Tag Archives: வாசன்

கோழி வந்ததா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்சுஜாதா மோகன், யுகேந்திரன், அனுராதா ஸ்ரீராம் & மலேசியா வாசுதேவன்தேவாஆஹா

Kozhi Vandhadhaa Song Lyrics in Tamil


பெண் : கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா…
சொல்லு கொக்கர கொக்கோ…

குழு : கொக்கர கொக்கர கொக்கர கொக்கர…
கொக்கர கொக்கர கொக்கர கொக்கர…
கொக்கர கொக்கர கொக்கர கொக்கர…
கொக்கர கொக்கர கொக்கர கொக்கர…

BGM

பெண் : கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா…
சொல்லு கொக்கர கொக்கோ…
கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ…

ஆண் : வானம் வந்ததா முதலில் நீலம் வந்ததா…
சொல்லு கொக்கர கொக்கோ…
ஹே கொக்கர கொக்கோ…
ஹே கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ…

பெண் : சுத்தாதா பூமி சுத்த வச்ச சாமி…
சாமிக்கு முன் பூமி வந்ததா…
ஓ கொக்கர கொக்கோ…

குழு : கொக்கர கொக்கோ ஹே கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ ஹே கொக்கரகொக்கோ…

BGM

ஆண் : எரிச்சாலும் எரியாது அது என்ன தெரியுமா…
கிழிச்சாலும் கிழியாது அது என்ன தெரியுமா…

குழு : கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ…

பெண் : மேகம் தான் எந்நாளும் தீ பற்றி எரியுமா…
குண்டூசி நுனி கீறி தண்ணீரு கிழியுமா…

ஆண் : பிரியாத உறவேதம்மா…
இழந்தாலே வேரேதம்மா…

பெண் : உலையில சோறு கொதிக்கும் விவரத்த கூறு…
மனுஷன் பசியினை தீர்க்கும் அதன் ரகசியம் பாரு…

ஆண் : இந்த வாழ்க்கை என்கிற விடுகதைக்கு…
ஒரு பதில் என்ன தேடு…

குழு : கொக்கர கொக்கோ ஹே கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ ஹே கொக்கரகொக்கோ…

BGM

பெண் : பூக்காரி விதவையின்னா வெறுக்கதான் தோணுமா…
அவ விக்கும் பூவுக்கு வாசம்தான் மாறுமா…

குழு : கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ…

பெண் : குருக்கத்தி பூவுக்கு கோப்பைதான் கோவளம்…
மனுஷங்க கவலைக்கு மனுஷன்தான் காரணம்…

ஆண் : கலை இல்லா வயல் ஏதம்மா…
கவலை தான் இனி ஏதம்மா…

ஆண் : வானத்தில் பறக்கும் குருவியும் மரம் வந்து சேரும்…
கெடச்ச வாழ்க்கைய ரசிச்சா மனசின் துயரங்கள் தீரும்…

குழு : அட சோகம் வரப்போ…
சிரிச்சு சிரிச்சு மறந்திட வேண்டும்…

குழு : கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா…
சொல்லு கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ…

குழு : வானம் வந்ததா முதலில் நீலம் வந்ததா…
சொல்லு கொக்கர கொக்கோ…
ஹே கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ…

ஆண் : சுத்தாதா பூமி…
பெண் : சுத்த வச்ச சாமி சாமிக்கு முன் பூமி வந்ததா…
ஓ கொக்கர கொக்கோ…

குழு : கொக்கர கொக்கோ ஹே கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ ஹே கொக்கரகொக்கோ…
கொக்கர கொக்கோ ஹே கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ ஹே கொக்கரகொக்கோ…


Notes : Kozhi Vandhadhaa Song Lyrics in Tamil. This Song from Aahaa (1997). Song Lyrics penned by Vaasan. கோழி வந்ததா பாடல் வரிகள்.


வைகை நதிக்கரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்ஹரிஹரன்இளையராஜாநிலவே முகம் காட்டு

Vaigai Nadhikkarai Song Lyrics in Tamil


BGM

ஆண் : வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே…
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே…
வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே…
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே…

ஆண் : கண்கள் கலங்காதே நெஞ்சம் மயங்காதே…
இங்கே உறவுண்டு என்றும் மறக்காதே…
ஏழை எளியோரைதான் பூமி தாங்காதா…

ஆண் : வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே…
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே…

BGM

ஆண் : துன்ப மழை தன்னை தாங்கும்…
சிறு குடை நான் ஆவேன்…
வேனில் அனல் தன்னில் தாகம் தனித்திடும்…
நீர் ஆவேன்…

ஆண் : போகும் வழி எங்கும் உன்னை தொடர்ந்திடும்…
காற்றாவேன்…
சோகம் வருகையில் துன்பம் துடைத்திடும்…
பாட்டாவேன்…

ஆண் : ஏன் இந்த வாழ்க்கை என்று…
ஏங்குகின்ற ஏழை இங்கு ஓர் கோடி…
யாருக்கிங்கே சோகம் இல்லை…
யார் மனதில் பாரம் இல்லை யம்மாடி…

ஆண் : நல்ல நாட்கள் நமக்கிருக்கு…
அந்த நம்பிக்கைதான் வந்துவிட்டால்…
சோகம் இல்லை…

ஆண் : வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே…
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே…

BGM

ஆண் : நெஞ்சம் கனத்திடும் என்ன…
சுமைகளை தாங்காதே…
இந்த உலகத்தை பார்க்க வேண்டும்…
என்று ஏங்காதே…

ஆண் : கற்பனை கோட்டைகள் கட்டும் பேச்சுக்களை…
காதில் வாங்காதே…
ஓட்டை குடிசையில் இன்பம் இல்லை…
என எண்ணாதே…

ஆண் : ஏழைக்கொரு ஏழை துணை…
எவ்வுயிர்க்கும் தெய்வம் துணை பொன் மானே…
நெஞ்சில் ஒரு வஞ்சம் இல்லை…
நேசத்திற்கு பஞ்சம் இல்லை விண்மீனே…

ஆண் : நல்ல வாழ்க்கை வந்து தீரும்…
வரவில்லை என்றால் தெய்வங்கள்தான்…
பொய் அடியோ…

ஆண் : வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே…
யேஹே… வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே…


Notes : Vaigai Nadhikkarai Song Lyrics in Tamil. This Song from Nilave Mugam Kaattu (1999). Song Lyrics penned by Vasan. வைகை நதிக்கரை பாடல் வரிகள்.


சுற்றாதே பூமி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்கலையரசிஇளையராஜாநிலவே முகம் காட்டு

Suttrathe Bhoomithaye Song Lyrics in Tamil


பெண் : சுற்றாதே பூமி தாயே நில்லு…
என் மன்னன் எங்கே என்று சொல்லு…

BGM

பெண் : வீசாதே தென்றல் காற்றே நில்லு…
நான் தேடும் ஜீவன் எங்கே சொல்லு…

பெண் : கோடி விண்மீன்களில் எந்தன் விண்மீன் எங்கே…
என்னை தாலாட்டுமே அந்த ராகம் எங்கே…
எந்தன் சொர்கத்தை சொல்கின்ற சொல் ஏது…

பெண் : சுற்றாதே பூமி தாயே நில்லு…
என் மன்னன் எங்கே என்று சொல்லு…

BGM

பெண் : அதி காலையில் துயில் வேளையில்…
கனவாக தீண்டிவிட்டு நீ போனாய்…
துயில் நீங்கினேன் உன்னை தேடினேன்…
விழி தாண்டி தூரம் என்று நீ ஆனாய்…

BGM

பெண் : உள்ளுக்குள் உன்னை கண்டு கொண்டேன்…
உன் கண்ணில் என்னை காண வேண்டும்…
வானத்தில் வெண்ணிலாவின் வீதி…
சொல்லாதோ உன்னை காணும் தேதி…

பெண் : உந்தன் தோளில் பூவாய் விழ வேண்டும்…
எந்தன் சோகம் சொல்லி அழ வேண்டும்…
அந்த நாள் காண என் நெஞ்சம் தவிக்கும்… ம்ம்ம் ம்ம்ம்…

பெண் : சுற்றாதே பூமி தாயே நில்லு…
என் மன்னன் எங்கே என்று சொல்லு…
வீசாதே தென்றல் காற்றே நில்லு…
நான் தேடும் ஜீவன் எங்கே சொல்லு…

BGM

பெண் : ஒரு நாழிகை உன்னை பார்த்த பின்…
மீண்டும் பார்வை போகும் இனி போகட்டும்…
உந்தன் தேன் குரல் கொஞ்சம் கேட்ட பின்…
எந்தன் ஜீவன் ஓயும் இனி ஓயட்டும்…

பெண் : என்றேனும் உன்னை காண கூடும்…
என்று எண்ணி எந்தன் ஜீவன் வாழும்…
சாகாத காதல் வரம் வேண்டும்…
ஓயாமல் உன்னை தொழ வேண்டும்…

பெண் : காற்றை தேடும் புல்லாங்குழல் போலே…
ஏங்கி பாடும் ஒற்றை குயில் ஆனேன்…
உன்னை காணாமல் என் கண்கள் தூங்காது…

பெண் : சுற்றாதே பூமி தாயே நில்லு…
என் மன்னன் எங்கே என்று சொல்லு…
வீசாதே தென்றல் காற்றே நில்லு…
நான் தேடும் ஜீவன் எங்கே சொல்லு…


Notes : Suttrathe Bhoomithaye Song Lyrics in Tamil. This Song from Nilave Mugam Kaattu (1999). Song Lyrics penned by Vasan. சுற்றாதே பூமி பாடல் வரிகள்.


தென்றலைக் கண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்ஹரிஹரன் & இளையராஜாஇளையராஜாநிலவே முகம் காட்டு

Thendralai Kandukolla Song Lyrics in Tamil


ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே…
கண்களின் தேவை என்ன தேனே…

BGM

ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே…
கண்களின் தேவை என்ன தேனே…
உள்ளத்தில் பார்வை உண்டு மானே…
உண்மைகள் கண்டு சொல்லும் தேனே…

ஆண் : நெஞ்சின் வண்ணங்களை…
ஓடும் எண்ணங்களை…
காண கண் வேண்டுமா பேச சொல் வேண்டுமா…
மலர் பூத்ததை வாசங்கள் சொல்லுமே…

ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே…
கண்களின் தேவை என்ன தேனே…

BGM

ஆண் : உன்னைப் பார்த்தொரு குயில் கூவுதே…
அந்த காதல் தேன் குரல் கேட்டாயோ…

BGM

ஆண் : உன்னை பார்த்தொரு மேகம் தூவுதே…
ஈர காற்று காதல் சொல்லக் கண்டாயா…

BGM

ஆண் : உன்னை நான் எண்ணுகின்ற நேரம்…
உள்ளுக்குள் மார்கழி மாதம்…
அன்பே நான் உன்னைக் காணும் நேரம்…
கண்ணுக்குள் கார்த்திகை தீபம்…

ஆண் : கண்கள் இன்றி என்னைக் கண்டுகொள்வாய்…
என்று நீ என் காதல் கண்டுகொள்வாய்…
அந்த நாள் எந்த நாள் என்று நீ சொல்லு…

ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே…
கண்களின் தேவை என்ன தேனே…
உள்ளத்தில் பார்வை உண்டு மானே…
உண்மைகள் கண்டு சொல்லும் தேனே…

BGM

ஆண் : சோலை பூவனம் தேடும் பூவினம்…
எந்தன் நெஞ்சில் பூப்பறிக்க வந்தாளோ…

BGM

ஆண் : அந்த வெண்ணிலா தேடும் பெண்ணிலா…
எந்தன் நெஞ்சை வானம் என்று கொண்டாளோ…

BGM

ஆண் : ஹோ… சந்தன சந்திரனின் பாட்டு…
சந்தங்கள் சொன்னதடி நேற்று…
சொல்லாத ஏக்கங்களைச் சேர்த்து…
நீதானே என்னைத் தொட்ட காற்று…

ஆண் : அதிகாலை மாலை இரவென்ன…
அதன் துன்பம் இன்பம் தந்ததென்ன…
என்று மௌனத்தின் வாசலைத் திறப்பாய்…

ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே…
கண்களின் தேவை என்ன தேனே…
உள்ளத்தில் பார்வை உண்டு மானே…
உண்மைகள் கண்டு சொல்லும் தேனே…

ஆண் : நெஞ்சின் வண்ணங்களை…
ஓடும் எண்ணங்களை…
காண கண் வேண்டுமா பேச சொல் வேண்டுமா…
மலர் பூத்ததை வாசங்கள் சொல்லுமே…

ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே…
கண்களின் தேவை என்ன தேனே…
உள்ளத்தில் பார்வை உண்டு மானே…
உண்மைகள் கண்டு சொல்லும் தேனே…


Notes : Thendralai Kandukolla Song Lyrics in Tamil. This Song from Nilave Mugam Kaattu (1999). Song Lyrics penned by Vasan. தென்றலைக் கண்டு பாடல் வரிகள்.


Salamiya Song Lyrics in Tamil

சலாமியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்மனோ & மால்குடி சுபாஷிவாலவ் டுடே

Salamiya Song Lyrics in Tamil


BGM

ஆண் : உல்பா… உல்பா உல்பா ஒன்றானோம்…
இடைவெளி மறைந்தது… ஆஹா…
உல்பா உல்பா அன்பாலே…
இமைகளும் நனைந்தது… ஆஹா…
ஜகத்தை ஜெயிக்கும் இந்த கூட்டணி…
நமக்கு குறுக்க ஏது தாவணி… ஹோய்…

ஆண் : சலாமியா சலாமியா சலாமியா…
ஹேய்… நீரும் நீரும் மோதிக் கொள்ளாது…
சலாமியா சலாமியா சலாமியா…
ஹேய்… நட்பின் முன்னால் காதல் செல்லாது…

ஆண் : உல்பா உல்பா ஒன்றானோம்…
இடைவெளி மறைந்தது… ஆஹா…
உல்பா உல்பா அன்பாலே…
இமைகளும் நனைந்தது… ஆஹா…

BGM

ஆண் : சலாமியா சலாமியா…
சலாமியா சலாமியா சலாமியா…

BGM

ஆண் : சொல்லாத சந்தங்கள் சொல்லி…
மெல்லென கில்லி…
மொட்டை நாம் பூவாக்கலாம்…

ஆண் : என் ஊரு உன் ஊரு என்ற…
எல்லைகள் இல்லை இருந்தால் தூளாக்கலாம்…

ஆண் : வா ரே வா ரம்மோடு தம்சப்பா…
இணைவோம் பிரெண்ட்ஸ் ஆகி க்ளோசப்பா…
அந்த ப்ளுடோவும் செவ்வாயும் பிரெண்ட் இல்லையா…
இனி நம்மோட டிரென்ட் இல்லையா… ஹேய்ய்…

ஆண் : உல்பா உல்பா ஒன்றானோம்…
இடைவெளி மறைந்தது… ஆஹா…
உல்பா உல்பா அன்பாலே…
இமைகளும் நனைந்தது… ஆஹா…

BGM

பெண் : ஹாய் கைஸ்…

BGM

பெண் : விண்ணுக்கு மிட்நைட் போவோம்…
மேகங்கள் ஆவோம்…
நகர்வோம் உன் ரூட்டுல…

ஆண் : விண்ணில் பார் வைக்க சொல்லு…
ஒன்றாக நில்லு…
திறப்போம் பீர் பாட்டில…

ஆண் : காற்றுக்கும் ஆட்டோகிராப் போடலாம்…
வானவில் மேல் ஏறி ஆடலாம்…

பெண் : வீசும் பூங்காற்று பார்த்துவிட்டு…
தம் கேட்கலாம்…
இனி நீ என் வீட்டில் பெண் கேட்கலாம்…

ஆண் : உல்பா உல்பா ஒன்றானோம்…
இடைவெளி மறைந்தது… ஆஹா…
உல்பா உல்பா அன்பாலே…
இமைகளும் நனைந்தது… ஆஹா…
ஜகத்தை ஜெயிக்கும் இந்த கூட்டணி…
நமக்கு குறுக்க ஏது தாவணி… ஹோய்…

ஆண் : சலாமியா…
பெண் : சலாமியா…
ஆண் : சலாமியா…
பெண் : சலாமியா…

ஆண் : சலாமியா…
ஹேய்… நீரும் நீரும் மோதிக்கொள்ளாது…

ஆண் : சலாமியா…
பெண் : சலாமியா…
ஆண் : சலாமியா…
பெண் : சலாமியா…

ஆண் : சலாமியா…
ஹேய்… நட்பின் முன்னால் காதல் செல்லாது…

ஆண் : உல்பா உல்பா ஒன்றானோம்…
இடைவெளி மறைந்தது… ஆஹா…

BGM


Notes : Salamiya Song Lyrics in Tamil. This Song from Love Today (1997). Song Lyrics penned by Vaasan. சலாமியா பாடல் வரிகள்.


காஞ்சிப்பட்டு சேலை கட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்ஹரிஹரன்தேவாரெட்டை ஜடை வயசு

Kanchipattu Chellakatti Song Lyrics in Tamil


BGM

ஆண் : காஞ்சிப்பட்டு சேலை கட்டி…
கால் கொலுசில் தாளம் தட்டும்…
கன்னிப் பொண்ணே நின்னு கேளம்மா…

ஆண் : என் மனைவி வந்த பின்னால்…
என்னவெல்லாம் செய்வேன் என்று…
சேர்த்து வைத்த ஆசை சொல்லவா…

ஆண் : சேலைதான் ஓல்டு ஆச்சு…
சுடிதாரும் போர் ஆச்சு…

ஆண் : நித்தம் ஒரு ஜீன்ஸ்சு போட்டு…
முட்டி தொடும் மிடியும் போட்டு…
கொஞ்சம் கொஞ்சம் லிப்ஸ்டிக் போட்டு…
அவளை நான் ரசிப்பேன்…

ஆண் : மாசத்துக்கு ரெண்டு தரம்…
பியூட்டி பார்லர் கூட்டி போவேன்…
ராத்திரியில் நைட்டியை போல் நானேதான் இருப்பேன்…

ஆண் : காஞ்சிப்பட்டு சேலை கட்டி…
கால் கொலுசில் தாளம் தட்டும்…
கன்னிப் பொண்ணே நின்னு கேளம்மா…

BGM

ஆண் : ஸ்கூட்டர் ஓட்ட சொல்லுவேன்…
இடுப்பில் கையை போடுவேன்…
முன்னால் பார்த்து ஓட்டுன்னு…
பின்னால் மெல்ல கிள்ளுவேன்…

BGM

ஆண் : தூங்கிப்போனா சம்மதம்…
தோசை நானே ஊத்துவேன்…
ஊருக்கேதும் போயிட்டா உள்ளுக்குள்ளே ஏங்குவேன்…

BGM

ஆண் : அவள் முகம் என் மகளுக்குமே…
வரும்படி ஒரு வரம் கேட்பேன்…
அவள் பெயர் தனை இன்ஷியலாய்…
இடும்படி நான் செய்திடுவேன்…

ஆண் : அவள் தாவணி பருவத்து…
லவ் லெட்டர் அனைத்தையும்…
இருவரும் படித்திடுவோம்…

BGM

ஆண் : எங்கள் முதுமை பருவத்து முத்தங்கள் கூட…
இனிப்பென ருசித்திடுவோம்…

BGM

ஆண் : வெங்காயத்தை வெட்டும் போதும்…
கண் கலங்க கூடாதம்மா…
வெங்காயமே வேண்டாம் கண்ணே…
நான் அதை வெறுத்திடுவேன்…

ஆண் : காஞ்சிப்பட்டு சேலை கட்டி…
கால் கொலுசில் தாளம் தட்டும்…
கன்னிப் பொண்ணே நின்னு கேளம்மா…

BGM

ஆண் : அடடா எந்தன் மம்மிக்கும்…
ஹைடெக் நடையை பழக்கணும்…
சுடிதார் போட்டும் பார்க்கணும்…
தோழி போலே பழகணும்…

BGM

ஆண் : அழகான பொண்ணு போகையில்…
அதை நான் ரசிச்சு பார்க்கையில்…
காதை மெல்ல திருகனும்…
ஆனா என்ன ரசிக்கணும்…

BGM

ஆண் : அவள் தலை தனில் பூ தைத்து…
அதை புகைப்படம் எடுத்து வைப்பேன்…
அவள் பிடிக்கலை என்று சொன்னால்…
பியர் அடிப்பதை நிறுத்திடுவேன்…

ஆண் : ஒரு நாளைக்கு மூணு முறை வைத்து…
அவள் தரும் சிகரெட்டை குடித்திடுவேன்…

BGM

ஆண் : என் சில்மிஷ கணங்களில் சிதறிடும் ஜாக்கெட்…
ஹூக்யினை தைத்திடுவேன்…

ஆண் : கோபபட்டு திட்டிவிட்டு…
கொல்லப்பக்கம் போயி நின்னு…
அக்கம் பக்கம் பார்த்து விட்டு…
மெல்ல நான் அழுவேன்…

ஆண் : காஞ்சிப்பட்டு சேலை கட்டி…
கால் கொலுசில் தாளம் தட்டும்…
கன்னிப் பொண்ணே நின்னு கேளம்மா…

ஆண் : என் மனைவி வந்த பின்னால்…
என்னவெல்லாம் செய்வேன் என்று…
சேர்த்து வைத்த ஆசை சொல்லவா…

ஆண் : சேலைதான் ஓல்டு ஆச்சு…
சுடிதாரும் போர் ஆச்சு…

ஆண் : நித்தம் ஒரு ஜீன்ஸ்சு போட்டு…
முட்டி தொடும் மிடியும் போட்டு…
கொஞ்சம் கொஞ்சம் லிப்ஸ்டிக் போட்டு…
அவளை நான் ரசிப்பேன்…

BGM


Notes : Kanchipattu Chellakatti Song Lyrics in Tamil. This Song from Rettai Jadai Vayasu (1997). Song Lyrics penned by Vasan. காஞ்சிப்பட்டு சேலை கட்டி பாடல் வரிகள்.


கும்பகோணம் சந்தையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்அருண்மொழி & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்சிம்மராசி

Kumbagonam Sandaiyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : கும்பகோணம் சந்தையில் பார்த்த…
சின்ன பெண்தானா…
மஞ்ச தாவணி காத்துல பறக்க…
வந்த பெண்தானா…

பெண் : வந்தவாசி ரோட்டுல நேத்து…
வந்த ஆள்தானா…
கொஞ்சும்போது நெஞ்சில சேர்ந்த…
சொந்த ஆள்தானா…

ஆண் : வேட்டியின் வேகத்தை பார்த்து…
உன் தாவணி வேர்த்தது நேத்து…

பெண் : வெக்கத்த எட வச்சி காட்டு…
நான் வேட்டிய ஜெயிக்கிறேன் சலவ போட்டு…

ஆண் : கும்பகோணம்…

ஆண் : கும்பகோணம் சந்தையில் பார்த்த…
சின்ன பெண்தானா…
மஞ்ச தாவணி காத்துல பறக்க…
வந்த பெண்தானா…

BGM

ஆண் : தண்ணி தூக்குற தங்க ரதமே…
உன்னை தூக்கிட வரலாமா…

BGM

ஆண் : ஹோய்… தண்ணி தூக்குற தங்க ரதமே…
உன்னை தூக்கிட வரலாமா…

பெண் : தண்ணி பானை வச்ச இடத்தை…
மாமன் பார்வைகள் தொடலாமா…

ஆண் : அடி குலுங்குது இடுப்பு குளிருது நெருப்பு…
பக்கம் வந்து தொடலாமா…

பெண் : அட வேப்பிலை இருக்கு மாப்பிள்ளை உனக்கு…
மந்திரிச்சு விடலாமா…

ஆண் : நெத்தி வேர்த்திருக்கு ஆசை காத்திருக்கு…
ஒன்ன ஜாடையில் கேட்குறேன் சம்மதம் சொல்லம்மா…

BGM

ஆண் : கும்பகோணம் சந்தையில் பார்த்த…
சின்ன பெண்தானா…
மஞ்ச தாவணி காத்துல பறக்க…
வந்த பெண்தானா… ஹேய்…

BGM

ஆண் : கல்லைக்காட்டுல கட்டில் இருக்கு…
கம்பங்கூழ் கொண்டு வருவாயா… ஹேய்…

BGM

ஆண் : அய்யய்யே…
ஏய்… கல்லைக்காட்டுல கட்டில் இருக்கு…
கம்பங்கூழ் கொண்டு வருவாயா…

பெண் : ஏழு தலைமுறை தொட்டில் இருக்க…
என்ன சீக்கிரம் விடுவாயா…

ஆண் : அடி மெத்த வீடு ஒன்னு…
நான் கட்டித்தாரேன் உனக்கு…
கன்னம் கொஞ்சம் தருவாயா…

பெண் : அந்த வீட்டுக்கு வாசக் கதவா ரெண்டு…
உதட்டையும் சேப்பாயோ…

ஆண் : சிம்மராசிக்கு இப்ப உச்சமாயிடுச்சு…
கன்னி ராசியை கவுக்கணும் நேரத்த சொல்லம்மா…

BGM

ஆண் : கும்பகோணம் சந்தையில் பார்த்த…
சின்ன பெண்தானா…
மஞ்ச தாவணி காத்துல பறக்க…
வந்த பெண்தானா…

பெண் : ஏய்… வந்தவாசி ரோட்டுல நேத்து…
வந்த ஆள்தானா…
கொஞ்சும்போது நெஞ்சில சேர்ந்த…
சொந்த ஆள்தானா…

ஆண் : வேட்டியின் வேகத்தை பார்த்து…
உன் தாவணி வேர்த்தது நேத்து…

பெண் : வெக்கத்த எட வச்சி காட்டு…
நான் வேட்டிய ஜெயிக்கிறேன் சலவ போட்டு…

ஆண் : கும்பகோணம்… ஏய்…

BGM


Notes : Kumbagonam Sandaiyil Song Lyrics in Tamil. This Song from Simmarasi (1998). Song Lyrics penned by Vasan. கும்பகோணம் சந்தையில் பாடல் வரிகள்.


முதன் முதலில் பார்த்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்ஹரிஹரன் & கே.எஸ். சித்ராதேவாஆஹா

Mudhan Mudhalil Parthen Duet Song Lyrics in Tamil


BGM

ஆண் : முதன் முதலில் பார்த்தேன்…
காதல் வந்ததே…
எனை மறந்து எந்தன்…
நிழல் போகுதே…

ஆண் : என்னில் இன்று நானே இல்லை…
காதல் போல ஏதும் இல்லை…
என்னில் இன்று நானே இல்லை…
காதல் போல ஏதும் இல்லை…
எங்கே எந்தன் இதயம் அன்பே…
வந்து சேர்ந்ததா…

ஆண் : முதன் முதலில் பார்த்தேன்…
காதல் வந்ததே…

BGM

ஆண் : நந்தவனம் இதோ இங்கேதான்…
நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்…
நல்லவளே அன்பே உன்னால்தான்…
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்…

ஆண் : நொடிக்கொரு தரம் உன்னை…
நினைக்க வைத்தாய்…
அடிக்கடி என்னுடல்…
சிலிர்க்க வைத்தாய்…

ஆண் : நொடிக்கொரு தரம் உன்னை…
நினைக்க வைத்தாய்…
அடிக்கடி என்னுடல்…
சிலிர்க்க வைத்தாய்…

ஆண் : முதல் பார்வை நெஞ்சில் என்றும்…
உயிர் வாழுமே…
உயிர் வாழுமே…

பெண் : முதன் முதலில் பார்த்தேன்…
காதல் வந்ததே…

BGM

பெண் : ஏழு ஸ்வரம் எட்டாய் ஆகாதோ…
நான் கொண்ட காதலின் ஆழத்தை பாட…
தேகம் எங்கும் கண்கள் தோன்றாதோ…
நீ என்னை பார்க்கையில் நாணத்தை மூட…

பெண் : இருதயம் முறைப்படி துடிக்கவில்லை…
இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை…
இருதயம் முறைப்படி துடிக்கவில்லை…
இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை…
நான் கண்ட மாற்றம் எல்லாம்…
நீ தந்தது… நீ தந்தது…

பெண் : முதன் முதலில் பார்த்தேன்…
காதல் வந்ததே…
என்னை மறந்து எந்தன்…
நிழல் போகுதே…

பெண் : என்னில் இன்று நானே இல்லை…
காதல் போல ஏதும் இல்லை…
என்னில் இன்று நானே இல்லை…
காதல் போல ஏதும் இல்லை…
எங்கே எந்தன் இதயம்…
அன்பே வந்து சேர்ந்ததா…

பெண் : முதன் முதலில் பார்த்தேன்…
காதல் வந்ததே…
என்னை மறந்து எந்தன்…
நிழல் போகுதே…


Notes : Mudhan Mudhalil Parthen Duet Song Lyrics in Tamil. This Song from Aahaa (1997). Song Lyrics penned by Vaasan. முதன் முதலில் பார்த்தேன் பாடல் வரிகள்.


முதன் முதலில் பார்த்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்ஹரிஹரன்தேவாஆஹா

Mudhan Mudhalil Parthen Male Song Lyrics in Tamil


BGM

ஆண் : முதன் முதலில் பார்த்தேன்…
காதல் வந்ததே…
எனை மறந்து எந்தன்…
நிழல் போகுதே…

ஆண் : என்னில் இன்று நானே இல்லை…
காதல் போல ஏதும் இல்லை…
என்னில் இன்று நானே இல்லை…
காதல் போல ஏதும் இல்லை…
எங்கே எந்தன் இதயம் அன்பே…
வந்து சேர்ந்ததா…

ஆண் : முதன் முதலில் பார்த்தேன்…
காதல் வந்ததே…

BGM

ஆண் : நந்தவனம் இதோ இங்கேதான்…
நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்…
நல்லவளே அன்பே உன்னால்தான்…
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்…

ஆண் : நொடிக்கொரு தரம் உன்னை…
நினைக்க வைத்தாய்…
அடிக்கடி என்னுடல்…
சிலிர்க்க வைத்தாய்…

ஆண் : நொடிக்கொரு தரம் உன்னை…
நினைக்க வைத்தாய்…
அடிக்கடி என்னுடல்…
சிலிர்க்க வைத்தாய்…

ஆண் : முதல் பார்வை நெஞ்சில் என்றும்…
உயிர் வாழுமே…
உயிர் வாழுமே…

ஆண் : முதன் முதலில் பார்த்தேன்…
காதல் வந்ததே…

BGM

ஆண் : உத்தரவே இன்றி உள்ளே வா…
நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில்…
அந்த நொடி அன்பே என் ஜீவன்…
வேறெங்கு போனது பாரடி உன்னில்…

ஆண் : உன்னைக் கண்ட நிமிசத்தில்…
உறைந்து நின்றேன்…
மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்…

ஆண் : உன்னைக் கண்ட நிமிசத்தில்…
உறைந்து நின்றேன்…
மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன்…

ஆண் : என் சுவாசக் காற்றில் எல்லாம்…
உன் ஞாபகம்…
உன் ஞாபகம்…

ஆண் : முதன் முதலில் பார்த்தேன்…
காதல் வந்ததே…
எனை மறந்து எந்தன்…
நிழல் போகுதே…

ஆண் : என்னில் இன்று நானே இல்லை…
காதல் போல ஏதும் இல்லை…
என்னில் இன்று நானே இல்லை…
காதல் போல ஏதும் இல்லை…
எங்கே எந்தன் இதயம் அன்பே…
வந்து சேர்ந்ததா…

ஆண் : முதன் முதலில் பார்த்தேன்…
காதல் வந்ததே…
எனை மறந்து எந்தன்…
நிழல் போகுதே…


Notes : Mudhan Mudhalil Parthen Male Song Lyrics in Tamil. This Song from Aahaa (1997). Song Lyrics penned by Vaasan. முதன் முதலில் பார்த்தேன் பாடல் வரிகள்.


நிலவே நிலவே சரிகம பதநி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்ஹரிஹரன் & சுஜாதா மோகன்பரணிபெரியண்ணா

Nilave Nilave Sarigama Pathani Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிலவே நிலவே…
சரிகம பதநி பாடு…
என் கனவைத் திருடி…
பல்லவி வரியாய்ப் போடு…

ஆண் : நிலவே நிலவே…
சரிகம பதநி பாடு…
என் கனவைத் திருடி…
பல்லவி வரியாய்ப் போடு…

ஆண் : உன்னை ஒவ்வொரு இரவிலும் தேடுகிறேன்…
நீ தேய்கின்ற நாளில் வாடுகிறேன்…
உன் மௌனத்தில் ஆயிரம் பாட்டு…
நான் மயங்குகிறேன் அதைக் கேட்டு…

ஆண் : நீ மாலையில் வருவதும்…
காலையில் மறைவதும்…
என்னடி விளையாட்டு…

ஆண் : நிலவே நிலவே…
சரிகம பதநி பாடு…
என் கனவைத் திருடி…
பல்லவி வரியாய்ப் போடு…

BGM

பெண் : காதல் பேசும்…
வயதுக்கு வந்த நிலா…
உன்னை நெஞ்சைத் தீண்ட
அனுமதி தந்த நிலா…
தன் மனதைச் சொல்லிவிட
தயங்குது தங்க நிலா…

ஆண் : அட ஆதாம் ஏவாள்…
பார்த்தது பழைய நிலா…
என் ஆசை நெஞ்சை…
ஈர்த்தது புதிய நிலா…

பெண் : தன் கனவுகளை…
மெல்ல முனகும் நிலா…

ஆண் : என் ஆயுளையே…
அள்ளிப் பருகும் நிலா…

பெண் : பகலுடன் இரவும்…
பதினெட்டு வருடம்…
வளர்ந்தது இந்த நிலா…
இது உனக்கே சொந்த நிலா…

ஆண் : நிலவே நிலவே…
சரிகம பதநி பாடு…
என் கனவைத் திருடி…
பல்லவி வரியாய்ப் போடு…

BGM

ஆண் : கண்ணில் கண்ணில்…
கனவுகள் பூசுகிறாய்…
என் காதல் நெஞ்சில்…
நினைவுகள் வீசுகிறாய்…
தொட தொட நான் வருகையிலே…
தொலைவினில் ஓடுகிறாய்…

பெண் : அட நானும் உன்னை…
பார்ப்பது தெரியாதா…
நான் பேசும் வார்த்தை…
உனக்கது புரியாதா…

ஆண் : அடி நான் இருந்தேன்…
உன் ஞாபகமாய்…

பெண் : அதை சொல்லுகிறேன்…
நான் சூசகமாய்…

ஆண் : அருகில் நானும்…
தொலைவில் நீயும்…
இருந்தால் காதல் எது…
மனம் கேட்கும் கேள்வி இது…

ஆண் : நிலவே நிலவே…
சரிகம பதநி பாடு…
என் கனவைத் திருடி…
பல்லவி வரியாய்ப் போடு…

ஆண் : நிலவே நிலவே…
சரிகம பதநி பாடு…
என் கனவைத் திருடி…
பல்லவி வரியாய்ப் போடு…

ஆண் : உன்னை ஒவ்வொரு இரவிலும் தேடுகிறேன்…
நீ தேய்கின்ற நாளில் வாடுகிறேன்…
உன் மௌனத்தில் ஆயிரம் பாட்டு…
நான் மயங்குகிறேன் அதைக் கேட்டு…

ஆண் : நீ மாலையில் வருவதும்…
காலையில் மறைவதும்…
என்னடி விளையாட்டு…

ஆண் : நிலவே நிலவே…
சரிகம பதநி பாடு…
என் கனவைத் திருடி…
பல்லவி வரியாய்ப் போடு…


Notes : Nilave Nilave Sarigama Pathani Song Lyrics in Tamil. This Song from Periyanna (1999). Song Lyrics penned by Vasan. நிலவே நிலவே சரிகம பதநி பாடல் வரிகள்.