காஞ்சிப்பட்டு சேலை கட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்ஹரிஹரன்தேவாரெட்டை ஜடை வயசு

Kanchipattu Chellakatti Song Lyrics in Tamil


BGM

ஆண் : காஞ்சிப்பட்டு சேலை கட்டி…
கால் கொலுசில் தாளம் தட்டும்…
கன்னிப் பொண்ணே நின்னு கேளம்மா…

ஆண் : என் மனைவி வந்த பின்னால்…
என்னவெல்லாம் செய்வேன் என்று…
சேர்த்து வைத்த ஆசை சொல்லவா…

ஆண் : சேலைதான் ஓல்டு ஆச்சு…
சுடிதாரும் போர் ஆச்சு…

ஆண் : நித்தம் ஒரு ஜீன்ஸ்சு போட்டு…
முட்டி தொடும் மிடியும் போட்டு…
கொஞ்சம் கொஞ்சம் லிப்ஸ்டிக் போட்டு…
அவளை நான் ரசிப்பேன்…

ஆண் : மாசத்துக்கு ரெண்டு தரம்…
பியூட்டி பார்லர் கூட்டி போவேன்…
ராத்திரியில் நைட்டியை போல் நானேதான் இருப்பேன்…

ஆண் : காஞ்சிப்பட்டு சேலை கட்டி…
கால் கொலுசில் தாளம் தட்டும்…
கன்னிப் பொண்ணே நின்னு கேளம்மா…

BGM

ஆண் : ஸ்கூட்டர் ஓட்ட சொல்லுவேன்…
இடுப்பில் கையை போடுவேன்…
முன்னால் பார்த்து ஓட்டுன்னு…
பின்னால் மெல்ல கிள்ளுவேன்…

BGM

ஆண் : தூங்கிப்போனா சம்மதம்…
தோசை நானே ஊத்துவேன்…
ஊருக்கேதும் போயிட்டா உள்ளுக்குள்ளே ஏங்குவேன்…

BGM

ஆண் : அவள் முகம் என் மகளுக்குமே…
வரும்படி ஒரு வரம் கேட்பேன்…
அவள் பெயர் தனை இன்ஷியலாய்…
இடும்படி நான் செய்திடுவேன்…

ஆண் : அவள் தாவணி பருவத்து…
லவ் லெட்டர் அனைத்தையும்…
இருவரும் படித்திடுவோம்…

BGM

ஆண் : எங்கள் முதுமை பருவத்து முத்தங்கள் கூட…
இனிப்பென ருசித்திடுவோம்…

BGM

ஆண் : வெங்காயத்தை வெட்டும் போதும்…
கண் கலங்க கூடாதம்மா…
வெங்காயமே வேண்டாம் கண்ணே…
நான் அதை வெறுத்திடுவேன்…

ஆண் : காஞ்சிப்பட்டு சேலை கட்டி…
கால் கொலுசில் தாளம் தட்டும்…
கன்னிப் பொண்ணே நின்னு கேளம்மா…

BGM

ஆண் : அடடா எந்தன் மம்மிக்கும்…
ஹைடெக் நடையை பழக்கணும்…
சுடிதார் போட்டும் பார்க்கணும்…
தோழி போலே பழகணும்…

BGM

ஆண் : அழகான பொண்ணு போகையில்…
அதை நான் ரசிச்சு பார்க்கையில்…
காதை மெல்ல திருகனும்…
ஆனா என்ன ரசிக்கணும்…

BGM

ஆண் : அவள் தலை தனில் பூ தைத்து…
அதை புகைப்படம் எடுத்து வைப்பேன்…
அவள் பிடிக்கலை என்று சொன்னால்…
பியர் அடிப்பதை நிறுத்திடுவேன்…

ஆண் : ஒரு நாளைக்கு மூணு முறை வைத்து…
அவள் தரும் சிகரெட்டை குடித்திடுவேன்…

BGM

ஆண் : என் சில்மிஷ கணங்களில் சிதறிடும் ஜாக்கெட்…
ஹூக்யினை தைத்திடுவேன்…

ஆண் : கோபபட்டு திட்டிவிட்டு…
கொல்லப்பக்கம் போயி நின்னு…
அக்கம் பக்கம் பார்த்து விட்டு…
மெல்ல நான் அழுவேன்…

ஆண் : காஞ்சிப்பட்டு சேலை கட்டி…
கால் கொலுசில் தாளம் தட்டும்…
கன்னிப் பொண்ணே நின்னு கேளம்மா…

ஆண் : என் மனைவி வந்த பின்னால்…
என்னவெல்லாம் செய்வேன் என்று…
சேர்த்து வைத்த ஆசை சொல்லவா…

ஆண் : சேலைதான் ஓல்டு ஆச்சு…
சுடிதாரும் போர் ஆச்சு…

ஆண் : நித்தம் ஒரு ஜீன்ஸ்சு போட்டு…
முட்டி தொடும் மிடியும் போட்டு…
கொஞ்சம் கொஞ்சம் லிப்ஸ்டிக் போட்டு…
அவளை நான் ரசிப்பேன்…

BGM


Notes : Kanchipattu Chellakatti Song Lyrics in Tamil. This Song from Rettai Jadai Vayasu (1997). Song Lyrics penned by Vasan. காஞ்சிப்பட்டு சேலை கட்டி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top