ஆண் : பாபா நான் இருக்கேன்பா… மதராவும் இருப்பேன்பா… எப்பவுமே நான்தான்பா… உன் பர்ஸ்ட்டு பிரண்ட்பா… உன் பெஸ்ட்டு பிரண்ட்பா…
ஆண் : அட்வைஸ் பண்ணி கழுத்த அருக்கும்… அப்பன்காரன் நான் அல்லடா… அஜ்ஜஸ் பண்ணி கம்பனி கொடுக்கும்… நண்பன் நானடா…
ஆண் : உங்கப்பன் மவனே வாடா… உங்கப்பன் மவனே வாடா… என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீதான்டா… வாடா உங்கப்பன் மவனே வாடா… உன் முத்தம் போதும்… பிறந்த பலன நான் அடைவேன்டா…
ஆண் : வாடா சீக்கிரம் வளர்ந்து வாடா… நாம ஒன்னா சேர்ந்து… க்லப்கு போய்தான் கலக்கலாம்டா…
ஆண் : வாடா இனி நம்ம நேரம்தான்டா… உலகத்த ஆல போரதே நம்மதான்டா…
—BGM—
ஆண் : பாபா நான் இருக்கேன்பா… மதராவும் இருப்பேன்பா… எப்பவுமே நான்தான்பா… உன் பர்ஸ்ட்டு பிரண்ட்பா… உன் பெஸ்ட்டு பிரண்ட்பா…
—BGM—
ஆண் : எததான் நீ படிச்சாலும்… எக்சாம்தான் முடிச்சாலும்… என்னதான் ரிசால்டுனு எனக்கு கவல எதுக்கு…
ஆண் : என் மவன் என்னை போல இருப்பான்… என் பயபுள்ள எப்பவும் பர்ஸ்ட்டு ரேங்க் தான் எடுப்பான்… ஒரு பொண்ண நீயும் லவ் பண்ணா… அவளோட அப்பன் தடபண்ணா… அவள கடத்தி வருவேன் உனக்கு மணம் முடிப்பேன்…
ஆண் : உன்னை உப்பு மூட்டை தூக்கி போவேன்… உனக்கு முப்பது வயசு ஆனா கூட… உன்ன பச்சை குதிரை தான்ட சொல்வேன்… உனக்கு மீசை நரைச்சு போனா கூட… எனக்கு ஆசை நரைச்சு போகாதுப்பா…
ஆண் : உங்கப்பன் மவனே வாடா… உங்கப்பன் மவனே வாடா… என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீதான்டா… வாடா உங்கப்பன் மவனே வாடா… உன் முத்தம் போதும்… பிறந்த பலன நான் அடைவேன்டா…
ஆண் : பாபா நான் இருக்கேன்பா… மதர்ராவனும் இருப்பேன்பா… எப்பவுமே நான்தான்பா… உன் பர்ஸ்ட்டு பிரண்ட்பா… உன் பெஸ்ட்டு பிரண்ட்பா…
—BGM—
ஆண் : மகனே என் மகனே… இந்த மரத்தில் தோன்றி வந்த விழுதே… விழுதே என் விழுதே… இனி எனக்கு உதவும் நிழலே…
ஆண் : குறைகள் எதையும் பொறுப்பேன்… நீ தப்பு செய்தா தகப்பன் முறையில் தடுப்பேன்… என் மகனாச்சே தப்புதான் நடக்குமா… மகனே நீ புடம் போட்டா பசும்பொன் அல்லவா…
—BGM—
ஆண் : நீ அப்பன் பேர காக்கவேணும்… ஓஓ… அத காதால நான் கேட்க வேண்ணும்… ஓஓ… நீ வல்லவன்தான் பெத்த புள்ள… ஓ… அட உன்னை போல எவனும் இல்ல… ஓ…
ஆண் : பாபா நான் இருக்கேன்பா… மதராவும் இருப்பேன்பா… எப்பவுமே நான்தான்பா… உன் பர்ஸ்ட்டு பிரண்ட்பா… உன் பெஸ்ட்டு பிரண்ட்பா…
ஆண் : அட்வைஸ் பண்ணி கழுத்த அருக்கும்… அப்பன்காரன் நான் அல்லடா… அஜ்ஜஸ் பண்ணி கம்பனி கொடுக்கும்… நண்பன் நானடா…
ஆண் : உங்கப்பன் மவனே வாடா… உங்கப்பன் மவனே வாடா… என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீதான்டா… வாடா உங்கப்பன் மவனே வாடா… உன் முத்தம் போதும்… பிறந்த பலன நான் அடைவேன்டா…
ஆண் : வாடா சீக்கிரம் வளர்ந்து வாடா… நாம ஒன்னா சேர்ந்து… க்லப்கு போய் தான் கலக்கலாம்டா…
ஆண் : வாடா இனி நம்ம நேரம் தான்டா… உலகத்த ஆல போரதே… நம்ம தான்டா…
—BGM—
Notes : Appan Mavanae Vaada Song Lyrics in Tamil. This Song from Podaa Podi (2012). Song Lyrics penned by Silambarasan. அப்பன் மவனேபாடல் வரிகள்.
ஆண் : வா வா என் தேவதையே… பொன் வாய் பேசும் தாரகையே… பொய் வாழ்வின் பூரணமே… பெண் பூவே வா…
ஆண் : வா வா என் தேவதையே… பொன் வாய் பேசும் தாரகையே… பொய் வாழ்வின் பூரணமே… பெண் பூவே வா…
ஆண் : வான் மிதக்கும் கண்களுக்கு… மயில் இறகால் மையிடவா… மார்புதைக்கும் கால்களுக்கு… மணி கொலுசு நான் இடவா…
ஆண் : வா வா என் தேவதையே… பொன் வாய் பேசும் தாரகையே… பொய் வாழ்வின் பூரணமே… பெண் பூவே வா…
—BGM—
ஆண் : செல்வ மகள் அழுகை போல்… ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை… பொன் மகளின் புன்னகைப்போல்… யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை…
ஆண் : என் பிள்ளை எட்டு வைத்த நடையை போல… எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை… முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு… முந்நூறு மொழிகளில் வார்த்தை இல்லை…
ஆண் : தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா… என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…
ஆண் : வா வா என் தேவதையே… பொன் வாய் பேசும் தாரகையே… பொய் வாழ்வின் பூரணமே… பெண் பூவே வா…
—BGM—
ஆண் : பிள்ளை நிலா பள்ளி செல்ல… அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்… தெய்வ மகள் தூங்கயிலே… சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்…
ஆண் : சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது… என்னை பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்… மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது… இவள் மீசை இல்லாத மகன் என்று சொன்னேன்…
ஆண் : பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே… ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்துக் கொண்டேன்…
ஆண் : வா வா என் தேவதையே… பொன் வாய் பேசும் தாரகையே… பொய் வாழ்வின் பூரணமே… பெண் பூவே வா…
ஆண் : வா வா என் தேவதையே… பொன் வாய் பேசும் தாரகையே… பொய் வாழ்வின் பூரணமே… பெண் பூவே வா…
ஆண் : வான் மிதக்கும் கண்களுக்கு… மயில் இறகால் மையிடவா… மார்புதைக்கும் கால்களுக்கு… மணி கொலுசு நான் இடவா…
Notes : Vaa Vaa En Devadhai Song Lyrics in Tamil. This Song from Abhiyum Naanum (2008). Song Lyrics penned by Vairamuthu. வா வா என் தேவதையேபாடல் வரிகள்.
பெண் : அப்பன் புள்ள உரவ சொல்ல… வார்தைகளே இல்ல… ஆகாயத்த போல அது… ரொம்ப சின்னதில்ல…
பெண் : அப்பன் புள்ள உரவ சொல்ல… வார்தைகளே இல்ல… ஆகாயத்த போல அது… ரொம்ப சின்னதில்ல…
பெண் : அப்பனே புள்ளையா… புள்ளையே அப்பனா… மாறியே வாழுற… வாழ்க்க அழகுதான்…
பெண் : வெள்ளந்தி பாசத்துக்கு… விலையே இல்லதான்…
பெண் : ஏலே ஏலே ஏலே… ஏழ எல்லாம் ஏழ இல்லடா…
—BGM—
பெண் : எங்க ஜனங்களோட மனசு எல்லாம்… ரொம்ப வெள்ளடா…
பெண் : அப்பன் புள்ள உரவ சொல்ல… வார்தைகளே இல்ல… ஆகாயத்த போல அது… ரொம்ப சின்னதில்ல…
—BGM—
பெண் : அப்பனோட மனசுக்குள்ள… கருவறைதான் இருக்கு… மகனோட கனவுகள… அடை காக்கத்தான்…
பெண் : அப்பங்கூட இருக்கையில… ஆண்டவன்தான் எதுக்கு… மகனோட உலகமிங்கே… அப்பன் மட்டுந்தான்…
பெண் : இருக்கும் இடமே சொர்கமென… நினைக்கும் மனசே போதுமடா… தலைக்கு மேலே மகன் பறக்க… பறக்கும் குதிரை கிடைக்குமடா… பெண் : ஏலே ஏலே ஏலே… ஏழ எல்லாம் ஏழ இல்லடா…
—BGM—
பெண் : நாங்க காணுகிற கனவு எல்லாம்… நியாயம் தானாடா…
—BGM—
பெண் : ஆண் தாயாய் வாழ்கிற… அப்பனோட மனசு… ஆயிரம் தாய்மைக்கிங்கே… நிகர்தானாடா…
பெண் : ஆகாயம் ஒசருமுன்னு… யார் சொன்னதிங்கே… அன்பு கொண்ட இந்த உறவு… அத மிஞ்சுண்டா…
பெண் : பொன்னும் பொருளும் தேவை இல்லை… அழுக்கில்லை புன்னகை பொதுமுள்ள்… ஒத்திகை இல்லா வாழ்கையில… உறவும் பாசமும் வாழ்வில்ல… பெண் : ஏலே ஏலே ஏலே… ஏழ எல்லாம் ஏழ இல்லடா…
—BGM—
பெண் : எங்க அன்புக்கிங்க கடவுள் கூட… ஈடு இல்லடா…
—BGM—
பெண் : அப்பன் புள்ள உரவ சொல்ல… வார்தைகளே இல்ல… ஆகாயத்த போல அது… ரொம்ப சின்னதில்ல…
பெண் : அப்பனே புள்ளையா… புள்ளையே அப்பனா… மாறியே வாழுற… வாழ்க்க அழகுதான்…
பெண் : வெள்ளந்தி பாசத்துக்கு… விலையே இல்லதான்…
பெண் : ஏலே ஏலே ஏலே… ஏழ எல்லாம் ஏழ இல்லடா…
—BGM—
பெண் : எங்க ஜனங்களோட மனசு எல்லாம்… ரொம்ப வெள்ளடா…
—BGM—
Notes : Yele Yele Song Lyrics in Tamil. This Song from Vimanam (2023). Song Lyrics penned by Snehan. ஏலே ஏலே பாடல் வரிகள்.
ஆண் : ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு… பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு… ஓஓ… தாயாக தந்தை மாறும் புதுக் காவியம்… ஓஓ… இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம்…
ஆண் : இரு உயிர் ஒன்று சோ்ந்து இங்கு ஓா் உயிர் ஆகுதே… கருவறை இல்லை என்ற போதும் சுமந்திடத் தோணுதே… விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே…
ஆண் : ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு… பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…
—BGM—
ஆண் : முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே… மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே… வயதால் வளா்ந்தும் இவன் பிள்ளையே… பிள்ளைப் போல் இருந்தும் இவள் அன்னையே… இது போல் ஆனந்தம் வேறில்லையே…
ஆண் : இரு மனம் ஒன்று சோ்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே… ஒரு நொடி போதும் போதும் என்று ஓா் குரல் கேட்குதே… விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே…
ஆண் : ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு… பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…
—BGM—
ஆண் : கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்… கேட்காத ஓா் பாடல் அதில் இசை மீட்டினாள்… அடடா… தெய்வம் இங்கே வரம் ஆனதே… அழகாய் வீட்டில் விளையாடுதே… அன்பின் விதை இங்கே மரம் ஆனதே…
ஆண் : கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே… பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே… விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே…
ஆண் : ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு… பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…
—BGM—
Notes : Aariro Song Lyrics in Tamil. This Song from Deiva Thiirumagal (2011). Song Lyrics penned by Na. Muthukumar. ஆரிரோ ஆராரிரோபாடல் வரிகள்.
ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய்… அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்… அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்… அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்…
ஆண் : இரு நெஞ்சம் இணைந்து பேசிட… உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை… சிறு புல்லில் உறங்கும் பனியில்… தெரியும் மழையின் அழகோ தாங்கவில்லை…
ஆண் : உந்தன் கைகள் பிடித்து போகும் வழி… அது போதவில்லை இன்னும் வேண்டுமடி… இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே… எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி…
ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய்… அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்… அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்… அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்…
—BGM—
ஆண் : தூரத்து மரங்கள் பார்க்குதடி… தேவதை இவளா கேக்குதடி… தன்னிலை மறந்தா பூக்குதடி… காற்றினில் வாசம் தூக்குதடி…
ஆண் : அடி கோவில் எதற்கு… தெய்வங்கள் எதற்கு… உனது புன்னகை போதுமடி… இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே… எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி…
ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய்… அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…
—BGM—
ஆண் : உன் முகம் பார்த்தால் தோணுதடி… வானத்து நிலவு சின்னதடி… மேகத்தில் மறைந்தே பார்க்குதடி… உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி… அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து… வீட்டுக்கு அனுப்பு நல்லபடி…
ஆண் : இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே… எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி…
ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய்… அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்… ஆனந்த யாழை மீட்டுகிறாய்… அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…
Notes : Aanandha Yaazhai Song Lyrics in Tamil. This Song from Thangameenkal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. ஆனந்த யாழைபாடல் வரிகள்.