ஆண் : என் மேல கை வச்சா காலி… அந்துருன்டா உன்னோட தாலி… நீ என் மேல கை வச்சா காலி… மகனே அந்துருன்டா உன்னோட தாலி…
ஆண் : கேளு மரம் செத்தா நாற்காலி… நீ செத்தா இடம் காலி… செக்காலி தக்காளி காலி…
ஆண் : தாண்டாதே என் வேலி… முடிஞ்சிருண்டா உன் ஜோலி… டுப்பாலே டுப்பாலே டோலி…
ஆண் : கேளு மரம் செத்தா நாற்காலி… நீ செத்தா இடம் காலி… செக்காலி தக்காளி காலி…
ஆண் : தாண்டாதே என் வேலி… முடிஞ்சிருண்டா உன் ஜோலி… டுப்பாலே டுப்பாலே டோலி…
ஆண் : என் மேல கை வச்சா காலி… அந்துருன்டா உன்னோட தாலி… நீ என் மேல கை வச்சா காலி… மகனே அந்துருன்டா உன்னோட தாலி…
—BGM—
குழு : தோற்றம் கண்டு எடை போடாதே… ஒன்னுவிட்டா செவுலு கிழியும் ஓரம் போடா… டேய்…
ஆண் : நான் பட்ட அடியெல்லாம் படிக்கட்டு… ஜெயிக்கத்தான் வந்தேன் நான் புறப்பட்டு… மிஸ்சாகி போகாது நான் தொட்டு… தம்பி என் பக்கம் நீ சேர்ந்தா சரி ஹிட்டு…
ஆண் : நான் தூங்க என் கைதான் தலகாணி… எனக்குன்னு இருக்குது தனி பானி… தில்லுதான் முன்னேற முதல் ஏணி… என் வண்டிக்கு நானேதான் கடையாணி…
ஆண் : நான் சிந்தும் வேர்வைய கடலாக்கி… அதுல கப்பல ஓட்டுவேண்டா… நான் பட்ட கஷ்டத்த எருவாக்கி… உன்ன உருவாக்கி காட்டுவேண்டா…
ஆண் : என் மேல கை வச்சா காலி… காலி காலி காலி கா கா கா கா…
ஆண் : என் மேல கை வச்சா காலி… அந்துருன்டா உன்னோட தாலி… நீ என் மேல கை வச்சா காலி… மகனே அந்துருன்டா உன்னோட தாலி…
—BGM—
ஆண் : என்னோட வேகத்த தடைபோட்டு… தடுக்க நீ முடியாது நடைபோட்டு… நான் போகும் வேகந்தான் ராக்கெட்டு… அந்த ஆகாயந்தான் டா என் டார்கெட்டு…
ஆண் : சும்மா நான் யாரையும் தொடமாட்டேன்… ஒரு போட்டின்னு வந்தாகா விடமாட்டேன்… காசுக்கு எப்போதும் விழமாட்டேன்… தம்பி நீ காட்டும் பாசத்தை எடைப்போட்டேன்…
ஆண் : உன் வேல என்கிட்ட வச்சிக்கிட்டா… உனக்கு புத்தூரு மாவுக்கட்டு… நீ நல்லத ஏழைக்கு செஞ்சிப்புட்டா… நான் வணங்குறேன் காலத்தொட்டு…
ஆண் : என் மேல கை வச்சா காலி… அந்துருன்டா உன்னோட தாலி… நீ என் மேல கை வச்சா காலி… மகனே அந்துருன்டா உன்னோட தாலி…
ஆண் : கேளு மரம் செத்தா நாற்காலி… நீ செத்தா இடம் காலி… செக்காலி தக்காளி காலி…
ஆண் : தாண்டாதே என் வேலி… முடிஞ்சிருண்டா உன் ஜோலி… டுப்பாலே டுப்பாலே டோலி…
ஆண் : என் மேல கை வச்சா… என் மேல கை வச்சா… என் மேல என் மேல காலி காலி…
ஆண் : என் மேல கை வச்சா காலி… அந்துருன்டா உன்னோட தாலி… நீ என் மேல கை வச்சா காலி… மகனே அந்துருன்டா உன்னோட தாலி…
Notes : Yem Mela Kai Vachaa Gaali Song Lyrics in Tamil. This Song from Yaman (2017). Song Lyrics penned by Annamalai & Chetan MC. என் மேல பாடல் வரிகள்.
ஆண் : அவள் அப்படி ஒன்றும் அழகில்லை… அவளுக்கு யாரும் இணையில்லை… அவள் அப்படி ஒன்றும் கலரில்லை… ஆனால் அது ஒரு குறையில்லை…
—BGM—
ஆண் : அவள் அப்படி ஒன்றும் அழகில்லை… அவளுக்கு யாரும் இணையில்லை… அவள் அப்படி ஒன்றும் கலரில்லை… ஆனால் அது ஒரு குறையில்லை…
ஆண் : அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை… அவளைப் படித்தேன் முடிக்கவில்லை… அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை… இருந்தும் கவனிக்க மறக்கவில்லை…
—BGM—
ஆண் : அவள் அப்படி ஒன்றும் அழகில்லை… அவளுக்கு யாரும் இணையில்லை… அவள் அப்படி ஒன்றும் கலரில்லை… ஆனால் அது ஒரு குறையில்லை…
—BGM—
ஆண் : அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை… நான் காவலிருந்தால் தடுக்கவில்லை… அவள் பொம்மைகளை வைத்து உறங்கவில்லை… நான் பொம்மை போல பிறக்கவில்லை…
ஆண் : அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை… அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை… அவள் கைவிரல் மோதிரம் தங்கமில்லை… கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை…
ஆண் : அவள் சொந்தம் என்று எதுவுமில்லை… எனக்கு எதுவுமில்லை…
ஆண் : அவள் அப்படி ஒன்றும் அழகில்லை… அவளுக்கு யாரும் இணையில்லை… அவள் அப்படி ஒன்றும் கலரில்லை… ஆனால் அது ஒரு குறையில்லை…
—BGM—
ஆண் : அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை… அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை… அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை… அந்த அக்கரைப்போல வேறு இல்லை…
ஆண் : அவள் வாசம் ரோஜா வாசமில்லை… அவள் இல்லாமல் சுவாசமில்லை… அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை… அவள் சொந்தம் என்று எதுவுமில்லை… எனக்கு எதுவுமில்லை…
ஆண் : அவள் அப்படி ஒன்றும் அழகில்லை… அவளுக்கு யாரும் இணையில்லை… அவள் அப்படி ஒன்றும் கலரில்லை… ஆனால் அது ஒரு குறையில்லை…
ஆண் : அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை… அவளைப் படித்தேன் முடிக்கவில்லை… அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை… இருந்தும் கவனிக்க மறக்கவில்லை…
Notes : Aval Appadi Ondrum Song Lyrics in Tamil. This Song from Angadi Theru (2010). Song Lyrics penned by Na. Muthukumar. அவள் அப்படி ஒன்றும்பாடல் வரிகள்.
பெண் : நான் சொல்வதெல்லாம் உண்மை… உண்மை தவிர வேர் எதுவும் இல்லை…
—BGM—
பெண் : பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்… பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்… கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்… காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்…
ஆண் : பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்… பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்… கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்… காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்…
—BGM—
ஆண் : நீ விழியால் விழியை பறித்தாய்… உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய்… உன் அழகால் எனை நீ அடித்தாய்… ஓர் அதிசய உலகத்தில் அடைத்தாய்…
பெண் : நீ இதமாய் இதயம் கடித்தாய்… குழு : கடித்தாய்… பெண் : என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்… குழு : குளித்தாய்…
பெண் : நீ மதுவாய் எனையே குடித்தாய்… இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்…
ஆண் : காலம் வந்த பிறகு ஒட்டிக்கொள்ளு சிறகே… வானம் ஒரு பூமி இனி தேவை இல்லை…
பெண் : ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்… எட்டி நிற்கும் வானம் ஒன்றும் தூரமில்லை…
ஆண் : பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்… பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்…
—BGM—
ஆண் : நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்… என் உணர்ச்சிகள் தீப்பிடித்து எரியும்… ஹேய்… நீ துளியாய் எனக்குள் விழுந்தால்… என் உயிர் பனிக்கட்டியாக உறையும்…
பெண் : நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்… குழு : சிரித்தால்… பெண் : என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவளும்… குழு : தவளும்…
பெண் : நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால்… என் நெஞ்சிக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்…
ஆண் : கண்களில் மின்மினி… புன்னகை சிம்பொனி… மின்னலின் தங்கை நீ புரிகிறதே…
பெண் : தொட்டவுடன் உருகும்… ஒட்டிக்கொண்டு பழகும்… புத்தம் புது மிருகமே தெரிகிறதே…
பெண் : பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்… பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்… கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்… காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்…
Notes : Boomiku Velichamellam Song Lyrics in Tamil. This Song from Dishyum (2006). Song Lyrics penned by Vairamuthu. பூமிக்கு வெளிச்சமெல்லாம்பாடல் வரிகள்.
பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ… தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…
பெண் : போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ… போராடும் அன்பில் அட ஏன்தான் காயமோ…
பெண் : கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே… கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே… இலைகள் உதிர்வதால் கிளையும் சுமைகள் கூடுதே… உதிரும் கிளைகளோ மறந்து காற்றில் போகுதே…
பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ… தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…
—BGM—
பெண் : ஹே… உடைத்துப் பார்க்கும் இதயம் உனது… படைத்து பார்ப்பதை அறியாதே… குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு… நிஜத்தின் உலகத்தில் உடையாதே உடையாதே…
பெண் : உடைத்துப் பார்க்கும் இதயம் உனது… படைத்து பார்ப்பதை அறியாதே… குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு… நிஜத்தின் உலகத்தில் உடையாதே…
பெண் : காதல் போலவே நோயும் எல்லையே… யாவும் உண்மைதானே… இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும்… கேட்கவில்லை நானே…
பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ… தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…
—BGM—
பெண் : விலகும்போது நெருங்கும் காதல்… அருகில் போனால் விலகிடுமோ… விலங்கு மாட்டி சிறையில் பூட்டி… விருப்பம் போல அது வலி தரமோ… ஆஆ ஹா…
பெண் : விலகும்போது நெருங்கும் காதல்… அருகில் போனால் விலகிடுமோ… விலங்கு மாட்டி சிறையில் பூட்டி… விருப்பம் போல அது வலி தரமோ…
பெண் : வேற வேற நா நினைவு போகையில்… காதல் கொள்வது பாவம்… அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே… ஆதி கால சாபம்…
—BGM—
பெண் : பூ மீது யானைபூ வலியைத் தாங்குமோ… தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ… போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ… போராடும் அன்பில் அட ஏன்தான் காயமோ…
பெண் : கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே… கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே… இலைகள் உதிர்வதால் கிளையும் சுமைகள் கூடுதே… உதிரும் கிளைகளோ மறந்து காற்றில் போகுதே…
பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ… தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…
Notes : Poo Meedhu Song Lyrics in Tamil. This Song from Dishyum (2006). Song Lyrics penned by Pugazhendhi. பூ மீது யானைபாடல் வரிகள்.