ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே… அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…
ஆண்: காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே… வாா்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே… அட காதல் இதுதானா…
குழு (பெண்கள்) : பூச்சூட பூ வேணுமா… பூ இங்கே நீதானம்மா… அடி கல்யாண ஊா்கோலமா… இனி எப்போதும் காா்காலமா…
பெண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே… அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…
—BGM—
ஆண் : ஏனோ மனது… உன்னை கண்ட பொழுது… காற்றில் ஒரு மேகமென ஆச்சு…
பெண் : ஏனோ எனக்கு… காதல் வந்த பிறகு… கண்ணாம்மூச்சி ஆடும் கதை ஆச்சு…
ஆண் : உன்னை அழைத்தவன் நானே நானே… தன்னை தொலைத்தவன் ஆனேன் ஆனேன்…
பெண் : கூண்டு கிளி இங்கு நானே நானே… விட்டு விடுதலை ஆனேன் ஆனேன்…
ஆண் : உன் சேலை நூலாகவா…
குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…
ஆண் : நான் உன் கூந்தல் பூவாகவா…
குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…
ஆண் : அடி நான் இன்று நீ ஆகவா…
பெண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே… அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே…
—BGM—
ஆண் : பூவான என் நெஞ்சம் போராட… தூங்காத கண்ணோடு நீராட…
பெண் : உறவான நிலவொன்று சதிராட… கடிதங்கள் வாராமல் உயிா் வாட… அஞ்சலகம் எங்கு என்று தேடுகின்றேன் நான்…
குழு (பெண்கள்) : பூஞ்சோலை நீதானம்மா… ஒரு பூ சிந்த பிடிவாதமா… மௌனங்கள் மொழியாகுமா…
—BGM—
பெண் : காதல் மனசு தத்தளிக்கும் வயசு… எப்பொழுது ஜன்னல் எட்டி பாா்க்கும்…
ஆண் : ராத்திாி பொழுதும் பௌா்ணமி நிலவும்… என் மனதை சுட்டு விட்டு போகும்…
பெண் : தனிமைகள் என்னை தொடுமே தொடுமே… பனித்துளி என்னை சுடுமே சுடுமே…
ஆண் : தாகம் கொண்ட தங்க குடமே குடமே… அள்ளித்தர கங்கை வருமே வருமே…
பெண் : மேகங்கள் தேனூற்றுமே…
குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…
பெண் : புது மொட்டுக்கள் பூவாகுமே…
குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…
பெண் : ஒரு பூமாலை தோள் சேருமே…
ஆண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே… அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…
பெண் : காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே… வாா்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே… அட காதல் இதுதானா…
குழு (பெண்கள்) : பூச்சூட பூ வேணுமா… பூ இங்கே நீதானம்மா… அடி கல்யாண ஊா்கோலமா… இனி எப்போதும் காா்காலமா…
பெண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே… அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…
ஆண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே… அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…
Notes : Oru Pattampoochi Song Lyrics in Tamil. This Song from Kadhalukku Mariyadhai (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. ஒரு பட்டாம்பூச்சி பாடல் வரிகள்.
ஆண் : விழியில் விழி மோதி… இதயக் கதவு இன்று திறந்ததே…
பெண் : விழியில் விழி மோதி… இதயக் கதவு இன்று திறந்ததே…
ஆண் : இரவு பகலாய் இதயம் கிளியாகிப் பறந்ததே…
பெண் : இரவு பகலாய் இதயம் கிளியாகிப் பறந்ததே…
ஆண் : ஹே… காதல் நெஞ்சை…
பெண் : ஹே… காதல் நெஞ்சை…
ஆண் : யாரோடு சொல்வேன்…
பெண் : யாரோடு சொல்வேன்…
ஆண் : வந்து போன தேவதை…
பெண் : வந்து போன தேவதை…
ஆண் : நெஞ்சை அள்ளிப் போனதே…
பெண் : நெஞ்சை அள்ளிப் போனதே…
ஆண் : நெஞ்சை அள்ளிப் போனதே…
—BGM—
பெண் : ஹே… ஹே ஹே… ஹே… ஹே ஹே…
ஆண் : ஹோ… பேபி பேபி… என் தேவ தேவி… ஹோ… பேபி பேபி… என் காதல் ஜோதி…
ஆண் : ஒரு பார்வை வீசிச் சென்றால்… ஹோ… உலகம் விடிந்ததிங்கே… வார்த்தை பேசவில்லை எல்லாம் புரிந்ததிங்கே… இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழைதான்…
ஆண் : ஹோ… பேபி பேபி… என் தேவ தேவி…
—BGM—
ஆண் : பார்வை விழுந்ததும் உயிர்வரை தேகம் நனைந்தது… சுவாசம் முழுவதும் பூக்களின் வாசம் நிறைந்தது…
ஆண் : நேற்று இந்த மாற்றம்… எந்தன் நெஞ்சில் இல்லை… காற்று எந்தன் காதில்… கவிதை சொன்னதில்லை…
ஆண் : ஹோ… இருதயம் இருபக்கம் துடிக்குதே… அலைவந்து அலைவந்து அடிக்குதே… எனக்குள்ளேதான்…
ஆண் : ஹோ… பேபி பேபி… என் தேவ தேவி… ஹோ பேபி பேபி… என் காதல் ஜோதி…
—BGM—
ஆண் : ஜீவன் மலர்ந்தது… புது சுகம் எங்கும் வளர்ந்தது… தேவன் எழுதிடும்… தீர்ப்புகள் இதுதான் புரிந்தது…
ஆண் : ஊரைக் கேட்கவில்லை… பேரும் தேவையில்லை… காலம் தேசம் எல்லாம்… காதல் வானின் எல்லை…
ஆண் : ஓ… தேவதை தரிசனம் கிடைத்ததே… ஆலய மணி எங்கும் ஒலித்ததே… என்னைத் தந்தேன்…
ஆண் : ஹோ… பேபி பேபி… என் தேவ தேவி… ஹோ… பேபி பேபி… என் காதல் ஜோதி…
ஆண் : ஒரு பார்வை வீசிச் சென்றால்… ஹோ… உலகம் விடிந்ததிங்கே… வார்த்தை பேசவில்லை எல்லாம் புரிந்ததிங்கே… இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழைதான்…
ஆண்: ஹோ… பேபி பேபி… என் தேவ தேவி… ஹோ… பேபி பேபி… என் காதல் ஜோதி யே…
Notes : Oh Baby Baby Song Lyrics in Tamil. This Song from Kadhalukku Mariyadhai (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. ஹோ பேபி பேபி பாடல் வரிகள்.
ஆண்: ஆனந்த குயிலின் பாட்டு… தினம் எங்களின் வீட்டுக்குள்ளே…
—BGM—
ஆண்: ஆனந்த குயிலின் பாட்டு… தினம் எங்களின் வீட்டுக்குள்ளே… பூக்களில் நனையும் காற்று… தினம் எங்களின் தோட்டத்திலே… கிளிகளின் கூண்டுக்குள்ளே… புது உலகம் பிறந்ததே… அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே… ஒரு வானம் விாிந்ததே… கனிகள் தித்திப்பா… கவிதை தித்திப்பா… அது அன்பை விட தித்திப்பா…
பெண்: ஆனந்த குயிலின் பாட்டு… தினம் எங்களின் வீட்டுக்குள்ளே… பூக்களில் நனையும் காற்று… தினம் எங்களின் தோட்டத்திலே…
—BGM—
ஆண்: பூமி எங்கும் கண்டதில்லை… பாசத்தை உன் போலே… பெண்: வேறெதுவும் தேவை இல்லை… அன்புக்கு முன்னாலே…
—BGM—
ஆண்: நெஞ்சுக்குள்ளே பூ மலரும்… வீட்டுக்குள் வந்தாலே… பெண்: நிம்மதியில் கண் வளரும்… பாட்டுக்கள் தந்தாலே…
—BGM—
ஆண்: இந்த சொந்தங்கள் போதுமே… எங்கள் இன்பங்கள் கூடுமே… பெண்: அன்பென்னும் தீபம் ஏற்றிய… வீடும் தெய்வத்தின் ஆலயம்தான்… ஆண்: வீடு என்றால் மோட்சம் என்றால்… வீடு கண்டோம் நேசத்திலே…
—BGM—
பெண்: அன்பினிலே அன்பினிலே… ஆலயம் கண்டேனே… அண்ணன்களின் கைகளிலே…. தீபமும் நான் தானே…
பெண்: சிலா் வேதம் பாடலாம் சிலா் கீதை தேடலாம்… நான் கண்டவேதம்… நான் கண்ட கீதை… அண்ணனின் வாா்த்தைகள் தான்…
ஆண்: வானில் நிலா தேய்ந்திடலாம்… பாச நிலா தேய்ந்திடுமோ… பெண்: ஆனந்த குயிலின் பாட்டு… ஆண்: தினம் எங்களின் வீட்டுக்குள்ளே… பெண்: பூக்களில் நனையும் காற்று… ஆண்: தினம் எங்களின் தோட்டத்திலே…
பெண்: கிளிகளின் கூண்டுக்குள்ளே… புது உலகம் பிறந்ததே… அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே… ஒரு வானம் விாிந்ததே…
ஆண்: கனிகள் தித்திப்பா… கவிதை தித்திப்பா… அது அன்பை விட தித்திப்பா…
ஆண் & பெண்: ஆனந்த குயிலின் பாட்டு… தினம் எங்களின் வீட்டுக்குள்ளே… பூக்களில் நனையும் காற்று… தினம் எங்களின் தோட்டத்திலே…
Notes : Aanantha Kuyilin Pattu Song Lyrics in Tamil. This Song from Kadhalukku Mariyadhai (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. ஆனந்த குயிலின் பாட்டு பாடல் வரிகள்.
ஆண்: அய்யா வூடு… குழு: தொறந்து தான் கெடக்கு… ஆண்: உள்ளே புகுந்து… குழு: பந்தி போடு… ஆண்: முத்துக் கடலு… குழு: மூடியா கெடக்கு… ஆண்: முடிஞ்சா எடுத்து… குழு: மாலை போடு…
—BGM—
பெண்கள்(குழு) : மண் மேலே மண் மேலே… எல்லார்க்கும் சாப்பாடு யாராலே… ஆண்கள்(குழு) : தந்தாலே தந்தாலே… நம்மோட சாப்பாடு நீர் மேலே…
ஆண்: கடலில் ஆடும் அலைய பாத்தேன்… வெளிச்சம் கொடுக்கும் நிலவ பாத்தேன்… கேள்வி ஒன்னு நானும் கேட்டேன்… பதிலே இல்ல மலைச்சு போனேன்…
ஆண்: கண்ணுக்கெட்டும் தூரம் தூரம்… மனுஷனதான் காணோம் காணோம்… கலி முடியும் நேரம் நேரம்… புதுமனுஷன் வேணும் வேணும்… மனசும் மனசும் கலந்து தான்… இருந்தா எப்போதும் கொண்டாட்டம் தான் ஹே…
ஆண்: அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு… உள்ளே புகுந்து பந்தி போடு… முத்துக்கடலு மூடியா கெடக்கு… முடிஞ்சா எடுத்து மாலை போடு…
குழு: ஒருபோதும் கலங்காது நாளைக்கு… ஊரெங்கும் உறவுண்டு ஏழைக்கு… ஆண்: நீயும் இங்கே நம்மாளு சோகம்… என்ன உன்னோடு கொண்டாடு… குழு: ஹே…
குழு : அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு… ஆண் : ஹே… குழு : உள்ளே புகுந்து பந்தி போடு… ஆண் : ஹே… குழு : முத்துக் கடலு மூடியா கெடக்கு… ஆண் : ஹே… குழு : முடிஞ்சா எடுத்து மாலை போடு… ஹே ஹே ஹே…
Notes : Ayya Veedu Therandhuthan Song Lyrics in Tamil. This Song from Kadhalukku Mariyadhai (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. அய்யா வூடு தொறந்து பாடல் வரிகள்.
ஆண் : நறுமுகையே நறுமுகையே… நீயொரு நாழிகை நில்லாய்… செங்கனி ஊறிய வாய் திறந்து… நீயொரு திருமொழி சொல்லாய்…
ஆண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்… நெற்றிதரல நீர்வடிய… கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா… அற்றைத் திங்கள் அந்நிலவில்… நெற்றிதரல நீர்வடிய… கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…
பெண் : திருமகனே திருமகனே… நீ ஒரு நாழிகைப் பாராய்… வெண்ணிறப் புரவியில் வந்தவனே… வேல்விழி மொழிகள் கேளாய்…
பெண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்… கொற்றப் பொய்கை ஆடுகையில்… ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா… அற்றைத் திங்கள் அந்நிலவில்… கொற்றப் பொய்கை ஆடுகையில்… ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…
—BGM—
ஆண் : மங்கை மான்விழி அம்புகள்… என் மார் துளைத்ததென்ன… மங்கை மான்விழி அம்புகள்… என் மார் துளைத்ததென்ன…
பெண் : பாண்டி நாடனைக் கண்ட என் மனம்… பசலை கொண்டதென்ன…
ஆண் : நிலாவிலே பார்த்த வண்ணம்… கனாவிலே தோன்றும் இன்னும்… நிலாவிலே பார்த்த வண்ணம்… கனாவிலே தோன்றும் இன்னும்…
பெண் : இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை… இடையினில் மேகலை இருக்கவில்லை…
ஆண் : நறுமுகையே நறுமுகையே… நீயொரு நாழிகை நில்லாய்… செங்கனி ஊறிய வாய் திறந்து… நீயொரு திருமொழி சொல்லாய்…
பெண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்… கொற்றப் பொய்கை ஆடுகையில்… ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…
ஆண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்… நெற்றிதரல நீர்வடிய… கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…
ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே… விண்ணை தாண்டி வருவாயா… விளையாட ஜோடி தேவை… ஹேய்… வெண்ணிலவே வெண்ணிலவே… விண்ணை தாண்டி வருவாயா… விளையாட ஜோடி தேவை… ஹேய்…
—BGM—
ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே… விண்ணை தாண்டி வருவாயா… விளையாட ஜோடி தேவை… இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே… உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…
ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே… விண்ணை தாண்டி வருவாயா… விளையாட ஜோடி தேவை… இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே… உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…
—BGM—
ஆண் : இது இருளல்ல அது ஒளியல்ல… இது இரண்டோடும் சேராத பொன் நேரம்… இது இருளல்ல அது ஒளியல்ல… இது இரண்டோடும் சேராத பொன் நேரம்…
ஆண் : தலை சாயாதே விழி மூடாதே… சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்… பெண்ணே… பெண்ணே… பூலோகம் எல்லாமே தூங்கிபோன பின்னே… புல்லோடு பூவிழும் ஓசை கேட்கும் பெண்ணே… நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம்… பாலுாட்ட நிலவுண்டு…
—BGM—
பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே… விண்ணை தாண்டி வருவாயா… விளையாட ஜோடி தேவை… இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே… உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…
—BGM—
பெண் : எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு… கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு…
ஆண் : இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்… எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு…
ஆண் : அட உலகை ரசிக்க வேண்டும் நான்… உன் போன்ற பெண்ணோடு…
—BGM—
ஆண் & பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே… விண்ணை தாண்டி வருவாயா… விளையாட ஜோடி தேவை… இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே… உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…
—BGM—
Notes : Vennilavae Vennilavae Song Lyrics in Tamil. This Song from Minsara Kanavu (1997). Song Lyrics penned by Vairamuthu. வெண்ணிலவே வெண்ணிலவேபாடல் வரிகள்.